தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
கலைமகள்
+5
ஹிஷாலீ
அ.இராமநாதன்
pakee
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவினா
9 posters
Page 1 of 1
கலைமகள்
வெள்ளைத்தாமரை நடுவினிலே
வீற்று இருக்கும் கலைமகளே
கொள்ளை போகுது உன் செல்வம்
கூறுகட்டித் தெருவெங்கும்.
கல்விகூடமா கடைத்தெருவா?
கல்வியென்ன கடைசரக்கா
எல்லோருக்கும் கல்வியெனும்
திட்டம் எரிந்து போனதுவா?
கலைமகள் நீ விலைமகளாய்
கடையில் ஏனோ சரக்கானாய்?
விலைக்குதான் நீயென்ற
நிலைக்கு ஏனோ உருவானாய்?
வாடிப்போயே பிறந்தாயோ?
வற்றியகுளத்தில் மலர்ந்தாயோ?
தேடிய செல்வம் யாவையுமே
தெருவில் போட்டு உடைத்தாயோ?
இல்லாத ஏழை உன் வீட்டுக்கு
வருவதைகூட தடுக்கின்றாய்.
எல்லாம் உள்ள செல்வந்தனிடமோ
படுக்கையில் கூடப்படுக்கின்றாய்.
சமுதாய வீனையினை
குழந்தையைபோல கையிலேந்தி
அமுதாயும் அழகாயும்
கல்வியென்ற இசை இசைத்தாய்.
இசைத்து நீ பாடுகையில்
பலருக்கு காதில் கேட்கலையாம்
அசைந்து ஆடும் அனைவருமே
செல்வ செழிப்பில் உள்ளவராம்.
வீசும் காற்றில் கலந்திருக்கும்
கல்வியென்கிற கானத்தை
காசும் பணமும் இருந்தால்தான்
காதுகளாலே கேட்கனுமாம்.
கம்பள ஆடை நெய்கின்ற
மீர்ஜாபூர் பதோலியிலே
சம்பளமைந்தே பெறுகின்ற
சிறுவர்களுக்கு கேட்கலையாம்.
சிறுசிறு தொழிலும் கைத்தொழிலும்
செய்துவாழ்க்கை நடத்துகிற
சிறுவர்களுக்கும் மாதர்களுக்கும்
உனது கீதம் கேட்கலையாம்.
உணவு விடுதியில் உணவாகும்
உதிரிக்குழந்தைகள் அவர்களுக்கும்
கனவு நிலையிலும் உனது கீதம்
காதுகளில் போய் விழவில்லையாம்.
குட்டி ஜப்பான் என்று அழைபடும்
சிவகாசி மாநகரினிலே - தீப்
பெட்டி பட்டாசு சிறையிலிருக்கும்
சிறுவர்களுக்கும் கேட்கலையாம்
வானம் அதனை பார்த்தாயா?
சாதியின்றி இனமின்றி - அஞ்
ஞானம் மதமும் இன்றி
ஏழை செல்வர் பிரிவின்றி
எல்லோருக்கும் குடைபோலிருக்கும்
வானபகவான் அவனைப்போல
கல்லாமை இருளை அகற்றும்
கல்விகானம் இசைத்திடு தாயே.
இல்லை இனிமேல் பழையவானம்.
இசைத்திடுவோமா புதிய கானம்
எல்லோருக்கும் கல்வியென்றால்
அதுதான் சமூக விஞ்ஞானம்.
வீற்று இருக்கும் கலைமகளே
கொள்ளை போகுது உன் செல்வம்
கூறுகட்டித் தெருவெங்கும்.
கல்விகூடமா கடைத்தெருவா?
கல்வியென்ன கடைசரக்கா
எல்லோருக்கும் கல்வியெனும்
திட்டம் எரிந்து போனதுவா?
கலைமகள் நீ விலைமகளாய்
கடையில் ஏனோ சரக்கானாய்?
விலைக்குதான் நீயென்ற
நிலைக்கு ஏனோ உருவானாய்?
வாடிப்போயே பிறந்தாயோ?
வற்றியகுளத்தில் மலர்ந்தாயோ?
தேடிய செல்வம் யாவையுமே
தெருவில் போட்டு உடைத்தாயோ?
இல்லாத ஏழை உன் வீட்டுக்கு
வருவதைகூட தடுக்கின்றாய்.
எல்லாம் உள்ள செல்வந்தனிடமோ
படுக்கையில் கூடப்படுக்கின்றாய்.
சமுதாய வீனையினை
குழந்தையைபோல கையிலேந்தி
அமுதாயும் அழகாயும்
கல்வியென்ற இசை இசைத்தாய்.
இசைத்து நீ பாடுகையில்
பலருக்கு காதில் கேட்கலையாம்
அசைந்து ஆடும் அனைவருமே
செல்வ செழிப்பில் உள்ளவராம்.
வீசும் காற்றில் கலந்திருக்கும்
கல்வியென்கிற கானத்தை
காசும் பணமும் இருந்தால்தான்
காதுகளாலே கேட்கனுமாம்.
கம்பள ஆடை நெய்கின்ற
மீர்ஜாபூர் பதோலியிலே
சம்பளமைந்தே பெறுகின்ற
சிறுவர்களுக்கு கேட்கலையாம்.
சிறுசிறு தொழிலும் கைத்தொழிலும்
செய்துவாழ்க்கை நடத்துகிற
சிறுவர்களுக்கும் மாதர்களுக்கும்
உனது கீதம் கேட்கலையாம்.
உணவு விடுதியில் உணவாகும்
உதிரிக்குழந்தைகள் அவர்களுக்கும்
கனவு நிலையிலும் உனது கீதம்
காதுகளில் போய் விழவில்லையாம்.
குட்டி ஜப்பான் என்று அழைபடும்
சிவகாசி மாநகரினிலே - தீப்
பெட்டி பட்டாசு சிறையிலிருக்கும்
சிறுவர்களுக்கும் கேட்கலையாம்
வானம் அதனை பார்த்தாயா?
சாதியின்றி இனமின்றி - அஞ்
ஞானம் மதமும் இன்றி
ஏழை செல்வர் பிரிவின்றி
எல்லோருக்கும் குடைபோலிருக்கும்
வானபகவான் அவனைப்போல
கல்லாமை இருளை அகற்றும்
கல்விகானம் இசைத்திடு தாயே.
இல்லை இனிமேல் பழையவானம்.
இசைத்திடுவோமா புதிய கானம்
எல்லோருக்கும் கல்வியென்றால்
அதுதான் சமூக விஞ்ஞானம்.
Last edited by சுந்தரபாண்டி on Sat Jan 28, 2012 12:08 am; edited 1 time in total
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: கலைமகள்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: கலைமகள்
எல்லோருக்கும் அடிப்படைக் கல்வி என்பது இப்போதும் நடைமுறையில் உள்ளது..
-
இலவசமாகவும் வழங்கப்படுகிறது...!
-
-
இலவசமாகவும் வழங்கப்படுகிறது...!
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: கலைமகள்
தமிழ் தோட்டம் யூஜின்,பகீ, ஹிஷாலி ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: கலைமகள்
அ.இராமநாதன் wrote:எல்லோருக்கும் அடிப்படைக் கல்வி என்பது இப்போதும் நடைமுறையில் உள்ளது..
-
இலவசமாகவும் வழங்கப்படுகிறது...!
-
ஒவ்வொரு அரசும் தன் ஆட்சியின் சிறப்பை பிதற்றிக் கொண்டு திரிவதற்காக இப்படி ஆயிரத்தெட்டு திட்டங்களை தீட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதையேதான் நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள்.
ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு விஞ்ஞானப் பூர்வமான கல்வி அனைவரையும் சமமாக மதித்து வழங்கப் படவில்லை என்பதுதானே நிதர்சனமான உண்மை.
நன்றி அய்யா.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: கலைமகள்
சில வார்த்தைகளைக் கவனமாகப் போடவேண்டிய அடிப்படையை அறிந்துகொள்ளுதல் நலம்.
உங்களின் மிக நல்ல கவிதைகளை வாசித்து வந்த எனக்கு அதிர்ச்சி..
வருந்துகிறேன்..
உங்களின் மிக நல்ல கவிதைகளை வாசித்து வந்த எனக்கு அதிர்ச்சி..
வருந்துகிறேன்..
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: கலைமகள்
கலைவேந்தன் wrote:சில வார்த்தைகளைக் கவனமாகப் போடவேண்டிய அடிப்படையை அறிந்துகொள்ளுதல் நலம்.
உங்களின் மிக நல்ல கவிதைகளை வாசித்து வந்த எனக்கு அதிர்ச்சி..
வருந்துகிறேன் ..
எனக்கும் தான் அண்ணா கொஞ்சம் அதிர்ச்சி ...
கவிதை அருமை ...ஆனால் ஸ்டார்ட்டிங் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஒர்டினரியா கலைமகளை திட்டுற மாறி இருக்கு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கலைமகள்
அன்பின் தோழருக்கு வணக்கம் ,...
உங்களின் கவிதையின் நோக்கம் புரிகின்றது ..
இருப்பினும் கலைமகளை சாடிய விதம் எனக்கு நியாயமாக புலப்படவில்லை ..
கலைமகளின் பெயரை கொண்டு குறுக்கு வழியில் சுரண்டும் மனித மிருங்கங்களை , அரசியல் அயோக்கியர்களை சாடீருந்தால் நான் மகிழ்வை அடைந்திருப்பேன்...
நன்றி
உங்களின் கவிதையின் நோக்கம் புரிகின்றது ..
இருப்பினும் கலைமகளை சாடிய விதம் எனக்கு நியாயமாக புலப்படவில்லை ..
கலைமகளின் பெயரை கொண்டு குறுக்கு வழியில் சுரண்டும் மனித மிருங்கங்களை , அரசியல் அயோக்கியர்களை சாடீருந்தால் நான் மகிழ்வை அடைந்திருப்பேன்...
நன்றி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கலைமகள்
கலைவேந்தன் wrote:சில வார்த்தைகளைக் கவனமாகப் போடவேண்டிய அடிப்படையை அறிந்துகொள்ளுதல் நலம்.
உங்களின் மிக நல்ல கவிதைகளை வாசித்து வந்த எனக்கு அதிர்ச்சி..
வருந்துகிறேன்..
உங்களை வருந்த வைத்ததற்காக நானும் வருந்துகிறேன் தோழரே.
கல்வி வியாபாரமாகிவிட்டதில் ஏற்பட்ட கோபத்தால் கொப்புளித்த கவிதைதான் இது.
நூலேந்தும் வயதில் நூல் நூற்றுக் கொண்டிருக்கும் சிறுவர்களைப் பார்க்கிற போது மனசாட்சி உள்ள எந்த கவிஞன்தான் பொறுத்துக் கொண்டிருப்பான்?
மேலே உள்ள கவிதை என் பதினான்காவது வயதில் எழுதப்பட்டக் கவிதை.
இன்று இன்னும் கொஞ்சம் பக்குவம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
இப்போது உள்ள பக்குவத்தில் அதை எழுதி இருந்தால் மேலே உள்ள உங்கள் விமர்சனத்தை நான் தவிர்த்திருக்க இயலும்.
ஆனால் இப்போது உள்ள என் திறனைப் பயன் படுத்தி அதை அறுவை சிகிச்சை செய்ய நான் விரும்பவில்லை.
என்ன எழுதப் பட்டதோ அதை அப்படியே வெளியிடவே நான் விரும்பினேன்.
ஆனாலும் எனக்கென்னவோ பக்குவத்தால் எழுதப் படும் கவிதைகளைவிட கோபத்தில் எழுதப் படும் கவிதைகளே சற்று உயிர்ப்பு உள்ளதாக தோன்றுகிறது.
ஏனென்றால் அந்த கோபம் உங்களுக்குப் பிடித்த அதே பாரதியிடமிருந்துதான் கடன் வாங்கப் பட்டது.
அன்பு நண்பரின் கருத்துக்கு நன்றி.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: கலைமகள்
தங்கை கலை wrote:[You must be registered and logged in to see this image.]கலைவேந்தன் wrote:சில வார்த்தைகளைக் கவனமாகப் போடவேண்டிய அடிப்படையை அறிந்துகொள்ளுதல் நலம்.
உங்களின் மிக நல்ல கவிதைகளை வாசித்து வந்த எனக்கு அதிர்ச்சி..
வருந்துகிறேன் ..
எனக்கும் தான் அண்ணா கொஞ்சம் அதிர்ச்சி ...
கவிதை அருமை ...ஆனால் ஸ்டார்ட்டிங் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஒர்டினரியா கலைமகளை திட்டுற மாறி இருக்கு
அன்புத் தங்கை கலை அதிர்ந்துபோனதில் நானும் சற்று அதிர்ந்து போனேன்.
கலைமகள் என்பது கலைமகளை குறிக்காமல் கல்வித்துறையைத் தான் குறிக்கும் தங்கையே.
பல முன்னணி கவிஞர்களே கூட பாரதமாதாவை குறை சொல்லி எழுதியுள்ளதால் அவர்கள் தேசப் பற்று இல்லாதவர்கள் என்று பொருளில்லை.மாறாக வேறு யாரையும் விட அவர்களே அதிகம் தேசப் பற்றுள்ளவர்கள்.ஏனென்றால் உண்மையில் அவர்கள் எதிப்பது பாரதமாதாவை அல்ல; ஆட்சியாளர்களை.
அதேப் போல்தான் கலைமகளை நான் பெரிதும் போற்றுகிறேன்.சொல்லப் போனால் மேலே உள்ள கவிதையை எழுத வைத்தவளே அவள்தான்.
நன்றி கலை
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: கலைமகள்
அரசன் wrote:அன்பின் தோழருக்கு வணக்கம் ,...
உங்களின் கவிதையின் நோக்கம் புரிகின்றது ..
இருப்பினும் கலைமகளை சாடிய விதம் எனக்கு நியாயமாக புலப்படவில்லை ..
கலைமகளின் பெயரை கொண்டு குறுக்கு வழியில் சுரண்டும் மனித மிருங்கங்களை , அரசியல் அயோக்கியர்களை சாடீருந்தால் நான் மகிழ்வை அடைந்திருப்பேன்...
நன்றி
கவிதையின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட தோழருக்கு நன்றி.
கலைமகள் என்னும் கற்பனை தெய்வத்தின் மீது எனக்கும் அளவு கடந்த பக்திதான் நண்பரே.நீங்கள் சொல்லும் அயோக்கியத் தனத்தை தான் நானும் சாடியிருக்கிறேன் தோழா. அது ஒருவகையான உருவகம்; அவ்வளவுதான்.
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: கலைமகள்
ஆரோக்கியமான விவாதங்கள் தோட்டத்தின் வளர்ச்சிக்கு வித்திடுகிறது... நாம் வளரவும் படைப்பாளர்கள் வாசகர்கள் கூர்மையடையவும் தோட்டம் சிறந்த களமாக இருக்கிறது
மகிழ்ச்சியே...
கலைமகளின் கையில்
தங்க வீணை
பெற்றோர்களின் வியர்வை
இது என் கல்விப் பற்றிய ஒரு சென்ரியு
மகிழ்ச்சியே...
கலைமகளின் கையில்
தங்க வீணை
பெற்றோர்களின் வியர்வை
இது என் கல்விப் பற்றிய ஒரு சென்ரியு
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கலைமகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:ஆரோக்கியமான விவாதங்கள் தோட்டத்தின் வளர்ச்சிக்கு வித்திடுகிறது... நாம் வளரவும் படைப்பாளர்கள் வாசகர்கள் கூர்மையடையவும் தோட்டம் சிறந்த களமாக இருக்கிறது
மகிழ்ச்சியே...
கலைமகளின் கையில்
தங்க வீணை
பெற்றோர்களின் வியர்வை
இது என் கல்விப் பற்றிய ஒரு சென்ரியு
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Similar topics
» கலைமகள் காளியாகிறாள்!
» dasson32 (31), கலைமகள் ஹிதாய ரிஸ்வி (48) தோட்டம் சார்பாக மூவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்
» dasson32 (31), கலைமகள் ஹிதாய ரிஸ்வி (48) தோட்டம் சார்பாக மூவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|