தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சுவடுகள் நெய்த பாதை ! நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன். paaki55@yahoo.com, நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

சுவடுகள் நெய்த பாதை !   நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன். paaki55@yahoo.com,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty சுவடுகள் நெய்த பாதை ! நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன். paaki55@yahoo.com, நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Sat Nov 14, 2015 2:17 pm

சுவடுகள் நெய்த பாதை !


நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன். paaki55@yahoo.com,

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


தகிதா பதிப்பகம், 4/833, தீபம் பூங்கா, கே.வடமதுரை,
கோவை-641 017.
பேச : 94437 51641. மின்னஞ்சல் :
dhakitha@gmail.com பக்கங்கள் :68, விலை: ரூ.60.
*****
       நூல் ஆசிரியர் கவிஞர் பா. கிருஷ்ணன் அவர்களைப் பற்றி நூலை வெளியிட்ட தகிதா பதிப்பகம் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளது, குறிப்பிடத் தகுந்தது.

       “தமிழகத்தின் தலைநகர் தொடங்கி தாயகத்தின் தலைநகர் வரையில் தன் ஊடகத்துறையின் மூலம் உன்னதப் பங்களிப்பை இவர் வழங்கியிருக்கிறார்.  பன்மொழி அறிவும், படைப்பாக்கச் சிறப்பும், சமூக அறிவியல் ஞானமும் ஒருங்கே பெற்றிருக்கும்.  இவர் தன் அச்சு, ஊடக எழுத்துக்களின் மூலம் பல லட்சம் தமிழர்களின் இதயங்களை ஊடுருவி இருக்கிறார்.

       ஆம், உண்மைதான். பத்திரிக்கைத் துறையில் பல ஆண்டுகளாக தனி முத்திரைப் பதித்தவர் கவிதை உலகிலும் ‘சுவடுகள் நெய்த பாதை என்ற இந்த நூலின் மூலம் தடம் பதித்து உள்ளார்.  பாராட்டுக்கள்.  கவிஞர் ஜெயபாஸ்கரன் அணிந்துரை தோரணவாயிலாக வரவேற்கின்றது.

       ‘சுவடுகள் நெய்த பாதை என்ற நூலின் தலைப்பே சிந்திக்க வைத்தது.  சுவடுகள் உருவாக்கிய பாதை என்றால் சாதாரணம்.  சுவடுகள் நெய்த பாதை எனும் போது கவித்துவமாகின்றது.  சுவரொட்டி பற்றி எழுதிய கவிதை மிக வித்தியாசமானது.

       போஸ்டர் நான்!
காற்று தான் போர்வையாகும்

கைகளே ஆடையாகும்
ஏழையின் வீட்டில் நானோர்

காகித மஞ்சம் ஆனேன்
மாடுகள் உண்ணும் போது

சுவர்களின் புல்வெளியானேன்
வயிற்றிலே பசியே நிரம்பும்

பாமரன் எழுத்து கற்க
பாடமாய சுவரின் விரிவேன்.
சுவர்மரம் சாயும் போது

விழுதென ஒட்டி நிற்பேன்
கிழிந்தபின் பிளாட்பாரத்தின்

கூரையாய் ஆகி காப்பேன்
அவதாரம் செய்யும்

ஆண்டவன் தானே நானும்!


       நம் கண்ணில் படும் சுவரொட்டிகள் பற்றி ஓர் ஆய்வே நடத்தி கவிதை வடித்துள்ள கவித்துவம் மிக்க உள்ளத்திற்கு பாராட்டுக்கள்.

       மனிதர்களில் நல்லவர்கள், “தூங்குபவர்களும், இறந்து போனவர்களும் என்ற பொன்மொழியை நினைவூட்டும் விதமாக, தத்துவம் சொல்லும் விதமாக உள்ள கவிதை நன்று.

       செத்துப் போனவன்
       செத்துப் போனவன் தந்த சுகம்

       சும்மா இருப்பவன் தருவதில்லை
       கல்லறைக்க்குள்ளே இருப்பவன் போல

       நல்லதை எவனும் செய்வதில்லை
       மூச்சு நிறுத்தியவன் செய்த பணியை

       முழுசாய் இருப்பவன் புரிவதில்லை
       கண் மூடியவன் பார்த்த வாழ்வை

       மண்ணில் இருப்பவன் பார்ப்பதில்லை
       விழுந்து விட்டவன் காட்டும் குணத்தை

       வாழ்பவன் எவனும் காட்டவில்லை
       இத்தனை புகழும் கிடைப்பதற்கேனும்

       ஒருமுறை செத்தால் பாவமில்லை.


       எதுகை, மோனை மட்டுமல்ல ; இயைபும் வரும் விதமாக பல புதுக்கவிதைகள் நூலில் உள்ளன.  கவிதைகளுக்கு பொருத்தமான புகைப்படங்கள் அச்சிட்டிருப்பதால் படிக்க சுவை கூட்டுகின்றன. 

       பட்டிமன்ற நடுவர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்கள், தினமணி வைர விழாவில் பாராட்டிய கவிதை, நூலில் உள்ளது.  பாராட்டுக்கள்.

       விதையின் தவறல்ல !
       முளைத்த நாற்றுகள் காய்ப்பதுண்டா?
              காய்க்கும், இந்த மண்ணில்!
       குஞ்சுகள் கூட்டைச் சுமப்பதுண்டா?
              சுமக்கும், இந்த தேசத்தில்!
       கன்றுக்குட்டிகள் உழுவதுண்டா?
              உழும், இந்த நாட்டில்
       முதிர்ந்த பயிர்களுக்கு

       மூளை மழுங்கினால்
       சிறகுள்ள பறவையே

       சோம்பேறிகளானால்
       காளைகள் வயல் உழ  

       கௌரவம் பார்த்தால்
       கல்வியைத் தேடும் வயதில்

       காசுக்குத் தேய்கிறேன் நான்!
       தவறினை மரங்கள் செய்ய

       தண்டனை விதைகளுக்கா?


       இக்கவிதையை கூர்ந்து இரண்டு முறை படித்தால், பொருள் நன்கு புலப்படும்.  மேலோட்டமாகப் படித்தால் சாதாரணமாகத் தோன்றும்.  ஆழ்ந்து படித்தால் நுட்பமான பொருள் விளங்கும்.

       உழைக்க வேண்டிய குடும்பத் தலைவன், உழைக்காமல் குடித்து பணம் அழித்து, சோம்பேறியாக வாழ்ந்தால், மகன் சிறியவனாக இருந்தாலும், படிக்க வேண்டிய வயதில், படிப்பைத் தியாகம் செய்து விட்டு, குழந்தைத் தொழிலாளியாக உழைத்து பணம் ஈட்டி குடும்பத்தைக் காக்க வேண்டிய நிலை வரும் என்பதை மிக அழகாக புதுக்கவிதையில் சுட்டியுள்ள நூலாசிரியியர் கவிஞர் பா. கிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

       பா. கிருஷ்ணன் என்பதை பா வடிக்கும் கிருஷ்ணன் என்றும் பொருள் கொள்ளலாம்.

       உலகமயத்தின் காரணமாக நகர வாழ்க்கை இன்று நரக வாழ்க்கை ஆனது. இயந்திரமயமான வாழ்க்கையே இன்று இயல்பு வாழ்க்கையாகி விட்டது.  உறவுகளோடு உறவாட நேரமின்றி பணத்தாசையில் ஓடி ஓடி உழைக்கின்றனர்.  இயந்திரம் கண்டுபிடித்த மனிதன் இயந்திரமாக மாறி வருகின்றான்.  இனி வாழ்கின்றவர்களில் மனிதர் யார்? என்று கண்டுபிடிக்க ஓர் இயந்திரம் கண்டுபிடிக்க வேண்டும்.  இந்நிலை உணர்த்தும் கவிதை நன்று.

       யந்திரமானாய்!
       மனிதா! மனிதா! / வெளிச்ச வாழ்வை
       அமைத்துக் கொண்டாய் / இருட்டே எனக்கு
       மிச்சமானது / மாட மாளிகை
       அமைத்துக் கொண்டாய் / மணல் குடில்களைப்
       பெற்றுக் கொண்டோம் / நேரமே உனக்கு எஜமான ஆனது
       நிதானம் எங்கள் சொத்தாய் போச்சு
       வசதியைத் தேடி / நகர வாழ்க்கையில்
       யந்திரமானாய் / வாழ்க்கையைத் தேடி
       கிராம வாழ்க்கையில் / மானுடன் ஆனேன்.



       உண்மை தான்.  இன்னும் கிராமங்களில் தான் மானுடம் வாழ்கின்றது.

       உலகப் பொதுமறை வடித்த திருவள்ளுவர் யாருக்கும் தீங்கு இல்லாத பொய் என்றால் வாய்மையாகக் கருதப்படும் என்றார். இதனை சிலர் தவறாகப் புரிந்து கொண்டு, வள்ளுவரே பொய் சொல்லலாம் என்று சொல்லி விட்டார் என்று சொல்லி, வாயைத் திறந்தாலே பொய்யாகவே பேசி வருகின்றனர்.  அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகள், போட்டிப் போட்டு பொய் பேசி வருகின்றனர்.  அதனை உணர்ந்து வடித்த கவிதை நன்று.

       பொம்மைகள் !
       இந்த உலகத்தில் / எல்லோரும் இனிமேல்
       பொம்மையாகி விடுங்கள் / அப்போது தான்
       நீங்கள் பொய் சொல்ல மாட்டீர்கள்.
       இன்னொருவரை விட தனக்குத் தான்
       எல்லாம் வேண்டும் என்று / நினைக்க மாட்டீர்கள்
       மற்றவர் தனிமையை / உணர்வினை, மனசினை
       புரிந்து கொள்ளாமல் / புண்படுத்த மாட்டீர்கள்.



       பொய் பேசினால் ஊமையாகி விடுவீர்கள் என்ற நிபந்தனை இருந்தால் மட்டும் மனிதர்கள் பொய் பேசாமல் இருப்பார்கள்.

       சுவடுகள் நெய்த பாதையில் வடித்த கவிதைகள் நன்று! நூல்ஆசிரியர் கவிஞர் பா. கிருஷ்ணன் அவர்களுக்கு  பாராட்டுக்கள்!  தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்...    

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வானம் என் வாசலில் ! கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன்.நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இஃதோர் கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» சோகச் சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஆர் .டேவிட் ராஜ போஸ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கனவுச் சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» இந்திய சமகால ஓவியக் கலையின் முன்னோடி ! எம் .எப் .உசேன் ! நூல் ஆசிரியர் ஓவியர் புகழேந்தி .மின் அஞ்சல் oviarpugal@yahoo.com நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum