தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உயர் நீதிமன்ற விழாவுக்கு முதல்வர் போகாதது ஏன்?

Go down

உயர் நீதிமன்ற விழாவுக்கு முதல்வர் போகாதது ஏன்? Empty உயர் நீதிமன்ற விழாவுக்கு முதல்வர் போகாதது ஏன்?

Post by Guest Fri Jul 22, 2011 9:55 pm

நீதித் துறைக்கும் தமிழக அரசுக்கும் இடையே உரசல்கள் சகஜம்தான். கடந்த தி.மு.க. ஆட்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த கலவரத்துக்குப் பிறகு, அரசியல் சதுரங்கமாகிவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்!

உயர் நீதிமன்றத்தில் மாற்று​முறைத் தீர்வு மையக் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 16-ம் தேதி நடைபெற்றது. 'சொத்துக் குவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, இந்த விழாவில் கலந்துகொள்ளக் கூடாது!’ என்று தி.மு.க. வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்த... பதிலுக்கு, அ.தி.மு.க. வழக்கறிஞர்களும் மல்லுக்கு நின்றார்கள். இதனால், 'ஜெயலலிதா வருவாரா... இல்லையா?’ என்ற பரபரப்புடனே விழா தொடங்கியது. கொஞ்ச நேரத்தில் ஜெயலலிதா விழாவைப் புறக்கணித்தது உறுதியாகத் தெரிய வரவே, சலசலப்பு இல்லாமல் நடந்து முடிந்தது நிகழ்ச்சி.

''முதல்வர் வருகைக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், அவர் ஏன் வரவில்லை?'' என்று சீனியர் வழக்கறிஞர்கள் சிலரிடம் கேட்டோம். ''உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளைக்கொண்ட சில கமிட்டிகள் இயங்கி வருகின்றன. அதில் முக்கியமானது, நிர்வாக கமிட்டி. நீதிமன்ற நிர்வாகம், கொள்கை முடிவுகள் போன்றவற்றை இதுதான் முடிவு செய்யும். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நீதிபதிதான், இந்த கமிட்டிக்குத் தலைவர். இப்போது அல்டமாஸ் கபீர் தலைவராக இருக்கிறார். அவருக்குக் கீழே உறுப்பினராக இருப்பவர் தலைமை நீதிபதி கபாடியா. அடுத்த இடத்தில் இருப்பவர் நீதிபதி ரவீந்திரன். அல்டமாஸ் கபீர்தான், இவர்கள் எடுக்கும் முடிவைத் தீர்மானிப்பார்.

இதைப்போலவே, ஒவ்வொரு உயர் நீதிமன்றத்திலும் கமிட்டிகள் இருக்கின்றன. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பாலுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் எலிப்பி தர்மா ராவ்தான் கமிட்டியின் தலைவர். அவருக்கு கீழே இக்பாலும், அடுத்து முருகேசனும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

உயர் நீதிமன்ற நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொள்ளப்போவதாக அறிவிப்பு வந்ததுமே, மத்திய அரசின் வழக்குகளுக்கு ஆஜராகும் வக்கீல் ஒருவர், உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற கமிட்டிகளுக்கு ஒரு கடிதம் எழுதினார். 'முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெறும் பெங்களூரு தனி நீதிமன்றத்தை உருவாக்கியது உச்ச நீதிமன்றத்தின் நிர்வாக கமிட்டிதான். ஜெயலலிதா மீது அந்த வழக்கு நடந்துகொண்டு இருக்கும் சூழ்நிலையில், அவர் விழாவில் கலந்துகொண்டால், நிர்வாக கமிட்டியின் உறுப்பினர்களான நீதிபதிகள் எப்படி மேடையில் அமர முடியும்? அதோடு, சமச்சீர்க் கல்வி தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சென்னை நீதிமன்றத்தில் நடக்கிறது!’ என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், அதற்குள் ஜெயலலிதாவிடம் தேதி வாங்கி அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டுவிட்டன. 'தமிழக அரசு நிதியுதவி செய்து இருப்பதால்தான், ஜெயலலிதா அழைக்கப்பட்டார்’ என்று உயர் நீதிமன்றம் விளக்கம் கொடுத்தது. பிரச்னை பெரிதாவதை விரும்பாததால் முதல் நாளே, 'முதல்வர் விழாவுக்கு வராமல் இருப்பது நல்லது’ என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால், முதல்வரிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை.

கார்டனில் இருந்து உயர் நீதிமன்றம் வரை அவரை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதே சமயம், வழக்கறிஞர்கள் எதிர்ப்பு காட்டிவிடக் கூடாது என்பதற்காக, நீதிமன்றத்தில் முதல்வரின் வருகைக்காகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தது காவல் துறை. மேடையில் இக்பாலுக்கு அடுத்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு ஸீட் போட்டு இருந்தார்கள்.

நீதிபதிகள் அல்டமாஸ் கபீர், சதாசிவம், இக்பால், எலிப்பி தர்மா ராவ், ஜோதிமணி, முருகேசன், நாகப்பன் ஆகியோரும் நீதிமன்ற வளாகத்தில் ஓர் அறையில் அமர்ந்து இருந்தனர். ஒருவேளை, ஜெயலலிதா விழாவில் கலந்துகொண்டால், 'மேடை ஏற மாட்டோம்’ என்று அவர்கள் முடிவு எடுத்து இருந்தார்கள். ஆனால், கடைசி நேரத்தில் ஜெயலலிதா வரவில்லை. அதனால், எந்தப் பிரச்னையும் நடக்கவில்லை...'' என்றார்கள்.

ஜெயலலிதா வர மாட்டார் என்பது, அமைச்சரான செந்தமிழனுக்குக்கூட தெரியாது. அ.தி.மு.க. வழக்கறிஞர்களிடம் பேசியபோது, ''தி.மு.க. ஆட்சியில் உயர் நீதிமன்றத்தில் மோதல் வெடித்த பிறகு, சில மாதங்களிலேயே அம்பேத்கர் சிலை திறப்பு விழா அதே வளாகத்தில் நடைபெற்றது. இதில் 'கருணாநிதி கலந்துகொள்ளக் கூடாது’ என்று வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதையும் மீறி கருணாநிதி வர, அவர் மற்றும் நீதிபதிகள் முன்பே வக்கீல்கள் தாக்கப்பட்டார்கள். அப்படிப்பட்ட விரும்பத்தகாத செயல்கள் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அம்மா வரவில்லை!'' என்கிறார்கள்.

என்ன காரணம் சொல்லப்பட்டாலும் ஜெயல​லிதாவின் இமேஜுக்கு ஒரு திருஷ்டிப் பொட்டு தான்!

இந்த செய்தி தொடர்பான படங்கள் காண

[You must be registered and logged in to see this link.]
Anonymous
Guest
Guest


Back to top Go down

உயர் நீதிமன்ற விழாவுக்கு முதல்வர் போகாதது ஏன்? Empty Re: உயர் நீதிமன்ற விழாவுக்கு முதல்வர் போகாதது ஏன்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jul 22, 2011 10:08 pm

தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே தொடருங்கள் உங்கள் பகிர்வுகளை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோருவது நீதிமன்ற அவமதிப்பு: தூக்கில் போட தங்கபாலு ஆதரவு
» காவிரி விவகாரம் - மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணை
» நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாளை தலைமைச் செயலர் ஆஜராக உத்தரவு
» உயர் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை
» நேரடியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்து மல்கோத்ரா பதவியேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum