தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : முனைவர் வா.மு..சே. ஆண்டவர்,

3 posters

Go down

ஆயிரம் ஹைக்கூ'    நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  நூல் விமர்சனம் : முனைவர் வா.மு..சே. ஆண்டவர்,  Empty ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : முனைவர் வா.மு..சே. ஆண்டவர்,

Post by eraeravi Sat May 31, 2014 10:12 am

ஆயிரம் ஹைக்கூ'  

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.

நூல் விமர்சனம் : முனைவர் வா.மு..சே. ஆண்டவர், 
vimalaandu@gmail.com   பேராசிரியர் பச்சையப்பன் கல்லூரி, சென்னை-30.

வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17
தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com

184 பக்கங்கள் விலை ரூபாய் 100.

சங்கத்தமிழ் வளர்த்த மதுரையின் தங்கக் கவிஞராக உலா வரும் அன்புக்குரிய நண்பர் ஹைக்கூ கவிஞர் இரவியின் “ஆயிரம் ஹைக்கூ”" என்ற நூலினை வாசிக்கும் பேறு பெற்றேன்.
இளைய சமுதாயம் தமிழின் பக்கம் தலை வைத்துப் படுக்க மறுக்கும் இக்காலகட்டத்தில், தமிழுக்காக தன் தலையையும், எந்த விலையையும் தரக்கூடியவர் தான் கவிஞர் இரவி.

இணையத்தில் ஹைக்கூவிற்காக அவர் வைத்துள்ள www.kavimalar.com  www.eraeravi.com
 இணையத்தளங்கள்  உலகப்புகழ் பெற்றவை ..  பெரும்பொருட்செலவு செய்து இணையத்தில் கவிதைத் துறையினை வளர்த்து வருகிறார்.  பாரதி சொன்ன நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, திமிர்ந்த ஞானச்செறுக்குடன் வலம் வரும் இளைஞர்.

ஹைக்கூ கவிதைக்கென்று இளைய வாசகர்கள் உண்டு.  அந்த வரிசையில் முன்னணியில் இருக்கும் கவிஞர் இரவி.  மற்ற எல்லா கவிஞர்களுக்கும் இடையே இவருக்குள்ள சிறப்பு, ஹைக்கூவை இயக்கமாகவே வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

ஜப்பானிய இலக்கிய வடிவமான இவ்வடிவத்தில் நம் தமிழ் மண்ணுக்குரிய பாடுபொருள்களை சமைத்து ஹைக்கூவை புதிய திசையினை நோக்கி நகர்த்துகிறார்.  தமிழ், சமூகம், மூடநம்பிக்கை ஒழிப்பு, இயற்கை, தத்துவம், பெண்கள் மேம்பாடு, போலி அரசியல் என பல பாடுபொருள்களில் இவரது கவிதைகள் செல்கின்றன.

உலகளாவிய நிலையில் பறந்த தமிழன், இன்று தனக்கென்று நாடு இல்லாமல் அகதிகளாக இருக்கும் நிலையைக் கண்டு கொதித்தெழுகிறார். 

   இல்லாத நாடில்லை
   இவனுக்கென்று ஒரு நாடில்லை
    தமிழன் !              
               
என்கிறார்.

அண்மையில் “ஈழ ஏதிலியர் (அகதிகள்) ஓர் அறைகூவல்" என்ற தொகுப்பு நூலை இரா. இரவி மதுரையில் மிகச்சிறப்பாக, அரசரடியில் இறையியல் கல்லூரியில் வெளியிட்டார்.  ஈழ மக்கள் மீதும், ஈழ மண் மீதும் அவர் வைத்துள்ள அன்பு, எங்களையெல்லாம் ஒரு புள்ளியில் இணைத்தது.  கவிதை எழுதுவது மட்டுமல்ல; செயல் துடிப்புள்ள வீர இளைஞர் இவர்.

சில நேரங்களில் “போலிகள் வென்று விடும்; நிஜங்கள் தோற்று விடும், இதனை அழகிய கவிதையாக வடிக்கிறார்.

     அசலை வென்றது
      நகல்
      செயற்கைச் செடி !

என்ற வரியில் இவரது கூரிய பார்வை தொடுகிறது.
மேலும் பல முற்போக்கு சிந்தனைகளின் விளைநிலமாக இரவி திகழ்கிறார். உலக நாடுகள் எல்லாம் தூக்குத் தண்டனை ஒழித்து மனித உரிமையை போற்றி வரும் இந்த நாளில், தமிழ்நாட்டில் பேரறிவாளன், முருகன், நளினி போன்றவர்கள் தூக்கு தண்டனை கைதிகளாய் சிறைக்குள் இருப்பதனை தன் கவிதையில் சாடுகிறார்.

      கணினி யுகத்தில்
      காட்டுமிராண்டித் தனம்
      தூக்குத் தண்டனை !

முரட்டுத் தனமான கொடிய சட்டங்கள் இந்த ஜனநாயகத்திற்கு ஏற்புடையது அல்ல . என உரைக்கிறார்.

அண்மையில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.  ஆனால் ‘கருப்பு மை' வைத்து வாக்காளர்கள் முகத்தில் கரி பூசும் நிகழ்ச்சியாகவே இருக்கிறது.  இன்று வறுமைக்கோட்டுக்கு கீழ் 30 கோடி மக்கள் வாழ்கிறார்கள்.  வாக்காளர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள் என்பதனை சிறந்த கவிதையாக வடிக்கிறார்.
     இலவு காத்த கிளியாய்
      விடியல் நோக்கி
      வாக்காளர்கள் !

   என்கிறார்.

அற்புதமான இயற்கை ஆர்வலராக இருப்பது அவர் கவிதை வழி எனக்குத் தெரிந்தது.

      மழையில் நனைந்தும்
      வண்ணம் மாறவில்லை
      வண்ணத்துப்பூச்சி !

மிகச் சிறப்பான கவிதை.  இக்கவிதை சிறப்பை விரிவாக பேச முடியும்.  இன்னொன்று பட்டுப் புடவை அணிந்து வரும் பெண்கள்.  ஆனால் இரவி அழகை பார்க்காது, பட்டு புடவைக்காக அழிக்கப்பட்ட பட்டு புழுக்களைப் பற்றி கவலைப்படுகிறார்.  இங்கே தான் கவிஞர் நிற்கிறார்.

       பட்டுப் பூச்சிகளின்
      அழுகுரல்கள்
       பட்டுப் புடவைகளில் !

 நேர்த்தியான ஹைக்கூ கவிதை.

நீ-கோன் என்ற ஜப்பானிய சொல்லுக்கு, சூரியன் வலம் வருதல் என்று பொருள்.  அதே போல் தமிழ் வானில் உலா வரும் கவிஞர் என்ற சூரியன் இன்னும் பெரிய சாதனை படைக்க வாழ்த்துகிறேன்.
ஜப்பானிய மொழி நான் படித்தேன்.  இரண்டு முறை ஜப்பான் சென்று வந்து என் ஹைக்கூ நூலினை ஜப்பானில் வெளியிட்டேன். அங்கு நம் இரவி போன்ற கவிஞர்களின் கவிதைகளை ஜப்பானில் எடுத்து சொன்னேன்.  ரசித்தனர்.  நம் தமிழ் இன ஹைக்கூ கவிஞர்கள் கவிதைகளை ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்து அதனை ஜப்பானில் வெளியிட வேண்டும்.  அதற்கு ஜப்பானிய மொழி அறிந்த பேராசிரியர்களும், இரவி போன்ற இளைய கவிஞர்களும் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்தால் “வானம் நமக்கு வசப்படும்".
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

ஆயிரம் ஹைக்கூ'    நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  நூல் விமர்சனம் : முனைவர் வா.மு..சே. ஆண்டவர்,  Empty Re: ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : முனைவர் வா.மு..சே. ஆண்டவர்,

Post by அ.இராமநாதன் Sat May 31, 2014 11:50 pm

மிக்க மகிழ்ச்சி 
-
ஆயிரம் ஹைக்கூ'    நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  நூல் விமர்சனம் : முனைவர் வா.மு..சே. ஆண்டவர்,  Btfly
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

ஆயிரம் ஹைக்கூ'    நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  நூல் விமர்சனம் : முனைவர் வா.மு..சே. ஆண்டவர்,  Empty Re: ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : முனைவர் வா.மு..சே. ஆண்டவர்,

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 04, 2014 10:57 am

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆயிரம் ஹைக்கூ'    நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  நூல் விமர்சனம் : முனைவர் வா.மு..சே. ஆண்டவர்,  Empty Re: ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : முனைவர் வா.மு..சே. ஆண்டவர்,

Post by eraeravi Sat Aug 16, 2014 10:10 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

ஆயிரம் ஹைக்கூ'    நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  நூல் விமர்சனம் : முனைவர் வா.மு..சே. ஆண்டவர்,  Empty Re: ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : முனைவர் வா.மு..சே. ஆண்டவர்,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘ குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் புதுயுகன் லண்டன்
» நூல் விமர்சனம் ------------------------- நூல் : ஹைக்கூ 500 ஆசிரியர்: ஹைக்கூத் திலகம் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை கவிஞர் முனைவர் காவல் உதவி ஆணையர் ஆ .மணிவண்ணன்
» “டாக்டர் மு.வ. ஆய்வுக்கோவை “ பதிப்பாசிரியர்கள் : முனைவர் பா. கந்தசாமி முனைவர் வா.மு.சே. ஆண்டவர் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum