தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
கண்ணதாசன் எழுதிய ஸ்ரீ கிருஷ்ணா கவசம்
3 posters
Page 1 of 1
கண்ணதாசன் எழுதிய ஸ்ரீ கிருஷ்ணா கவசம்
அகரம் முதலே அழியாப் பொருளேஆயர் குலமே நேயர் கரமே
இகமும் பரமும் இணையும் இடமேஈதல் மரபாம் இதயத் தவமே
உலகக் குடையே உயிரின் கலையேஊதும் குழலுள் வேதப் பொருளே
எரியும் கனலில் தெரியும் புனலேஏழை மனதில் வாழும் அருளே
ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரேஐவர் துணையே அன்புச் சிலையே
ஒளியே விழியே உயிரே வழியேஓடும் நதியில் பாடும் அலையே
அவவ் வுலகை ஆக்கும் நிலையேஅடியேம் சரணம் சரணம் சரணம்!
அறமே அறமே அறமே அறமேதிறமே திறமே திறமே திறமே
தவமே தவமே தவமே தவமேவரமே வரமே வரமே வரமே
வேதம் விளையும் வித்தே விளைவேநாதம் பொழியும் நலமே நிலமே
ஓதும் பொழுதே உடனே வருவாய்உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய்
அறியாக் கவலை அதிகம் அதிகம்அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம்!
பொய்யா மொழியே பொங்கும் நிலவேபூமிக் குடையின் காவற் பொருளே
பார்த்தன் பணியும் பாதம் காக்கபாஞ்ச் சன்னியம் பக்தனைக் காக்க
மூடர்கள் தமையும் மோகனன் காக்கமுள்ளில் மலராய் முளைத்தோன் காக்க
வாடும் உயிரை மன்னவன் காக்கதேடும் விழியைத் திருமால் காக்க
கேலிப் பொருளைக் கிருஷ்ணன் காக்ககண்ணீர் நதியைக் கண்ணன் காக்க
துண்பம் என்றொரு சுமையைத் தீர்க்கதூயோன் வருக! துணையே தருக!
மாதர் கற்பும் மடவார் நோன்பும்மாயோன் காக்க மலைபோல் வருக!
தகிடக் தகிடக் தகிடக் தகவெனதறிபடு துன்பம் தறிகெட ஒட
திகிடத் திகிடத் திகிடத் திகிடத்திசைவரு கவலை பசைஇல் தாக!
துருவத் துருவத் துருவத் துருவிடத்தொலையாப் பொருளே அலையாய் வருக!
நிஷ்கா மத்தில் நிறைவோன் வருககர்மசந் யாசக் களமே வருக
ஞானம் யோகம் நல்குவன் வருகநல்லோர் வாழ்வில் நலமே நிறைக!
அடியேன் துயரம் அதிகம் அதிகம்அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம்
பொங்கும் வேலும் புண்ணாக் காதுபொருந்தும் துயரம் பொடிபடு மாறு
தாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன்தாளில் விழுந்தேன் சரணம் சரணம்
மதுசூ தனனே மனிதன் சரணம்இருடீ கேசா இயலான் சரணம்
கீதா சாரிய கிருஷ்ணா சரணம்வேதா சாரிய வேந்தே சரணம்
தேவகி மைந்தா சிறியேன் சரணம்யசோத குமரா அடியேன் சரணம்
உன்னை விட்டொரு உறவுக ளில்லைஎன்னை விட்டொரு இனியவ னில்லை
நம்மை விட்டொரு நண்பர்க ளில்லைநன்மையில் உன்போல் நாயக னில்லை!
எங்கெங் கேநான் இருந்திடும் போதும்அங்கங் கேநீ அருள்செய வருக
கோசலை ஈன்ற குமரா வருககோதையின் மாலை கொண்டவன் வருக
ரகுவம் சத்தின் நாயகன் வருகயதுவம் சத்தின் யாதவன் வருக
மதுவை வென்ற மாதவன் வருகமலைக்குடி கொண்ட மாலவன் வருக!
திருப்பதி யாளும் திருமால் வருகதிருவரங் கத்துப் பெருமாள் வருக
இராவணன் கொடுமை தீர்த்தாய்; துன்பம்'இரா'வணம் எமக்கும் இன்னருள் புரிக
கம்சன் கொடுமை களைந்தோய் வருககாலனை வெல்லக் கைவலி தருக
நெற்றியில் திருமண் நெஞ்சில் வைரம்காதில் குண்டலம் கையில் வில்லொடு
தண்டைக் காலில் சலங்கை குலுங்கஅண்டையில் வந்து அருளே புரிக
கெளரவர் காக்கக் கண்ணா வருகபார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய்
படித்தவம் ம்கிழப் பரமே வருகமூன்று குணங்கள் முறையாய்க் கூறிய
சான்றோன் பாதம் தாவி அணைத்தேன்சிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன்
பக்கென உந்தன் பாதம் பற்றினேன்கோக்கென நின்று குறிவைத் திருந்தேன்
அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன்இக்கணம் என்னை ஏங்க விடாமல்
தக்கவ னேநீ தயவுடன் அருள்க!கல்லாய்ப் போனவள் காலடி பட்டு
பெண்ணாய் ஆனது பிழையே அன்று!உன்னால் தானே உலக இயக்கம்
கண்ணனி லாமல் கடல்வான் ஏது?கண்ணனி லாமல் கடவுளு மில்லை
கண்ணனி லாமல் கவிதையு மில்லைகண்ணனி லாமல் காலமு மில்லை
கண்ணனி லாவிடில் காற்றே இல்லைஎத்தனை பிறவி எத்தனை பிறவி
அத்தனை பிறவியும் அடியேன் கொண்டால்!சத்திய நாதன் தாள்களை மறவேன்
தத்துவக் கண்ணன் தனிமுகம் மறவேன்உன்னை நம்பி உனையே சேர்ந்தால்
பிறவிக ளிலை நீபேசிய பேச்சுஉலகில் போதும் ஒருமுறை மூச்சு
உன்னிடம் சேர்த்து உன்வடி வாக்குஇங்கே நாங்கள் இருக்கும் வரையில்
சங்கு முழங்கு தர்மம் நிலைக்க!
பிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல்
மனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல்இல்லை என்றொரு நாளில் லாமல்
இன்னும் என்னும் ஆசை வராமல்தொல்லை என்பது துளியு மிலாமல்
தொற்றும் நோய்கள் பற்றி விடாமல்முதுமை துயரம் மூண்டு விடாமல்
படுக்கையில் விழுந்து பரிதவிக் காமல்சிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு
நிந்தனை பெற்று நீங்கி விடாமல்எந்றும் பதினா றிளமை வழங்கு
இப்பணி தொடர அற்புதம் காட்டுதளரா மேனியில் சக்தியைக் கூட்டு
தாய்போ லிருந்து சாதம் ஊட்டுவாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென
ஊரார்க் கென்னை உதாரணம் காட்டு!உலகில் ஒருவன் உத்தமன் இவனென
உயிர்கள் பேசிடும் ஒருநிலை கூட்டுசிறியவர் பெரியவர் வறியவர் செல்வர்
சரிசரி சரியெனத் தலையை அசைக்கபொலிபொலி பொலியெனப் புகழும்விளங்க
மளமள மளவென மனையிருள் நீங்ககலகல கலவெனக் காசுகள் சேர
தளதள தளவெனத் தர்மம் தழைக்கவரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க
ரகுபதி பசுபதி நன்மைகள் அருள்கஐயா சரணம் சரணம் சரணம்
அடியவன் வாழ்வில் நீயே கவசம்கவசம் கவசம் கவசம் கவசம்
வந்தது வாழ்வில் மன்னவன் கவசம்கவசம் கவசம் கவசம் கவசம்
வாழ்க்கை என்றும் கோபுரக் கலசம்!
அரிஒம் அரிஒம் அரிஒம் அரிஒம்
அவனே துணையென அறிவோம் அறிவோம்அரிஒம் அரிஒம் அரிஒம் அரிஒம்
அவனிடம் எதையும் தருவோம் தருவோம்ஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா
ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெயஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய!
- கண்ணதாசன்
இகமும் பரமும் இணையும் இடமேஈதல் மரபாம் இதயத் தவமே
உலகக் குடையே உயிரின் கலையேஊதும் குழலுள் வேதப் பொருளே
எரியும் கனலில் தெரியும் புனலேஏழை மனதில் வாழும் அருளே
ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரேஐவர் துணையே அன்புச் சிலையே
ஒளியே விழியே உயிரே வழியேஓடும் நதியில் பாடும் அலையே
அவவ் வுலகை ஆக்கும் நிலையேஅடியேம் சரணம் சரணம் சரணம்!
அறமே அறமே அறமே அறமேதிறமே திறமே திறமே திறமே
தவமே தவமே தவமே தவமேவரமே வரமே வரமே வரமே
வேதம் விளையும் வித்தே விளைவேநாதம் பொழியும் நலமே நிலமே
ஓதும் பொழுதே உடனே வருவாய்உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய்
அறியாக் கவலை அதிகம் அதிகம்அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம்!
பொய்யா மொழியே பொங்கும் நிலவேபூமிக் குடையின் காவற் பொருளே
பார்த்தன் பணியும் பாதம் காக்கபாஞ்ச் சன்னியம் பக்தனைக் காக்க
மூடர்கள் தமையும் மோகனன் காக்கமுள்ளில் மலராய் முளைத்தோன் காக்க
வாடும் உயிரை மன்னவன் காக்கதேடும் விழியைத் திருமால் காக்க
கேலிப் பொருளைக் கிருஷ்ணன் காக்ககண்ணீர் நதியைக் கண்ணன் காக்க
துண்பம் என்றொரு சுமையைத் தீர்க்கதூயோன் வருக! துணையே தருக!
மாதர் கற்பும் மடவார் நோன்பும்மாயோன் காக்க மலைபோல் வருக!
தகிடக் தகிடக் தகிடக் தகவெனதறிபடு துன்பம் தறிகெட ஒட
திகிடத் திகிடத் திகிடத் திகிடத்திசைவரு கவலை பசைஇல் தாக!
துருவத் துருவத் துருவத் துருவிடத்தொலையாப் பொருளே அலையாய் வருக!
நிஷ்கா மத்தில் நிறைவோன் வருககர்மசந் யாசக் களமே வருக
ஞானம் யோகம் நல்குவன் வருகநல்லோர் வாழ்வில் நலமே நிறைக!
அடியேன் துயரம் அதிகம் அதிகம்அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம்
பொங்கும் வேலும் புண்ணாக் காதுபொருந்தும் துயரம் பொடிபடு மாறு
தாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன்தாளில் விழுந்தேன் சரணம் சரணம்
மதுசூ தனனே மனிதன் சரணம்இருடீ கேசா இயலான் சரணம்
கீதா சாரிய கிருஷ்ணா சரணம்வேதா சாரிய வேந்தே சரணம்
தேவகி மைந்தா சிறியேன் சரணம்யசோத குமரா அடியேன் சரணம்
உன்னை விட்டொரு உறவுக ளில்லைஎன்னை விட்டொரு இனியவ னில்லை
நம்மை விட்டொரு நண்பர்க ளில்லைநன்மையில் உன்போல் நாயக னில்லை!
எங்கெங் கேநான் இருந்திடும் போதும்அங்கங் கேநீ அருள்செய வருக
கோசலை ஈன்ற குமரா வருககோதையின் மாலை கொண்டவன் வருக
ரகுவம் சத்தின் நாயகன் வருகயதுவம் சத்தின் யாதவன் வருக
மதுவை வென்ற மாதவன் வருகமலைக்குடி கொண்ட மாலவன் வருக!
திருப்பதி யாளும் திருமால் வருகதிருவரங் கத்துப் பெருமாள் வருக
இராவணன் கொடுமை தீர்த்தாய்; துன்பம்'இரா'வணம் எமக்கும் இன்னருள் புரிக
கம்சன் கொடுமை களைந்தோய் வருககாலனை வெல்லக் கைவலி தருக
நெற்றியில் திருமண் நெஞ்சில் வைரம்காதில் குண்டலம் கையில் வில்லொடு
தண்டைக் காலில் சலங்கை குலுங்கஅண்டையில் வந்து அருளே புரிக
கெளரவர் காக்கக் கண்ணா வருகபார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய்
படித்தவம் ம்கிழப் பரமே வருகமூன்று குணங்கள் முறையாய்க் கூறிய
சான்றோன் பாதம் தாவி அணைத்தேன்சிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன்
பக்கென உந்தன் பாதம் பற்றினேன்கோக்கென நின்று குறிவைத் திருந்தேன்
அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன்இக்கணம் என்னை ஏங்க விடாமல்
தக்கவ னேநீ தயவுடன் அருள்க!கல்லாய்ப் போனவள் காலடி பட்டு
பெண்ணாய் ஆனது பிழையே அன்று!உன்னால் தானே உலக இயக்கம்
கண்ணனி லாமல் கடல்வான் ஏது?கண்ணனி லாமல் கடவுளு மில்லை
கண்ணனி லாமல் கவிதையு மில்லைகண்ணனி லாமல் காலமு மில்லை
கண்ணனி லாவிடில் காற்றே இல்லைஎத்தனை பிறவி எத்தனை பிறவி
அத்தனை பிறவியும் அடியேன் கொண்டால்!சத்திய நாதன் தாள்களை மறவேன்
தத்துவக் கண்ணன் தனிமுகம் மறவேன்உன்னை நம்பி உனையே சேர்ந்தால்
பிறவிக ளிலை நீபேசிய பேச்சுஉலகில் போதும் ஒருமுறை மூச்சு
உன்னிடம் சேர்த்து உன்வடி வாக்குஇங்கே நாங்கள் இருக்கும் வரையில்
சங்கு முழங்கு தர்மம் நிலைக்க!
பிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல்
மனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல்இல்லை என்றொரு நாளில் லாமல்
இன்னும் என்னும் ஆசை வராமல்தொல்லை என்பது துளியு மிலாமல்
தொற்றும் நோய்கள் பற்றி விடாமல்முதுமை துயரம் மூண்டு விடாமல்
படுக்கையில் விழுந்து பரிதவிக் காமல்சிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு
நிந்தனை பெற்று நீங்கி விடாமல்எந்றும் பதினா றிளமை வழங்கு
இப்பணி தொடர அற்புதம் காட்டுதளரா மேனியில் சக்தியைக் கூட்டு
தாய்போ லிருந்து சாதம் ஊட்டுவாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென
ஊரார்க் கென்னை உதாரணம் காட்டு!உலகில் ஒருவன் உத்தமன் இவனென
உயிர்கள் பேசிடும் ஒருநிலை கூட்டுசிறியவர் பெரியவர் வறியவர் செல்வர்
சரிசரி சரியெனத் தலையை அசைக்கபொலிபொலி பொலியெனப் புகழும்விளங்க
மளமள மளவென மனையிருள் நீங்ககலகல கலவெனக் காசுகள் சேர
தளதள தளவெனத் தர்மம் தழைக்கவரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க
ரகுபதி பசுபதி நன்மைகள் அருள்கஐயா சரணம் சரணம் சரணம்
அடியவன் வாழ்வில் நீயே கவசம்கவசம் கவசம் கவசம் கவசம்
வந்தது வாழ்வில் மன்னவன் கவசம்கவசம் கவசம் கவசம் கவசம்
வாழ்க்கை என்றும் கோபுரக் கலசம்!
அரிஒம் அரிஒம் அரிஒம் அரிஒம்
அவனே துணையென அறிவோம் அறிவோம்அரிஒம் அரிஒம் அரிஒம் அரிஒம்
அவனிடம் எதையும் தருவோம் தருவோம்ஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா
ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெயஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய!
- கண்ணதாசன்
Atchaya- ரோஜா
- Posts : 242
Points : 296
Join date : 02/03/2012
Re: கண்ணதாசன் எழுதிய ஸ்ரீ கிருஷ்ணா கவசம்
பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்ணதாசன் எழுதிய ஸ்ரீ கிருஷ்ணா கவசம்
பகிர்வுக்கு நன்றி
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Similar topics
» கந்தர் சஷ்டி கவசம்
» கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை:
» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
» வாடா கண்ணா ஹரி ஹரி கோகுல கிருஷ்ணா
» கந்தசஷ்டி கவசம் உருவான கதை..
» கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை:
» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
» வாடா கண்ணா ஹரி ஹரி கோகுல கிருஷ்ணா
» கந்தசஷ்டி கவசம் உருவான கதை..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|