தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
இன்று மாலை 5 மணி முதல் தேர்தல் முடியும் வரை கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்
Page 1 of 1
இன்று மாலை 5 மணி முதல் தேர்தல் முடியும் வரை கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்
சென்னை: தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இதையடுத்து
இன்று மாலை 5 மணி முதல் தேர்தல் முடியும் வரை கட்சிகள் பின்பற்ற வேண்டிய
விதிமுறைகளை தேர்தல் தலைமை அதிகாரி பிரவீண் குமார் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழக
சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிகிறது. நாளை
மறுநாள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. எனவே,
இன்று மாலை 5 மணி முதல் தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள் பின்பற்ற
வேண்டிய விதிமுறைகள் வருமாறு,
தேர்தலையொட்டி யாரும் பொதுக்கூட்டமோ,
ஊர்வலமோ நடத்தவும் கூடாது, அவற்றில் கலந்து கொள்ளவும் கூடாது. தேர்தல்
தொடர்பான விஷயங்களை விளம்பரம் செய்யவோ, தொலைக்காட்சியில் ஒளிபரப்பவோ
கூடாது. இதில் தேர்தல் தொடர்பான அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும்
அடக்கம்.
வாக்காளர்களை கவரும் வண்ணம் இசை நிகழ்ச்சி, நாடகம்,
பொழுதுபோக்கு மற்றும் வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவோ, ஏற்பாடு செய்யவோ
கூடாது. இதனை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது
இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். தேர்தல் பணி புரிவதற்காக வெளியூர்களில்
இருந்து வந்தவர்களும், தொகுதியில் வாக்காளர்கள் அல்லாதவர்களும் இன்று மாலை 5
மணிக்கு பிறகு அத்தொகுதியைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும்.
திருமண
மண்டபம், சமூகநலக் கூடம், விடுதிகள், விருந்தினர் மாளிகை ஆகியவற்றில்
வெளியாட்கள் யாராவது தங்கியிருக்கிறார்களா என்று சோதனை செய்து தொகுதிக்குள்
வெளியாட்கள் இல்லை என்பது உறுதி செய்யப்படும். தொகுதியில் இல்லாத
வெளியாட்களின் வாகன போக்குவரத்தை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு தொகுதி
எல்லையிலும் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வேட்பாளர்களின்
பிரசாரத்திற்காக அளிக்கப்பட்ட வாகன அனுமதி இன்று மாலை 5 மணிக்கு பிறகு
செல்லாததாகிவிடும். தேர்தல் நாளில் வேட்பாளர்கள் பயன்படுத்துவதற்காக, அவரது
சொந்த உபயோகத்திற்கு ஒரு வாகன அனுமதியும், தேர்தல் ஏஜெண்டுகளுக்கு ஒரு
வாகன அனுமதியும், கட்சி தொண்டர்கள் அல்லது ஆதரவாளர்களுக்கு ஒரு வாகன
அனுமதியும் தனித்தனியாக வழங்கப்படும்.
தேர்தல் நாளில் அரசியல்
காரணங்களுக்காக மேற்கண்ட அனுமதி பெற்ற 3 வாகனங்களை மட்டும் பயன்படுத்தலாம்.
தேர்தல் பிரசாரத்தின்போது வழங்கப்பட்ட வாகன அனுமதி, தேர்தல் நாளில்
செல்லுபடியாகாது. அதே நேரத்தில் பொது மக்கள் தங்களது சொந்த விஷயங்களுக்காக
பயன்படுத்தும் தனியார் வாகனங்களுக்கு தடை கிடையாது.
தேர்தல் நாளன்று
வாக்காளர்களை வாகனங்களின் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச்
செல்வதும், ஓட்டு போட்டவுடன் மீண்டும் கொண்டுபோய் வீட்டில் விடுவதும் 1951
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 133-ன்படி தண்டனைக்குரிய ஊழல்
குற்றமாகும்.
வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில்
அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ இரண்டு நபர்களுடன் தற்காலிக அலுவலகத்தை
அமைத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த இருவரும் அங்கு தேவையில்லாமல் கூட்டம்
கூட்ட அனுமதி கிடையாது. இங்கிருந்து தின்பண்டங்கள் எதுவும் வினியோகிக்கக்
கூடாது. இந்த அலுவலகத்தில் இருக்கும் இருவரும் அந்த வாக்குச்சாவடியைச்
சேர்ந்த வாக்காளர்களாக இருக்க வேண்டும். சரிபார்த்தலுக்காக இருவரும்
புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். குற்ற
பின்னணி இருப்பவர்கள் இந்த அலுவலகங்களில் இருக்க அனுமதி கிடையாது.
இன்று
மாலை 5 மணியில் இருந்து வரும் 13ம் தேதி மாலை 5 மணி வரை தேர்தல் கருத்து
கணிப்பு முடிவுகளை வெளியிடவும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு
நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பிற்கு
கடந்த 4ம் தேதியில் இருந்து மே மாதம் 10ம் தேதி வரை ஏற்கனவே தடை
விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் சில வாக்குச்சாவடி அதிகாரிகள்
தேர்தல் முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள `குளோஸ்
பட்டனை' அழுத்தவில்லை. அதனால் அந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் மாற்றம்
செய்யப்பட்டிருக்கலாம் என்று புகார் கூறப்பட்டதை தேர்தல் ஆணையம்
சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இந்த தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும்
நடத்தும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை கையாளுவது தொடர்பாக
தேர்தல் ஆணையம் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது.
அதன்படி
வாக்குச்சாவடி அதிகாரிகள் தேர்தல் முடிந்ததும் அனைத்து தேர்தல் ஏஜெண்டுகள்
முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள `குளோஸ் பட்டனை'
அழுத்திவிட்டு பின்னர் மூடிவிட வேண்டும். அதுபோல ஓட்டுப்பதிவின்போது
வாக்காளர்கள் அனைவரும் கையெழுத்திடும் 17 ஏ பதிவேட்டில், தேர்தல்
முடிந்ததும் கடைசி கையெழுத்திற்கு கீழே கோடிட்டு, கடைசி பதிவின் வரிசை
எண்ணைக் குறிப்பிட்டு அனைத்து ஏஜெண்டுகளிடமும் கையெழுத்து வாங்க வேண்டும்.
அதுபோல தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எத்தனை
வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதை 17 சி படிவத்தில் எழுதி, தேர்தல்
ஏஜெண்டுகளிடம் கையெழுத்து வாங்க வேண்டும். அதன் நகலை அவர்களுக்கு கொடுக்க
வேண்டும்.
இன்று முதல் தேர்தல் பணியில் 4 ஆயிரம் பாதுகாப்புப்படை
வீரர்கள் ஈடுபடுவர். ஏற்கனவே 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை நிலை
ராணுவத்தினர் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.
சந்தேகத்திற்கிடமான அனைத்து இடங்களிலும் சோதனை நடத்துமாறு
உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் தினத்தன்று சட்டம்-ஒழுங்கை
நிலைநாட்ட இன்று மாலை 5 மணி முதல் வரும் 13-ம் தோதி மாலை 5 மணி வரை அனைத்து
டாஸ்மாக் மற்றும் தனியார் மதுபான பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு
பணம் கொடுப்பது தெரிய வந்தாலோ, சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தினாலோ
தேர்தலை ஒத்தி வைக்க தயங்க மாட்டோம். தமிழகம் முழுவதும் 54 ஆயிரத்து 16
வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு
வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தான் ஓட்டுப்பதிவு நடைபெறும்.
ஏற்கனவே
மின்னணு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் ஆகியவை
பொருத்தப்பட்டு தயாராக உள்ளன. இன்று மாலை முதல் இந்த எந்திரங்கள் அந்தந்த
தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் பணிகளில் சுமார் 2 லட்சம்
பேர்
ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக அவர்களுக்கு பயிற்சிகள்
அளிக்கப்பட்டுள்ளது. யார் யாருக்கு எந்தெந்த வாக்குச்சாவடிகளில் பணி என்பது
இன்று மாலை குலுக்கல் முறையில் முடிவு செய்யப்படும்.
தேர்தல்
பணியாளர்களுக்கு இந்த விவரம் நாளை தெரிவிக்கப்படும். அவர்கள் நாளை மாலையே
அவரவர் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று ஆயத்தப்பணிகளை மேற்கொள்வார்கள்.
மொத்தமுள்ள வாக்குச்சாவடிகளில் பெரும்பாலானவை பதற்றமானவை என்று
கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய தொகுதிகளில் 4 அடுக்கு பாதுகாப்பு
போடப்படும்.
மேலும், வாக்குப்பதிவும் வெப்-காமிரா மூலம்
கண்காணிக்கப்படும். இந்த முறை வாக்காளர்கள் புகைப்படத்துடன் கூடிய
வாக்காளர் அடையாள அட்டையைக் காட்டியோ அல்லது புகைப்படத்துடன் அச்சிட்டு
கொடுக்கப்பட்டுள்ள பூத் சிலிப்பை
காட்டியோ வாக்களிக்கலாம்.
வாக்குப்பதிவு
முடிந்தவுடன் மின்னணு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை
நடக்கும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும்.
ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் இடங்களில் அரசியல் கட்சிகளின்
சார்பில்
பிரதிநிதிகள் கண்காணிப்புக்காக தங்கி இருக்க
அனுமதிக்கப்படும். வாக்குப்பதிவு முடிந்து சரியாக ஒரு மாதம் கழித்து வரும்
மே மாதம் 13-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். மே 13-ம் தேதி காலை 8
மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கும். 11 மணிக்குள் எந்த கட்சி ஆட்சி
அமைக்கும் என்பது தெரிந்துவிடும்.
இன்று மாலை 5 மணி முதல் தேர்தல் முடியும் வரை கட்சிகள் பின்பற்ற வேண்டிய
விதிமுறைகளை தேர்தல் தலைமை அதிகாரி பிரவீண் குமார் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழக
சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிகிறது. நாளை
மறுநாள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. எனவே,
இன்று மாலை 5 மணி முதல் தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள் பின்பற்ற
வேண்டிய விதிமுறைகள் வருமாறு,
தேர்தலையொட்டி யாரும் பொதுக்கூட்டமோ,
ஊர்வலமோ நடத்தவும் கூடாது, அவற்றில் கலந்து கொள்ளவும் கூடாது. தேர்தல்
தொடர்பான விஷயங்களை விளம்பரம் செய்யவோ, தொலைக்காட்சியில் ஒளிபரப்பவோ
கூடாது. இதில் தேர்தல் தொடர்பான அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும்
அடக்கம்.
வாக்காளர்களை கவரும் வண்ணம் இசை நிகழ்ச்சி, நாடகம்,
பொழுதுபோக்கு மற்றும் வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவோ, ஏற்பாடு செய்யவோ
கூடாது. இதனை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது
இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். தேர்தல் பணி புரிவதற்காக வெளியூர்களில்
இருந்து வந்தவர்களும், தொகுதியில் வாக்காளர்கள் அல்லாதவர்களும் இன்று மாலை 5
மணிக்கு பிறகு அத்தொகுதியைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும்.
திருமண
மண்டபம், சமூகநலக் கூடம், விடுதிகள், விருந்தினர் மாளிகை ஆகியவற்றில்
வெளியாட்கள் யாராவது தங்கியிருக்கிறார்களா என்று சோதனை செய்து தொகுதிக்குள்
வெளியாட்கள் இல்லை என்பது உறுதி செய்யப்படும். தொகுதியில் இல்லாத
வெளியாட்களின் வாகன போக்குவரத்தை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு தொகுதி
எல்லையிலும் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வேட்பாளர்களின்
பிரசாரத்திற்காக அளிக்கப்பட்ட வாகன அனுமதி இன்று மாலை 5 மணிக்கு பிறகு
செல்லாததாகிவிடும். தேர்தல் நாளில் வேட்பாளர்கள் பயன்படுத்துவதற்காக, அவரது
சொந்த உபயோகத்திற்கு ஒரு வாகன அனுமதியும், தேர்தல் ஏஜெண்டுகளுக்கு ஒரு
வாகன அனுமதியும், கட்சி தொண்டர்கள் அல்லது ஆதரவாளர்களுக்கு ஒரு வாகன
அனுமதியும் தனித்தனியாக வழங்கப்படும்.
தேர்தல் நாளில் அரசியல்
காரணங்களுக்காக மேற்கண்ட அனுமதி பெற்ற 3 வாகனங்களை மட்டும் பயன்படுத்தலாம்.
தேர்தல் பிரசாரத்தின்போது வழங்கப்பட்ட வாகன அனுமதி, தேர்தல் நாளில்
செல்லுபடியாகாது. அதே நேரத்தில் பொது மக்கள் தங்களது சொந்த விஷயங்களுக்காக
பயன்படுத்தும் தனியார் வாகனங்களுக்கு தடை கிடையாது.
தேர்தல் நாளன்று
வாக்காளர்களை வாகனங்களின் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச்
செல்வதும், ஓட்டு போட்டவுடன் மீண்டும் கொண்டுபோய் வீட்டில் விடுவதும் 1951
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 133-ன்படி தண்டனைக்குரிய ஊழல்
குற்றமாகும்.
வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில்
அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ இரண்டு நபர்களுடன் தற்காலிக அலுவலகத்தை
அமைத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த இருவரும் அங்கு தேவையில்லாமல் கூட்டம்
கூட்ட அனுமதி கிடையாது. இங்கிருந்து தின்பண்டங்கள் எதுவும் வினியோகிக்கக்
கூடாது. இந்த அலுவலகத்தில் இருக்கும் இருவரும் அந்த வாக்குச்சாவடியைச்
சேர்ந்த வாக்காளர்களாக இருக்க வேண்டும். சரிபார்த்தலுக்காக இருவரும்
புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். குற்ற
பின்னணி இருப்பவர்கள் இந்த அலுவலகங்களில் இருக்க அனுமதி கிடையாது.
இன்று
மாலை 5 மணியில் இருந்து வரும் 13ம் தேதி மாலை 5 மணி வரை தேர்தல் கருத்து
கணிப்பு முடிவுகளை வெளியிடவும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு
நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பிற்கு
கடந்த 4ம் தேதியில் இருந்து மே மாதம் 10ம் தேதி வரை ஏற்கனவே தடை
விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் சில வாக்குச்சாவடி அதிகாரிகள்
தேர்தல் முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள `குளோஸ்
பட்டனை' அழுத்தவில்லை. அதனால் அந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் மாற்றம்
செய்யப்பட்டிருக்கலாம் என்று புகார் கூறப்பட்டதை தேர்தல் ஆணையம்
சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இந்த தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும்
நடத்தும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை கையாளுவது தொடர்பாக
தேர்தல் ஆணையம் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது.
அதன்படி
வாக்குச்சாவடி அதிகாரிகள் தேர்தல் முடிந்ததும் அனைத்து தேர்தல் ஏஜெண்டுகள்
முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள `குளோஸ் பட்டனை'
அழுத்திவிட்டு பின்னர் மூடிவிட வேண்டும். அதுபோல ஓட்டுப்பதிவின்போது
வாக்காளர்கள் அனைவரும் கையெழுத்திடும் 17 ஏ பதிவேட்டில், தேர்தல்
முடிந்ததும் கடைசி கையெழுத்திற்கு கீழே கோடிட்டு, கடைசி பதிவின் வரிசை
எண்ணைக் குறிப்பிட்டு அனைத்து ஏஜெண்டுகளிடமும் கையெழுத்து வாங்க வேண்டும்.
அதுபோல தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எத்தனை
வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதை 17 சி படிவத்தில் எழுதி, தேர்தல்
ஏஜெண்டுகளிடம் கையெழுத்து வாங்க வேண்டும். அதன் நகலை அவர்களுக்கு கொடுக்க
வேண்டும்.
இன்று முதல் தேர்தல் பணியில் 4 ஆயிரம் பாதுகாப்புப்படை
வீரர்கள் ஈடுபடுவர். ஏற்கனவே 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை நிலை
ராணுவத்தினர் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.
சந்தேகத்திற்கிடமான அனைத்து இடங்களிலும் சோதனை நடத்துமாறு
உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் தினத்தன்று சட்டம்-ஒழுங்கை
நிலைநாட்ட இன்று மாலை 5 மணி முதல் வரும் 13-ம் தோதி மாலை 5 மணி வரை அனைத்து
டாஸ்மாக் மற்றும் தனியார் மதுபான பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு
பணம் கொடுப்பது தெரிய வந்தாலோ, சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தினாலோ
தேர்தலை ஒத்தி வைக்க தயங்க மாட்டோம். தமிழகம் முழுவதும் 54 ஆயிரத்து 16
வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு
வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தான் ஓட்டுப்பதிவு நடைபெறும்.
ஏற்கனவே
மின்னணு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் ஆகியவை
பொருத்தப்பட்டு தயாராக உள்ளன. இன்று மாலை முதல் இந்த எந்திரங்கள் அந்தந்த
தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் பணிகளில் சுமார் 2 லட்சம்
பேர்
ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக அவர்களுக்கு பயிற்சிகள்
அளிக்கப்பட்டுள்ளது. யார் யாருக்கு எந்தெந்த வாக்குச்சாவடிகளில் பணி என்பது
இன்று மாலை குலுக்கல் முறையில் முடிவு செய்யப்படும்.
தேர்தல்
பணியாளர்களுக்கு இந்த விவரம் நாளை தெரிவிக்கப்படும். அவர்கள் நாளை மாலையே
அவரவர் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று ஆயத்தப்பணிகளை மேற்கொள்வார்கள்.
மொத்தமுள்ள வாக்குச்சாவடிகளில் பெரும்பாலானவை பதற்றமானவை என்று
கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய தொகுதிகளில் 4 அடுக்கு பாதுகாப்பு
போடப்படும்.
மேலும், வாக்குப்பதிவும் வெப்-காமிரா மூலம்
கண்காணிக்கப்படும். இந்த முறை வாக்காளர்கள் புகைப்படத்துடன் கூடிய
வாக்காளர் அடையாள அட்டையைக் காட்டியோ அல்லது புகைப்படத்துடன் அச்சிட்டு
கொடுக்கப்பட்டுள்ள பூத் சிலிப்பை
காட்டியோ வாக்களிக்கலாம்.
வாக்குப்பதிவு
முடிந்தவுடன் மின்னணு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை
நடக்கும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும்.
ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் இடங்களில் அரசியல் கட்சிகளின்
சார்பில்
பிரதிநிதிகள் கண்காணிப்புக்காக தங்கி இருக்க
அனுமதிக்கப்படும். வாக்குப்பதிவு முடிந்து சரியாக ஒரு மாதம் கழித்து வரும்
மே மாதம் 13-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். மே 13-ம் தேதி காலை 8
மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கும். 11 மணிக்குள் எந்த கட்சி ஆட்சி
அமைக்கும் என்பது தெரிந்துவிடும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» பகவான் சத்ய சாய் பாபா ஸித்தியடைந்தார் இன்று மாலை முதல் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு
» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» தமிழக சட்டசபைத் தேர்தல் 2011: கூட்டணிகள், கட்சிகள் போட்டியிட்ட இடங்கள்
» தேர்தல் செய்தி மாலை 6.25
» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» தமிழக சட்டசபைத் தேர்தல் 2011: கூட்டணிகள், கட்சிகள் போட்டியிட்ட இடங்கள்
» தேர்தல் செய்தி மாலை 6.25
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|