தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தொடரும் தோனியின் டை ராசி

2 posters

Go down

தொடரும் தோனியின் டை ராசி Empty தொடரும் தோனியின் டை ராசி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 05, 2011 3:35 pm

[You must be registered and logged in to see this link.] மும்பை:
தோனியின் "டை' ராசி உலக கோப்பை தொடரிலும் நீடித்தது. இத்தொடரில்
இங்கிலாந்துக்கு எதிரான போட்டி "டை' ஆனது. இறுதியில் நமது அணி உலக கோப்பை
வென்று அசத்தியது.
கடந்த 2007ல் தோனி தலைமையிலான இந்திய அணி
"டுவென்டி-20' உலக கோப்பை வென்று சாதித்தது. கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல்.,
மற்றும் இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர்களில், சென்னை
சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த நான்கு முக்கிய தொடர்களின்
போது, ஒரு போட்டி "டை' ஆனது.
* கடந்த 2007ல், தென் ஆப்ரிக்காவில்
நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில், டர்பனில் நடந்த லீக் போட்டியில்
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இரு அணிகளும் 141 ரன்கள் எடுக்க, போட்டி
"டை' ஆனது. பின், "பவுல்-அவுட்' முறையில் இந்திய அணி வெற்றி பெற்றது.
*
கடந்த ஆண்டு சென்னையில் நடந்த மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' லீக்
போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
இதில், இரு அணிகளும் 136 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது. பின், "சூப்பர்
ஓவர்' முறையில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
* கடந்த ஆண்டு தென்
ஆப்ரிக்காவில் நடந்த இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில்
லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-விக்டோரியா அணிகள் மோதின. இதில்,
இரு அணிகளும் 162 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது. பின், "சூப்பர் ஓவர்'
முறையில் விக்டோரியா அணி வெற்றி பெற்றது.
* இந்த உலக கோப்பை தொடரில் பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 338 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது.
இந்த
நான்கு தொடர்களில், தோனி தலைமையிலான அணி விளையாடிய ஒரு போட்டி "டை' ஆனது.
இந்த ராசி கைகொடுக்க, இறுதியில் கோப்பை வென்று அசத்தியது.
ஸ்ரீசாந்த் ராசி
வங்கதேச
அணிக்கு எதிரான உலக கோப்பை முதல் லீக் போட்டியில் ஸ்ரீசாந்த் ரன்களை வாரி
வழங்க, அடுத்த போட்டிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இருப்பினும்
முக்கியமான பைனலில் இடம் பிடித்தார். இதற்கு சுவாரஸ்யமான பின்னணி உண்டு.
கடந்த 2007ல், "டுவென்டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணியில், இளம்
வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் இடம் பெற்றிருந்தார். இத்தொடரின் பைனலில்,
பாகிஸ்தான் வீரர் மிஸ்பா கொடுத்த "கேட்சை' எளிதாக பிடித்து, இந்திய அணிக்கு
கோப்பை வென்று தந்தார். இதனால் தான் கேப்டன் தோனி, இலங்கை அணிக்கு எதிரான
பைனலில் இவருக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார்.
தோனிக்கு அபராதம்
இலங்கைக்கு
எதிரான பைனலில், ஒரு ஓவர் தாமதமாக பந்துவீசிய இந்திய அணியினருக்கு அபராதம்
விதிக்கப்பட்டது. ஐ.சி.சி., 2.5.1 விதிமுறையின் படி, போட்டியில் தாமதமாக
பந்துவீசும் அணிக்கு அபராதம் விதிக்கப்படும். இதன்படி, இந்திய கேப்டன்
தோனிக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 20 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு தலா
10 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டது.
தோனியை ஏமாற்றிய சங்ககரா
""உலக
கோப்பை பைனலில் இரண்டாவது முறையாக "டாஸ்' போடப்பட்டதுக்கு, இலங்கை அணியின்
கேப்டன் சங்ககரா தான் காரணம். இவர் தோனியை ஏமாற்றிவிட்டார்,'' என,
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
மும்பையில்
நடந்த பைனலில், இரண்டு முறை "டாஸ்' போடப்பட்டது. இதுகுறித்து மைக்கேல்
வான் கூறுகையில்,"" முதலில் "டாஸ்' போடும் போது, சங்ககரா "டெய்ல்' என்று
உரக்க கூறினார். இது எல்லோருக்கும் கேட்டது. ஆனால், "ஹெட்' விழுந்ததும்
நான் சரியாக கேட்கவில்லை என்று தோனியை ஏமாற்றினார். இது சங்ககராவுக்கும்
தெரியும். தெரிந்தே வேண்டுமென்றே ஏமாற்றி, கடைசியில் தோற்றுப்போனார்,''
என்றார்.
இங்கிலாந்து "மீடியா' பாராட்டு
"கேப்டன்
தோனி சிறப்பான முறையில் செயல்பட்டு, கோப்பை வென்று ஒட்டுமொத்த
இந்தியாவுக்கும் மகிழ்ச்சியை கொண்டு வந்துள்ளார்,' என, இங்கிலாந்து மீடியா
பாராட்டு தெரிவித்துள்ளன.
உலக கோப்பை தொடரில் இந்திய அணி 1983க்குப்
பின், இரண்டாவது முறையாக கோப்பை வென்று அசத்தியது. இதற்கு இங்கிலாந்தில்
இருந்து வெளியாகும் பத்திரிகைகள் பாராட்டு தெரிவித்துள்ளன.
"தி
கார்டியன்' என்ற பத்திரிகையில்,"" முரளிதரன் பந்தை முதலில் சற்று
கவனித்துக் கொண்ட தோனி, அப்புறம் கூடுதல் "பவருடன்' போட்டுத்தாக்கினார்.
கடைசியில் கோப்பை வென்று சாதித்து, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும்,
மகிழ்ச்சியை கொண்டு வந்தார்,'' என, தெரிவித்துள்ளது.
"தி நியூஸ் ஆப் தி
வேர்ல்டு' என்ற பத்திரிகையில்,"" இலங்கை கேப்டன் சங்ககரா, "டாஸ்' போடும்
போது ஏமாற்றும் வேலையில் இறங்கினார். ஆனால் கடைசியில் சிக்சர் அடித்து தோனி
வெற்றிதேடித்தந்தார்,'' என தெரிவித்துள்ளது.
"தி சண்டே டைம்ஸ்' என்ற
பத்திரிகையில்,"" சேவக், சச்சின் அவுட்டான பின், இந்திய அணி
தள்ளாடத்துவங்கியது. ஆனால் "மிடில் ஆர்டரில்' காம்பிர், விராத் கோஹ்லி,
தோனி, யுவராஜ் சிங் இணைந்து உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோப்பை
வென்று தந்தனர்,'' என தெரிவித்துள்ளது.
பிரதமருக்கு கிலானி பாராட்டு
இந்திய
அணி கோப்பை வென்றதுக்கு, பிரதமர் மன்மோகன்சிங்கிடம், பாகிஸ்தான் பிரதமர்
கிலானி பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார். தவிர, விளையாட்டு தொடர்பின்
மூலம் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையிலான உறவு மேம்படும் என
எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"லோகோ' அறிமுகம்
பத்தாவது
உலக கோப்பை தொடர் நேற்று முன்தினம் முடிந்தது. இதையடுத்து அடுத்த தொடரை
(2015) ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
இதுதொடர்பான "லோகோவை' ஐ.சி.சி., அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தொடரும் தோனியின் டை ராசி Empty Re: தொடரும் தோனியின் டை ராசி

Post by அரசன் Tue Apr 05, 2011 4:56 pm

நன்றி
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum