தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
தொடு வானத்தை, நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி
2 posters
Page 1 of 1
தொடு வானத்தை, நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி
தொடு வானத்தை, நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி
நூல் ஆசிரியர் : கவிஞர் பொன் விக்ரம்
கவிஞர் பொன் விக்ரம் அவர்களின் இரண்டாவது கவிதை தொகுப்பு நூல் இது. தான் உணர்ந்த உணர்வுகளை கவிதையாக்கி உள்ளார். மதத்தின் பெயரால் மோதும் அவலம் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. மதவெறி தான் மகாத்மாவின் உயிரைக் குடித்தது. இன்னும் அவர்களின் மதவெறி அடங்கவில்லை என்பதை உணர்த்தும் கவிதை இதோ!
எச்சரிக்கை
காந்தியைக் கொன்றவர்கள்
இன்னும் துப்பாக்கியைக்
கீழே போடவில்லை
இன்றைக்கு ஆண்களை விட பெண்கள் தான் அளப்பறிய சாதனைகள் நிகழ்த்துகின்றனர். ஆற்றல் மிக்கவர்களாகத் திகழ்கின்றனர். இந்த நவீன யுகத்திலும் பெண் பிறந்தால் பேதலிக்கும் மனிதர்கள் இருக்கின்றனர். கிராமங்களில் பெண் பிறந்தால் கொன்று விடும் கொடூரம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது. பெற்ற தாய் பெண் குழந்தைக்கு ஒப்பாரி வைப்பது போன்ற கவிதை சமுதாயத்தின் கன்னத்தில் அறைகின்றது.கடைசி வரி முத்தாய்ப்பாக உள்ளது.
இன்னொரு
கரு சுமக்கணுமா
போதுமடா அய்யா
ஏன் கர்ப்பப் பை
கல்லாகிப் போகட்டுமே
ரோபோ கவிதை சிந்தனை மிக்க வரிகள். ரோபோ இயந்திரம் மனிதனை மட்டமாகப் பார்க்கும் பார்வை நல்ல கற்பனை.
ஈழத்தில் நடந்த படுகொலைகள் கண்டு கொதிக்காத தமிழ் நெஞ்சம் இல்லை. கொதிக்காதவர்கள் தமிழர்களே இல்லை. கவிஞர்களும் கொதித்தனர். கவிஞர் பொன் விக்ரம் கொதித்து எழுதிய கவிதை.
போதிமரத்தடியில் அமர்ந்தவனே
கொஞ்சம் புத்தி சொல்லக் கூடாதோ?
இரக்கம் உள்ள ஆண்டவனே
இதயமுள்ள இறைவனே
கோத்த பய ராஜபக்சே -அவன்களை
சிலுவையில் அறையக் கூடாதா?
இக்கரையில் உள்ள தமிழர்களே
அக்கறையில் என்ன நடக்கிறது
கொஞ்சம் அக்கறை காட்டக் கூடாதா?
ஆண்டவனோ ஆள்பவனோ
யாரும் இல்லை தமிழனுக்கு
மனிதரில் பல நிறங்கள் உண்டு. கவிஞர் உடல் நிறத்தைச் சொல்லவில்லை. உள்ளத்தின் நிறத்தைச் சொல்கிறார். வேடமிடும் மனிதர்களை தோலுரித்துக் காட்டுகின்றார்.
பிழைக்கத் தெரிந்தவனென்று பேரெடுக்கிறான்
அமைதியாய் இருக்கும் நல்லவனை கொத்தி எடுக்கிறான்
கவிஞர் பல கவிதைகளில் காதலையும் பாடி உள்ளார். கடவுள் உண்டா? இல்லையா? என கவிதைகளில் பட்டிமன்றம் நடத்தி உள்ளார்.மாட்டு சாணத்தை விட மனிதன் தாழ்வா? என்ற கேள்வியை வைக்கிறார். பகுத்தறிவு ஊட்டுகிறார்.
சாணத்திற்கு வைக்கிறான், சந்தனத்தில் பொட்டு
சக மனிதனை ஒதுக்குகிறான், தொட்டால் வருமாம் தீட்டு
என் கேள்விக்கென்ன பதில்? கவிதையின் மூலம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை நினைவூட்டுகின்றார். திருப்பரங்குன்றத்தில் வாழ்ந்து கொண்டு பகுத்தறிவுச் சுடர் ஏந்தி ஒளியூட்டுகின்றார் கவிதைகளின் மூலம். தந்தை பெரியார் பற்றி, கர்மவீரர் காமராசர் பற்றி கவிதைகள் சிறப்பாக உள்ளது.
கவிஞர் பொன் விக்ரம் பகுத்தறிவுவாதி, நடிகரில் பகுத்தறிவுவாதியான கமலஹாசனைப் பாராட்டி கவிதை வடித்துள்ளார்.
வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணம் கொடுத்து தேர்தலையே கேலிக் கூத்தாக்கி ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்து விட்ட காலத்தில், இன்றைக்கு வாக்காளன் மனநிலை எப்படி ? உள்ளது என்பதை படம் பிடித்துக் காட்டுகின்றார் பொன் விக்ரம.
அய்ந்தாண்டுக்கு ஒரு முறை என்றில்லாமல்
ஆண்டுக்கு ஒருமுறை வந்தால் நல்லது
தளீபாவளி கூட தேவையில்லை
இடைத்தேர்தல் வந்தாலே போதும்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று அன்று மார் தட்டினோம். ஆனால் இன்று அவ்வாறு கூற முடியாது அவல நிலை வந்தது. ஜனநாயகம் பண நாயகமானது.இன்றைய அரசியல்வாதிகள் மனிதர்களாகவே இல்லை என்பதை உணர்த்தும் கவிதை இதோ!
வேட்பாளன்
சந்தனத்துக்கு சாயம் பூசுகிறான்
மல்லிகைக்கு சென்ட்டு அடிக்கிறான்
தேர்தல் நேரத்தில் மனிதனைப் போல் வேடங்கட்டுகிறான்
இக்கவிதைகளை படித்த பின்பாவது அரசியல்வாதிகள் நிலையில் மாற்றம் வரட்டும் மக்களிடமிருந்த மரியாதையை அரசியல்வாதிகள் இழந்து விட்டனர் என்பதை உணர்ந்து திருந்த வேண்டும்.
எங்கே போகிறது? மனிதம்! என்ற கவிதையில், இயற்கை, பறவை, விலங்கு இவைகள் இயல்பாக இயங்கும் போது மனிதன் மட்டும் இயல்பை மீறி ஏன் வன்முறையாட்டம் போடுகிறான் என்று கேட்டு சிந்திக்க வைக்கிறார்.
ஆணாதிக்க சமுதாயம் இன்றைக்கு எந்த நிலையில் உள்ளது என்பதை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார்.
நினைவில்
தாய் படுத்தாள் நோயில்
தகப்பன் வேறு ஒருத்தியின் பாயில்
துணிச்சல் மிக்க கவிதை வரிகளின் மூலம் சமுதாயத்தில் விழிப்புணர்வு விதைக்கின்றார்.சிலர் சொல்லக் கூடும் கவிதைகளில் பகுத்தறிவுப் பிரச்சாரம். இருக்கின்றதே என்று. இயற்கையை மட்டும் எதுகை மோனையுடன் பாடுவது மட்டுமே கவிஞன் கடமை என்பது தவறு. மனதில் பட்டதை கவியரசு கண்ணதாசன் வழியில் ஏற்றதொரு கருத்தினை கவிதை வடிவில் வழங்கி இருக்கும் கவிஞர் பொன் விக்ரம் பாராட்டுக்குரியவர். கவிதை உலகில் விரைவில் சிறப்பான இடம் பிடிப்பார் என்பது உறுதி.
நூல் ஆசிரியர் : கவிஞர் பொன் விக்ரம்
கவிஞர் பொன் விக்ரம் அவர்களின் இரண்டாவது கவிதை தொகுப்பு நூல் இது. தான் உணர்ந்த உணர்வுகளை கவிதையாக்கி உள்ளார். மதத்தின் பெயரால் மோதும் அவலம் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. மதவெறி தான் மகாத்மாவின் உயிரைக் குடித்தது. இன்னும் அவர்களின் மதவெறி அடங்கவில்லை என்பதை உணர்த்தும் கவிதை இதோ!
எச்சரிக்கை
காந்தியைக் கொன்றவர்கள்
இன்னும் துப்பாக்கியைக்
கீழே போடவில்லை
இன்றைக்கு ஆண்களை விட பெண்கள் தான் அளப்பறிய சாதனைகள் நிகழ்த்துகின்றனர். ஆற்றல் மிக்கவர்களாகத் திகழ்கின்றனர். இந்த நவீன யுகத்திலும் பெண் பிறந்தால் பேதலிக்கும் மனிதர்கள் இருக்கின்றனர். கிராமங்களில் பெண் பிறந்தால் கொன்று விடும் கொடூரம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது. பெற்ற தாய் பெண் குழந்தைக்கு ஒப்பாரி வைப்பது போன்ற கவிதை சமுதாயத்தின் கன்னத்தில் அறைகின்றது.கடைசி வரி முத்தாய்ப்பாக உள்ளது.
இன்னொரு
கரு சுமக்கணுமா
போதுமடா அய்யா
ஏன் கர்ப்பப் பை
கல்லாகிப் போகட்டுமே
ரோபோ கவிதை சிந்தனை மிக்க வரிகள். ரோபோ இயந்திரம் மனிதனை மட்டமாகப் பார்க்கும் பார்வை நல்ல கற்பனை.
ஈழத்தில் நடந்த படுகொலைகள் கண்டு கொதிக்காத தமிழ் நெஞ்சம் இல்லை. கொதிக்காதவர்கள் தமிழர்களே இல்லை. கவிஞர்களும் கொதித்தனர். கவிஞர் பொன் விக்ரம் கொதித்து எழுதிய கவிதை.
போதிமரத்தடியில் அமர்ந்தவனே
கொஞ்சம் புத்தி சொல்லக் கூடாதோ?
இரக்கம் உள்ள ஆண்டவனே
இதயமுள்ள இறைவனே
கோத்த பய ராஜபக்சே -அவன்களை
சிலுவையில் அறையக் கூடாதா?
இக்கரையில் உள்ள தமிழர்களே
அக்கறையில் என்ன நடக்கிறது
கொஞ்சம் அக்கறை காட்டக் கூடாதா?
ஆண்டவனோ ஆள்பவனோ
யாரும் இல்லை தமிழனுக்கு
மனிதரில் பல நிறங்கள் உண்டு. கவிஞர் உடல் நிறத்தைச் சொல்லவில்லை. உள்ளத்தின் நிறத்தைச் சொல்கிறார். வேடமிடும் மனிதர்களை தோலுரித்துக் காட்டுகின்றார்.
பிழைக்கத் தெரிந்தவனென்று பேரெடுக்கிறான்
அமைதியாய் இருக்கும் நல்லவனை கொத்தி எடுக்கிறான்
கவிஞர் பல கவிதைகளில் காதலையும் பாடி உள்ளார். கடவுள் உண்டா? இல்லையா? என கவிதைகளில் பட்டிமன்றம் நடத்தி உள்ளார்.மாட்டு சாணத்தை விட மனிதன் தாழ்வா? என்ற கேள்வியை வைக்கிறார். பகுத்தறிவு ஊட்டுகிறார்.
சாணத்திற்கு வைக்கிறான், சந்தனத்தில் பொட்டு
சக மனிதனை ஒதுக்குகிறான், தொட்டால் வருமாம் தீட்டு
என் கேள்விக்கென்ன பதில்? கவிதையின் மூலம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை நினைவூட்டுகின்றார். திருப்பரங்குன்றத்தில் வாழ்ந்து கொண்டு பகுத்தறிவுச் சுடர் ஏந்தி ஒளியூட்டுகின்றார் கவிதைகளின் மூலம். தந்தை பெரியார் பற்றி, கர்மவீரர் காமராசர் பற்றி கவிதைகள் சிறப்பாக உள்ளது.
கவிஞர் பொன் விக்ரம் பகுத்தறிவுவாதி, நடிகரில் பகுத்தறிவுவாதியான கமலஹாசனைப் பாராட்டி கவிதை வடித்துள்ளார்.
வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணம் கொடுத்து தேர்தலையே கேலிக் கூத்தாக்கி ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்து விட்ட காலத்தில், இன்றைக்கு வாக்காளன் மனநிலை எப்படி ? உள்ளது என்பதை படம் பிடித்துக் காட்டுகின்றார் பொன் விக்ரம.
அய்ந்தாண்டுக்கு ஒரு முறை என்றில்லாமல்
ஆண்டுக்கு ஒருமுறை வந்தால் நல்லது
தளீபாவளி கூட தேவையில்லை
இடைத்தேர்தல் வந்தாலே போதும்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று அன்று மார் தட்டினோம். ஆனால் இன்று அவ்வாறு கூற முடியாது அவல நிலை வந்தது. ஜனநாயகம் பண நாயகமானது.இன்றைய அரசியல்வாதிகள் மனிதர்களாகவே இல்லை என்பதை உணர்த்தும் கவிதை இதோ!
வேட்பாளன்
சந்தனத்துக்கு சாயம் பூசுகிறான்
மல்லிகைக்கு சென்ட்டு அடிக்கிறான்
தேர்தல் நேரத்தில் மனிதனைப் போல் வேடங்கட்டுகிறான்
இக்கவிதைகளை படித்த பின்பாவது அரசியல்வாதிகள் நிலையில் மாற்றம் வரட்டும் மக்களிடமிருந்த மரியாதையை அரசியல்வாதிகள் இழந்து விட்டனர் என்பதை உணர்ந்து திருந்த வேண்டும்.
எங்கே போகிறது? மனிதம்! என்ற கவிதையில், இயற்கை, பறவை, விலங்கு இவைகள் இயல்பாக இயங்கும் போது மனிதன் மட்டும் இயல்பை மீறி ஏன் வன்முறையாட்டம் போடுகிறான் என்று கேட்டு சிந்திக்க வைக்கிறார்.
ஆணாதிக்க சமுதாயம் இன்றைக்கு எந்த நிலையில் உள்ளது என்பதை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார்.
நினைவில்
தாய் படுத்தாள் நோயில்
தகப்பன் வேறு ஒருத்தியின் பாயில்
துணிச்சல் மிக்க கவிதை வரிகளின் மூலம் சமுதாயத்தில் விழிப்புணர்வு விதைக்கின்றார்.சிலர் சொல்லக் கூடும் கவிதைகளில் பகுத்தறிவுப் பிரச்சாரம். இருக்கின்றதே என்று. இயற்கையை மட்டும் எதுகை மோனையுடன் பாடுவது மட்டுமே கவிஞன் கடமை என்பது தவறு. மனதில் பட்டதை கவியரசு கண்ணதாசன் வழியில் ஏற்றதொரு கருத்தினை கவிதை வடிவில் வழங்கி இருக்கும் கவிஞர் பொன் விக்ரம் பாராட்டுக்குரியவர். கவிதை உலகில் விரைவில் சிறப்பான இடம் பிடிப்பார் என்பது உறுதி.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010
Re: தொடு வானத்தை, நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி
தோன்றுகிறது, எவ்வளவு அருமையாக வடித்திருக்கிறார் நூலினை, கவிதையின் சாரங்கள் ஒவ்வொன்றும் ஆழமாக தாக்கிவிட்டு செல்கிறது படிப்போர் இதயத்தை, நாம் செய்யவேண்டியவை இன்னும் எவ்வளவோ இருக்கின்றது என நினைவுப்படுத்துகிறது நூலின் வரிகள். அற்புத படைப்பிற்கோர் அழகிய மதிப்புரை.
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Re: தொடு வானத்தை, நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி
வணக்கம் மிக்க நன்றி
இரா .இரவி
www.kavimalar.com
http://eraeravi.wordpress.com/
http://eraeravi.blogspot.com/
இரா .இரவி
www.kavimalar.com
http://eraeravi.wordpress.com/
http://eraeravi.blogspot.com/
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010
Similar topics
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சும் சென்ரியூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» வானவில்லின் எட்டாவது நிறம்! காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» மகரந்தச் சேர்க்கை நூல் ஆசிரியர் : கவிஞர் தியாக இரமேஷ் ramesh.vdm@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சும் சென்ரியூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» வானவில்லின் எட்டாவது நிறம்! காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» மகரந்தச் சேர்க்கை நூல் ஆசிரியர் : கவிஞர் தியாக இரமேஷ் ramesh.vdm@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|