தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
பெண்கள் சிவப்பான அழகைப் பெற:
2 posters
Page 1 of 1
பெண்கள் சிவப்பான அழகைப் பெற:
பெண்கள் சிவப்பான அழகைப் பெற கிரீம்களை தேட வேண்டியதில்லை.மருத்துவம் குணம் நிறைந்த குங்குமப்பூ இருந்தாலே போதும்.
குங்குமப்பூவை எப்படி பயன்படுத்தலாம்?
1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.
2. குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.
3. இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.
4. இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும். முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.
மேனியை சிவப்பாக எப்படி மாற்றுவது?
எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.
குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும. அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.
பெண்களே! குங்குமப்பூவை பயன்படுத்தி அழகு சிலையாக அசத்த "உங்கள் செந்தில்குமாரின்" வாழ்த்துக்கள்.
பட்டு போன்ற மேனிக்கு இதைப் படியுங்கள்!
தினமும் நமக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் உணவுகள் மூலம் கிடைத்தால்தான் ஆரோக்கியம் சீராக இருக்கும். அதற்கு சரிவிகித உணவு அவசியம்.
அந்தவகையில், என்னென்ன சருமம் கொண்டவர்கள் என்னென்ன உணவு வகைகளை சாப்பிடலாம்? அதனால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன? என்பது பற்றி பார்ப்போம்.
எண்ணெய் பசை சருமம் :
எண்ணெய்ப் பசை சருமம் ஒருவரது அழகையே பாழா க்கிவிடும். எப்போது பார்த்தாலும் முகத்தில் எண்ணெய்ப் பசை வழிந்து கொண்டே இருக்கும். இதை துடைத்து அப்புறப்படுத்துவதற்கு என்றே ஒரு கர்ச்சிப் வைத்திருக்க வேண்டும். இந்த எண்ணெய்ப் பசை சருமத்தால் பொடுகு, பருக்கள் வர அதிக வாய்ப்புகள் உண்டு. அதனால், இந்த சருமம் உள்ளவர்கள் தலையினை சுத்தமாக வைக்க வேண்டும். இவர்கள் வாரம் ஒருமுறை முகத்துக்கு ஆவி பிடிப்பதும் நன்மை தரும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியாகும்.
இவர்கள் உணவில் பச்சைக் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை தவிர, சாலட், பழங்கள் அதிகம் சேர்க்கலாம். கொழுப்பு நீக்கிய பால், தயிர், மோர் ஆகியவையும் நன்மை தரும். உணவில் அடிக்கடி முளைக் கட்டிய பயிறு வகைகளை சேர்த்துக்கொள்வது இன்னும் நன்மையளிக்கும்.
உலர்ந்த சருமம் :
இவர்களின் சருமம் எப்போதும் `டல்' ஆகவே இருக்கும். இவர்களுக்கு சீக்கிரமே முகச்சுருக்கம் வர வாய்ப்புகள் உண்டு. இவர்கள் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளையும், தாது உப்புசத்துகள் நிறைந்த உணவுகளையும் அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவதும் அவசியம்.
சாதாரண சருமம் :
இவர்களுக்கு சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவே. இவர்கள் எந்த வகை உணவையும் எடுத்துக்கொள்ளலாம். இருந்தாலும், அளவுக்கு மிஞ்ச வேண்டாம்.
அதிகமாக மோர், தண்ணீர் குடிப்பதும், எண்ணெய் உணவுகள் மற்றும் அசைவ உணவுகளை குறைந்த அளவில் எடுத்துக்கொள்வதும் இவர்களது சருமத்தை பட்டுப்போன்ற அழகுடன் வைத்திருக்கும்.
மின்னும் அழகை பெற:
""டயட்''
என்கிற பெயரில் உணவைக் குறைத்துக் கொண்டு உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொண்டால் போதுமா? இதனால் சருமத்தில் உள்ள சத்துக்கள் குறைந்து, பொலி விழந்து, சருமம் வறண்டு காணப்பட்டால் வெளிப் புற தேகத்துக்கு என்னதான் ''மேக்அப்'' செய்தா லும் பயனில்லை. இன்றைக்கு சந்தையில் அழகுக்காகப் பொருட்கள் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின் றன. இருக்கும் அரைகுறை அறிவை வைத்துக் கொண்டு அனைத்தையும் வாங்கி, முகத்தில் உடலில் பூசி பின்பு அவதிப்படுபவர்கள்தான் அநேகம் பேர்.
முதலில் நம் சருமம் எந்த வகையைச் சார்ந் தது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வறண்ட சருமமா, எண்ணெய் வழியும் சருமமா என்பதை ஒரு கைதேர்ந்த அழகுக் கலை நிபுணரிடம் கேட்டறிந்து கொண்டு அழகு பராமரிப்பை மேற்கொண்டால், அழகு என்றென்றும் நம் பக்கம்தான். மேலும் நம் உணவில் சமச்சீரான சத்துக்களடங்கிய டயட் இடம் பெறவேண்டும். ஒருசிலர், வாளிப்பான தேகமும், மினுமினுப்பான சருமமும் கொண்டு செழிப்பாகக் காட்சியளிப்பார்கள். இதற்கு மிக முக்கியக் காரணம் சமச்சீரான உணவுப் பழக்கமே. இப்படிப்பட்ட அழகை நிரந்தரமாகத் தக்கவைத்துக்கொள்ள, தொடர்ந்து பராமரிப்பும் தேவை. வாரம் ஒருமுறை சருமத்தில் சேரும் அழுக்கை உடல் முழுவதும் ''ஸ்க்ரப்'' செய்து நீக்கி, முகம், கை, கால்களுக்கு மசாஜ் எடுத்துக் கொண்டால் சருமச் சுருக்கங்களை நீக்கலாம். வறண்ட தேகம் உடையவர்கள், பதினைந்து நாட்களுக்கொருமுறை ஏதாவது ''ப்ரூட் பெக்'' எடுத்துக்கொண்டு
''பேஷியல்'' செய்துகொள்வது அவசி யம். இதனால் சருமத்தில் இழந்த தண்ணீர்ச் சத்துக்கள் மீண்டும் பெறப் படுகின்றன..
தற்பொழுது வேலை பார்ப்பவர் களின் சூழ்நிலையும் 24 மணிநேரமும் குளிரூட்டப் பட்ட அறைகளில்தான் அமைகிறது. இதனால் உடல் மேலும் வறண்டு போய் விடும். இதற்கென்றே ''நேச்சுரல்ஸ் க்ளோ பேஷியல் ஸ்பெஷல் பெக்'' அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வியர்வையே ஏற்படாமல், நீர்ச்சத்து இழந்து காணப் படும் சருமத்துக்குப் புத்துணர்ச் சியும், பொலிவும் உடனடியாகக் கிடைக் கிறது..
கூலிங் ஐ மஸாஜ்: .
இரவு, பகல் பாராமல் கம்பியூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இச்சிகிச்சை ஒரு வரப்பிரசாதம். கண்களுக்கு உண்டாகும் அதிகக் களைப்பு, சூடு இவையெல்லாம் அடியோடு நீங்கிவிடும். இதற்கென்றே உருவாக்கப்பட்ட ''ஜெல் மாஸ்''கை ப்ரீசரில் வைத்து எடுத்து கண்களைச் சுற்றி அணிவித்து சிகிச்சை தரப்படுகிறது..
மைக்ரோ டெர்மா சிகிச்சை:.
இது முக்கியமாக, சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை நீக்கி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் ஆக்க உதவுகிறது. வெயி லில் அதிகம் சுற்றி, வேலை பார்த்து சருமம் கறுத்துக் காணப்படுபவர்கள் குறிப்பாக இளை ஞர்கள்
இச்சிகிச்சையை மேற்கொண்டால் இழந்த அழகை மீண்டும் பெறலாம். ஐ ஸோன் ட்ரீட்மெண்ட்:.
சிலருக்குக் கண்ணுக்கு அடியில் கருவளை யம் தோன்றி, சருமம் பொலி விழந்து மங்க லாகக் காணப்படும். அவர்கள் இத்தகைய ஐஸோன் சிகிச்சையைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ள கரு வளையம், சுருக்கங்கள் நாளடை வில் மறையும்.
''சருமம் மினுமினுப்புடன் அழகாய் மிளிர்வதற்கு உடலில் கொஞ்சம் கொழுப்புச் சத்தும் அவசியம்'' என்கிறார்கள் அழகுக்கலை நிபணர்கள்.
அழகு குறிப்புகள் சில..........
நன்கு பழுத்த பப்பாளி விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் நான்கு ஸ்பூன் தேன், சிறிது கிளிசரின் சேர்த்து கலந்து, கண்ணைச் சுற்றியுள்ள பகுதி தவிர மீதி இடங்களில் பற்றுப்போட்டு, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவிவர முகம் பிரகாசிக்கும்.
பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து, அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறிவிடும்.
ஒரு கப் பப்பாளித் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை சாறு, சிறிது சர்க்கரை (சீனி) கலந்து 30 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தேகம் மினுமினுக்க ஆரம்பித்துவிடும்.
காலில் பித்த வெடிப்பா? கவலையே வேண்டாம்! பப்பாளி காயின் பாலை எடுத்து அதில் தேய்க்கவும். சில நாட்களிலேயே பாதவெடிப்பு காணாமல் போய்விடும்.
மெல்லிடை வேண்டுமா? இதற்கும் பப்பாளி பெஸ்ட் சாய்ஸ்தான்! உடல் எடை குறைய பப்பாளிக்காயினை கூட்டாக செய்து தொடர்ந்து சாப்பிட்டுவர நீங்களும் ஆகலாம் ஸ்லிம்!
* தினமும் குளிக்கும் முன்பு பாலேடை முகம் முழுவதும் தடவி பத்து நிமிடம் வைத்திருந்து கழுவினால் வறண்ட முகம் பொலிவு பெறும்.
* தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளைப் போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
* ஆரஞ்சுப் பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகும், இளமையுடனும் இருக்கும்.
* முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெயைத் தலைக்குத் தடவி ஒரு மணி நேரம் கழித்து அலசி வந்தால் முடி நன்றாக வளரும்.
குங்குமப்பூவை எப்படி பயன்படுத்தலாம்?
1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.
2. குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.
3. இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.
4. இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும். முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.
மேனியை சிவப்பாக எப்படி மாற்றுவது?
எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.
குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும. அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.
பெண்களே! குங்குமப்பூவை பயன்படுத்தி அழகு சிலையாக அசத்த "உங்கள் செந்தில்குமாரின்" வாழ்த்துக்கள்.
பட்டு போன்ற மேனிக்கு இதைப் படியுங்கள்!
தினமும் நமக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் உணவுகள் மூலம் கிடைத்தால்தான் ஆரோக்கியம் சீராக இருக்கும். அதற்கு சரிவிகித உணவு அவசியம்.
அந்தவகையில், என்னென்ன சருமம் கொண்டவர்கள் என்னென்ன உணவு வகைகளை சாப்பிடலாம்? அதனால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன? என்பது பற்றி பார்ப்போம்.
எண்ணெய் பசை சருமம் :
எண்ணெய்ப் பசை சருமம் ஒருவரது அழகையே பாழா க்கிவிடும். எப்போது பார்த்தாலும் முகத்தில் எண்ணெய்ப் பசை வழிந்து கொண்டே இருக்கும். இதை துடைத்து அப்புறப்படுத்துவதற்கு என்றே ஒரு கர்ச்சிப் வைத்திருக்க வேண்டும். இந்த எண்ணெய்ப் பசை சருமத்தால் பொடுகு, பருக்கள் வர அதிக வாய்ப்புகள் உண்டு. அதனால், இந்த சருமம் உள்ளவர்கள் தலையினை சுத்தமாக வைக்க வேண்டும். இவர்கள் வாரம் ஒருமுறை முகத்துக்கு ஆவி பிடிப்பதும் நன்மை தரும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியாகும்.
இவர்கள் உணவில் பச்சைக் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை தவிர, சாலட், பழங்கள் அதிகம் சேர்க்கலாம். கொழுப்பு நீக்கிய பால், தயிர், மோர் ஆகியவையும் நன்மை தரும். உணவில் அடிக்கடி முளைக் கட்டிய பயிறு வகைகளை சேர்த்துக்கொள்வது இன்னும் நன்மையளிக்கும்.
உலர்ந்த சருமம் :
இவர்களின் சருமம் எப்போதும் `டல்' ஆகவே இருக்கும். இவர்களுக்கு சீக்கிரமே முகச்சுருக்கம் வர வாய்ப்புகள் உண்டு. இவர்கள் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளையும், தாது உப்புசத்துகள் நிறைந்த உணவுகளையும் அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவதும் அவசியம்.
சாதாரண சருமம் :
இவர்களுக்கு சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவே. இவர்கள் எந்த வகை உணவையும் எடுத்துக்கொள்ளலாம். இருந்தாலும், அளவுக்கு மிஞ்ச வேண்டாம்.
அதிகமாக மோர், தண்ணீர் குடிப்பதும், எண்ணெய் உணவுகள் மற்றும் அசைவ உணவுகளை குறைந்த அளவில் எடுத்துக்கொள்வதும் இவர்களது சருமத்தை பட்டுப்போன்ற அழகுடன் வைத்திருக்கும்.
மின்னும் அழகை பெற:
""டயட்''
என்கிற பெயரில் உணவைக் குறைத்துக் கொண்டு உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொண்டால் போதுமா? இதனால் சருமத்தில் உள்ள சத்துக்கள் குறைந்து, பொலி விழந்து, சருமம் வறண்டு காணப்பட்டால் வெளிப் புற தேகத்துக்கு என்னதான் ''மேக்அப்'' செய்தா லும் பயனில்லை. இன்றைக்கு சந்தையில் அழகுக்காகப் பொருட்கள் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின் றன. இருக்கும் அரைகுறை அறிவை வைத்துக் கொண்டு அனைத்தையும் வாங்கி, முகத்தில் உடலில் பூசி பின்பு அவதிப்படுபவர்கள்தான் அநேகம் பேர்.
முதலில் நம் சருமம் எந்த வகையைச் சார்ந் தது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வறண்ட சருமமா, எண்ணெய் வழியும் சருமமா என்பதை ஒரு கைதேர்ந்த அழகுக் கலை நிபுணரிடம் கேட்டறிந்து கொண்டு அழகு பராமரிப்பை மேற்கொண்டால், அழகு என்றென்றும் நம் பக்கம்தான். மேலும் நம் உணவில் சமச்சீரான சத்துக்களடங்கிய டயட் இடம் பெறவேண்டும். ஒருசிலர், வாளிப்பான தேகமும், மினுமினுப்பான சருமமும் கொண்டு செழிப்பாகக் காட்சியளிப்பார்கள். இதற்கு மிக முக்கியக் காரணம் சமச்சீரான உணவுப் பழக்கமே. இப்படிப்பட்ட அழகை நிரந்தரமாகத் தக்கவைத்துக்கொள்ள, தொடர்ந்து பராமரிப்பும் தேவை. வாரம் ஒருமுறை சருமத்தில் சேரும் அழுக்கை உடல் முழுவதும் ''ஸ்க்ரப்'' செய்து நீக்கி, முகம், கை, கால்களுக்கு மசாஜ் எடுத்துக் கொண்டால் சருமச் சுருக்கங்களை நீக்கலாம். வறண்ட தேகம் உடையவர்கள், பதினைந்து நாட்களுக்கொருமுறை ஏதாவது ''ப்ரூட் பெக்'' எடுத்துக்கொண்டு
''பேஷியல்'' செய்துகொள்வது அவசி யம். இதனால் சருமத்தில் இழந்த தண்ணீர்ச் சத்துக்கள் மீண்டும் பெறப் படுகின்றன..
தற்பொழுது வேலை பார்ப்பவர் களின் சூழ்நிலையும் 24 மணிநேரமும் குளிரூட்டப் பட்ட அறைகளில்தான் அமைகிறது. இதனால் உடல் மேலும் வறண்டு போய் விடும். இதற்கென்றே ''நேச்சுரல்ஸ் க்ளோ பேஷியல் ஸ்பெஷல் பெக்'' அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வியர்வையே ஏற்படாமல், நீர்ச்சத்து இழந்து காணப் படும் சருமத்துக்குப் புத்துணர்ச் சியும், பொலிவும் உடனடியாகக் கிடைக் கிறது..
கூலிங் ஐ மஸாஜ்: .
இரவு, பகல் பாராமல் கம்பியூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இச்சிகிச்சை ஒரு வரப்பிரசாதம். கண்களுக்கு உண்டாகும் அதிகக் களைப்பு, சூடு இவையெல்லாம் அடியோடு நீங்கிவிடும். இதற்கென்றே உருவாக்கப்பட்ட ''ஜெல் மாஸ்''கை ப்ரீசரில் வைத்து எடுத்து கண்களைச் சுற்றி அணிவித்து சிகிச்சை தரப்படுகிறது..
மைக்ரோ டெர்மா சிகிச்சை:.
இது முக்கியமாக, சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை நீக்கி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் ஆக்க உதவுகிறது. வெயி லில் அதிகம் சுற்றி, வேலை பார்த்து சருமம் கறுத்துக் காணப்படுபவர்கள் குறிப்பாக இளை ஞர்கள்
இச்சிகிச்சையை மேற்கொண்டால் இழந்த அழகை மீண்டும் பெறலாம். ஐ ஸோன் ட்ரீட்மெண்ட்:.
சிலருக்குக் கண்ணுக்கு அடியில் கருவளை யம் தோன்றி, சருமம் பொலி விழந்து மங்க லாகக் காணப்படும். அவர்கள் இத்தகைய ஐஸோன் சிகிச்சையைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ள கரு வளையம், சுருக்கங்கள் நாளடை வில் மறையும்.
''சருமம் மினுமினுப்புடன் அழகாய் மிளிர்வதற்கு உடலில் கொஞ்சம் கொழுப்புச் சத்தும் அவசியம்'' என்கிறார்கள் அழகுக்கலை நிபணர்கள்.
அழகு குறிப்புகள் சில..........
நன்கு பழுத்த பப்பாளி விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் நான்கு ஸ்பூன் தேன், சிறிது கிளிசரின் சேர்த்து கலந்து, கண்ணைச் சுற்றியுள்ள பகுதி தவிர மீதி இடங்களில் பற்றுப்போட்டு, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவிவர முகம் பிரகாசிக்கும்.
பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து, அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறிவிடும்.
ஒரு கப் பப்பாளித் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை சாறு, சிறிது சர்க்கரை (சீனி) கலந்து 30 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தேகம் மினுமினுக்க ஆரம்பித்துவிடும்.
காலில் பித்த வெடிப்பா? கவலையே வேண்டாம்! பப்பாளி காயின் பாலை எடுத்து அதில் தேய்க்கவும். சில நாட்களிலேயே பாதவெடிப்பு காணாமல் போய்விடும்.
மெல்லிடை வேண்டுமா? இதற்கும் பப்பாளி பெஸ்ட் சாய்ஸ்தான்! உடல் எடை குறைய பப்பாளிக்காயினை கூட்டாக செய்து தொடர்ந்து சாப்பிட்டுவர நீங்களும் ஆகலாம் ஸ்லிம்!
* தினமும் குளிக்கும் முன்பு பாலேடை முகம் முழுவதும் தடவி பத்து நிமிடம் வைத்திருந்து கழுவினால் வறண்ட முகம் பொலிவு பெறும்.
* தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளைப் போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
* ஆரஞ்சுப் பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகும், இளமையுடனும் இருக்கும்.
* முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெயைத் தலைக்குத் தடவி ஒரு மணி நேரம் கழித்து அலசி வந்தால் முடி நன்றாக வளரும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெண்கள் சிவப்பான அழகைப் பெற:
நல்ல தகவல்கள் ... நன்றி
Aarya- புதிய மொட்டு
- Posts : 57
Points : 97
Join date : 26/04/2012
Age : 31
Location : chennai
Re: பெண்கள் சிவப்பான அழகைப் பெற:
நன்றிக்கு நன்றி ஆரியா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» சிவப்பான பெண் தேடுபவரா நீங்கள்?
» நகங்களின் அழகைப் பேண .........
» முகப்பரு அழகைப் பாதிக்குமா?
» கண்களின் அழகைப் பராமரிக்க!
» மயிலின் அழகைப் பற்றி பாரதிதாசன்.
» நகங்களின் அழகைப் பேண .........
» முகப்பரு அழகைப் பாதிக்குமா?
» கண்களின் அழகைப் பராமரிக்க!
» மயிலின் அழகைப் பற்றி பாரதிதாசன்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|