தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மாதுவின் காதலன்

Go down

மாதுவின் காதலன் Empty மாதுவின் காதலன்

Post by udhayam72 Mon May 13, 2013 12:01 pm

மாதுவின் காதலன்




கல்லூரி முடிச்சிட்டு சென்னையிலே வேலை தேடி கே.கே நகர்ல அடுக்கு மாடி குடி இருப்பிலே இரண்டாவது மாடியிலே இருந்தேன்.எதாவது நேர் முகத்தேர்வுக்கும், வேலை தேடி விண்ணம் அனுப்புவதும் தான் வேலை எனக்கு, என் ௬ட கல்லூரியிலே என்னுடன் படித்த நண்பனும் தங்கி இருந்தான்.மாசத்திலே பாதி நாள் வீட்டிலே தான் இருப்போம், கடையிலே சாப்பிட்டா அதிகம் செலவு ஆகிறது என்பதாலே நாங்களே சமைக்க ஆரம்பித்தோம்.

சமையல் முடிந்தது போக மற்ற நேரங்களிலே வரண்டாவிலே நின்று கட்டை பீடி அடிச்சிகிட்டு இருப்போம்.ரெம்ப நல்ல பையனா இருந்த அவனுக்கு பீடி குடிக்க சொல்லி கொடுத்தா சிகரட் குடிக்க ஆரம்பிச்சிட்டான்.

இப்படி கதையை ஓட்டிகிட்டு இருக்கும் போது ஒரு நாள் வழக்கம் போல இந்திய தபால் துறையினர் கீழ் வீட்டுக்கு கொடுக்க வேண்டிய கடிதத்தை எங்க வீட்டுக்கு கொடுத்தாங்க, விலாசத்திலே பெண்ணோட பெயர் இருந்தததினாலே, இந்த விஷயத்தை ௬ட இருந்த நண்பன் கிட்ட சொல்லவே இல்லை.


அவன் கிட்ட சொன்னா, அவன் நானும் வருவேன்னு சொல்லிட்டா ஒரு பொன்னான வாய்ப்பு வீணாப் போயிடுமேன்னு ஒரு நல்ல எண்ணத்திலே இப்படி ஒரு சம்பவம் நடந்ததா காட்டிக்கவே இல்லை. நண்பன் வெளியே போன நேரம் பார்த்து அவசர அவசரமா கடிதத்தை எடுத்துகிட்டு கீழே போனேன்.

கதவை தட்டினேன், கொஞ்ச நேரம் யாருமே திறக்க வில்லை, மறுபடி தட்டினேன், ஒரு கை மட்டும் வெளியே வந்து என்ன என்று கேட்டது, பதில் ஏதும் சொல்லாம கடிதத்தை வைத்து விட்டு வந்து விட்டேன்.அளவுக்கு அதிகமா எதிர்பார்ப்போட போன எனக்கு நடந்த சம்பவம் மன வருத்தம் தந்தாலும், முயற்சியை கை விட முடியலை, அவ கை அம்புட்டு அழகா இருந்தது, அடுத்த முறை தபால் துறை அவங்க வீட்டுக்கு போட்ட கடிதத்தை நான் எடுத்திட்டு வந்திட்டேன்.

அடுத்த நாளே போய் கதவை தட்டினேன், மறுபடியும் கை வந்தது, கடிதத்தை வைத்தேன், கதவு திறந்தது, என் மனக்கதவும் திறந்தது,என்னைய மேலும் கீழும் பார்த்தாள். அப்படி ஒரு சிரிப்பு அவளுக்கு, நான் ௬ட முதல்ல என் அழகிலே மயங்கி தான் சிரிக்கிறாளோன்னு நினைச்சேன். கொஞ்ச நேரத்திலே தெரிந்தது நான் சில்லரைத்தனம் பண்ணினது தெரிஞ்சி போச்சோன்னு எனக்கு சந்தேகம் வந்தது.

அன்றையிலே இருந்து நான் போகும் போதும் வரும் போதும் அவளைப் பார்த்து சிரிப்பேன், அவளும் தான். நாங்க சமைக்க ஆரம்பித்த புதுசிலே என்ன சமைக்கிறோம் என்பதே தெரியாமல் இருந்தாலும் , கொஞ்ச நாள்ல உணவு கட்டுப்பாட்டு கழகம் சான்றிதழ் தரும் அளவுக்கு சமையல் வளர்ந்தது.

ஒரு நாள் இப்படித்தான் சாம்பார் வைத்து விட்டு பக்கத்து தெருவிலே இருந்த நண்பன் ஒருவனுக்கு எடுத்து செல்லும் போது, என்னோட கோலத்தை பார்த்து, வெளியே போய் உட்கார்ந்து கை நீட்ட தான் சொம்பு எடுத்திட்டு போறேன்னு அவ நினைச்சி கேட்க, சாம்பார்ன்னு சொல்லியும் அவ நம்பாததாலே கொஞ்சம் ருசி பார்க்க கொடுத்தேன், அப்படியே சொம்பை எடுத்து வச்சி கிட்டா, சொம்பு போனாலும் சாம்பாரிலே சங்கமம் ஆகிட்டேன்னு நினைக்கும் போது சந்தோசமே.

நான் இப்படி காதல் நோயிலே இருந்ததாலே அக்கம் பக்கம் நடக்கிறதை கண்டு பிடிக்க முடியலை, என் அறை நண்பனுக்கு ஒரே சந்தேகம் அவளைப் பற்றி, என்கிட்டயும் சொன்னான்.

"மச்சான், அவ எங்கையும் வேலைக்கு போன மாதிரி தெரியலை, ஆனா பகல்ல ஆள் வெளியே வருவது கிடையாது, இரவு ஏழு மணிக்கு மேல யார், யாரோ வாராங்க அவ வீட்டுக்கு"

"எவ்வளவு நாளா இப்படி நடக்குது"

"ரெம்ப நாளாவே இப்படித்தான் நடக்குது"

அவ அழகுக்கு என்னைய மாதிரி ரெம்ப பேரு துண்டு போட வருவாங்களோன்னு நினைச்சாலும், வீட்டுக்குள்ளே எப்படி போக முடியும்ன்னு யோசித்தேன்.

அடுத்த நாள் இரவு நானும் கவனித்தேன், அவ வீட்டுக்கு யாரும் வந்த மாதிரி தெரியலை, இருந்த பீடி காலியாகி விட்டதாலே கடைக்கு போனேன், போகும் வழியிலே அவளைப் பார்த்தேன், சிரிச்சிட்டு உள்ளே வா என்று கை காட்டினாள்.

வரவேற்பு அறையிலே இருந்த மேசையிலே பார்த்தா சரக்கு பாட்டில் இருக்கு, என்னைய நாற்காலிலே உட்கார சொல்லிவிட்டு ஒரு கிளாஸ்ல ஊத்தினாள், எல்லாத்தையும் கலந்து அவளே குடிச்சிகிட்டா, நான் பொம்பளை தண்ணி அடிகிறதை முன்ன பின்ன பார்த்தது கிடையாது, என்ன சொல்லன்னு தெரியாம இருந்தேன், அவ என்கிட்டே கேட்டாள். தண்ணி அடிப்பியான்னு, ஓசியிலே என்ன கிடைத்தாலும் குடிப்பேன்னு மனசிலே நினைச்சிகிட்டாலும், ஆமான்னு தலையை ஆட்டினேன். எனக்கும் ஒரு கிளாஸ் வந்தது, குடித்தேன்.

குடிச்ச கொஞ்ச நேரத்திலே நான் என்ன கேள்வி கேட்க தயங்கினேனோ, அதையெல்லாம் சரளமா கேட்டேன், அடுத்த கிளாஸ் போன உடனே, பதில் சொல்லலைன்னா நான் வீட்டுக்கு போக மாட்டேன்னு சொன்னேன்.பதில் சொன்னாள், சொன்ன பதிலை கேட்டு போதைஎல்லாம் தலை தெரிக்க ஓடிப்போச்சி, அதற்குள் பாட்டிலும் காலி ஆகி விட்டது, வீட்டுக்கு வந்து அவளைப் பத்தியே யோசித்து கொண்டு தூங்கி விட்டேன்.
உண்மை என்னன்னு தெரிஞ்சாலும், ஏனோ துண்டை எடுத்து கீழே வைக்க முடியலை, வேலை வெட்டி இல்லாம வீட்டிலே இருந்து அவளைப் பத்தியே யோசித்தேன். அவளிடம் நிறைய பேச ஆரம்பித்தேன், ஓசி சரக்கும் நிறைய கிடைத்து, அரை மூடி குடித்தாலே அரை நாளுக்கு சலம்புற நான் அவ ௬ட குடிக்கும் போது கல் காளை மாதிரி இருப்பேன். அவ நெஞ்சை பிச்சிகிட்டு நிறைய விசயங்கள் வெளிவரும், எல்லாம் முடிஞ்ச உடனே எனக்கு வாயை பிச்சிகிட்டு வெளியே வரும், பெரும்பாலும் நான் மட்டை ஆகி தான் வீட்டுக்கு வருவேன். அவளைப் பற்றி நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன், தன்னோட காதலனை நம்பி வந்தவளை, அவன் ஏமாற்றி யாரிடமோ விற்று விட்டான் என்றும், அவன் சூறையாடிய கற்பை எல்லோருக்கும் பகுந்து கொடுத்தும் இருக்கிறான், ஆரம்ப காலங்களில் உடல் வலி போக்க தண்ணி அடிக்க ஆரம்பித்தவள், இப்போ மன நிம்மதிக்கு தண்ணி அடிக்கிறாள்.

என்னவோ என்கிட்டே எல்லாத்தையையும் சொன்னாள், இந்த தொழிலை விட்டு விடலாமேன்னு கேட்டால், அதற்கு எப்போதுமே பதில் வராது அழுகையைத் தவிர.காசு கொடுத்து நொங்கு திங்கிற இடத்திலே, நான் நோகாம நொங்கு தான் திங்க முடியலை, இப்படி நோகாம சரக்கு அடிக்க முடியுதேன்னு, நானும் அவ என்ன சொன்னாலும் கேட்டுக்குவேன்.

ஒரு மாசம் கழித்து மீதும் சரக்கு அடிக்கும் போது என்னிடம் கேட்டாள்,

"என்னை தேடி வருகிறவர்களுக்கு தோணுறது உனக்கு தோணலையா?"

"தோணும், அதற்கான விலை என்கிட்டே இல்லை"

"உனக்கு தேவை இல்லை" சொல்லி அடுத்த நிமிசமே தேதியும் குறிச்சாச்சி. அந்த நாளும் வந்தது, அவ வீட்டுக்கு போனேன், வழக்கத்துக்கு மாறாக அவள் ரெம்ப அழகா தெரிஞ்சா, வீட்டுக்குள்ளே போய் கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்தேன். ரெண்டு பேருக்குமே சரக்கு பத்தி ஞாபகம் வரலை. வந்த வேலையை பார்க்கலாமுன்னு படுக்கை அறையை நோக்கி போனோம். கதவு தட்டப் படும் சத்தம் கேட்டது. என்னை இருக்க சொல்லி விட்டு கதவை திறந்தாள். காவல் துறையினர் வாசலிலே, அவளிடம் அனுமதி கேட்காமல் வீட்டுக்குள்ளே வந்தனர். நானும் பயத்திலே வெளியே வந்தேன்.

"தினமும் புது புது ஆளுங்களை வச்சி, தொழில் பண்ணுறியா?" அவள் ஒண்ணும் பதில் சொல்லலை. என்கிட்டே கேட்டாங்க.

"எவ்வளவுடா கொடுத்த?"

"இல்லை சார்"

"என்ன நொள்ள, நடங்க ஸ்டேஷன்க்கு"

"சார், இந்த பையன் மேல் வீட்டிலே தங்கி இருக்கிறான், அவன் அப்படிப்பட்ட ஆள் இல்லை" ன்னு சொன்னா,அதை நம்பின மாதிரி தெரிஞ்சது, என்னை போக சொல்லிட்டாங்க, ஓடியே போயிட்டேன்.

அடுத்த நாள் தினசரிகளில் விபச்சாரி கைது, அவளின் புகைப் படத்துடன், அந்த படத்தை வெட்டினேன், நண்பன் வீட்டிலே சாமி படம் இல்லைன்னு அடிக்கடி சொன்னது ஞாபகம் வந்தது.
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum