தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பங்குனி உத்திரம்: ஏப்ரல் 9 - பனைமரச் சோலையில் அவதரித்த சிவன்

Go down

பங்குனி உத்திரம்: ஏப்ரல் 9 - பனைமரச் சோலையில் அவதரித்த சிவன் Empty பங்குனி உத்திரம்: ஏப்ரல் 9 - பனைமரச் சோலையில் அவதரித்த சிவன்

Post by அ.இராமநாதன் Fri Apr 07, 2017 7:40 am

பங்குனி உத்திரம்: ஏப்ரல் 9 - பனைமரச் சோலையில் அவதரித்த சிவன் EURerg5Q9Wg9ywW0WXZz+panguni_3151199f
-

சோழிங்கநல்லூர், சோழ மன்னர்கள் காலத்தில் சோழன் கண்ட 
நல்லூராக இருந்தது. சோழப் பேரரசின் போர்த் தளவாடங்கள் 
பராமரிக்கும் பகுதியாக இருந்த சோழன்கண்ட நல்லூரின் 
தளபதியாக கங்கன் என்பவன் இருந்தான். 

சிவபக்தனான கங்கன் சிவபெருமானுக்காக ஆலயம் ஒன்றை 
எழுப்பி அங்கே சிவலிங்க பிரதிஷ்டை செய்ய முயற்சி எடுத்தான். 
ஆனால், முயற்சிகள் பல செய்தும் அவனால் அதை உடனடியாகச் 
செய்துமுடிக்க முடியவில்லை.

கனவில் வந்த சிவன்

இதனால், மன சஞ்சலம் கொண்டவன், தனது மனைவி 
யாழினியிடம் தனது மனக்குறையைச் சொல்லி வருந்தினான். 
கணவனின் துயர்துடைக்க எண்ணிய யாழினி, சடைமுடியானை 
வேண்டினாள். 

அன்றிரவே, கங்கனின் கனவில் காட்சிகொடுத்த ஈசன், 
“கானகத்தில் உனது புரவிப் படைகள் மேய்ச்சலுக்குச் செல்லும் 
பனைமரச் சோலையின் வடகிழக்கு மூலையில் புற்று ஒன்று 
இருக்கும். நீயும் உன் மனைவியும் சென்று அந்தப் புற்றை 
வணங்கினால் அதிலிருந்து ஒரு நாகம் வெளிப்பட்டு உங்களுக்கு 
வழிகாட்டும். 

அது போகும் திசையிலேயே இருவரும் பயணித்தால் சுயம்புவாய் 
நான் இருக்கும் இடத்தை உங்களுக்கு அது காட்டும். 
அவ்விடத்தில் எனக்கு ஆலயம் எழுப்பி வழிபடு; நீயும் உன் 
குடிமக்களும் சுபீட்சம் பெருவீர்கள்’’ என்று சொல்லி மறைந்தார்.

-
----------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

பங்குனி உத்திரம்: ஏப்ரல் 9 - பனைமரச் சோலையில் அவதரித்த சிவன் Empty Re: பங்குனி உத்திரம்: ஏப்ரல் 9 - பனைமரச் சோலையில் அவதரித்த சிவன்

Post by அ.இராமநாதன் Fri Apr 07, 2017 7:40 am

பங்குனி உத்திரம்: ஏப்ரல் 9 - பனைமரச் சோலையில் அவதரித்த சிவன் JokG96YqRKqBBpojhZE9+panguni_2_3151200a
-

-
----------------------------

கங்கன் எழுப்பிய ஆலயம்

-
மறுநாள் காலையில் தனது மனைவி யாழினியை அழைத்துக்
கொண்டு பனைமரச் சோலைக்குச் சென்றான் கங்கன். 

அங்கே, ஈசன் கனவில் சொன்னது போலவே புற்று ஒன்றை 
இருவரும் கண்டனர். அந்தப் புற்றை பயபக்தியுடன் இருவரும் 
வணங்க, அதனுள் இருந்து வெளிப்பட்ட நாகம், இருவரையும் 
கானகத்தில் வழிநடத்திச் சென்றது. 

குறிப்பிட்ட இடம் சென்றதும் தனது தலையை மூன்றுமுறை 
தரையில் மோதிவிட்டு மறைந்தது நாகம்.

நாகம் மோதிவிட்டுச் சென்ற இடத்தில் வட்டவடிவப் பள்ளம் 
இருந்தது. கங்கனின் படைவீரர்கள் அந்த இடத்தை சற்றே 
ஆழமாகத் தோண்டினார்கள். அப்போது அதனுள்ளே இருந்து 
பிரகாசமான ஒளியுடன் சுயம்புவாய்த் தோன்றியது சிவலிங்கம்.

பக்திப் பரவசம் கொண்ட கங்கன், அப்போதே அவ்விடத்தில் 
கோயில் கட்டும் பணியைத் தொடங்கினான். ஒன்பது நிலைகள் 
கொண்ட ராஜகோபுரத்துடன், சிவாலயத்தை எழுப்பி முடித்து 
அதனுள்ளே சுயம்புலிங்கத்தை பிரதிஷ்டை செய்தவன், 
விசாக நட்சத்திர நாளில் குடமுழுக்கும் நடத்தி முடித்தான்.
-
வணங்கிய தளபதிகள்
-

சைவத்தையும் வைணவத்தையும் சமமாகப் பாவித்த கங்கன் 
அதே இடத்தில் பெருமாளுக்கும் சன்னதி அமைத்தான். 
இந்த ஆலயம் எழுப்பப்பட்ட பிறகு கங்கனின் படைத் தளபதிகள் 
போருக்குப் புறப்படும் முன்னதாக இங்கு வந்து சிவனுக்கும் 
பெருமாளுக்கும் வெள்ளை, சிவப்பு மலர்கள் சாற்றி வணங்கிச் 
செல்வதை வழக்கமாகக் கொண்டார்கள். 

இப்படிச் சென்றால் வெற்றிகளைக் குவிக்க முடியும் என்று 
அவர்கள் நம்பினார்கள்.

இவ்வளவு சிறப்புடன் விளங்கிய இத்திருத்தலம் சோழர்கள் 
வீழ்ச்சி கண்டு நாயக்க மன்னர்கள் தலைதூக்கிய காலத்தில் 
கொள்ளையடிக்கப்பட்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. 

ஆண்டுகள் பல கடந்த பிறகு மீண்டும் இத்திருத்தலத்தில் 
சங்கர நாரயணரும் வரதராஜ பெருமாளும் சுயம்புவாய் 
முளைத்தார்கள். உழவுக்காலில் பட்டு இந்தச் சிலைகள் 
இரண்டும் மீண்டும் வெளியில் வந்தன. மீண்டும் இங்கே 
ஆலயம் எழுப்பப்பட்டது.
-
----------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

பங்குனி உத்திரம்: ஏப்ரல் 9 - பனைமரச் சோலையில் அவதரித்த சிவன் Empty Re: பங்குனி உத்திரம்: ஏப்ரல் 9 - பனைமரச் சோலையில் அவதரித்த சிவன்

Post by அ.இராமநாதன் Fri Apr 07, 2017 7:40 am



திருமேனியில் வளையல் தடம்

-
இங்குள்ள சங்கர நாராயணனின் திருமேனியில் வளையல் 
அழுத்திய தடத்தை இப்போதும் பார்க்க முடியும். ஒருசமயம் 
போருக்குச் சென்ற கங்கன், நீண்ட நாட்களாகியும் 
போர்க்களத்திலிருந்து திரும்பவில்லை. தனது கணவன் 
வெற்றியோடு திரும்பிவர வேண்டும் என சங்கரனிடம் போய் 
வேண்டினாள் யாழினி. 

அப்போது, கங்கன் போர்க்களத்தில் இறந்துவிட்டதாகச் செய்தி 
வருகிறது. இதைக் கேட்டுத் துடித்த யாழினி, ஈசனை கட்டிப்
பிடித்துக்கொண்டு கதறினாள். அப்போது அவள் கையில் 
அணிந்திருந்த வளையல் இறைவனின் திருமேனியில் பட்டு 
அழுந்தி வடுவை ஏற்படுத்தியதாகயும் இந்த நிகழ்வுக்குப் பிறகு, 
போர்க்களத்திலிருந்து கங்கன் வெற்றிமாலையுடன் திரும்பி 
வந்ததாகவும் செய்தி.

சிவபெருமானும் திருமாலும் ஒருங்கே கோயில் கொண்டிருக்கும் 
இந்த சங்கர நாராயணர் - வரதராஜ பெருமாள் திருத்தலம் ஒரு 
பரிகாரத் தலமாகும். தாலிபாக்கியம் நிலைத்திட வேண்டுவோர் 
இங்கு வந்து 48 நாட்கள் விளக்கேற்றி நிறைவு நாளில் வெண் 
பொங்கல் படையல் வைத்து மூவகை பூக்களுடன் இறைவனை 
வழிபட்டால் மாங்கல்யம் நிலைக்கும் என்பது நம்பிக்கை.
-
---------------------------------------
குள.சண்முகசுந்தரம்
தி இந்து
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

பங்குனி உத்திரம்: ஏப்ரல் 9 - பனைமரச் சோலையில் அவதரித்த சிவன் Empty Re: பங்குனி உத்திரம்: ஏப்ரல் 9 - பனைமரச் சோலையில் அவதரித்த சிவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum