தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
ராஜாங்கம்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
2 posters
Page 1 of 1
ராஜாங்கம்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
* நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா
வித்தியாசமாகவும் புதுமையாகவும் சிந்திப்பவர் தொகுப்பு (நூல்) ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா. பலர் ஹைக்கூ நூல் தொகுத்து வெளியிடுகின்றனர். ஆனால் இவரோ கவிஞர்களில் “இராஜா” என்ற பெயர் உள்ள கவிஞர்களைத் தேடி பிடித்து அவர்களிடம் புகைப்படம், ஹைக்கூ கவிதைகளை வாங்கி, இராஜாக்களின் ஹைக்கூ கவிதைகளை இராஜாங்கம் என்ற பெயரில் தனி ராஜாங்கம் நடத்தி உள்ளார். இவரது இலக்கியப் பணி எதுவென்றாலும் உடன் துணை நிற்கும் பொதிகை மின்னல் ஆசிரியர் இனியவர் வசீகரன் இந்நூலிற்கு பதிப்பாளராக சம்மதித்து உள்ளார்.
இந்நூலை வாங்கிப் பார்க்கும் போது, இராஜா என்ற பெயர் 35 ஆண் கவிஞர்களும் பெண்மைக்கும் இடம் தர வேண்டும் என்ற நோக்குடன், திருமதி.கஸ்துரி ராஜா அவர்களின் புகைப்படமும் அனைவரின் புகைப்படங்களும் நூலின் அட்டையை முன்னும் பின்னும் அலங்கரிக்கின்றது.
இந்நூல் உறுப்புகளை தானமாக்கி மக்கள் மனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திய இதயேந்திரனுக்கு இந்நூலை காணிக்கையாக்குகிறோம்� என்று உள்ளது. இதயேந்திரனுக்கு காணிக்கையாக்கிய முதல் நூல் இராஜாங்கமாகத் தான் இருக்க வேண்டும். எல்லா ஹைக்கூ கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும், 36 கவிஞர்களின் ஒவ்வொரு ஹைக்கூ மட்டும் உங்கள் பார்வைக்கு.
ஆ.ராஜா
தூர்வாரப்பட்டு விட்டது
வரைபடத்திலும்
ஆறுகள்
கன்னிக்கோவில் இராஜா
பெண் கல்வி அவசியம்
சுவரின் மீது
சாணி தட்டும் சிறுமி
பூபதி ராஜா
வல்லரசு கனவு
தகர்ந்து போனது
பிச்சைக் கேட்கும் சிறுவர்கள்
பா.ராஜா
இழவு வீடு
அழுவதற்கு
கூலியாட்கள்
கஸ்தூரி ராஜா
உளி பட்ட இதயம்
தெளிவான முடிவு
களிப்பான வாழ்வு
வசந்தராஜா
மின்வெட்டு இரவு
நல்லதொரு வாய்ப்பு
நட்சத்திரம்; பார்க்க
மு.ராஜா
பிணங்களிடம்
சிரிக்கின்றன
மலர்கள்
கவி.மா.ஷண்முகராஜா
அமைச்சர் தலைமையில்
அமைதி ஊர்வலம்
கலவரமாய் ஊர்
இதய ஏசராஜ்
எழுத்துக்கள் ஈட்டியாக
ஸ்கூட்டர் கேட்கும்
மருமகன் கடிதம்
அ.இலக்கிய ராஜா
வயிறு நிறைந்தது
கூடி விவாதித்தார்கள்
வறுமை ஒழிப்பு
செல்வராஜா
அள்ளிப்பருகினேன்
அடங்கவில்லை தாகம்
அறிவு அருவி
கொள்ளிடம் காமராஜ்
பல்லியிடம் சிக்கிய பூச்சியாய்
மார்வாடியிடம்
தமிழன்
க.இளையராஜா
தேசிய உணர்வு
கள்ள நோட்டிலும்
காந்தி
தோழன் ராஜா
காத்திருந்து கிடைத்தது
வேலை நியமனக் கடிதம்
அய்ம்பது வயதில்
சரவணராஜ்
மணமேடையில்
முதிர்க்கன்னி
மணமகள் தோழி
கண்டியூர் ராஜா
படிப்பும் பட்டமும்
உயர உயர
உயர்கிறது வரதட்சணை
வீ.பாரதிராஜா
மது ஒழிப்பு மாநாடு
கூட்ட முடிவில்
இலவச மது பாட்டில்
பொ.செல்வராஜ்
கல்லறை தான்
விழித்திருக்கிறது காதல்
தாஜ்மகால்
ராசை.கண்மணி ராசா
எல்லையைப் பற்றி
எள்ளளவும் பயமில்லை
கடல் மீன்கள்
ஆர்.நாகராஜ்
வெறும்புள்ளி
பெரும்புள்ளியாக்கியது
தேர்தல்
ஜெ.செண்பகராஜன்
கழி;ப்பறை இல்லாத கிராமம்
வீடு தோறும்
தொலைக்காட்சிப் பெட்டிகள்
வீ.தங்கராஜ்
விதையின் வாழ்க்கை
மரணத்தில் தொடக்கம்
உயிர்த்திடும் அற்புதம்
ஜனனி அந்தோணிராஜ்
உயிர் கொடுத்த தெய்வம்
ஊருக்கு வெளியே ஆலயம்
அனாதை இல்லம்
பொள்ளாச்சி குமரராஜன்
சாவு வீடு
தவறாமல் வந்து விடுகிறது
சாதி சண்டை
பவல் ராஜ்
வெயிலில் காயும்
நிழல் தரும்
மரங்கள்
ஜா.ஜெயராஜ்
கூட்டாஞ் சோறு
சுவையில்லை
அகதி மண்
சு.இராமராஜன்
அத்து மீறும் ஆசை
கையில் இனிப்பு
சர்க்கரை நோய்
இ.பாக்கியராஜ்
உழுவதற்கு
நிலமில்லை
சிறப்பு பொருளாதார மண்டலம்
துரை கோவிந்தராசன்
பிழை தான்
ரசிக்க முடிகிறது
மழலை மொழி
இரா.நாகராசன்
சாதிக் கலவரம்
பலன் கிட்டியது
அரசியல்வாதிக்கு
வெ.யுவராஜ்
நூறு விழுக்காடு
இட ஒதுக்கீடு
அடுப்படியில் பெண்ணுரிமை
இரா.சுந்தரராஜன்
இடுகாட்டுப் பள்ளி
இடைவேளை ஒய்வு
கல்லறை மேல்
ஒ.ஆர்.நாகராசன்
சுடப்பட்ட காந்தி
சிரித்தார்
ரூபாய் நோட்டில்
ஆ.சு.ராஜா
நம்பிக்கை வாக்கெடுப்பு
வெற்றி பெற்றது
கருப்புப் பணம்
பெ.கு.தங்கராஜ்
அவசர அவசரமாய்
நலம் விசாரிக்கும் உறவுகள்
விளம்பர இடைவேளை
சோ.ம.செயராசன்
மானாட
மயிலாட
ஆட்டுகிறது பணம்
“ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” போல,நம் கவிஞர்களின் 36 ஹைக்கூ கவிதைகள் உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். இந்த ஹைக்கூ கவிதைகளைப் படித்தவுடன் நம் சிந்தையில் ஒரு மின்னல் ஏற்படுவது உண்மை. அது தான் ஹைக்கூ கவிதையின் வெற்றி 3 வரியில் முத்தாய்;;;;ப்பாக எப்படிப்பட்ட கருத்தையும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல இரத்தினச் சுருக்கமாக ஹைக்கூ விருந்து படைத்துள்ளனர்.
இந்நூலில் ஹைக்கூ எழுதியுள்ள கவிஞர்கள் கன்னிக்கோவில் இராஜா, கொள்ளிடம் காமராஜ, பாரதிராஜா, இதய ஏசுராஜ, ஆர்.நாகராஜ் உள்பட பலர் குறுஞ்செய்தி மூலம் ஹைக்கூ கவிதை பரப்பும் ஹைக்கூ கொள்கை பரப்புச் செயலாளர்கள். அனைத்துச் கவிஞர்கள் பற்றியும் சிறுகுறிப்பு இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.
பாடுபொருளாக எதையும் விட்டு வைக்காமல் சகல பொருளிலும் பாடி உள்ளார்கள். கவிஞர்கள் என்றால் வானத்தில் இருந்து இறங்கி வந்தவர்கள் அல்ல, சாதாரண கூலித் தொழிலாளி வரை தனது அனுபவத்தை ஹைக்கூவாக வடிக்க முடியும் என்று நிரூபித்துள்ள இந்த நூல் ஹைக்கூ வரலாற்றில் நல்ல இடம் பிடிக்கும். சமுதாய அவலங்களை துணிச்சலுடன் சாடி உள்ளனர். சமத்துவ சமதர்ம சமுதாயம் அமைந்திட உரக்கக் குரல் கொடுத்து உள்ளனர். கவிஞர்களின் கனவு நனவாக வேண்டும். நூல் நேர்த்தியான வடிவமைப்பு.
எனது பெயர் ரவி, ரவி என்றால் சூரியன். எனது பெயருக்காக பெருமைப்பட்டு இருக்கிறேன். பெயர் சூட்டிய தந்தையை உயர்வாக நினைத்து உள்ளேன். ஆனால் இந்த நூலைப் படித்து முடித்த போது இந்நூலில் நமது ஹைக்கூ இடம் பெறாமல் போய் விட்டதே. நமது பெயரில் ஒரு இராஜாவை தந்தை வைக்காமல் விட்டு விட்டோரே என்று உண்மையில் வருத்தப்பட்டேன் நூலில் ஓவியங்களும் மிகச் சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010
Re: ராஜாங்கம்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
மலர்ந்தது ராஜாக்களின்
ஹைக்கூ தோரணங்கள்
அவலங்களுக்கு சாட்டையடியாய்....
ஹைக்கூ தோரணங்கள்
அவலங்களுக்கு சாட்டையடியாய்....
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Similar topics
» ஆதிக்குடி மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» கரந்தடி மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» யாரிவன் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» கவன ஈர்ப்பு * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» பகத்சிங் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» கரந்தடி மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» யாரிவன் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» கவன ஈர்ப்பு * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» பகத்சிங் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|