தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மதிப்பு மிகுந்த மலர்

Go down

மதிப்பு மிகுந்த மலர் Empty மதிப்பு மிகுந்த மலர்

Post by udhayam72 Mon Jun 10, 2013 5:55 pm

மதிப்பு மிகுந்த மலர்

- வல்லிக்கண்ணன்


மாலை உலா வந்த சுந்தரம் அந்த இடத்தில் அப்படி ஒரு காட்சியை எதிர்ப்பார்க்கவில்லை. அதனால் அவர் ஆச்சரியம் அடைந்தார்.
நகரத்தை விட்டு விலகி இருந்தது அந்த இடம். வெறிச்செனக் கிடந்த மேட்டு நிலம். சுத்தமான காற்றை நாடுவோர் மாலை நேரங்களில் அங்கே வருவார்கள். கார்களில், சைக்கிளில், பல ரகமான வேக வாகனங்களில். நடந்தும்கூட. உயர் குடியினர் ஆரோக்கியம் தேடி அந்த வட்டாரத்தில் வசிக்க வருவது உண்டு. அவர்களுக்கு வசதியாக பங்களாக்கள் அங்கும் இங்குமாய் தனித்தனியே கட்டப்பட்டிருந்தன.
அவர்களில் சிலர் பொழுது போக்குவதற்கு என்று 'ரிக்ரியேஷன் கிளப் ' ஒன்று அமைத்திருந்தார்கள். அத்ற்குத் தனிக் கட்டிடம் இருந்தது.
அழகான, சிறு கட்டிடம். அந்த கட்டிடத்தில் மாலை நேரத்திலும் இரவிலும் உயிரோட்டம் இருக்கும். சீட்டாட்டம், கேரம், பேட்மிட்டன் என்று விளையாட்டுக்களில் ஈடுபட்டிருப்பார்கள் பலர். சிலர் ஈசிச்சேரில் வெறுமனே சாய்ந்து ஓய்ந்திருப்பார்கள்.
பொதுவாக மாலை உலா வருகிறவர்களைத் தவிர வேறு யாரையும் வெளியே காண முடியாது. அந்த மேட்டு நிலத்தில், பரந்து கிடக்கும் பெருவெளி அது. எங்கும் காய்ந்து உலர்ந்த புல்லும், கொழிஞ்சி தும்பை போன்ற செடிகளுமே தென்படும். அங்கங்கே ஆவாரம் செடிகளும் பொன் குவியல்களாய் பூத்துச் சிரித்துக் குலுங்குவதும் பார்வையில் படும். ஒன்றிரண்டு மரங்களும் உண்டு.
சுந்தரம் அடிக்கடி அங்கே உலா வருகிறவர். அவரை அறிமுகம் செய்துகொள்ள விரும்பியவர்கள், அல்லது அவராக நெருங்கித் தெரிந்து கொள்வதற்கானவர்கள் அன்றுவரை அங்கே எவரும் குறுக்கிட்டதில்லை.
இப்போது அங்கே, அந்த பெரிய ஆலமரத்தடியில் ஒரு சிறு பெண் தனியாக விளையாடிக் கொண்டிருந்தாள். அது அவருக்கு ஒரு அதிசயமாகவே பட்டது.
அச் சிறுமிக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். நாகரீக ஜவுளிக்கடையில் அலங்காரமாக புது டிசைன் ஆடை அணிவிக்கப்பட்டு காட்சி பொருளாக நிறுத்தப்பட்டிருக்கும் அழகு பொம்மை மாதிரி இருந்தாள் அவள். உணர்ச்சித் துடிப்பும் உயிரியக்கமும் பெற்ற பொம்மை இது. தானாகவே சிரித்துக்கொண்டு, வேறு யாருடனோ பேசுவது போலவும் பாவனைகள் செய்துகொண்டு, அவள் தனக்காக ஒரு தனி உலகம் அமைத்து அதில் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருந்தாள்.
ஆனந்தமாக திரியும் வண்ணத்துப் பூச்சி. கவலையின்றி ஆடிப் பாடிச் சிறகடிக்கும் சிறுபறவை. அழகான பூங்கொத்து. நல்ல குழந்தை – சுந்தரம் அச்சிறுமியை இப்படி வியந்து நின்றார்.
சும்மா வேடிக்கை பார்த்தார்.
சிறுமி அவரைப் பார்த்தாள். அவளது ஒளி நிறைந்த கண்கள் மேலும் சுடரிட்டன. அவள் சிநேகமாகச் சிரித்தாள். இளம் வெயில்போல் அழகாக இருந்தது. அவள் சிரிப்பு.
இது வித்தியாசமான குழந்தை என்று அவர் மனம் சொன்னது. புதியவர்களைப் பார்த்து கூச்சப்படுகிற குழந்தைகள், வெட்கப்படுகிற குழந்தைகள், அநாவசியமாக பயப்படுகிற குழந்தைகள், அழுகிற குழந்தைகள் – இப்படி குழந்தைகள் பல விதம். பயமோ கூச்சமோ கொள்ளாது சிநேகமாகச் சிரிக்கிற குழந்தைகள் அபூர்வமாகத்தான் தென்படுகின்றன. இவளும் ஒரு அபூர்வப் பிறவி என்று சுந்தரம் எண்ணினார்.
சுற்று முற்றும் பார்த்தார். பெரியவர்கள் யாரையும் காணவில்லை. காரில் அல்லது வேறு ரக வாகனங்களில் மேட்டு நில வட்டாரத்துக்கு 'காற்று வாங்க ' வருகிற பெரியவர்கள் எப்பவாவது தங்களோடு குழந்தைகளையும் கூட்டி வருவது உண்டு. அவர்கள் பிள்ளைகளை தாராளமாக வெளியே விளையாட அனுமதிக்க மாட்டார்கள். இப்படித் தன்னந் தனியாக ரொம்ப நேரம் விளையாட விடுவதில்லை.
இவள் யாருடன் வந்திருப்பாள் என்று சுந்தரம் சந்தேகப்பட்டார். அச்சிறுமியிடம் கேட்டார் -
'உன் கூட யார் வந்திருக்கா ? '
யாரும் வரலே. நானாத்தான் வந்திருக்கேன் என்று தயங்காமல் கூறினாள் அவள்.
'உனக்கு பயமாக இல்லே ? '
'பயம் என்ன பயம் ' ' என்று கூறிய சிறு பெண் அவரை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
'நீ தனியாக வந்திருக்கியே, '
அப்பா அம்மா உன்னை தேடமாட்டார்களா ? கோபிக்க மாட்டார்களா ? என்று சுந்தரம் விசாரித்தார்.
அப்பா என்ன பண்ணுவாரோ, எனக்குத் தெரியாது. நான் என் அப்பாவைப் பார்த்தே ரொம்ப வருஷமாச்சு. அம்மா என்னை கோபிக்க மாட்டா. அம்மா தேடுறதுக்கு முந்தி நான் வீட்டுக்குப் போயிடுவேன் என்று அவள் அமைதியாகச் சொன்னாள்.
இது அதிசயமான குழந்தைதான் என்ற எண்ணம் மேலும் வலுப்பட்டது அவருக்கு. 'உன் வீடு எங்கே இருக்கு ? ' என்று கேட்டார்.
'அதோ… அங்கே… என்று குரலை நீட்டி இழுத்து கையையும் ஒரு திசையில் நீட்டினாள் அவள்.
அவள் காட்டிய பக்கம்தான் பெரிய மனிதர்களின் பொழுதுபோக்கு கிளப் இருந்தது. அது அவளுடைய வீடாக இருக்கமுடியாது. அதற்குச் சிறிது தள்ளி ஒரு சிறு வீடு. ஓடு வேய்ந்த சின்ன வீடு. சில அறைகளே கொண்ட கட்டிடம். இச் சிறுவீடு எனது இருப்பிடமாக இருக்கலாம் என்று சுந்தரத்தின் மனம், அதைப் பார்க்கிறபோதெல்லாம் ஆசைப்படுவது வழக்கம். அது சதா பூட்டியே கிடக்கும். அதிலா இந்தச் சிறுமியும் அம்மாவும் குடியிருக்கிறார்கள் ? எத்தனை காலமாக ?
நீ அந்த வீட்டுக்கு வந்து எத்தனை நாளாச்சி ? என்று அவர் கேட்டார்.
'நாலு நாள்தானாச்சு. இன்னமே இங்கேயேதான் இருப்போம் ' என்று அவள் சொன்னாள்.
உடனேயே திடுமென நினைத்துக்கொண்டவள் போல 'நேரமாச்சு நான் போகனும் ' என்று அறிவித்தாள். குதித்துக் குதித்து ஓடிப்போனாள் ; வீட்டை நோக்கி அவள் போவதையே பார்த்து நின்றார் அவர்; சிறுமி அந்தச் சிறிய வீட்டினுள்தான் போனாள்; இந்தப் பிள்ளையோட அம்மாவுக்கு ஏதாவது சீக்காக இருக்கும்; ஆரோக்கியம் தேடி இங்கே வசிக்க வந்திருப்பாள் என்று அவர் எண்ணிக் கொண்டார்.
அதன் பிறகு சுந்தரம் அந்தப் பக்கம் உலா வந்த போதெல்லாம் அச்சிறுமியைத் தவறாது சந்திக்க முடிந்தது: அவள் பெயர் உஷா என்றும் தெரிந்தது.
உஷா அழகான பெயர். உதயம் போல் ஒளியோடு, கலகலப்பாக, ஜீவத்துடிப்போடு தான் இந்தக் குழந்தையும் இருக்கிறது. விடியற்காலத்தின் பொன்னொளி இதன் கண்களில் மின்னுகிறது. இதன் சிரிப்பில் பளீரிடுகிறது; ஒளியின் வைரரேகை மாதிரித்தான் இதன் உருவமும் இருக்கிறது; இப்படிக் கவிதை பேசிக் களித்தது அவர் வனம். ஒவ்வொரு சந்திப்பின் போது உஷா அவருடைய ஆச்சர்யத்தை அதிகப்படுத்தி வந்தாள்; எப்பவும் அவள் தனியாகத்தான் காணப்பட்டாள்; சதா சிரித்த முகமாகவே காட்சி தந்தாள்; அவளுடைய சின்ன வாய் எப்போதும் வார்த்தைகளை கலகலப்பாக அள்ளித் தெறிக்கும் ஊற்றாக விளங்கியது. உஷாவுக்கு பூக்களின் மீது அதிக ஆசை. சுற்றித் திரிந்து ஆவாரஞ் செடிகளின் பொன்னிறப் பூக்களை அதிகம் அதிகமாக சேகரிப்பது அவளுக்கு சந்தோஷம் தரும் காரியமாக இருந்தது. சில பங்களாக்களின் வெளிப்புறச் சுவர்களுக்கு மேலாக வளர்ந்து தொங்கும் செடிகளில் குலுங்கிப் பளிச்சிடும் பிங்க் நிற போகன்வில்லாப் பூக்களும் அவளுக்குப் பிடித்தமானவைதான்; செம்பரத்தம் பூக்கள் அவளது ஆனந்தத்தை அதிகப்படுத்தின. அவற்றை நிறைய நிறையப் பறித்து வைத்து அவள் விளையாடினாள். உங்களுக்கு எந்தப் பூ மாமா பிடிச்சிருக்கு ? என்று உஷா ஒரு நாள் சுந்தரத்தைக் கேட்டாள். எல்லாப் பூக்களும் எனக்குப் பிடிச்சிருக்கு என்றார் அவர். 'ஊம்ம், எது ரொம்ப புடிச்சிருக்கு ? ' 'ரொம்ப ரொம்ப எனக்குப் பிடிச்ச பூ எது தெரியுமா ? ' என்று அவர் அவள் ஆவலைத் தூண்டும் விதத்தில் கேட்டு நிறுத்தினார். 'எது மாமா, எந்தப் பூ ? ' என்று அவள் அவசரப் படுத்தினாள். 'எல்லாப் பூக்களையும் விட அழகாக இருக்கிற உஷா தான் எனக்குப் பிடித்த பூ; உஷா ஒரு பெரிய பூச்செண்டு ' இனிய பூந்தோட்டம்னே சொல்லலாம்; என்று சுந்தரம் கூறினார். சிரித்தார். 'போங்க மாமா ' கேலி பண்றீங்க ' ' என்று செல்லச் சிணுங்கல் சிணுங்கினாள் உஷா. 'நிஜம்மா நீ ரொம்ப பெரிய பூ தான்; உன் முகம் ஜோரான ரோஜாப்பூ. உன் கைகள்கூட சிறு சிறு ரோஜாக்கள்தான்; கண்கள் கருநீலப்பூ; பாதங்கள் தாமரைப்பூ; உன் மூக்குக்கூட அழகான ஒரு பூதான். அதுக்குப் பேரு தான் எனக்குத் தெரியலே ' என்று சொல்லி, அவர் தன் விரல்கள் இரண்டினால் அவள் குமிழ் மூக்கைப் பிடித்து ஆட்டினார். 'போங்க மாமா, நீங்க நல்ல மாமா இல்லே ? ' என்றாள் பிறகு ஏதோ சிந்திப்பவள் போல அமைதியில் மூழ்கி நின்றாள். 'உஷாவுக்கு என்ன திடார் யோசனை ? ' என்று சுந்தரம் கேட்டார். 'பூக்கள் ஜோராக இருக்கு; அழகு அழகாச் சிரிக்கும் குட்டிக் குட்டி தேவதைகள் போல் தோணுது; அழகாப் பூத்து சந்தோஷம் தருகிற பூக்கள் ஏன் எப்பவும் இப்படியே இருக்கக்கூடாது ? ஏன் வாடிப்போகனும் ? என்று 'சீரியஸ் ' ஆகவே கேட்டாள் அவள். 'ஊம்ங், அப்புறம் ? ' என்று கிண்டல் தொனியில் அவர் தலையை ஆட்டியபடி வினவினார். 'அழகானது எல்லாம் சீக்கிரம் அழிஞ்சு போகுது. அல்லது தேய்ஞ்சு மறைஞ்சு போகுது. பூக்கள் அதுக்கு உதாரணம் இல்லையா ? ' 'ஆ. டாயர் பிலாசபர் இன் பாவாடை ' அதாவது பாவாடையில் காட்சி தருகிற அருமை தத்துவதரிசியே ' நீ உன் வயசுக்கு மீறி உன் மூளைக்கு வேலை கொடுக்கிறாய். நீ சின்னபிள்ளையாய், சிட்டுக் குருவியாய், வண்ணத்துப் பூச்சியாய், கவலை இல்லாமல் உல்லாசமாகவே விளையாடிக் கொண்டிரு ' என்று உபதேசியார் மாதிரிப் பேசினார் சுந்தரம். 'வவ்வவ்வே ' ' என்று வாயைக் கோணலாக்கி பழிப்புக் காட்டினாள் சிறுமி. பூக்களைச் சிதறி வீசி விட்டு ஓடிப் போனாள். 'குரங்கு ' செங்குரங்கு ' ' என்று உரத்துக் கூவினார் சுந்தரம். அழகிய பூக்களை அப்படி அந்தப் பெண் நாசப்படுத்தியது அவருக்கு எரிச்சல் தந்தது. உஷா திரும்பிப் பார்க்காமலே போய் விட்டாள்.
நாளைக்கு அவளுக்கு அழகான, பூக்கள் கொண்டு வந்து கொடுக்க வேண்டும்; அவள் முகமே பெரிய ரோஜாப் பூவாய் சிரிப்பதைக் காண வேண்டும் என்று அவர் எண்ணிக் கொண்டார்.
'ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்று ஆகும் ' என்பது வாழ்க்கையில் சகஜமாக நடப்பதுதான். சுந்தரத்தின் விஷயத்திலும் அப்படித்தான் ஆச்சு.
மறுநாள் மேட்டு நிலம் பக்கம் அவர் உலாப் போக முடியவில்லை. அவரைக் கண்டு சில முக்கியமான விஷயங்கள் பேசுவதற்கென்று சிலர் வந்துவிட்டார்கள். அதுக்கு அடுத்த நாளும்…. அப்புறம்….. தொடர்ந்து பத்து நாட்கள் அவர் அங்கே போக முடியாமலே போச்சு. வெளியூர் போக நேரிட்டது.
சுந்தரம் திரும்பி வந்ததும் மாலை உலா கிளம்பினார். வழக்கமான இடத்துக்குத்தான். உஷா விளையாடிக் கொண்டிருப்பாள்; தன்னைப் பார்த்ததும் மூஞ்சியை உம்மென்று வைத்துக் கொண்டு கோபமாக இருப்பாள்; ஏன் இத்தனை நாள் வரலே என்றுக் கேட்பாள்… இப்படி மனம் எண்ணக் காற்றாடியை மேலே மேலே பறக்கவிட, அவர் வேகமாக நடந்தார்.
பெரிய ஆலமரத்தின் கீழே, ஒளிப்பெருக்கின் வைர ஊசிபோல் திகழக்கூடிய சிறுமி இல்லை. அவளது விளையாட்டுப் பொருள்களும் காணப்படவில்லை. அந்தப் பூங்கொத்து வண்ண வண்ணப் பூக்கள் சேகரிப்பதற்காக அலைந்து திரிகிறதோ என்ற சந்தேகத்தில் அவர் கண்கள் அங்குமிங்கும் தாவித் திரிந்தன.
எங்குமே அந்த உயிர்க் கவிதை இல்லை.
இந்த நேரத்தில் உஷா வீட்டுக்குள் அடைந்து கிடக்க மாட்டாளே ? விசேஷ காரணம் ஏதாவது இருக்க வேண்டும் அவர் மனசில் ஓர் பதைப்பு.
சுந்தரம் அந்தச் சிறிய வீட்டை, பெரிய மனிதர்களின் பொழுது போக்கு மன்றம் உயிரோட்டத்துடன் இயங்கிக் கொண்டிருந்த எடுப்பான கட்டிடத்துக்கு அருகில் இருந்த அழகிய வீட்டை நோக்கி நடந்தார்.
'கிளப் ' ஜீவனோடுதான் தென்பட்டது. பக்கத்துச் சிறிய வீட்டில் ஒளி குன்றிப் போனதாக அவருக்குத் தோன்றியது.
அன்னியமான வீடு. அந்த அம்மாள் அறிமுகமானவளும் இல்லை. சிறு பெண் உஷாவை அவள் விளையாடும் மரத்தடியில் சந்தித்துப் பேசியதுதான். அவளுடன் அவள் வீட்டை எட்டிப் பார்க்க அவர் வந்ததுகூட இல்லையே '
சுந்தரம் வெளி 'கேட் ' மீது கை பதித்தவாறு தயங்கி நின்றார். உஷா என்று அவர் உள்ளம் கூவியது. குரல் கொடுக்கவில்லை அவர்.
உஷாவின் அம்மா வெளியே வந்தாள். எதேச்சையாக வந்தவள், தயங்கி நிற்கும் அவரை பார்த்ததும் அவசரமாக வந்தாள். 'வாங்க, உள்ளே வாங்க ' என்று அழைத்தாள்.
'உஷா உங்களுக்குத் தொல்லை கொடுத்திருப்பாளே; சரியான தொண தொணப்பு இல்லையா ? '
அம்மா அவளாகவே கருத்து தெரிவித்தாள்.
'அப்படி எல்லாம் இல்லை. உஷா அதிசயமான பெண். உற்சாகமான சிறுமி. துள்ளித் திரியும் கவிதை. அவள் செயல்கள், பேச்சு எல்லாம் எனக்கு சந்தோஷமே தரும். அவளை எங்கே காணோம் ? '
சடக்கெனத் தலையைத் தாழ்த்திக் கொண்டு விருட்டென அந்த அம்மாள் ஏன் வீட்டுக்குள் போக வேண்டும் ? அவருக்கு குழப்பம் ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் அவள் திரும்பி வந்தாள். முகத்தைத் துடைத்துக் கொண்டு, அவள் கண்கள் கலங்கியிருந்தன.
உஷாவின் கடைசி காலத்தில் அவள் சந்தோஷத்தை அதிகப்படுத்தியவர் நீங்கள். உங்களைப் பற்றி அவள் வாய் ஓயாது பேசுவாள். நீங்கள் தேடி வந்தால், இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னாள் என்று ஒரு கவரை அவள் அவரிடம் தந்தாள்.
அவர் திகைத்தார். 'உஷா…உஷா எங்கே ? ' என்று குழறினார்.
'அந்தப் பூ வாடிவிட்டது ' ' அவள் விம்மினாள்.
மின்னாமல், உறுமாது, பேரிடி ஒன்று விழுந்தது போலிருந்தது சுந்தரத்துக்கு. 'என்னது ? என்ன ? என்று கதறினார்.
'உஷாவுக்கு இருதயக் கோளாறு. எதோ பலவீனம். சிகிச்சைக்காகத்தான் இங்கே வந்து தங்கினோம். அவள் ரொம்ப காலம் வாழ முடியாது என்பது தெரிந்த முடிவுதான். அதனால் இருக்கிற வரை 'அவள் சந்தோஷமாக இருக்கட்டுமே என்று விட்டிருந்தேன். நீங்களும் உங்களாலான உதவி செய்தீங்க. அவ சந்தோஷப்பட்டாள். மூன்று நாட்களுக்கு முன் உஷா போய்விட்டாள். '
அழுகையை அடக்க இயலாதவளாக அவள் உள்ளே போனாள்.
சுந்தரம் தன் கையிலிருந்த கவரைக் பிரித்துப் பார்த்தார். அதில் ஒரு படம் இருந்தது. வெள்ளைத்தாளில், வானவில் வர்ணங்களில் பளிச்சிட்ட ஒரு பூவின் படம். உஷா வரைந்தது. அதன் மேலே மதிப்பு மிக்க மலர் என்று அவள் எழுதியிருந்தாள். கீழே அன்பு நட்பு என்றும் எழுதியிருந்தாள்.
ஆனால் அவ்வார்த்தைகளை அன்பூ – நட்பூ என்று உஷா எழுதியிருந்தாள். வேண்டுமென்றே–தெரிந்தே–செய்யப்பட்ட இலக்கணப் பிழைதான் என்று எண்ணிக்கொண்டார் சுந்தரம்.
அவர் கண்ணிலிருந்து கண்ணீர்ப்பூக்கள் உதிரலாயின.
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum