தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மகளிருக்கான மகத்தான தகவல்கள்......

3 posters

Go down

மகளிருக்கான மகத்தான தகவல்கள்...... Empty மகளிருக்கான மகத்தான தகவல்கள்......

Post by வ.வனிதா Fri Mar 18, 2011 12:25 pm

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்கள், நன்கு படித்து சங்க இலக்கியப் புலவர்களாக விளங்கி னார்கள் என்பதை நாம் அறிவோமா?

கல்விக்கு கடவுளே சரஸ்வதி என்கிறோம். ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை செய்கிறோம்.

ஆனால் வரலாற் றுப்படி கடந்த 2000 ஆண்டுகளில் எந்த மன்னனும், பெண் கல்விக்கென்று ஒரே ஒரு பள்ளிக்கூடம் கூட ஏற்படுத்தவில்லையே! ஏன்?

1901 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி நூறு பேரில் ஒரு பெண் கூட படித்திருக்கவில்லையே என்ன காரணம்?

கணவன் தன்னை அடித்து கையை உடைத்து விட்டான் என்று மனைவி தொடுத்த வழக்கில், மனுதர்ம சாஸ்திரப்படி மனைவியை அடித்து துன்புறுத்த கணவனுக்கு உரிமை உண்டு என்று தமிழ்நாடு உயர்நீதிமன்ற முதல் இந்திய நீதிபதி முத்துசாமி அய்யர் தீர்ப்பு எழுதினார் என்பது தெரியுமா?

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பது நல்ல பெண்ணின் இலக்கணம் என்று ஆண் கூறுகிறானே! அச்சம் என்றால் பயம், மடம் என்றால் முட் டாள்தனம் , நாணம் என்றால் வெட்கம், பயிர்ப்பு என்றால் அருவருப்பாக இருத்தல் என்பது எவ்வளவு கொடு மையான இழிவான கருத்து!

1921_ ஆம் ஆண்டு திராவிடர் இயக்க முன்னோடியான நீதிக்கட்சி யினர் ஆட்சியின் போது தான் பெண் களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது என்பதை அறிவீர்களா?

பிறந்த குழந்தை தனக்கு 4 வயது ஆவதற்குள், தனது வாழ்நாளுக்குள் வளரும் மூளையின் அளவில் நூற்றுக்கு 90 பங்கு வளர்ந்து விடும் என்பதை நமது அன்னையர்கள் அறிவார்களா?

ஆண்களையும், தனது வயிற்றில் உருவாக்கி, பெற்றெடுத்து, வளர்க்கும் தாயார், அவன் பெண்களை காட்டிலும் உயர்ந்தவன் எனும் கருத்தை ஊட்டி வளர்ப்பது முற்றிலும் தவறல்லவா?

அரசினர் தொட்டில் குழந்தைத் திட்டப்படி, பிறந்ததும் கைவிடப்படும் ஏழைப் பெண் குழந்தை அரசினரால் எடுத்து வளர்க்கப்படுகிறதே? அதற்கு ஜாதி, மதம், கடவுள் என்பதெல்லாம் உண்டா?

கோவிலுக்கு பெண்களை பொட்டுக் கட்டி விடும் தேவதாசி முறையை ஒழிக்கும் மசோதா மேல வையில் வந்த போது அதைக் கடுமை யாக எதிர்த்து பேசியவர் காங்கிரஸ் தேசியத் தலைவர் சத்தியமூர்த்தி அய்யர் ஆவார்.

தந்தை பெரியார் ஆலோ சனைப்படி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி முறை நீடித்துத்தான் ஆகவேண்டுமென அய்யர் விரும் பினால், இனிமேல் அவர்கள் இனத்துப் பெண்களே அதைச் செய்யட்டும் என்று பதிலடி தந்ததுமே, சத்தியமூர்த்தி அய்யரின் வாய் மூடிக் கொண்டது என்பது தெரியுமா?

மார்பகப் புற்று நோயோ, கருப்பை புற்று நோயோ வந்த பெண் நோயாளியை அம்மன் கோவிலில் படுக்க வைத்திருந்தால் நோய் தீருமா?

கல்யாண மந்திரப்படி மணப்பெண்ணின் முதல் கணவன் சோமன் ஆகிறான், 2ஆவது கணவனாக கந்தர்வன் ஆகிறான், 3ஆவது கணவனாக அக்னி ஆகிறான்; கடைசியாக 4ஆவது கணவனாகத்தான் மனிதன் மணமகனாக்கப்படுகிறான் என்று இருக்கும் இழிவான அசிங்கத்தை நாம் அறிவோமா?

ஆகவேதான் அண்ணா ஆட்சிக்கு வந்ததுமே 1968 _ இல் சுயமரியாதை திருமணச் சட்டம் போட்டு இந்த ஆபாசமான மந்திரம் சொல்லும் திருமண முறை ஒழிந்திட வழி பிறந்தது!

ஒவ்வோராண்டும் ஆயிரக்கணக் கான திராவிடர் கழகத் தொண்டர்கள் தமிழகமெங்கும் அரசு மருத்துவ மனைகளில் குருதிக் கொடை வழங்கி, ஏழை நோயாளிகளின் உயிரைக் காப்பதன் மூலம் திராவிடர் கழகம் ஒரு மனிதநேய இயக்கம் எனும் உண்மையை அறிவோமா?

இவ்விதம் வழங்கப்படும் குருதியில் சாதி, மதம், ஆண், பெண், கடவுள் நம்பிக்கை பேதம் பார்க்காமல் தானே, நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் வழங்கி உயிரைக் காப்பாற்றுகிறார்கள்!

குருகுலக் கல்விமுறை இருந்த தாகக் கூறுபவர்கள் அதில் பெண் களுக்கு ஏன் இடமே தரவில்லை? ஆண்களிலும் உயர்ந்த ஜாதியினராக பிராமணன், சத்திரியன் என்பவர்கள் மட்டுமே கல்வி கற்றார்கள் என்பது தானே உண்மை? காரணம் பெண் களுக்கும், சூத்திரர்களுக்கும் எதைக் கொடுத்தாலும் கல்வியைத் தராதே என்றல்லவா பார்ப்பனர் வகுத்த மனு தர்ம சாஸ்திரம் கூறுகிறது!

1921இல் திராவிடர் இயக்கத்தின் துவக்கமான நீதிக் கட்சியினர் ஆட்சியில் மருத்துவப் படிப்பு படிக்க சமஸ்கிருதமும் கட்டாயம் படித்திருக்க வேண்டுமெனும் அநீதியான ஏற்பாடு ஒழிக்கப்பட்டது என்பதுதானே உண்மை!

வெள்ளைக்காரர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் பெண்களுக்கே கல்வி கற்க பள்ளிக்கூடம் ஏற்படுத்தப் பட்டது என்பதை அறிவோமா?

இந்தியாவிலேயே முதன் முதலாக 1989ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில்தான் பெண்களுக்கு, பரம்பரைச் சொத்தில் பங்கு உண்டு எனும் சட்டம் போடப்பட்டதை அறிவோமா?

திருவாங்கூர் மகாராணி முன்பு ஒரு தாழ்த்தப்பட்ட பெண் ரவிக்கை அணிந்து வந்தார் என்பதற்காக, அவரது மார்பகத்தையே வெட்ட திருவாங்கூர் அரசு நிருவாகம் ஆணையிட்டது எனும் வரலாறு தெரியுமா?

1874ஆம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வழிபட வந்த நாடார்களை, பார்ப்பனர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய தோடு அது தொடர்பாக நடந்த வழக் கில் நாடார்கள் கோவிலுக்குள் நுழைய உரிமை இல்லை எனத் தீர்ப்பு வழங் கப்பட்ட கொடுமையை நாம் அறி வோமா?

1938ஆம் ஆண்டு சென்னை மாகாண பெண்கள் மாநாட்டில்தான் பெண்ணுரிமை பற்றி தீவிரமாக, முழு மையாகப் பாடுபட்ட ஈ.வெ.ராம சாமியைப் பாராட்டி பெரியார் எனும் பட்டம் வழங்கப்பட்டதை அறி வீர்களா?

நாம் பள்ளிக் கூடத்தில் உயிரியல் பாடம் படிக்கத் துவங்கும் போது, எல்லா உயிர்களையும், கடவுள் படைத்தார் என்றா சொல்லித் தருகிறார்கள்!

விநாயகனையும், அனுமானையும் வணங்குகிறோமே அம்மாதிரி நமக்குப் பிள்ளைகள் பிறந்தால் ஏற்றுக் கொள்வோமா?

நமக்கு வரும் நோய்களுக்கெல் லாம் பிரார்த்தனை, தொழுகை, நேர்த் திக்கடன் செய்தால், மருத்துவரிடம் காண்பிக்காமல் நோய்கள் தீர்ந்து விடுமா?

கோவில்களில் உள்ள சாமி சிலைகள், நகைகள், உண்டியல், கலசம் எல்லாம் திருடு போகிறதே அதை ஏன் சாமிகளால் தடுக்க முடியவில்லை? காவல்துறையினர் அல்லவா மோப்ப நாய்களுடன் திருடர்களைக் கண்டு பிடிக்க ஈடுபடுத்தப்படுகிறார்கள்!

அம்மன் சாமிகளை தொட்டுக் குளிப்பாட்டி, ஆடை அலங்காரம் செய்வது ஆண் பூசாரிகள் என்பது நமக்கு கேவலமாகத் தோன்றவில்லையா!

நமது வீட்டில் உள்ள சாமி படங்கள், சிலைகளையெல்லம் தொட்டு பூசை செய்கிறோமே அதை ஏற்றுக் கொள்ளும் சாமி, கோவிலில் மட்டும் நாம் தொட்டால் தீட்டாகிவிடும் என்பது மோசடியல்லவா!

கோவில் கருவறைக்குள் பல்லி, கரப்பான்பூச்சி, கொசு போன்றவையும் நடமாடுகின்றனவே! அது தீட்டாகாதா?

பில்லி, சூனியம், செய்வினை , தகடு, மந்திரம் செய்து ஒருவருக்கு சாவு ஏற்படுமென்றால், நமது மந்திரவாதி சாமியார்களை நாட்டின் எல்லைக்கு அனுப்பி, எதிரிகளை கை கால் விளங் காமலோ, சாகடிக்கவோ செய்துவிட் டால் ராணுவத்துக்கு ஆண்டுதோறும் செலவாகும் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் பணத்தை மிச்சப்படுத்தி பய னுள்ள திட்டங்களுக்கு செலவழிக் கலாமே!

சர்வ சக்தியுள்ளவர் ஆண்டவன் என்றால் படிப்பை, நற்கருத்துகளை பெண்கள் பிறக்கும் போதே மூளையில் படைத்திருக்கலாமே! மத நூல்களோ, கல்வியோ ஏன் தனியாக பெருஞ் செலவில் கற்பிக்க வேண்டும்!

கடவுள் உலகத்திலுள்ள எல்லா வற்றையும் படைத்தாரெனில் தனக்கென ஒரு கோவில் உண்டாக்க முடிய வில்லையே! காணிக்கையென்றும், தலைக்கட்டு வரி என்றும் மனிதர்கள் தானே வசூலித்து உழைத்து கோவிலைக் கட்டி கும்பாபிசேகம் செய்கின்றனர்?

நீங்கள் ஆர்வத்துடன் கருத் தூன்றிப் படித்தமைக்கு நன்றி. இந்தக் கருத்துகளை ஆராய்ந்து அலசிப் பாருங்கள். சரியென்று பட்டால் அறி யாமையால் துன்புறும் மற்ற பெண் களுக்கும் எடுத்துக்கூறி அவர்களும் சிந்தனைத் தெளிவு பெற உதவுங்கள் என வேண்டுகிறோம். மேலும் தகவ லறியவும், செயல்படவும் விரும்பினால் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

மகளிருக்கான மகத்தான தகவல்கள்...... Empty Re: மகளிருக்கான மகத்தான தகவல்கள்......

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Mar 19, 2011 12:33 am

எழுத்து வடிவம் நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி தோழி வனிதா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மகளிருக்கான மகத்தான தகவல்கள்...... Empty Re: மகளிருக்கான மகத்தான தகவல்கள்......

Post by நிலாமதி Sat Mar 19, 2011 1:21 am

பெண்களுக்கான புரட்சிக்க கருத்துக்கள் பதிந்த வனிதாவுக்கு என்பாராட்டுக்கள். மேலும் தொடர்க. :héhé:
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

மகளிருக்கான மகத்தான தகவல்கள்...... Empty Re: மகளிருக்கான மகத்தான தகவல்கள்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum