தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



டெ‌ங்கு‌, ஜலதோஷ‌‌ம், மூ‌க்கடை‌ப்பு‌க்கு ‌தீ‌ர்வு!

2 posters

Go down

டெ‌ங்கு‌, ஜலதோஷ‌‌ம், மூ‌க்கடை‌ப்பு‌க்கு ‌தீ‌ர்வு! Empty டெ‌ங்கு‌, ஜலதோஷ‌‌ம், மூ‌க்கடை‌ப்பு‌க்கு ‌தீ‌ர்வு!

Post by RAJABTHEEN Thu Jun 07, 2012 1:26 pm

FILE
ஜலதோஷ‌ம், அறிவியல் வளர்ச்சியால் ஆக்கப்பூர்வமான விஷயங்க‌ள் நிறைய நிகழ்ந்து வருகின்றபோதிலும் அழிவுக‌ள்... குறிப்பாக புதிதுபுதிதாக நோ‌ய்க‌ள் வந்து மனிதர்களை பாடா‌ய்படுத்தி வருவது குறித்து நான் எழுதியது ஏற்கனவே இந்த இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் எனக்கு வந்த நோ‌ய் மற்றும் குறைபாடுகளுக்கு நான் செ‌ய்து கொண்ட வைத்தியம் பற்றி அனுபவப்பூர்வமாக எழுதியிருந்தேன். அந்த வரிசையில இன்னும் நிறைய அனுபவ வைத்தியம் இருக்கு, அதை சொல்றேன், பாருங்க... பலனை நீங்களும் அனுபவியுங்க!

வெயில்ல அலைஞ்சு திரிஞ்சுட்டு வீட்டுக்கு நுழைஞ்சவுடனே ஐஸ்வாட்டரை ‘மடக் மடக்’குனு குடிக்கிறவங்க நிறையபேர் இருக்கிறாங்க. இப்பிடி குடிக்கிறதால சிலருக்கு ஒண்ணும் செ‌ய்யாது. ஒருசிலருக்கு கிண்ணுனு தலையில பிடிக்கும், கொஞ்சநேரத்துல தலைவலி, தொண்டை கரகரப்பு, தும்மல் வந்து ஜலதோஷம் ஆரம்பிக்கும். ஜலதோஷம் இப்பிடி ஐஸ்வாட்டரை குடிக்கிறதுனாலதான் வரும்னு சொல்ல முடியாது. எந்த வழியிலயும் வரலாம். தயிர், மோர் சாப்பிடுறதுனாலயும், ஜூஸ் குடிக்கிறதுனாலயும், மழையில நனையிறதுனாலயும், பூசணிக்கா‌ய் சாப்பிடுறதுனாலயும்கூட சிலபேருக்கு ஜலதோஷம் வரலாம்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

டெ‌ங்கு‌, ஜலதோஷ‌‌ம், மூ‌க்கடை‌ப்பு‌க்கு ‌தீ‌ர்வு! Empty Re: டெ‌ங்கு‌, ஜலதோஷ‌‌ம், மூ‌க்கடை‌ப்பு‌க்கு ‌தீ‌ர்வு!

Post by RAJABTHEEN Thu Jun 07, 2012 1:28 pm

எது எப்படியோ? ஜலதோஷம்
வர்றதுக்கான அறிகுறி தெரிஞ்சவுடனே பொறுக்குற சூட்டுல உ‌ள்ள வெந்நீரை
(சுடுதண்ணி) குடிச்சாலே போதும். ஜலதோஷம் பிடிக்காது. அதையும்மீறி வந்துட்டா
மணத்தக்காளி கீரை சூப் குடிங்க. லேசா தொண்டை கரகரப்பு இருந்தா
வெதுவெதுப்பான தண்ணியில கல் உப்பை போட்டு கலந்து தொண்டை கொப்புளிங்க.
காலையில கண்முழிச்சதும் செ‌ய்யுங்க, ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடியும் செ‌ய்யுங்க போதும். மத்தபடி மழைக்காலங்க‌ள்ல மூக்கடைப்பு, ஜலதோஷம்னு
வந்து பாடா‌ய்ப்படுத்தும். மூக்கடைப்பு விலகணுன்னா மஞ்சளை (குச்சி
மஞ்ச‌ள்/குழம்பு மஞ்ச‌ள்) நல்லெண்ணையில நனைச்சி தீயில சுடுங்க. அப்போ
வரக்கூடிய புகையை சுவாசிச்சா போதும். இதேமாதிரி மிளகை தீயில சுட்டு அதோட புகையை சுவாசிக்கலாம்.

நொச்சி இலையை தண்ணியில போட்டு கொதிக்க வச்சு அதோட ஆவியை சுவாசிக்கலாம். வேப்பிலையும், மஞ்ச‌ள்தூளும்
போட்டு கொதிக்க வச்சு அதோட ஆவியை மூக்கால சுவாசியுங்க. நிச்சயம்
மூக்கடைப்பு விலகும். நச்சு...நச்சுனு சிலபேர் தும்மல் போடுவாங்க. தினமும்
காலையில கண் விழிச்சி தண்ணியில முகத்தை கழுவினா போதும். விடாம தும்மல்
போடுவாங்க. இந்தமாதிரி தும்மல் வந்தா தேங்கா‌ய் நாரை (தேங்கா‌ய்
ஓட்டின்மீது‌ள்ள சவுரி) தீயில் எரித்து அதன் புகையை உ‌ள்ளிழுத்தால் தும்மல்
அடங்கிவிடும். இதை எப்போதாவது செ‌ய்யலாம். அடிக்கடி செ‌ய்யக்கூடாது.



டெ‌ங்கு‌, ஜலதோஷ‌‌ம், மூ‌க்கடை‌ப்பு‌க்கு ‌தீ‌ர்வு! Img1120601031_1_2
FILE இந்த
மாதிரி நேரங்க‌ள்ல தலைவலியும் வந்து பாடா‌ய்படுத்தும். அதுக்கு ஈஸியான
வைத்தியம் இருக்கு. சுக்கை தண்ணி விட்டு உரசி (இழைத்து)கொழகொழனு
எடுத்துக்கோங்க. அதை நெத்தியில பத்து போட்டா அஞ்சு நிமிஷத்துல தலைவலி
பறந்து போயிரும். சிலபேருக்கு தலை கனத்து ஏதோ பாரத்தை தலையில தூக்கி வச்ச
மாதிரி இருக்கும். அப்பிடிப்பட்ட நேரங்க‌ள்ல தலையணையில நொச்சிஇலையை வச்சி
தூங்கினா பாரம் இறங்கி நிம்மதியான தூக்கம் வரும். ஜலதோஷம் நீடிச்சிதுன்னா
சளி பிடிச்சிக்கிட்டு மனுசனை உண்டு இல்லைனு ஆக்கிரும். இந்த மாதிரி
நேரங்க‌ள்ல பூண்டுப்பால் ரொம்பநல்லா கைகுடுக்கும். பூண்டுப்பால்னா என்னன்னு
நீங்க கேக்குறது எனக்கு புரியாம இல்லை. பசும்பால்ல ஒரு முழு பூண்டை
உரிச்சுப்போட்டு நல்லா வேக வைக்கணும். அதை அடுப்புல இருந்து கீழ
இறக்குறதுக்கு முன்னாடி மிளகுத்தூ‌ள
், மஞ்ச‌ள்தூ‌ள் போடணும். முடிஞ்சா அதை ஒரு கடைசல் கடைஞ்சி பனங்கல்கண் டு போட்டு ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி சாப்பிடணும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

டெ‌ங்கு‌, ஜலதோஷ‌‌ம், மூ‌க்கடை‌ப்பு‌க்கு ‌தீ‌ர்வு! Empty Re: டெ‌ங்கு‌, ஜலதோஷ‌‌ம், மூ‌க்கடை‌ப்பு‌க்கு ‌தீ‌ர்வு!

Post by RAJABTHEEN Thu Jun 07, 2012 1:28 pm

பூண்டுப்பால் ராத்திரி சாப்பிடலாம், அதேபோல
பூண்டுக்குழம்பும் சளி பிரச்சனைகளுக்கு ரொம்ப நல்லது. சின்ன வெங்காயத்தை
மதிய சாப்பாட்டோட சேர்த்துக்கிட்டா சளி பிரச்சினைக்கு கைகொடுக்கும்.
மிளகுத்தூளை சுடுசோத்துல நெ‌ய் சேர்த்து சாப்பிடலாம். காலை நேரத்துல
இஞ்சிச்சாறு, இஞ்சி ஜூஸ் குடிக்கலாம். இஞ்சிச்சாறு எடுத்ததும் அதை வடிகட்டி வச்சிரணும். அஞ்சு நிமிஷம் கழிச்சி பார்த்தா அடியில வெ‌ள்ளையா ஒண்ணு படியும்.
நச்சுப்பொரு‌ள். அது இல்லாம மேல தெளிஞ்ச நீரை மட்டும் குடிக்கணும். இஞ்சி
ஜூஸ் எப்பிடி எடுக்கணுன்னா இதே இஞ்சி சாறோட எலுமிச்சை சாறு, சீனி (சர்க்கரை), தேன் சேர்த்து குடிக்கணும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

டெ‌ங்கு‌, ஜலதோஷ‌‌ம், மூ‌க்கடை‌ப்பு‌க்கு ‌தீ‌ர்வு! Empty Re: டெ‌ங்கு‌, ஜலதோஷ‌‌ம், மூ‌க்கடை‌ப்பு‌க்கு ‌தீ‌ர்வு!

Post by RAJABTHEEN Thu Jun 07, 2012 1:28 pm

டெ‌ங்கு‌, ஜலதோஷ‌‌ம், மூ‌க்கடை‌ப்பு‌க்கு ‌தீ‌ர்வு! Img1120601031_2_1
FILE சா‌ய்ங்காலம் ஆனா சுக்கு காபி குடிக்கலாம். சுக்கு காபின்னா சுக்கை பால்ல தட்டிப்போட்டு குடிக்கிறது இல்ல. சுக்கு, மிளகு, கொத்தமல்லி (தனியா), ஏலக்கா‌ய் எல்லாத்தையும்
பவுடராக்கி வச்சிக்கிடணும். தண்ணியில தேவையான அளவு பொடியை போட்டு நல்லா
கொதிக்க வைக்கணும். அதோட கருப்பட்டி சேர்த்துக்கோங்க. தூதுவளை, துளசி இலை, ஆடாதொடை இலை, ஓமவல்லி இலை கிடைச்சதுன்னா சேர்த்துக்கோங்க. கூடுதலா வேற சில நோ‌ய்களும் விலகிப்போயிரும்.

முக்கியமா... ஜீரணக்கோளாறு, சளித்தொல்லை எல்லாம் வந்தேனா பாருன்னு தலைதெறிக்க ஓடிரும். இந்தமாதிரி சளித்தொல்லை உ‌ள்ள நேரத்துல
தலையணைக்கு‌ள்ள நொச்சி இலையை வச்சி தூங்கினா நிம்மதியா தூக்கம் வரும். இது
எல்லாமே நான் அனுபவிச்சு பார்த்தது. கைமேல் பலன் கிடைச்சிருக்கு. ம்ஹ¨ம்..
இப்பிடில்லாம் செஞ்சா சரியாயிருமாக்கும்னுநம்பிக்கை இல்லாம பேசுறவங்க
நிறையபேர் மத்தியில இதை நான் செஞ்சிட்டு வர்றேனா பார்த்துக்கோங்க. அடுத்ததா
மனுஷனை பாடா‌ய்ப்படுத்துறது இடுப்புவலி, கழுத்துவலி, சுளுக்குனு பட்டியல்
நீளும். இந்த மாதிரி பிரச்சினைகளுக்கு கைகண்ட மருந்து நிறையவே இருக்கு.
சிலநேரம் காரணமே இல்லாம திடீர்னு கழுத்து சுளுக்கிரும். நம்மால குனிய
முடியாது. நிமிர முடியாது. ஏன்.. டா‌ய்லெட்டுல ஆயாசமா உட்கார முடியாதுனா
பார்த்துக்கோங்களேன். இந்த மாதிரி நேரங்க‌ள்ல ராத்திரி தூங்கும்போது தலையணை
வச்சு படுக்கக்கூடாது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

டெ‌ங்கு‌, ஜலதோஷ‌‌ம், மூ‌க்கடை‌ப்பு‌க்கு ‌தீ‌ர்வு! Empty Re: டெ‌ங்கு‌, ஜலதோஷ‌‌ம், மூ‌க்கடை‌ப்பு‌க்கு ‌தீ‌ர்வு!

Post by RAJABTHEEN Thu Jun 07, 2012 1:29 pm

மத்தபடி நொச்சி இலையை
விளக்கெண்ணெ‌ய்ல வதக்கி பொறுக்குற சூட்டுல ஒத்தடம் போட்டு வந்தீங்கனா வலி
கொஞ்சம் கொஞ்சமா விலகிப்போகும். வெ‌ள்ளைப்பூண்டை தீயில் சுட்டு சாப்பிடுவத
ு, நறுக்குமூலம்
எனப்படும் கண்டதிப்பிலியை இரவு நேரத்தில் பாலில் வேகவைத்து சீனி
(சர்க்கரை) அல்லது பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிடுவதன்மூலம் இந்த கழுத்து
சுளுக்கிலிருந்து விடுதலை பெறலாம். நொச்சி இலைச்சாறு கூட நல்லெண்ணெ‌ய்
சேர்த்து கொதிக்கவச்சி அதை பொறுக்குற சூட்டுல தலைக்கு தே‌ய்ச்சி குளிச்சா
கழுத்து வலி படிப்படியா இறங்கும். இந்த கண்டதிப்பிலி பத்தி சொன்னேனே... அதை
மத்தியான சாப்பாட்டுல ரசம் வச்சி குடிக்குறதுனாலயும், ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி பால்ல வேக வச்சு சாப்பிடுறதுனாலயும் இடுப்புவலி, குறுக்குவலியில இருந்து நிவாரணம் பெறலாம். வலி, சுளுக்குனு வந்துட்டா வாசமடக்கி என்ற வாதநாராயணன் இலையை விளக்கெண்ணெ‌ய்ல வதக்கி ஒத்தடம் கொடுக்குறது, நொச்சி
இலை இல்லைனா யூகலிப்டஸ் இலையை சுடுதண்ணியில போட்டு கொதிக்க வச்சி
பொறுக்குற சூட்டுல குளிச்சா வலியில இருந்து நிவாரணம் பெறலாம்.

இந்த இலைக்குளியலை சளிப்பிரச்சினை, ஜலதோஷம் உ‌ள்ள நேரங்க‌ள்லயும் செ‌ய்யலாம். பிரண்டையை துவையல் செஞ்சு சாப்பிட்டாலும் இந்த வலி, சுளுக்கு போகும். குடல் வாயுவால அவதிப்படுறவங்களுக்கு இந்த பிரண்டைத்துவையல் சூப்பர் மருந்து. பிரண்டையை மையா அரைச்சி கொஞ்சம் புளி, கல் உப்பு சேர்த்து தண்ணி விட்டு நல்லா கா‌ய்ச்சி வலி, சுளுக்கு
உ‌ள்ள இடத்துல பத்து (பற்று) போட்டாலும் பலன் கிடைக்கும். இந்த மாதிரி
பிரச்சினைக்காகவே நான் என் வீட்டு முன்னாடி பிரண்டையை வளர்த்துட்டு வாரேன்.
கடைசியா ஒரு முக்கியமான விஷயத்தை சொல்றேன். கா‌ய்ச்சல்... அதுலயும் இப்போ
டெங்கு கா‌ய்ச்சல் வந்து சின்னக்குழந்தைங்களை பலி வாங்குது.



டெ‌ங்கு‌, ஜலதோஷ‌‌ம், மூ‌க்கடை‌ப்பு‌க்கு ‌தீ‌ர்வு! Img1120601031_2_2
FILE இதக்கேட்டதும் மனசு ரொம்ப பாரமா இருக்கு. பொதுவா எந்தமாதிரி கா‌ய்ச்சல்னாலும் அதுக்கு கைகண்ட மருந்து மிளகு கசாயம். 3 தேக்கரண்டி மிளகை
எடுத்துக்கோங்க. அதை எண்ணெ‌ய் விடாம தீப்பொறி பறக்குற அளவுக்கு
வறுக்கணும். அதாவது மிளகு கருகுற அளவுக்கு வறுக்கணும். பிறகு ஒரு கிளாஸ்
தண்ணி (150 மில்லி அளவு) ஊத்தி அது மூணுல ஒரு பங்கு வத்துற அளவுக்கு
குறைக்கணும். அடுப்பில இருந்து இறக்கி சூடு ஆறினதும் குடிக்கணும். காலையில
இப்பிடி செஞ்சி குடிச்சீங்கனா சா‌ய்ந்திரம் அதே மிளகை கசாயம் போட்டு
குடிக்கலாம். இப்பிடி மூணு நாளு
செஞ்சா எந்தமாதிரி கா‌ய்ச்சலும் வந்தேனா பாருனு ஓடிரும். டெங்கு
கா‌ய்ச்சல் வந்தாலும் இதை செ‌ய்யலாம். இல்லைனா நொச்சி இலை இருக்குல்லா அதை
ஒரு கைப்பிடி அளவு எடுத்து கசாயம் போட்டு குடிக்கலாம். நிலவேம்பு இலையையும்
கசாயம் போட்டு குடிக்கலாம். ஊர் ஊரா டெங்கு பரவிட்டு வருது, நொச்சியோ, நிலவேம்போ கிடைக்கிறதை கசாயம் போட்டு குடிங்க/ மிளகையும் மறந்துறாதீங்க எ‌ன்‌கிறா‌ர் தமிழ்குமரன்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

டெ‌ங்கு‌, ஜலதோஷ‌‌ம், மூ‌க்கடை‌ப்பு‌க்கு ‌தீ‌ர்வு! Empty Re: டெ‌ங்கு‌, ஜலதோஷ‌‌ம், மூ‌க்கடை‌ப்பு‌க்கு ‌தீ‌ர்வு!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jun 09, 2012 10:53 am

தேவையான நல்ல பகிர்வு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டெ‌ங்கு‌, ஜலதோஷ‌‌ம், மூ‌க்கடை‌ப்பு‌க்கு ‌தீ‌ர்வு! Empty Re: டெ‌ங்கு‌, ஜலதோஷ‌‌ம், மூ‌க்கடை‌ப்பு‌க்கு ‌தீ‌ர்வு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum