தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பன்முக நோக்கில் குறுந்தொகை ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

பன்முக நோக்கில் குறுந்தொகை !  நூல் ஆசிரியர் :  தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty பன்முக நோக்கில் குறுந்தொகை ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Sat Nov 04, 2017 6:25 pm

பன்முக நோக்கில் குறுந்தொகை !

நூல் ஆசிரியர் : 
தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராயர் நகர், சென்னை – 600 017.  பக்கம் : 252, விலை : ரூ. 160.  
பேச : 044-24342810  மின்னஞ்சல் : vanathipathippagam@gmail.com

******
      சங்க இலக்கியத்தில் மிகவும் கவர்ந்தது குறுந்தொகையே. அதனால் நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களுக்கு குறுந்தொகையின் மீது பெருங்காதல் என்றே சொல்ல வேண்டும். குறுந்தொகையைப் படித்ததோடு நில்லாமல் ஒப்பியல் ஆய்வுக்குச் செய்து வடித்த 40 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

      குறுந்தொகையில் உள்ள தமிழர்களின் பண்பாட்டை ஒழுக்கத்தை, வாழ்க்கை நெறியை, மனிதநேயத்தை, மலர்களின் பாசத்தை, விலங்கபிமானத்தை படம்பிடித்துக் காட்டி உள்ளார்.  பல்வேறு கோணங்களில் குறுந்தொகையை ஆய்வு செய்துள்ளார்.

      முதல் கட்டுரையே முத்திரை பதிக்கும் கட்டுரையாக முத்தாய்ப்பாக உள்ளது பாருங்கள்.

      முதல் கட்டுரையே முத்திரை பதிக்கும் கட்டுரையே முத்தாய்ப்பாக உள்ளது பாருங்கள்.

      “நயமும் நுட்பமும் துலங்கும் குறுந்தொகையின்
      முதற்பாடல்”



      “காதலையும் அதன் நுட்பமான மன வேறுபாடுகளையும் இவ்வளவு திறமையுடன் பாகுபடுத்துவதில் உலக இலக்கியத்தில் தமிழ் முதலிடம் வகிக்கிறது” – சுஜாதா.  "

      ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் அக்கட்டுரைக்குப் பொருத்தமான மெற்கோள்களுடன் தொடங்கி இருப்பது நல்ல யுத்தி ஆகும். ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் முத்தாய்ப்பாக எழுதியுள்ள முடிவுரை நயவுரை.

      “அன்புப்பரிசீலனை நல்கிஆடவர் முன்மொழியும் காதலைப் பெண்கள் உடனடியாக எளிதில் ஏற்றுக் கொண்டுவிடக்கூடாது” என்பதை நாகரிகமாகவும் குறிப்பாகவும் உணர்த்தும் ஆகிய பழந்தமிழ்ப் பாடல் இது.

இப்பாடல் உணர்த்தும் உட்கருத்து – செய்தி – இன்றைய கணினி யுகத்தின் காதலுக்கும் ஏற்புடையதே ஆகும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட குறுந்தொகைப் பாடலை இக்காலத்துப் பொருத்திப் பார்த்த இலக்கியப் பார்வை நன்று.

குறுந்தொகை எனும் பலாப்பழத்தை பக்குவமாக கையில் அனுபவம் என்ற எண்ணெய் தடவி பல உரைகள் படித்த அனுபவம் என்ற கத்தி கொண்டு நறுக்கி இனிக்கும் பலாச்சுளைகளாக வழங்கி உள்ள பாங்கு மிக நன்று.

குறுந்தொகை படிக்கும் போது முட்கள் உள்ள பலா போலவே இருக்கும். இந்நூல் மூலம் பொருள் புரிந்து படிக்கும் போது பலாச்சுளையாகவே இனிக்கும்.

தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் பேராசிரியர்கள், துணைத் தலைவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல். முதுகலை தமிழ் இலக்கியத்திற்கு இந்நூலை பாடமாகவும் வைக்கலாம். அத்தகைய தகுதி இந்நூலுக்கு உண்டு.

காதலர்களிடையே புகழ்பெற்ற பாடலான
      யாயும் ஞாயும் யாராகியரோ?



பாடல் விளக்கமும் ஒப்பீடுகளும் மேற்கோள்களும் மிக நன்று.  பாராட்டுக்கள்.  எழுத்தாளர் சுஜாதா தொடங்கி தமிழறிஞர்கள் தமிழண்ணல், இரா. சாரங்கபாணி, சிலம்பொலி செல்லப்பன், தனிநாயக அடிகளார், வையாபுரி பிள்ளை, அ. பாண்டுரங்கன், மனோன்மணி சண்முகநாதன், ச. அகத்தியலிங்கம், தி.சு. பாலசுந்தரம் பிள்ளை, தெ. ஞானசுந்தரம், மொ.அ.துரை. ரங்கசாமி, அரங்க இராமலிங்கம், க. பஞ்சாங்கம், கவிக்கோ அப்துல் ரகுமான், ரா. செல்வநாயகம், வைரமுத்து அவர்களின்ஆசிரியர் பேராசிரியர் இராம. குருநாதன், இன்றைய இலக்கிய விமர்சகரான 
ந. முருகேசபாண்டியன் வரை இவர்கள் சங்க இலக்கியம் பற்றி உரைத்த நல்கருத்துக்களை ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் எழுதி இருப்பது சிறப்பு.  கட்டுரையை படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டி விடுகின்றன.

      சங்க இலக்கியத்தின் மகுடமான குறுந்தொகையில் வரும் பாடல்களில் தலைவன் கூற்று, தலைவி கூற்று, தோழியின் கூற்று இவை அனைத்தும் வாழ்வியல் இலக்கணம் கற்பிக்கும் விதமாய் உள்ளன.

      கற்காலம் தொடங்கி கணினிக் காலம் வரை தொடர்ந்து வருவது காதல். மனித குலத்தின் இனிய உணர்வு காதல். வயப்பட்டவர்கள் மட்டுமே உணரும் அற்புத உணர்வு காதல். காதல் ரசம் சொட்டச் சொட்ட குறுந்தொகைப் பாடல்களின் விளக்கம் தந்துள்ள நடை மிக அருமை.

      “சங்கப் பெண்பாற் புலவரான கச்சிப் பேட்டு நன்னாகையாடும் தம் பாடல்களில் தலைவரைப் பிரிந்து வாடும் தலைவியரின் ஆற்றாமை உணர்வுகளுக்கும் பெண்களுக்கே உரித்தான தனிப்பட்ட அனுபவங்களுக்குமே அழுத்தமும் முதன்மையும் தந்து பாடி இருப்பது இவ்வகையில் ஓய்வு நோக்கத்தக்கது”

      பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெண்புலவர்கள் காதலைப் பற்றி, பிரிவைப் பற்றி மிக மிக நுட்பமாக பாடல் பாடி உள்ளனர்.  அன்று இருந்த பெண் விடுதலை கூட இன்று இல்லை என்பதே உண்மை. சங்க காலத்தில் 30க்கு மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இருந்து உள்ளனர். 

 இன்று பெண் கவிஞர்கள் மிகக்குறைவாக உள்ளனர்.  பெருக வேண்டும், சில பெண் கவிஞர்கள் திருமணமானதும் எழுதுவதையே நிறுத்தி வருகின்றனர்.  இந்நிலை மாற வேண்டும். இப்படி பல சிந்தனைகளை எழுப்பியது இந்நூல்.

      பரணர் பாடிய குறுந்தொகைப் பாடல் வரலாற்று மாந்தர்கள் பற்றி புகழ்ந்து பாடி உள்ளார். வரலாற்று நிகழ்வுகள் பற்றி பாடி உள்ளார். இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளன.

      ஆண்மை என்றால் ஆண்களுக்கு உரியது என்று எண்ணுகின்றோம்.  ஆனால் ஆண்மை என்பது ஆண், பெண் இருபாலருக்கும் உரியது என்கிறார். ஆடவர் உளவியல் காதல் பற்றிய கருத்து உள்ளது.

      “ஆண்மகனின் காதல் ஆர்வம் தவறன்று.  தருவதே எனினும் அவனது ஆர்வ மிகுதியில் காலப்போக்கில் தொய்வு ஏற்படுகிறது”.

      உண்மை தான். காதலில் பெண்னின் அளவிற்கு ஆணின் காதல் நீடித்து இருப்பதில்லை என்ற ஆண்மகனின் உளவியலைப் படம்பிடித்துக் காட்டி உள்ளார். சிலப்பதிகாரத்தில் வரும் கோவலனையும் மேற்கோள் காட்டி உள்ளார்.  காதல் திருமணங்கள் சில தோல்வியில் முடிவதற்கு இந்த உளவியலே காரணமாகின்றது.

      “கற்பவர்களைச் சிந்திக்க வைக்கும் சுவையான பாடல்கள்!” குறுந்தொகையில் உள்ள பாடல்கள்.  கற்பனை வளமும், கவிதை நயமும் நிறைந்த காதலோவியங்கள் குறுந்தொகைப் பாடல்கள்.  காதல் வாழ்க்கையின் பல்வேறு வேறுபாடுகளையும், காதலர்களின் உள்ளக்கிடக்கையும் சுருக்கமாகவும் அழகாகவும் கூறிக் கற்பவர்களச் சிந்திக்க வைக்கும் சுவையான பாடல்கள்” முனைவர் இர. பிரபாகரன் கருத்து.  


நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் தன் பார்வையோடு நின்று விடாமல் பலரின் பார்வையையும் மேற்கோள் காட்டி ஒப்பீடு செய்த விதம் அருமை. இன்றைய காதலர்கள் அனைவரும் படிக்க வேண்டிய அற்புத நூல். பாராட்டுக்கள்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பன்முக நோக்கில் புறநானூறு! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் ! பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» கவிதை ஒளி! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தமிழ் உலா! நூல் ஆசிரியர் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum