தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

+3
கலைநிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கலைவேந்தன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by கலைவேந்தன் Fri Nov 25, 2011 8:46 pm

அன்பர்களே, நான் பலகாலமாக எழுதித் தொகுத்து வைத்து இருக்கும் திருக்குறள் எளிய உரையினை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

திருக்குறளுக்கு ஆயிரம் உரைகள் இருந்தாலும் அனைவருக்கும் தெளிவாகப் புரியும்படி எளிமையாய் எழுதப்பட்டது.

திருக்குறளின் வரிசைக்கிரமமாக எழுதி அனைவரையும் போல போரடிக்காமல் குறிப்பிட்ட சில குறள்களை முதலில் எடுத்துக்கொண்டு சிறிது சிறிதாக மேலே செல்லும்படி எழுத இருக்கிறேன்.

இதற்கு வாசகர்கள் அதிகம் இரார் என அறிவேன். ஒருவரேனும் பயன் அடைந்தால் அது எனக்கு மனத்திருப்தி தரும்.

இனி தொடங்குவோமா..?
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by கலைவேந்தன் Fri Nov 25, 2011 8:46 pm

இன்றைய திருக்குறள் : (1)

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல். ( 314 )



தமக்கு தீங்கு செய்பவரைத் தண்டிக்க ஒரே சிறந்த வழி என்னதெரியுமா?
அவரே வெட்கப்பட்டு தலை குனியும் வண்ணம் அவருக்கு நன்மை செய்தல தான்!

தமக்கு தீங்கு செய்பவரிடம் பகைமை பாராட்டுவதால் அவருடனனான பகைமை மேலும் பெருகுமே தவிர குறைவதில்லை! விளைவு? நாம் ஒரு நண்பரை இழப்பது மட்டுமல்ல- ஒரு பகைவரை ஏற்படுத்திக்கொள்வதும் தானே? ஆக இரட்டை நஷ்டம்!
எனவே தான் வள்ளுவர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பெறுவது எப்படி என்று கூறுகிறார்!
அவர் சொல்லும் வழியின் மூலம் ஒரு பகைமை ஒழிவதோடு ஒரு நட்பும் வளர வாய்ப்புகள் அதிகம்.


சொற்பொருள்:

இன்னா = தீங்கு
ஒறுத்தல் = தண்டித்தல்.
நாண = வெட்கப்படுமாறு
நன்னயம் = நல்+ நயம் = நற்செயல்
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 25, 2011 11:30 pm

ரொம்ப நல்ல முயற்சி அண்ணே பாராட்டுக்கள் கண்டிப்பாக இது அனைவருக்கும் ப்யனுள்ளதாக அமையும் அண்ணே தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by கலைநிலா Sat Nov 26, 2011 1:01 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ரொம்ப நல்ல முயற்சி அண்ணே பாராட்டுக்கள் கண்டிப்பாக இது அனைவருக்கும் ப்யனுள்ளதாக அமையும் அண்ணே தொடருங்கள்
சியர்ஸ் சியர்ஸ் :héhé: :héhé: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! 69767
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by கலைவேந்தன் Sat Nov 26, 2011 11:40 pm

மிக்க நன்றி யூஜின் மற்றும் கலை நண்பரே..
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by கலைவேந்தன் Sat Nov 26, 2011 11:41 pm

இன்றைய குறள்: (2.) எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின். (666)


தாம் நினைத்த செயல்களை நினைத்தபடி செய்து முடிப்பவர் யார் தெரியுமா?
அந்த செயல்களை எப்படியும் செய்தே தீர வேண்டும் என்று உறுதியாக நினைப்பவர் தான்!
அதன் உள்ளர்த்தம் என்ன என்றால் ஒரு காரியம் நடத்த ஒரு முடிவு எடுத்தால் அந்த உறுதியில் முனைப்பாக இருக்கவேண்டும்! அப்போது தான் வெற்றி பெற முடியும் எனபதுதான்!


சொற்பொருள்:

எண்ணிய= எண்ணியது
எண்ணியாங்கு=எண்ணியபடி
எய்துவர்= வெற்றி பெறுவர்
எண்ணியர்= எண்ணுபவர், நினைப்பவர்
திண்ணியர்- உறுதியானவர்
பெறின்=பெற்றால்


Last edited by கலைவேந்தன் on Sat Nov 26, 2011 11:47 pm; edited 1 time in total
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Nov 26, 2011 11:46 pm

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! 548321 திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! 548321///திண்ணியராகப்/// இரண்டு வார்த்தையாக வரும் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by வித்யாசாகர் Sun Nov 27, 2011 4:42 am

ணக்கம் தோழமை. மிக அருமையான முயற்சி. திருக்குறள் இப்போது பல சமூகநல ஆர்வலர்களை கிளறிவிட்டு தன்னை முன்படுத்திக் கொண்டாலும், இன்னும் போதாது என்றேக் கொள்வோம். உலகின் மதிப்புமிகு மிகச் சில படைப்புக்களில் மிகச்சிறந்த ஒரு படைப்பு நம் திருக்குறள் என்பதை படிப்போர் அர்த்தத்தின் ஊடையில் உணர்வர்.

என்றாலும், அதை உலகின் மாறுபட்ட பார்வையில் எளிமையாகவும் எழுத்து நளினம் குறையாமலும் சுருங்கக் கொடுத்து பெரிதாகச் சிந்திக்கச் செய்யும் தங்களின் இப்பணி உலகப் போற்றுதலுக்கு உரியது.

இடைவிடாது தொடருங்கள். மரத்திற்கு காய்க்கவே தெரியும். யாரேனும் பறித்து பசியாறுவார் எனும் நம்பிக்கைக் கூட அதற்கில்லை. அப்படி இருப்போம் நன்மைச் செய்கையில். செய்வதை கடனெனச் செய்வோம். அது என்றோ எவருக்கேனும் நிச்சயம் உதவும். தங்களின் இச்சீரிய முயற்சிக்கு மிக்க வாழ்த்தும், பெரு நன்றிகளும், மதிப்புமிகு வணக்கமும்!

வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
கவிமாமணி, தமிழ்மாமணி, இலக்கியச் செம்மல்
கவிமாமணி, தமிழ்மாமணி, இலக்கியச் செம்மல்

Posts : 18
Points : 20
Join date : 22/10/2010
Age : 47
Location : குவைத்

Back to top Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by கலைவேந்தன் Mon Nov 28, 2011 12:57 pm

உங்கள் வாழ்த்துக்கும் ஊக்கத்திற்கும் நன்றி வித்யாசாகர்.. தொடர்கிறேன்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by கலைவேந்தன் Mon Nov 28, 2011 12:59 pm

இன்றைய குறள்: (3.) ) அன்பிலார் எல்லாம் தமக்குரியர்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. (72)


மனதில் அன்பு இல்லாதவர்கள் இந்த உலகில் காணக்கிடைக்கும் எல்லாவற்றையும் தமது தமது என பரபரப்பார்கள்! மனம் நிறைந்த அன்புடையவர்கள் தமது எலும்பைக்கூட பொருட்படுத்தாமல் பிறக்கு வழங்கி மகிழ்வார்கள்.

இந்த உலகத்துல இருக்கும் மனிதர்களை இரண்டு விதமா பிரிக்கலாம்!

1. அன்புடையார்.

2.அன்பிலார்

இரண்டாம் வகை மனிதர்கள் சுயநலக்காரர்கள்.
அவர்கள் எல்லாம் தமதென்று நினைப்பவர்கள். இவ்வுலகத்துக்கு தேவை இல்லாதவர்கள்.

முதல் வகை மனிதர்கள்தாம் இவ்வுல்கை நடத்துபவர்! அவர்கள் பிறருக்காக தம் எலும்பையும் தரத் தயாராய் இருப்பவர்கள்!
அவர்கள் தியாகச் செம்மல்கள்!


சொற்பொருள்:

என்பு = எலும்பு
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by தங்கை கலை Mon Nov 28, 2011 1:12 pm

வாவ் சூப்பர் அண்ணா ....
அண்ணா புரியும் படியா ரொம்ப தேளிவா சொல்லுறது ரொம்ப அருமை அண்ணா ....

மிக்க மகிழ்ச்சி அண்ணா :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé:
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 28, 2011 1:16 pm

அண்ணே ரொம்ப எளிமையா புரியும் படி இருக்கு விளக்கம்

தொடரட்டும் உங்களின் சேவை திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! 64660
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by veluchamy Mon Nov 28, 2011 2:21 pm

இந்தக்குறளைப்பற்றி ஒரு வேதனையான விடயத்தை பகிரலாமா....?( அது பலர் மனதைப்புண்டபடுத்தலாம்)

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு



Last edited by veluchamy on Mon Nov 28, 2011 2:25 pm; edited 1 time in total
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 39
Location : சிங்கப்பூர்

Back to top Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by தங்கை கலை Mon Nov 28, 2011 2:23 pm

veluchamy wrote:இந்தக்குறளைப்பற்றி ஒரு வேதனையான விடயத்தை பகிரலாமா....?( அது பலர் மனதைப்புண்டபடுத்தலாம்)
பகிருங்கள் அண்ணா ,,,யார் மனதையும் புண்படுத்தாமல் .... நாங்க கேக்க ரெடி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 28, 2011 2:25 pm

veluchamy wrote:இந்தக்குறளைப்பற்றி ஒரு வேதனையான விடயத்தை பகிரலாமா....?( அது பலர் மனதைப்புண்டபடுத்தலாம்)
பகிர்ந்துக் கொள்ளுங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by veluchamy Mon Nov 28, 2011 2:31 pm

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

இந்தக்குறளில் வரும் அன்புடையார் = அன்பு + உடையார்.(அன்பானவர்) இதைத்தவறாகப்பயன்படுத்தி.. ஒருசாதிப்பிரிவை(உடையார்) ச்சேர்ந்தவர்கள் வள்ளுவரை அவங்களோட சாதிக்கார ர் என்றும். அதற்க்கு உதாரணம் இந்தக்குறள்தானென்றும். எங்கள் ஊரில் (நான் முன்னே இருந்த ஊரில்) பதாகை வைத்து இருந்தனர்.... இதைப்பார்த்த எனக்கு பேரதிர்ச்சி அடப்பாவிகளா என்று...
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 39
Location : சிங்கப்பூர்

Back to top Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 28, 2011 3:25 pm

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! 38535 திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! 38535
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by கலைவேந்தன் Tue Nov 29, 2011 10:21 pm

பாராட்டுக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி கலை வேலுச்ச்சாமி யூஜின் மற்றும் நண்பர்களே..

வேலுச்சாமி அவர்களே, வள்ளுவரைச் சொந்தம் கொண்டாடாதோர் எவருமே இல்லை எனலாம். அவரது குறளில் இருக்கும் வார்த்தைகளை தமக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு குதிக்கும் கூட்டத்தைப் பற்றி கற்றோர் கவலைப்படமாட்டார்கள்..

விட்டுத்தள்ளுங்க..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by கலைவேந்தன் Tue Nov 29, 2011 10:23 pm

இன்றைய குறள்: (4) முகநக நட்பது நட்பன்று

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு. (786)


முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு அன்று! நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்பு கொண்டுநட்புச்செய்வதே நட்பு ஆகும்!

நட்பென்பது வெறும் முகம் மகிழ வேண்டி இனிமையான பேச்சுக்களைப் பேசி பழகுவது அல்ல.

உண்மையான நட்பென்பது உள்மனத்தை மகிழவைப்பதாக இருக்க வேண்டும்.

திருவள்ளுவர் என்ன சொல்ல வருகிறார்?

வெறும் இனிமையான பேச்சுக்களை நம்மை மகிழ்விக்க பேசுபவன் உண்மையான நண்பன் அல்ல! நம் மனத்தை நல்லவிதமாக மாற்றி நமக்கு தேவையான நேரத்தில் நம்மை தட்டிக்கேட்டு நல்ல அறிவுரைகளைக்கூறி நல்வழிப்படுத்துபவனே உண்மையான நண்பன்!


சொற்பொருள்:

நக = மகிழ வைக்க
அகம் =உள்
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 29, 2011 10:26 pm

//வெறும் இனிமையான பேச்சுக்களை நம்மை மகிழ்விக்க
பேசுபவன் உண்மையான நண்பன் அல்ல! நம் மனத்தை நல்லவிதமாக மாற்றி நமக்கு
தேவையான நேரத்தில் நம்மை தட்டிக்கேட்டு நல்ல அறிவுரைகளைக்கூறி
நல்வழிப்படுத்துபவனே உண்மையான நண்பன்!// ரொம்ப நல்ல விளக்கம் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by கலைவேந்தன் Wed Nov 30, 2011 10:08 pm

மிக்க நன்றி யூஜின்..
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by கலைவேந்தன் Wed Nov 30, 2011 10:20 pm

தினம் ஒரு திருக்குறள் (5)

எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும்


எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு. ( 423 )


எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் கேட்டவாறே கொள்ளாமல் அப்பொருளின் மெய்யான பொருளைக்காண்பதே அறிவாகும்.

பல பேர் பலவிதமா சொல்லலாம்! கேட்கிற நமக்கு தான் சுய அறிவு இருக்கனும்!

யார் என்ன சொன்னாலும் அதில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்து அதில் உண்மைப்பொருளை அறிந்து கொள்ள வேண்டும்!

இந்த உலகம் பலவிதமாய் பேசும்! யார் எப்படி சொன்னாலும் சொல்லுவதை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் அதிலுள்ள உண்மையானவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதே அறிவு!



சொற்பொருள்:

வாய் = வழி/ மூலம்
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by கலைநிலா Wed Nov 30, 2011 10:22 pm

பகிர்வுக்கு நன்றி .தொடருங்கள்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by தங்கை கலை Wed Nov 30, 2011 10:33 pm

கண்டிப்பாக அண்ணா ....

பகிர்வுக்கு நன்றிங்க அண்ணா ...

அண்ணா புரியும் படி சொல்வது மிக அழகு அண்ணா ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by கலைவேந்தன் Wed Nov 30, 2011 10:40 pm

ரொம்ப நன்றி தோழர் கலை..!
ரொம்ப நன்றிம்மா தங்கச்சி கலை..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

திருக்குறளும் கலையின் எளிய உரையும்...! Empty Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum