தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



திருக்குறளும் விளக்க உரையும்.....

3 posters

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Wed Feb 22, 2012 5:39 pm

First topic message reminder :

திருக்குறள் - ஒரு அறிமுகம்
A Short Introduction to Thirukural: திருக்குறள் - ஒரு அறிமுகம்,
Written by Dr.S.Jayabarathi for Project Madurai

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.

இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.

இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் அச்செய்திகள் வாயிலாக அறிகிறோம்.

திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.

பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.

திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கிருஸ்துவ சகாப்தத்தின் முன் பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர்.
பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.

1.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு
2.பதினென்கீழ்க்கணக்கு
3.ஐம்பெருங்காப்பியங்கள்
4.ஐஞ்சிறு காப்பியங்கள்
ஆகியவை அவை.

அவற்றில் பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது.

"அறம், பொருள், இன்பம்", ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய ஆகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது.

இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.

குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.

"பாயிரம்" என்னும் பகுதியுடன் முதலில் "அறத்துப்பால்" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்", ஆகிய அதிகாரங்கள்.

அடுத்துவரும் "இல்லறவியல்" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.

அடுத்து வரும் "பொருட்பாலி"ல் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.

கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள்.

திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.

"அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு...."

என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,

"ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்"

என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார்.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.

பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப் படுவது திருக்குறள் முனுசாமியின் உரை.

தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு.

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"




குறள் 1:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

கலைஞர் உரை:

அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு முதன்மை.

மு.வ உரை:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

பரிமேலழகர் உரை:

அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக; என்னை? சத்துவம் முதலிய குணங்களான் மூன்று ஆகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற் கடவுளோடு இயைபு உண்டு ஆகலான். அம்மூன்று பொருளையும் கூறுதலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமை ஆகலின் , இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க.

Translation:

A, as its first of letters, every speech maintains; The "Primal Deity" is first through all the world's domains.

Explanation:

As all letters have the letter A for their first, so the world has the eternal
God for its first.

குறிப்பு;இவை அனைத்தும் திருக்குறள்.கொம் இல் இருந்து எடுக்கப்பட்டது :face:
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down


திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Feb 25, 2012 5:54 pm

குறள் 122:

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

கலைஞர் உரை:

மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும். அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை.

மு.வ உரை:

அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.

Translation:

Guard thou as wealth the power of self-control;
Than this no greater gain to living soul!.

Explanation:

Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that.
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Feb 25, 2012 5:55 pm

குறள் மகிழ்ச்சி:

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

கலைஞர் உரை:

அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.

மு.வ உரை:

அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.

சாலமன் பாப்பையா உரை:

அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.

Translation:

If versed in wisdom's lore by virtue's law you self restrain.
Your self-repression known will yield you glory's gain.

Explanation:

Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise.
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Feb 25, 2012 5:56 pm

குறள் 124:

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

கலைஞர் உரை:

உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.

மு.வ உரை:

தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.

Translation:

In his station, all unswerving, if man self subdue,
Greater he than mountain proudly rising to the view.

Explanation:

More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself.
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Feb 25, 2012 5:57 pm

குறள் 125:

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

கலைஞர் உரை:

பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.

மு.வ உரை:

பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.

Translation:

To all humility is goodly grace; but chief to them
With fortune blessed, -'tis fortune's diadem.

Explanation:

Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches.
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Feb 25, 2012 5:57 pm

குறள் 126:

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுநம்யும் ஏமாப் புடைத்து.

கலைஞர் உரை:

உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்.

மு.வ உரை:

ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.

சாலமன் பாப்பையா உரை:

ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் - அரணாக இருந்து உதவும்.

Translation:

Like tortoise, who the five restrains
In one, through seven world bliss obtains.

Explanation:

Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a safe-guard to him throughout the seven-fold births
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Feb 25, 2012 5:58 pm

குறள் 127:

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

கலைஞர் உரை:

ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.

மு.வ உரை:

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

சாலமன் பாப்பையா உரை:

எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.

Translation:

Whate'er they fail to guard, o'er lips men guard should keep;
If not, through fault of tongue, they bitter tears shall weep.

Explanation:

Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue.
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Feb 25, 2012 5:59 pm

குறள் 128:

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

கலைஞர் உரை:

ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.

மு.வ உரை:

தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.

சாலமன் பாப்பையா உரை:

தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.

Translation:

Though some small gain of good it seem to bring,
The evil word is parent still of evil thing.

Explanation:

If a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evil.
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Feb 25, 2012 6:00 pm

குறள் 129:

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

கலைஞர் உரை:

நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.

மு.வ உரை:

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.

Translation:

In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore;
In soul by tongue inflamed, the ulcer healeth never more.

Explanation:

The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal.
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Feb 25, 2012 6:01 pm

குறள் 130:

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

கலைஞர் உரை:

கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.

மு.வ உரை:

சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.

சாலமன் பாப்பையா உரை:

கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.

Translation:

Who learns restraint, and guards his soul from wrath,
Virtue, a timely aid, attends his path.

Explanation:

Virtue, seeking for an opportunity, will come into the path of that man who, possessed of learning and self-control, guards himself against anger.
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Feb 25, 2012 6:02 pm

குறள் 131:

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

கலைஞர் உரை:

ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.

மு.வ உரை:

ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.

Translation:

'Decorum' gives especial excellence; with greater care
'Decorum' should men guard than life, which all men share.

Explanation:

Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life.
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Feb 25, 2012 6:03 pm

குறள் 131:

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

கலைஞர் உரை:

ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.

மு.வ உரை:

ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.

Translation:

'Decorum' gives especial excellence; with greater care
'Decorum' should men guard than life, which all men share.

Explanation:

Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life.
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Feb 25, 2012 6:03 pm

குறள் 132:

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

கலைஞர் உரை:

எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்.

மு.வ உரை:

ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

சாலமன் பாப்பையா உரை:

எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.

Translation:

Searching, duly watching, learning, 'decorum' still we find;
Man's only aid; toiling, guard thou this with watchful mind.

Explanation:

Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid.
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Feb 25, 2012 6:05 pm

குறள் 133:

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

கலைஞர் உரை:

ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.

மு.வ உரை:

ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

சாலமன் பாப்பையா உரை:

தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.

Translation:

'Decorum's' true nobility on earth;
'Indecorum's' issue is ignoble birth.

Explanation:

Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Feb 25, 2012 6:05 pm

குறள் 134:

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

கலைஞர் உரை:

பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.

மு.வ உரை:

கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.

சாலமன் பாப்பையா உரை:

பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

Translation:

Though he forget, the Brahman may regain his Vedic lore;
Failing in 'decorum due,' birthright's gone for evermore.

Explanation:

A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed.
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Feb 25, 2012 6:06 pm

குறள் 135:

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

கலைஞர் உரை:

பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.

மு.வ உரை:

பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை:

பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.

Translation:

The envious soul in life no rich increase of blessing gains,
So man of 'due decorum' void no dignity obtains.

Explanation:

Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness.
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Feb 25, 2012 6:07 pm

குறள் 136:

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.

கலைஞர் உரை:

மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.

மு.வ உரை:

ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை:

ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.

Translation:

The strong of soul no jot abate of 'strict decorum's' laws,
Knowing that 'due decorum's' breach foulest disgrace will cause.

Explanation:

Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them.
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Feb 25, 2012 6:09 pm

குறள் 137:

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

கலைஞர் உரை:

நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.

மு.வ உரை:

ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

சாலமன் பாப்பையா உரை:

ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.

Translation:

'Tis source of dignity when 'true decorum' is preserved;
Who break 'decorum's' rules endure e'en censures undeserved.

Explanation:

From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Feb 25, 2012 6:10 pm

குறள் 138:

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

கலைஞர் உரை:

நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும். தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.

மு.வ உரை:

நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:

நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.

Translation:

'Decorum true' observed a seed of good will be;
'Decorum's breach' will sorrow yield eternally.

Explanation:

Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow.
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Feb 25, 2012 6:11 pm

குறள் 139:

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

கலைஞர் உரை:

தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.

மு.வ உரை:

தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.

சாலமன் பாப்பையா உரை:

மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.

Translation:

It cannot be that they who 'strict decorum's' law fulfil,
E'en in forgetful mood, should utter words of ill.

Explanation:

Those who study propriety of conduct will not speak evil, even forgetfully
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Feb 25, 2012 6:11 pm

குறள் 140:

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

கலைஞர் உரை:

உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.

மு.வ உரை:

உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

சாலமன் பாப்பையா உரை:

முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.

Translation:

Who know not with the world in harmony to dwell,
May many things have learned, but nothing well.

Explanation:

Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant.
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Feb 25, 2012 6:12 pm

குறள் 141:

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.

கலைஞர் உரை:

பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.

மு.வ உரை:

பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.

Translation:

Who laws of virtue and possession's rights have known,
Indulge no foolish love of her by right another's own.

Explanation:

The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Feb 25, 2012 6:12 pm

குறள் 142:

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.

கலைஞர் உரை:

பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்.

மு.வ உரை:

அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை.

Translation:

No fools, of all that stand from virtue's pale shut out,
Like those who longing lurk their neighbour's gate without.

Explanation:

Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour's door.
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Feb 25, 2012 6:13 pm

குறள் 143:

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்.

கலைஞர் உரை:

நம்பி பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈ.டுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.

மு.வ உரை:

ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.

சாலமன் பாப்பையா உரை:

தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்.

Translation:

They're numbered with the dead, e'en while they live, -how otherwise?
With wife of sure confiding friend who evil things devise.

Explanation:

Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who undoubtingly confide in them.
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Feb 25, 2012 6:14 pm

குறள் 144:

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.

கலைஞர் உரை:

பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.

மு.வ உரை:

தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?.

சாலமன் பாப்பையா உரை:

அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?.

Translation:

How great soe'er they be, what gain have they of life,
Who, not a whit reflecting, seek a neighbour's wife.

Explanation:

However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another ?.
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Feb 25, 2012 6:15 pm

குறள் 145:

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

கலைஞர் உரை:

எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.

மு.வ உரை:

இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.

சாலமன் பாப்பையா உரை:

அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.

Translation:

'Mere triflel' saying thus, invades the home, so he ensures.
A gain of guilt that deathless aye endures.

Explanation:

He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever.
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

திருக்குறளும் விளக்க உரையும்..... - Page 6 Empty Re: திருக்குறளும் விளக்க உரையும்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum