தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
4 posters
Page 10 of 11
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
பெண்ணே நீ யார் ....?
-------------------------------
என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!
நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?
தோகை விரித்தாடும் மயில்
அழகியா ..?
எனக்காகவே இறைவனால்
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?
கண்ட நொடியில் வெந்து
துடிக்குதடி -மனசு
பெண்ணே நீ யார் ....?
குறள் - 1081
தகையணங்குறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
[You must be registered and logged in to see this image.]
பெண்ணே நீ யார் ....?
-------------------------------
என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!
நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?
தோகை விரித்தாடும் மயில்
அழகியா ..?
எனக்காகவே இறைவனால்
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?
கண்ட நொடியில் வெந்து
துடிக்குதடி -மனசு
பெண்ணே நீ யார் ....?
குறள் - 1081
தகையணங்குறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
Last edited by கே இனியவன் on Thu Nov 06, 2014 7:48 am; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
அத்துனையும் மறப்பேன் அன்பே ....!!!
கண்ணுக்கு மைதீட்டும் ....
கருவி காணாமல் ...
போனதை தேடுவதுபோல் ...!!!
என்னவனை ...
கண்ணும்போது ...
தந்த துன்பத்தையெல்லாம் .....
மறந்து இன்பம் தேடுவேன் ....!!!
+
குறள் 1285
+
புணர்ச்சிவிதும்பல்
+
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 205
கண்ணுக்கு மைதீட்டும் ....
கருவி காணாமல் ...
போனதை தேடுவதுபோல் ...!!!
என்னவனை ...
கண்ணும்போது ...
தந்த துன்பத்தையெல்லாம் .....
மறந்து இன்பம் தேடுவேன் ....!!!
+
குறள் 1285
+
புணர்ச்சிவிதும்பல்
+
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 205
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கடவுளை காணும்போது ...
கல்லை காணாதபோது ...
கடவுளை காணோம் ....
கடவுளை காணும்போது ...
கல்லை காணோம்....
என்ற பாடல்போல் .....!!!
கணவனை காணும் போது ....
அவரில் தவறுகளை காணேன் ...
கணவனை காணாத போது ...
தவறுகளையே காண்கிறேன் ...
+
குறள் 1286
+
புணர்ச்சிவிதும்பல்
+
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 206
கல்லை காணாதபோது ...
கடவுளை காணோம் ....
கடவுளை காணும்போது ...
கல்லை காணோம்....
என்ற பாடல்போல் .....!!!
கணவனை காணும் போது ....
அவரில் தவறுகளை காணேன் ...
கணவனை காணாத போது ...
தவறுகளையே காண்கிறேன் ...
+
குறள் 1286
+
புணர்ச்சிவிதும்பல்
+
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 206
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
மனம் ஏனோ உன்னையே ஏங்குதே ....!!!
தெரிந்து கொண்டே ....
குதிக்கிறோம் ஓடும் ...
வெள்ளத்தில் ....
நிச்சயம் வெள்ளம் ...
நம்மை இழுத்துக்கொண்டே ....
செல்லும் ஐயம் இல்லை ...!!!
என்னவனே
நான் உன்னில் கோபத்தில் ...
இருக்கிறேன் என்றறிந்தும் ....
என் மனம் ஏனோ உன்னுடன் ....
ஊடலுக்கே ஏங்குகிறதே ....
அதில் ஏது பயன் ...?
+
குறள் 1287
+
புணர்ச்சிவிதும்பல்
+
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 207
தெரிந்து கொண்டே ....
குதிக்கிறோம் ஓடும் ...
வெள்ளத்தில் ....
நிச்சயம் வெள்ளம் ...
நம்மை இழுத்துக்கொண்டே ....
செல்லும் ஐயம் இல்லை ...!!!
என்னவனே
நான் உன்னில் கோபத்தில் ...
இருக்கிறேன் என்றறிந்தும் ....
என் மனம் ஏனோ உன்னுடன் ....
ஊடலுக்கே ஏங்குகிறதே ....
அதில் ஏது பயன் ...?
+
குறள் 1287
+
புணர்ச்சிவிதும்பல்
+
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 207
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
என் உள்ளம் நிறைந்தவனே
என்
உள்ளம் நிறைந்தவனே ....
மதுவின் போதைதரும் ...
மார்பை கொண்டவனே ...
மயக்குதடா என்னை உன் ...
திரண்ட மார்பு ....!!!
இத்தனை அழகும் ...
எனக்கு மட்டும் தானே ....
என் உயிர் மன்னவனே ....
போதையின் மன்னவனே ....!!!
+
குறள் 1288
+
புணர்ச்சிவிதும்பல்
+
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 208
என்
உள்ளம் நிறைந்தவனே ....
மதுவின் போதைதரும் ...
மார்பை கொண்டவனே ...
மயக்குதடா என்னை உன் ...
திரண்ட மார்பு ....!!!
இத்தனை அழகும் ...
எனக்கு மட்டும் தானே ....
என் உயிர் மன்னவனே ....
போதையின் மன்னவனே ....!!!
+
குறள் 1288
+
புணர்ச்சிவிதும்பல்
+
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 208
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
காதல் அழகு புரியும் ....!!!
காதல் பூவிலும்
மென்மையானது
அனுபவித்தவர்களுக்கே ...
காதல் அழகு புரியும் ....!!!
காதலை ...
அதற்கேற்ற காலம் ...
அதற்கேற்ற இடம் ....
அதற்கேற்ற நேரம் ...
கொண்டு அனுபவித்தால் ...
அதன் அழகு புரியும் ...
அனுபவித்தவர் உலகில் ...
ஒரு சிலரே .....!!!
+
குறள் 1289
+
புணர்ச்சிவிதும்பல்
+
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 209
காதல் பூவிலும்
மென்மையானது
அனுபவித்தவர்களுக்கே ...
காதல் அழகு புரியும் ....!!!
காதலை ...
அதற்கேற்ற காலம் ...
அதற்கேற்ற இடம் ....
அதற்கேற்ற நேரம் ...
கொண்டு அனுபவித்தால் ...
அதன் அழகு புரியும் ...
அனுபவித்தவர் உலகில் ...
ஒரு சிலரே .....!!!
+
குறள் 1289
+
புணர்ச்சிவிதும்பல்
+
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 209
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கண்ணால் பேசியவளே....
கண்ணால் பேசியவளே....
கண்ணும் கண்ணும் மோதி ...
காமத்தை தோற்றுவித்தவளே...
ஊடலை ஏன் மறந்தாய் ...?
அடக்கிவைத்த உன் ...
காதலை கொட்டி தீர்த்து ....
இன்பம் கண்டுவிட்டால் ....
ஊடலை மறந்து அதிகம் ...
கூடல் கொண்டு விட்டால் ....!!!
+
குறள் 1290
+
புணர்ச்சிவிதும்பல்
+
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 210
கண்ணால் பேசியவளே....
கண்ணும் கண்ணும் மோதி ...
காமத்தை தோற்றுவித்தவளே...
ஊடலை ஏன் மறந்தாய் ...?
அடக்கிவைத்த உன் ...
காதலை கொட்டி தீர்த்து ....
இன்பம் கண்டுவிட்டால் ....
ஊடலை மறந்து அதிகம் ...
கூடல் கொண்டு விட்டால் ....!!!
+
குறள் 1290
+
புணர்ச்சிவிதும்பல்
+
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 210
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
பனிபோல் உருகுகிறாய் ,,,,?
மனமே ....
என்னை நினைக்காமல் ....
இருக்கும் என்னவனின் ....
மனம் கல்லாய் இருக்கும் ...
போது மனமே நீமட்டும் ....
ஏன் துடிக்கிறாய் ....?
கல் நெஞ்சுடைய .....
என்னவனுக்காய் ....
என் மனமே எதற்கு ....?
பனிபோல் உருகுகிறாய் ,,,,?
+
குறள் 1291
+
நெஞ்சொடுபுலத்தல்
+
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 211
மனமே ....
என்னை நினைக்காமல் ....
இருக்கும் என்னவனின் ....
மனம் கல்லாய் இருக்கும் ...
போது மனமே நீமட்டும் ....
ஏன் துடிக்கிறாய் ....?
கல் நெஞ்சுடைய .....
என்னவனுக்காய் ....
என் மனமே எதற்கு ....?
பனிபோல் உருகுகிறாய் ,,,,?
+
குறள் 1291
+
நெஞ்சொடுபுலத்தல்
+
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 211
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
மனமே உனக்கு தெரிகிறது ...!!!
ஓ மனமே ....
உனக்கு தெரிகிறது ...
என்னவன் நம்மை ....
நினைக்காதபோதும் ...
எம்மில் பகையில்லை ...!!!
மனசே .....
நாம் என்னவனிடம் ....
சென்றால் அவன் ....
மன்னிப்பான் என்று ....
தெரிந்ததாலோ எனக்கு ...
முன் நினைக்கிறாயோ....?
+
குறள் 1292
+
நெஞ்சொடுபுலத்தல்
+
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 212
ஓ மனமே ....
உனக்கு தெரிகிறது ...
என்னவன் நம்மை ....
நினைக்காதபோதும் ...
எம்மில் பகையில்லை ...!!!
மனசே .....
நாம் என்னவனிடம் ....
சென்றால் அவன் ....
மன்னிப்பான் என்று ....
தெரிந்ததாலோ எனக்கு ...
முன் நினைக்கிறாயோ....?
+
குறள் 1292
+
நெஞ்சொடுபுலத்தல்
+
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 212
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
என் அனுமதியில்லாமல் ...
என் மனமே ....
என் அனுமதியில்லாமல் ...
எப்படி எனவனிடம் -நீ
அடிகடி சென்று வருகிறாய் ...?
இந்த உலகில் .....
இரக்கமில்லாத மனசுக்கு ....
இரக்கத்தை கற்பிக்க - நீ
சென்றாயோ ....?
+
குறள் 1293
+
நெஞ்சொடுபுலத்தல்
+
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 213
என் மனமே ....
என் அனுமதியில்லாமல் ...
எப்படி எனவனிடம் -நீ
அடிகடி சென்று வருகிறாய் ...?
இந்த உலகில் .....
இரக்கமில்லாத மனசுக்கு ....
இரக்கத்தை கற்பிக்க - நீ
சென்றாயோ ....?
+
குறள் 1293
+
நெஞ்சொடுபுலத்தல்
+
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 213
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
எனைவனை கண்டவுடன் ....
என் மனசே ....
எனைவனை கண்டவுடன் ....
இன்பம் கொள்ள ஓடுகிறாய் ....
என்னவனின் தவறுகளை ....
புரிந்தால் நீ அவரை ....
அணுகமாட்டாய்......!!!
ஏதோ என் மனமே ....
நீயும் அவரும் பட்டுதெளி ....
என்னால் முடியாது மனசே ....
உன்னை சமாதானபடுத்த....!!!
+
குறள் 1294
+
நெஞ்சொடுபுலத்தல்
+
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 214
என் மனசே ....
எனைவனை கண்டவுடன் ....
இன்பம் கொள்ள ஓடுகிறாய் ....
என்னவனின் தவறுகளை ....
புரிந்தால் நீ அவரை ....
அணுகமாட்டாய்......!!!
ஏதோ என் மனமே ....
நீயும் அவரும் பட்டுதெளி ....
என்னால் முடியாது மனசே ....
உன்னை சமாதானபடுத்த....!!!
+
குறள் 1294
+
நெஞ்சொடுபுலத்தல்
+
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 214
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
பிரிந்துவிடுவாரோ
என் மனம்படும் ......
வேதனையை கேளீர் ....
என்னவன் அருகில் இருந்தால் ...
பிரிந்துவிடுவாரோ என்று .....
ஏங்கும் - அவர் இல்லை என்றால் ....
இல்லையே என்று ஏங்கும் ....!!!
என்னவன் இருந்தாலும் .....
இல்லாவிட்டாலும் ....
என் மனம் வேதனையில் ...
வேந்தே போகிறது .....!!!
+
குறள் 1295
+
நெஞ்சொடுபுலத்தல்
+
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 215
என் மனம்படும் ......
வேதனையை கேளீர் ....
என்னவன் அருகில் இருந்தால் ...
பிரிந்துவிடுவாரோ என்று .....
ஏங்கும் - அவர் இல்லை என்றால் ....
இல்லையே என்று ஏங்கும் ....!!!
என்னவன் இருந்தாலும் .....
இல்லாவிட்டாலும் ....
என் மனம் வேதனையில் ...
வேந்தே போகிறது .....!!!
+
குறள் 1295
+
நெஞ்சொடுபுலத்தல்
+
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 215
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
பிரிந்துவிடுவாரோ
என் மனம்படும் ......
வேதனையை கேளீர் ....
என்னவன் அருகில் இருந்தால் ...
பிரிந்துவிடுவாரோ என்று .....
ஏங்கும் - அவர் இல்லை என்றால் ....
இல்லையே என்று ஏங்கும் ....!!!
என்னவன் இருந்தாலும் .....
இல்லாவிட்டாலும் ....
என் மனம் வேதனையில் ...
வேந்தே போகிறது .....!!!
+
குறள் 1295
+
நெஞ்சொடுபுலத்தல்
+
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 215
என் மனம்படும் ......
வேதனையை கேளீர் ....
என்னவன் அருகில் இருந்தால் ...
பிரிந்துவிடுவாரோ என்று .....
ஏங்கும் - அவர் இல்லை என்றால் ....
இல்லையே என்று ஏங்கும் ....!!!
என்னவன் இருந்தாலும் .....
இல்லாவிட்டாலும் ....
என் மனம் வேதனையில் ...
வேந்தே போகிறது .....!!!
+
குறள் 1295
+
நெஞ்சொடுபுலத்தல்
+
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 215
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
நினைவுகள் கொல்லும்.....!!!
தனிமை ஒரு கொடுமை
என்னவனை தனியே ...
இருந்து நினைக்கும்போது ....
அதன் வலியோ கொடுமை ....!!!
காதலனை பிரிந்து ...
வாழும் காதலியை ....
அணு அணுவாய் ......
நினைவுகள் கொல்லும்.....!!!
+
குறள் 1296
+
நெஞ்சொடுபுலத்தல்
+
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 216
தனிமை ஒரு கொடுமை
என்னவனை தனியே ...
இருந்து நினைக்கும்போது ....
அதன் வலியோ கொடுமை ....!!!
காதலனை பிரிந்து ...
வாழும் காதலியை ....
அணு அணுவாய் ......
நினைவுகள் கொல்லும்.....!!!
+
குறள் 1296
+
நெஞ்சொடுபுலத்தல்
+
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 216
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கண்டவுடன் என் மனம் ....
என்னவனை ....
மறக்கமுடியாமல் ....
அவஸ்தைப்படும் ...
என் மனமோ ஒரு ....
மடந்தை ......!!!
என்னவனை .......
கண்டவுடன் என் மனம் ....
நாணத்தை மறந்து ....
கூடலையே மனமும் ....
நாடுதே .....!!!
+
குறள் 1297
+
நெஞ்சொடுபுலத்தல்
+
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 217
என்னவனை ....
மறக்கமுடியாமல் ....
அவஸ்தைப்படும் ...
என் மனமோ ஒரு ....
மடந்தை ......!!!
என்னவனை .......
கண்டவுடன் என் மனம் ....
நாணத்தை மறந்து ....
கூடலையே மனமும் ....
நாடுதே .....!!!
+
குறள் 1297
+
நெஞ்சொடுபுலத்தல்
+
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 217
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
என்னவன் பிரிவு வதைக்கிறது
என் உயிரோடு கலந்த ....
காதலை கொண்ட மனமே .....
என்னவன் பிரிவு உன்னை ...
வதைக்கிறது உண்மையே ....!!!
மனமே ....
என்னவனை இழிவுபடுத்தாதே ....
என்னவனை கண்டதும் ....
கலவி கொள்வாய் -நீ
தலைகுனிவாய் .....!!
+
குறள் 1298
+
நெஞ்சொடுபுலத்தல்
+
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 218
என் உயிரோடு கலந்த ....
காதலை கொண்ட மனமே .....
என்னவன் பிரிவு உன்னை ...
வதைக்கிறது உண்மையே ....!!!
மனமே ....
என்னவனை இழிவுபடுத்தாதே ....
என்னவனை கண்டதும் ....
கலவி கொள்வாய் -நீ
தலைகுனிவாய் .....!!
+
குறள் 1298
+
நெஞ்சொடுபுலத்தல்
+
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 218
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
துன்பத்தை தாங்குவதே மனதின் கடமை
துன்பத்தை தாங்குவதே ......
மனதின் கடமை ....
துன்பத்தை தாங்காத ......
மனமொன்று இருந்து ....
என்ன பயனுண்டு ......?
ஒருவனுக்கு ....
உற்ற தோழன் அவனின் ....
மனமே - அதுவே ....
மனமுடைந்தால் -மனம்
என்ற ஒன்றிருந்து பயனில்லை .....!!!
+
குறள் 1299
+
நெஞ்சொடுபுலத்தல்
+
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 219
துன்பத்தை தாங்குவதே ......
மனதின் கடமை ....
துன்பத்தை தாங்காத ......
மனமொன்று இருந்து ....
என்ன பயனுண்டு ......?
ஒருவனுக்கு ....
உற்ற தோழன் அவனின் ....
மனமே - அதுவே ....
மனமுடைந்தால் -மனம்
என்ற ஒன்றிருந்து பயனில்லை .....!!!
+
குறள் 1299
+
நெஞ்சொடுபுலத்தல்
+
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 219
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
என்னுடைய மனமே ....
என்னுடைய மனமே ....
எனக்கு உறுதுணையாக....
இல்லாதபோது - என் மனமே
எனக்கே எதிரியாக உள்ளபோது ....!!!
என் உறவுகள் எனக்கு ....
உறவாக இல்லாது ....
எதிரியாக இருப்பது ......
புதிரான விடையமல்ல .....!!!
+
குறள் 1300
+
நெஞ்சொடுபுலத்தல்
+
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 220
என்னுடைய மனமே ....
எனக்கு உறுதுணையாக....
இல்லாதபோது - என் மனமே
எனக்கே எதிரியாக உள்ளபோது ....!!!
என் உறவுகள் எனக்கு ....
உறவாக இல்லாது ....
எதிரியாக இருப்பது ......
புதிரான விடையமல்ல .....!!!
+
குறள் 1300
+
நெஞ்சொடுபுலத்தல்
+
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 220
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
ரசிப்போம் வா மனமே .....!!!
ஏய் மனமே ....
நானும் நீயும் என்னவனுடன் ....
கூடுவோம் வா மனமே வா ....
என்னவன் படும் வேதனையை ....
ரசிப்போம் வா மனமே .....!!!
அவசரபடாதே மனமே .....
அவரின் வேதனையை ....
ரசிக்கும் வரை கூடல் செய்யாதே
ஊடல் செய்வோம் மனமே ....!!!
+
குறள் 1301
+
புலவி.
+
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 221
ஏய் மனமே ....
நானும் நீயும் என்னவனுடன் ....
கூடுவோம் வா மனமே வா ....
என்னவன் படும் வேதனையை ....
ரசிப்போம் வா மனமே .....!!!
அவசரபடாதே மனமே .....
அவரின் வேதனையை ....
ரசிக்கும் வரை கூடல் செய்யாதே
ஊடல் செய்வோம் மனமே ....!!!
+
குறள் 1301
+
புலவி.
+
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 221
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
உணவுக்கு உப்பு அளவோடு ...
உப்பில்ல பண்டம் குப்பையில் ......
உப்பு அதிகமானாலும் குப்பையில் ...
உணவுக்கு உப்பு அளவோடு ....
இருப்பதுபோல் தான் ஊடலும் ....!!!
கூடலுக்கு முன் ஊடல் தேவை ....
ஊடலின்றிய கூடல் இன்பமில்லை ...
அளவுக்கு அதிகமான கூடல் ....
ஊடலில் சலிப்பை தரும் ....!!!
+
குறள் 1302
+
புலவி.
+
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 222
உப்பில்ல பண்டம் குப்பையில் ......
உப்பு அதிகமானாலும் குப்பையில் ...
உணவுக்கு உப்பு அளவோடு ....
இருப்பதுபோல் தான் ஊடலும் ....!!!
கூடலுக்கு முன் ஊடல் தேவை ....
ஊடலின்றிய கூடல் இன்பமில்லை ...
அளவுக்கு அதிகமான கூடல் ....
ஊடலில் சலிப்பை தரும் ....!!!
+
குறள் 1302
+
புலவி.
+
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 222
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
துன்பப்படுத்துவதற்கு சமன்
என்னவள் ஊடல் செய்கிறாள் ......
ஊடல் அதிகமாகின் கூடல் ....
செய்யணும் என் மனமே ....!!!
ஊடல் செய்த என்னவளை ...
கூடல் செய்யாமல் விடுவது ....
துன்பத்தில் இருக்கும் ஒருவரை ....
மேலும் துன்பப்படுத்துவதற்கு சமன்
+
குறள் 1303
+
புலவி.
+
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 223
என்னவள் ஊடல் செய்கிறாள் ......
ஊடல் அதிகமாகின் கூடல் ....
செய்யணும் என் மனமே ....!!!
ஊடல் செய்த என்னவளை ...
கூடல் செய்யாமல் விடுவது ....
துன்பத்தில் இருக்கும் ஒருவரை ....
மேலும் துன்பப்படுத்துவதற்கு சமன்
+
குறள் 1303
+
புலவி.
+
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 223
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
நீரின்றி வாடும் பயிரை ...
என்னவளோடு ....
ஊடல் செய்தவளோடு ....
கூடல் செய்யாமல் விடின் ....!!!
நீரின்றி வாடும் பயிரை ...
அதன் ஆணிவேரோடு ...
அறுதெறிவதுபோல் ....
ஆகிவிடும் மனமே .....!!!
+
குறள் 1304
+
புலவி.
+
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 224
என்னவளோடு ....
ஊடல் செய்தவளோடு ....
கூடல் செய்யாமல் விடின் ....!!!
நீரின்றி வாடும் பயிரை ...
அதன் ஆணிவேரோடு ...
அறுதெறிவதுபோல் ....
ஆகிவிடும் மனமே .....!!!
+
குறள் 1304
+
புலவி.
+
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 224
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
மலர்போன்ற கண்ணுடைய ....
ஒருவனின் அழகு உடலில் ....
அல்ல அவனது நற் குணங்களில் ...
தானே உள்ளது ......!!!
அந்த நற்குணத்தை ஆடவன் ....
மலர்போன்ற கண்ணுடைய ....
மனைவியின் ஊடலின் தாகத்தை ....
அறிந்த ஆடவனே உயர் மனிதன் ....!!!
+
குறள் 1305
+
புலவி.
+
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 225
ஒருவனின் அழகு உடலில் ....
அல்ல அவனது நற் குணங்களில் ...
தானே உள்ளது ......!!!
அந்த நற்குணத்தை ஆடவன் ....
மலர்போன்ற கண்ணுடைய ....
மனைவியின் ஊடலின் தாகத்தை ....
அறிந்த ஆடவனே உயர் மனிதன் ....!!!
+
குறள் 1305
+
புலவி.
+
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 225
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
இல்லாத காதல் வாழ்க்கை ....
பெரும் பிணி கொண்ட ஊடலும் ...
புதுமை கொண்ட புலவியும் ....
இல்லாத காதல் வாழ்க்கை ....
இன்பம் தரா காதலே ....!!!
ஏக்கமும் புதுமையும் ....
இல்லாத காதழ் வாழ்கை ....
முற்றி பழுத்த பழம் ....
பயனற்று அழுகி விழுவதும் ...
இளம் பிச்சு காய் பழுத்தது ...
போல் தெரிந்தாலும் வெம்பி ...
பழுத்தது போல் ஆகிவிடும் ....!!!
+
குறள் 1306
+
புலவி.
+
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 226
பெரும் பிணி கொண்ட ஊடலும் ...
புதுமை கொண்ட புலவியும் ....
இல்லாத காதல் வாழ்க்கை ....
இன்பம் தரா காதலே ....!!!
ஏக்கமும் புதுமையும் ....
இல்லாத காதழ் வாழ்கை ....
முற்றி பழுத்த பழம் ....
பயனற்று அழுகி விழுவதும் ...
இளம் பிச்சு காய் பழுத்தது ...
போல் தெரிந்தாலும் வெம்பி ...
பழுத்தது போல் ஆகிவிடும் ....!!!
+
குறள் 1306
+
புலவி.
+
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 226
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
Similar topics
» திருக்குறளும் காதல் கவிதையும்
» திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
» திருக்குறளும் இயற்கை நலவாழ்வும்...
» பழமொழியும் காதல் கவிதையும்
» காதல் கவிதையும் தத்துவமும்
» திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
» திருக்குறளும் இயற்கை நலவாழ்வும்...
» பழமொழியும் காதல் கவிதையும்
» காதல் கவிதையும் தத்துவமும்
Page 10 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|