தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சுருங்குவதும் விரிவதும் (ஆன்மீகம்)

2 posters

Go down

சுருங்குவதும் விரிவதும் (ஆன்மீகம்) Empty சுருங்குவதும் விரிவதும் (ஆன்மீகம்)

Post by gnanasi@yahoo.com Thu May 09, 2013 9:29 pm

சுருங்குவதும் விரிவதும்

ஞானமார;க்கத்தின் அடிநாதம் தன்னை ஒடுக்கிக் கொள்வது, தன்னை யாரும் அறியாத வண்ணம் மறைத்துக் கொள்வது. தான் யார; என்று யாருக்கும் காட்டிக்கொள்ளாமல் தன்னையே தனக்குள் தானாகி நின்று கவனித்துக் கொண்டிருப்பது. பல என்பதிலிருந்து சில என்பதுவாகி பின் ஒரு என்பதாக ஒன்றில் ஒன்றாவதுதான் இந்த மனித குலத்தோன்றலின் அடிநாதம். தோன்றியது என்னவோ மனித குலத்தில் தான். ஆனால் ‘தோன்றினில் தோன்றாமை நன்று’ என்பதாக நமது பிறப்பின் முடிவுத் தத்துவம் முடிச்சவிழ்க்கப்படவேண்டிய இடம் இப்பிறப்புதான் என்பதை நாம் அனைவரும் மறந்துபோன விஷயம். இதுதான் உண்மையான ஆன்மிகம். இப்படியான ஆன்மிகம் நமக்குத்தேவையா? ஐயோ.. வேண்டாம்.. என்ன கொடுமை சார; இது..! என்றெல்லாம் சொல்லிப் புலம்பத் தோன்றுகிறதோ? உண்மைதான் அன்பர;களே..!

ஆன்மிகத்தில் அடியெடுத்து வைக்கின்றபோதே எதற்கும் தயாரான மனநிலை இருந்தாலன்றி.. (மனநிலை என்பது பக்குவத்தின்-அனுபவத்தின் இருப்புநிலையைப் பொறுத்தது) உள்ளே நுழைந்தபின் அந்தப் பயணம் மிகவம் நெடியது.. கடியது.. அடியது.. அதுவே முடியது. வைக்கின்ற ஒவ்வொரு அடியும் நிதானமாக எடுத்து வைக்கவேண்டும் என்பதைப் பக்குபவப்பட்ட பெரியவர;கள் சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர;கள். ஆம் அன்பர;களே.. தன்னை அறிய வேண்டுமென்றால் முதலில் தன்னைச் சுருக்கிக் கொள்வேண்டும். ‘தன்னையறிய தனக்கொரு கேடில்லை’ என்றார;களே அதுதான் நம் ஆன்மிகம்.

இன்றைய நாகரீக வளர;ச்சியில் உலகம் என்னவோ சுருங்கிவிட்டது என்று அனைவரும் கூறிக்கொண்டிருப்பது வேடிக்கையான விஷயம். உண்மையில் உலகம் சுருங்கிவிட்டதா? அதனுடைய உருண்டை வடிவத்தில் அது அப்படியேதான் இருக்கின்றது.. பின் எதைவைத்து மனிதர;கள் அப்படிச்சொல்லுகின்றார;கள்? அவர;கள் சொன்ன சுருக்கம் என்ன? உலகம் சுருங்கிவிட்டது என்பதை அவர;கள் அதனை அளப்பதின் நேரத்தை வைத்து வெளிப்புறமான தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து சொல்லப்பட்டவைதான். அதாவது ஒரு ஊரிலிருந்து மற்றஊருக்குச் செல்லும் பயண நேரம், நாடு விட்டு நாடு பின் கண்டம் விட்டு கண்டம் என்றெல்லாம் மனிதன் பறந்து கொண்டிருக்கின்றான் விமானத்தில். அவனக்கு வேண்டிய தகவலை அறிய இணையதளம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தொலைத்தொடர;பில் அவனது ஆதிக்கம் அதிகமானதும் அவனது தொடர;பு எல்லைகள் அனைத்தும் மிக எளிதாக உள்ளங்கையில் வந்துவிடுவதால் அதை வைத்தும், அவனது விஞ்ஞான வளர;ச்சியை வைத்தும் அவன் உலகம் சுருங்கிவிட்டது என்று சொல்லுகின்றான். நம்முன்னோர;கள் காலத்தில் இல்லாத விஞ்ஞான வளர;ச்சி இப்போது வந்துள்ளதை மறுக்க முடியாது. அது அவசியமான ஒன்று. இன்னும் வளரும் என்பதில் ஐயமில்லை. ஆனால் நமது கேள்வி அது இல்லை. உலகம் சுருங்கிவிட்டது என்பதன் உண்மைப் பொருள் என்ன? அவனது புறத்தோற்றத்தின் பயணத்தின் அல்லது தகவலின் அடிப்படையில் அவனது நேரச் செலவின்மை முன்பை விடக் குறைந்துவிட்டது என்பதை வைத்தே அவன் சொன்னவைதான் அது. ஆனால் உலகம் அது அளவில்தான் உள்ளது.

இதில் ஓர; உண்மையினை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.. அவன் சுருக்கம் சுருக்கம் என்று சொல்லிக்கொண்டு தன்னை விரித்துக் கொண்டே இருக்கின்றான் என்பதே அது. ஆம் அன்பர;களே.. ஆன்மிகத்தின் தனித்திருத்தல் என்பது முன்பு சொன்னதுமாதிரி பல என்பது சிலதுவாகிப் பின் ஒன்று என்ற ஒருமைக்கு வருகின்றபோதுதான் உண்மைத் தனிமை தொடங்குகின்றது. ஆனால் இன்றோ.. ஒன்றில் தொடங்கி வரிந்து கட்டிக்கொண்டு எண்ணிக்கையில் கூட்டிக்கொண்டே செல்வதைத்தான் காணமுடிகின்றது. இது சுருக்கமா.. விரிவா?

இந்த பிரபஞ்சத்தில் மண் தத்ததுவத்தின் படி பார;த்தால் அது உயிர;புள்ள தன்மை கொண்டுள்ளதால் தன்னகத்தே உள்ளதை பிரித்தெடுத்து ஒன்றை ஒன்பதாக்கப் பார;க்கும் தன்மையினதாய் பெருக்கிக் கொண்டே செல்லும். எனவே தான் மண்ணில் போட்ட வித்தானது ஒன்றிலிருந்து தன்னை விரித்துக்கொண்டு விளையும் தன்மை கொண்டதாக இருக்கின்றது. இந்த பிருத்திவி என்கின்ற மண்தத்துவம் ஸ்தூலத்தை மட்டுமல்ல ஸ்தூக்குமத்தையும் தாங்கி நிற்கக் கூடியதாக இருக்கின்றது. ஓர; விதையின் உள்ளே இருக்கின்ற செடியின் பு+ரணத்தை நம்மால் சொல்லிவிடமுடியுமா? அது இன்ன செடி அல்லது கொடி அல்லது மரம் என்பது போன்ற பெயரினை வேண்டுமானால் சொல்லிவிட முடியும். ஆனால் அது விளைகின்றபோது இத்தனை எண்ணிக்கை உள்ளதாக விளையும், இத்தனை எண்ணிக்கையிலான கிளைகளை அது விரிக்கும், இத்தனை பு+வினை அது தோற்றுவிக்கும், அதில் இத்தனை காய்க்கும், அதில் இன்னவைகள் மட்டும்தான் பழுக்கும் என்றெல்லாம் நம்மால் சொல்லிவிடமுடியுமா? அது பிரபஞ்சத்தின் இரகசியம். ஆம் அன்பர;களே..! இந்த பிரபஞ்சம் பஞ்சபு+தக் கலவை கொண்டு செய்யும் அற்புதம் அளப்பரியது. அதனைப் புரிவதும், அறிவதும் அவ்வளவு எளதல்லவே! அதனை அறிகின்ற நோக்கில் நமது ஆன்மிகம் நமக்கு அறிவுறுத்துவதே இந்தச் சுருக்கம். வுpதையின் தன்மை தெரியவேண்டுமென்றால் நாம் அந்த விதையின் தன்மைக்கே செல்லவேண்டும்.. அப்படியானால் நாம் முதலில் சுருங்க வேண்டும். அதை விடுத்து விரித்தோமென்றால்.. விரிக்க விரிக்க விரிகின்ற வானம்போல்.. தன்னை விரிக்க விரிக்க எதிலிருந்து தொடங்குவது என்ற குழப்பமே நமக்கு மிஞ்சும். சுருங்கச் சுருங்க நமது பார;வையின் அளவும் அதன் எல்லையும் குறைவதால் நம்மால் எதைப் பார;க்கின்றோம் என்கிற தெளிவும் புரிதலும் நமக்குக் கிடைக்கும்.
உண்மையில் சுருக்கத்தில்தான் மிக எளிதாக அத்தனையும் நம்மால் கண்டுணரமுடியும். ஆம் அன்பர;களே.. உதாரணமாக தொலைநோக்கியில்- பைனாக்குலரி;ல் தூரத்தில் உள்ள ஓரிடத்தைப் பாரக்கின்றபோது அது மொத்தமாகத் தெரியும். குறிப்பாக அந்த இடத்தில் உள்ள ஒரு பகுதியைப் பாரக்கவேண்டுமானால் பைனாக்குலரை இன்னும் நெருக்கமாக சுருக்கிப் பார;த்தால்தான் அந்தப் பகுதியினை நம்மால் கண்டுணர முடியும். அதைப்போலவே நாமும் நம்மை மொத்தமாகப் பார;த்துக் கொண்டே இருப்பதனால் நாம்தான் நம்மை நன்றாகப் பார;த்துக்கொண்டே இருக்கின்றோமே என்று நினைத்துக்கொண்டால் அது தவறு. குறிப்பாக ஓர; இடத்தைப் பார;க்க சுருக்கிப் பார;ப்பதைப்போல் பார;த்தால் அன்றி நமது நிறைகுறைகள் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.
ஆன்மிகத்தில் யாரைக் கேட்டாலும் சொல்லுகின்ற வசனம்மாதிரி.. அண்டத்தில் உள்ளதுதான் இந்தப் பிண்டத்தில் உள்ளது.. இந்தப் பிண்டத்தில் உள்ளதுதான் அண்டத்திலும் உள்ளது என்பது. அப்படியானால் இந்த உலகத்தில் ஓர; மூளையில் உள்ளதைத் தெரிந்து கொள்ள அங்கு புறத்தால் பயணம் செய்து பார;த்து வருவதைவிட அகத்தால் சென்று பார;த்து வருவது என்பது சாத்தியம்தானே.! அந்த வகையில்தானே நமது முன்னோர;களான பெரியவர;கள் நமக்கு அளித்துச்சென்ற கொடையான மெய்ஞானப் புதையல்கள் ஏராளம். இன்றைய விஞ்ஞானம் சொல்லும் அல்லது ஒத்துக் கொள்ளும் விஷயங்களை எந்தவொரு புறக்கருவியுமின்றி அகக்கருவியினால் மட்டும் ஆராய்ந்து உற்றுநோக்கி அளித்த உண்மைகள் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம். உதாரணமாக கோள்களின் நிறம்முதல் இயக்கம்வரை நமது பெரியவர;கள் செய்த பதிவு. ஆக இருந்த இடத்தில் இருந்து கொண்டே விஞ்ஞானம் செய்த அற்புதங்களை அன்றே நமது மெய்-ஞானிகள் செய்துவிட்டுப் போனார;கள். இன்றளவும் சத்தம் போடாது பலரும் செய்து கொண்டிருக்கின்றார;கள்.
இந்த பு+மித்தத்துவம் மாயாத் தத்துவத்தின் முன்னோடியாக இருப்பதனால்தான் உலக உயிர;கள் அனைத்தும் மாயையென்னும் சிற்றின்ப வௌ;ளத்தில் சிக்கிக்கொண்டு இன்பத்திற்காகத் தன்னை விரித்துக்கொண்டே செல்கின்றது. நம் உறவுகளும் அப்படித்தான்.. மனைவி மக்கள் உறவினர;கள் என்றெல்லாம் விரித்துக்கொண்டும், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மீது பரிவும் பாசமும் கொண்டு அதனைக் காக்கும் முயற்சியாகப் பலவற்றைச் சேர;த்துக்கொண்டும் மனிதன் இன்னும் தன்னை விரித்துக் கொண்டே இருக்கின்றான். விரித்தலின் இறுதியாக அவன் தன் பிறப்புக்களையும் விரித்துக் கொள்கின்றான் என்பதினை அவன் மறந்துவிட்டான். அறியாமை என்ற ஒன்றில் சிக்கித்தவிக்கும் அவனது மனது விழிப்படையாதவரையில் அவனால் அந்த விரித்தலின் தன்மையிலிருந்து தன்னை ஒடுக்கிக் கொள்ள இயலாது.
விரித்துக் கொண்டே சென்ற பட்டினத்தாரைப் படித்தபின்பும் இவர;கள் இன்னும் விரிய ஆசைப்படுவது வேடிக்கையாகவும் அர;த்தமற்றதாகவும் உள்ளது. சிறகை விரி பற என்பதை இவன் தவறுதலாகப் புரிந்துகொண்டு புறத்தில் விரிப்பதை நிறுத்தியபாடில்லை. புறம் சுருங்கினாலன்றி அகம் விரியாது. இந்த விரித்தலின் அடிநாதமாக இருப்பது எதுவென்று நாம் கண்டுபிடிக்க முனைந்தால் இந்த முனைப்பில் தொடங்கும் எண்ணமே அதன் வேராக இருப்பது புரியவரும். ஏண்ணமது விரிவதுவே இந்த உலகத்தின் இயங்கு நிலையாக பிரதான செயலாக இருக்கின்றது. ஆதை ஆளும் வல்லமை பெற்றாலன்றி நாம் ஒடுங்க முடியாது எண்ணத்தினை ஒடுக்கவும் முடியாது. ஆதை நமது சுவாமிகள் மாதிரியான குருமார;களின் சந்நிதியில் அவர;கள் முன்னலையில் படிக்க முற்படுகின்றபோது நமக்குள் சில மாற்றங்கள் ஏற்படுவதை கண்டிப்பாய் உணரமுடியும்.
அது ஓர; சிற்பியின் வீடு.. அந்த வீட்டில் பிறந்த குழந்தை அங்கே வடிக்கின்ற சிற்பத்தினை உருவாக்குகின்றதைப் பார;த்துப் பார;த்து வளர;ந்ததன் காரணமாக விபரம் அறிந்து பேச ஆரம்பித்த புதிதில் தன் மழலை கலந்து தன் தாயிடம் கேட்டது.. அம்மா.. இது என்ன என்று ஓர; கருங்கல்லைப் பாரத்துக் கேட்டது.. அதற்கு அந்தத் தாய்.. அது கல் என்றது.. இன்னொரு பெரிய கல்லைப் பார;த்துக் கேட்டது.. இது என்ன என்று? அதற்கும் தாய் பதிலாக கல் என்றாள். இப்போது குழந்தை ஓர; சிலையைக் காட்டி கேட்டது.. இது என்ன? என்று கேட்டது.. அதற்கு தாய் இது நந்தி என்றாள். ஆப்படின்னா.. மாடு டா செல்லம் என்றாள் கொஞ்சலாக. இப்போது இன்னொரு சிலையைக் காட்டி கேட்டபோது இது சாமிடா என்றாள். இப்போது குழந்தை கேட்டது.. அது கல்லு, இது கல்லு ன்னு சொன்னே.. ஆனா இது நந்தி இது சாமின்ன சொல்லறே’. ஏல்லாம் ஒண்ணு இல்லையா? அப்படின்னு கேட்டது குழந்தை
இப்போது தாய் சொன்னாள் கனிவாக.. ஆமடா செல்லம் எல்லாம் ஒண்ணுதான்.. ஆனா நாமதான் பார;ப்பதற்காக ஒன்;னை இப்படி ஒன்பதாக்குறோம்.. ஆனா ஒன்னு..பிறந்த நாம நம்மளையும் இப்படி செதுக்கினாத்தான் இந்த கல்லுமாதிரி இருக்கிற நாம உள்ளே இருக்கிற கடவுளைப் பார;க்க முடியுமுன்னு சொன்னாள். இப்போது குழந்தை வாய்விட்டு சிரித்தது.
.


விரித்தலும் சுருங்குதலும் நமதியல்பே யென்றாலும்
விரிசடையோன் செயலின்றி மண்ணதுவும் விண்ணாமோ?
அண்டம் பிண்டம் இவைரெண்டும் ரெண்டல்ல
உண்டென்ற உள்ளிருப்பே உருவென்றும் குருவென்றும்
கண்ணென்ற அகவிரிப்பே உண்மையெனும் சுருக்கமாகும்
அசைவதும் ஆடுவதும் விரித்தலின் செயலாகும்
ஆசையென்னும் விருப்பமது மாயையெனும் தூதாகும்
புறமது சுருக்கிடினில் அகமது விரிவாகும்
சிறகது விரிப்பது சிந்தனையின் தெளிவாகும்
அறிவதும் புரிவதும் அதனது சிறப்பாகும்.

ஞானசி, சென்னை-96





gnanasi@yahoo.com
gnanasi@yahoo.com
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 3
Points : 9
Join date : 09/05/2013
Age : 52
Location : சென்னை

Back to top Go down

சுருங்குவதும் விரிவதும் (ஆன்மீகம்) Empty Re: சுருங்குவதும் விரிவதும் (ஆன்மீகம்)

Post by அ.இராமநாதன் Thu May 09, 2013 11:23 pm

பய [You must be registered and logged in to see this image.]னுள்ள கட்டுரை...
-

தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum