தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:46 pm
» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:31 pm
» ஆன்மீக தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:10 am
» சமையல் குறிப்புகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:09 am
» இயற்கையை ரசிப்போம்..!
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:07 am
» மருத்துவ குறிப்புகள் & பாட்டி வைத்தியம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:05 am
» சிரிக்கலாம் சில நிமிடம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:01 am
» நடிகர் டோவினோ தாமஸ்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:51 am
» மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:49 am
» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:46 am
» செல்போன் வெடித்து இளம்பெண் பலி..(சார்ஜ் போட்டபடி பேசியதால்)
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:56 am
» என் வாழ்வில் கிடைத்த முதல் சந்தோஷம்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:54 am
» காதல் கவிதை வரிகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:53 am
» இங்கு எளிதாய் கிடைப்பது…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:52 am
» ஒரு முத்தம் கொடேன்!
by அ.இராமநாதன் Wed Sep 20, 2023 6:40 pm
» ‘மண்வாசனை’ படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:19 pm
» கந்தன் காலடியை வணங்கினால்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:18 pm
» சிதம்பரம் ஸ்ரீ முக்குறுணி விநாயகர்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:17 pm
» முட்டை வாசம் பிடிக்காதவர்களுக்கு...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:57 pm
» கண் திருஷ்டி நீங்க...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:55 pm
» கடிகாரம் மாட்ட சிறந்த இடம்...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:53 pm
» வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:52 pm
» மகா புத்திசாலி...!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:50 pm
» குளிக்கும் போது...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:48 pm
» அகல் விளக்கு
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:46 pm
» சிறந்த வரிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:45 pm
» வாழ்க்கைக் கணக்கு.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:44 pm
» மனைவிக்கு தெரிஞ்சா திட்டுவாள்…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:43 pm
» இன்னக்கி நல்ல நாள்டி’… !
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:42 pm
» டாஸ்மாக்ல கூட்டம் அளவுக்கு அதிகமா இருக்கே…!!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» விசித்திரப் பறவைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» புத்தர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:38 pm
» எனக்கு முன்னாள் காதலர் வேண்டும்!- கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:34 pm
» அமுதிலும் இனிதான 1957 காதல் பாடல்கள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:32 pm
» ஸ்ரீராமர் பட்டாபிஷேக தரிசனம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:30 pm
» நாளும் உந்தன் அரசாட்சி
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:29 pm
» கார்டியாக் அரஸ்ட்டுக்கும் – ஹார்ட் அட்டாக்குக்கும் என்ன வித்தியாசம்..
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:25 pm
» இதயம் காப்போம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:23 pm
» மதுரை முக்குறுணி விநாயகர்.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:21 pm
» அது ‘பெரிய மனுஷி’…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:20 pm
» மனிதம் – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:19 pm
» பிரிவோம் சந்திப்போம்!! – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:17 pm
» சமையல் துளிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:16 pm
» கூறியது நடந்துவிட்டது… உற்சாகத்தில் எஸ்.ஜே.சூர்யா!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:15 pm
» மரணம் பற்றிய நம்பிக்கைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:14 pm
சுட்டிப் பூங்கா நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
2 posters
Page 1 of 1
சுட்டிப் பூங்கா நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
சுட்டிப் பூங்கா
நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் செல் 8903926173
வெளியீடு மின்னல் கலைக்கூடம் 117.எல்டாம்ஸ் ரோடு ,சென்னை .18 விலை ரூபாய் 30
செல் 9841436213.
விமர்சனம் கவிஞர் இரா .இரவி
குழந்தை இலக்கியமாக குழந்தைகளுக்கான ஹைக்கூ நூலாக மலர்ந்துள்ளது
.பெரியவர்களும் படித்து மகிழலாம் .மழலைகள் பற்றிய மலரும் நினைவுகளை
மலர்விப்பதோடு மகிழ்ச்சியும் தருகின்றன. ஹைக்கூ கவிதைகள் அளவில் மூன்று
வரிகள்தான் .ஆனால் கருத்து ஆழத்தில் அளவிட முடியாதது. ஹைக்கூ கவிதைகளின்
உணர்வுகள், தாக்கங்கள் பெரிது .நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் அவர்களின் முதல் நூல் இது .மின்மினி இதழ் ஆசிரியர் ,கவிஞர் கன்னிக் கோவில் இராஜா அவர்களின்
அணிந்துரை அழகுரை .பதிப்பாளர் பொதிகை மின்னல் இதழ் ஆசிரியர் கவிஞர்
வசிகரன் இவர்கள் இருவரும் தந்த ஊக்கத்தால்தான்
இந்த நூல் வந்தது என்று நூல் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார் .முதல் ஹைக்கூ
கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது .பாராட்டுக்கள் .
குழந்தைக்கு முத்தம்
குழந்தையின் முத்தம்
பின்னதே அடர்த்தியானது !
இந்த ஹைக்கூ படித்தவுடன் படித்த வாசகர்களுக்கு குழந்தைக்கு தந்த முத்தமும் ,குழந்தை தந்த முத்தமும் நினைவிற்கு வந்து, ஒப்பீடு நடத்தி கவிஞர் கூற்று உண்மை என்ற முடிவிற்கு வந்து விடுவார்கள் .இதுதான் ஒரு படைப்பாளியின் வெற்றி .
கை நோகிறது
இறக்கினால்
மனம் நோகிறது !
உலகின் ஒப்பற்ற உறவான அம்மாவின் மன நிலையை படம் பிடித்துக் காட்டும் ஹைக்கூ .
குழந்தை எழுதியது
கியூட்டான ஹைக்கூ
அம்மா !
கியூட்டான என்ற ஆங்கிலச் சொல்லை தவிர்த்து அழகான என்ற அழகு தமிழ்ச்
சொல்லை பயன் படுத்தி இருக்கலாம் .அடுத்த பதிப்பில் ஆங்கிலச் சொல்
தவிர்த்திடுங்கள் .தமிழ்த் திரைப்படப் பாடல் ஆசிரியர்கள் செய்யும் தமிழ்க்
கொலையை , தரமான படைப்பாளிகள் செய்ய வேண்டாம் என்பது என் வேண்டுகோள் .
திங்கட்கிழமை பூத்தாலே
வாடிவிடுகின்றன
பொம்மைகள் !
நல்ல ஹைக்கூ இது .குழந்தைகள் சனி ஞாயிறு பொம்மைகளோடு விளையாடும் .திங்கட்கிழமை வந்து விட்டால் பள்ளிக்கு அனுப்பி விடுவார்கள் .பொம்மைகளைப் பிரிகின்றோம் என்று குழந்தைகள் உள்ளம் நோகும் .கவிதைக்கு கற்பனை அழகு ! பொம்மைகள் வாடுவதாக எழுதியது படைப்பாளியின் திறமை .
தாய் உள்ளத்தை மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .தாயின் உச்சரிப்பை உற்று நோக்கி ஹைக்கூ வடித்துள்ளார் .
என்னமோ பேசுகிறது
என்னமாய் பேசுகிறது
என்கிறாள் தாய் !
குழந்தைகளின் குறும்புகள் ரசித்து மகிழலாம் .ஆர்வத்தோடு கவனிக்க வேண்டியது முக்கியம் .
குறும்புகளே
அழகாய் இருக்கிறது
அரும்புகளிடம் !
எள்ளல் சுவையுடன் ஹைக்கூ வடித்துள்ளார் .படித்ததும் சிரிப்பு வந்து விடும் .
தேர்வில் முட்டை
குழந்தை சொன்னது அப்பாவிடம்
ஆசிரியைக்கு ஒன்னும் தெரியல்ல !
இன்று தனிக் குடும்ப வாழ்கையே எங்கும் பெருகி விட்டது .வீட்டில் ஆலோசனை
வழங்கிட, குழந்தைகளுக்கு கதை சொல்லிட தாத்தா ,பாட்டி இருப்பதில்லை .
அதனை உணர்த்திடும் ஹைக்கூ .
உறங்கிட
குழந்தை தயார்
கதை சொல்ல யார் !
இந்து பள்ளிகளே சிறைக் கூடங்களாக மாறி விட்டன .பிடிக்காத
மொழியில் பாடங்களை கட்டாயப் படுத்தி படிக்க வைக்கும் அவலம் .கவிக்கோ
அப்துல் ரகுமான் சொன்னது போல புத்தகங்கள் குழந்தைகளை கிழித்து விடுகின்றன
.அதனால்தான் குழந்தைகள் விடுமுறை நாளை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர் .
கோடையும் குளிர்ந்தது
குழந்தைகளுக்கு
கோடை விடுமுறை ! நிகரில்லா உறவான நிகரில்லா உறவான அன்னையின் மேன்மையை அழகாக உணர்த்தும் ஹைக்கூ .
உயிரை
பணயம் வைத்து
உயிர் தந்தவள் தாய் !
நம் நாட்டில் கூலி வேலை பார்த்தாவது தன் குழந்தையைப் படிக்க வைக்கும் பெற்றோர்கள் உள்ளனர். அவர்களின் ஒப்பற்ற தியாகத்தை நினைவூட்டும் ஹைக்கூ இதோ !
பிள்ளை புத்தகம் சுமக்க
செங்கல் சுமக்கிறாள்
தாய் !
தமிழ்நாட்டில் ஆங்கிலப் பள்ளிகளில் குழந்தைகள் தமிழில் பேசினால் அபராதம் கேட்கும் அவலம் தமிழகத்தில் உள்ளது .
மழலைகள் விரும்புவதில்லை ஆங்கில மொழியை ,ஆனால் பெற்றோர்கள் திட்டமிட்டு
பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சு கலக்கின்றனர் .அம்மா அப்பா என்ற அழகு மிக்க
தமிழ்ச் சொற்கள் இருக்க மம்மி டாடி என்று அழைக்க வற்புறுத்துகின்றனர்
.ஆங்கிலேயர் யாராவது தங்கள் குழந்தைகளை அவர்கள் தாய் மொழி தவிர்த்து பிற
மொழியில் அழைக்க சொல்வார்களா ? சிந்திக்க வேண்டும் .அதனை உணர்த்தும் ஹைக்கூ.
ஆங்கிலப் பள்ளி வாசலில்
அம்மா என்றது
விழுந்த குழந்தை !
வாழ்வியல் தத்துவம் உணர்த்தும் ஹைக்கூ .
குழந்தை இருந்தால் மகிழ்ச்சி
குழந்தையாய் இருந்தால்
என்றுமே மகிழ்ச்சி !
நகரத்து குழந்தைகளுக்கு நெல் விளையும் நிலம் பற்றி எதுவுமே தெரியாது வளர்க்கின்றனர்
தெரிகின்றது கணினி
தெரியவில்லை கழனி
தற்கால குழந்தைகள் !
நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .தொய்வின்றி எழுதுங்கள் .
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response
நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் செல் 8903926173
வெளியீடு மின்னல் கலைக்கூடம் 117.எல்டாம்ஸ் ரோடு ,சென்னை .18 விலை ரூபாய் 30
செல் 9841436213.
விமர்சனம் கவிஞர் இரா .இரவி
குழந்தை இலக்கியமாக குழந்தைகளுக்கான ஹைக்கூ நூலாக மலர்ந்துள்ளது
.பெரியவர்களும் படித்து மகிழலாம் .மழலைகள் பற்றிய மலரும் நினைவுகளை
மலர்விப்பதோடு மகிழ்ச்சியும் தருகின்றன. ஹைக்கூ கவிதைகள் அளவில் மூன்று
வரிகள்தான் .ஆனால் கருத்து ஆழத்தில் அளவிட முடியாதது. ஹைக்கூ கவிதைகளின்
உணர்வுகள், தாக்கங்கள் பெரிது .நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் அவர்களின் முதல் நூல் இது .மின்மினி இதழ் ஆசிரியர் ,கவிஞர் கன்னிக் கோவில் இராஜா அவர்களின்
அணிந்துரை அழகுரை .பதிப்பாளர் பொதிகை மின்னல் இதழ் ஆசிரியர் கவிஞர்
வசிகரன் இவர்கள் இருவரும் தந்த ஊக்கத்தால்தான்
இந்த நூல் வந்தது என்று நூல் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார் .முதல் ஹைக்கூ
கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது .பாராட்டுக்கள் .
குழந்தைக்கு முத்தம்
குழந்தையின் முத்தம்
பின்னதே அடர்த்தியானது !
இந்த ஹைக்கூ படித்தவுடன் படித்த வாசகர்களுக்கு குழந்தைக்கு தந்த முத்தமும் ,குழந்தை தந்த முத்தமும் நினைவிற்கு வந்து, ஒப்பீடு நடத்தி கவிஞர் கூற்று உண்மை என்ற முடிவிற்கு வந்து விடுவார்கள் .இதுதான் ஒரு படைப்பாளியின் வெற்றி .
கை நோகிறது
இறக்கினால்
மனம் நோகிறது !
உலகின் ஒப்பற்ற உறவான அம்மாவின் மன நிலையை படம் பிடித்துக் காட்டும் ஹைக்கூ .
குழந்தை எழுதியது
கியூட்டான ஹைக்கூ
அம்மா !
கியூட்டான என்ற ஆங்கிலச் சொல்லை தவிர்த்து அழகான என்ற அழகு தமிழ்ச்
சொல்லை பயன் படுத்தி இருக்கலாம் .அடுத்த பதிப்பில் ஆங்கிலச் சொல்
தவிர்த்திடுங்கள் .தமிழ்த் திரைப்படப் பாடல் ஆசிரியர்கள் செய்யும் தமிழ்க்
கொலையை , தரமான படைப்பாளிகள் செய்ய வேண்டாம் என்பது என் வேண்டுகோள் .
திங்கட்கிழமை பூத்தாலே
வாடிவிடுகின்றன
பொம்மைகள் !
நல்ல ஹைக்கூ இது .குழந்தைகள் சனி ஞாயிறு பொம்மைகளோடு விளையாடும் .திங்கட்கிழமை வந்து விட்டால் பள்ளிக்கு அனுப்பி விடுவார்கள் .பொம்மைகளைப் பிரிகின்றோம் என்று குழந்தைகள் உள்ளம் நோகும் .கவிதைக்கு கற்பனை அழகு ! பொம்மைகள் வாடுவதாக எழுதியது படைப்பாளியின் திறமை .
தாய் உள்ளத்தை மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .தாயின் உச்சரிப்பை உற்று நோக்கி ஹைக்கூ வடித்துள்ளார் .
என்னமோ பேசுகிறது
என்னமாய் பேசுகிறது
என்கிறாள் தாய் !
குழந்தைகளின் குறும்புகள் ரசித்து மகிழலாம் .ஆர்வத்தோடு கவனிக்க வேண்டியது முக்கியம் .
குறும்புகளே
அழகாய் இருக்கிறது
அரும்புகளிடம் !
எள்ளல் சுவையுடன் ஹைக்கூ வடித்துள்ளார் .படித்ததும் சிரிப்பு வந்து விடும் .
தேர்வில் முட்டை
குழந்தை சொன்னது அப்பாவிடம்
ஆசிரியைக்கு ஒன்னும் தெரியல்ல !
இன்று தனிக் குடும்ப வாழ்கையே எங்கும் பெருகி விட்டது .வீட்டில் ஆலோசனை
வழங்கிட, குழந்தைகளுக்கு கதை சொல்லிட தாத்தா ,பாட்டி இருப்பதில்லை .
அதனை உணர்த்திடும் ஹைக்கூ .
உறங்கிட
குழந்தை தயார்
கதை சொல்ல யார் !
இந்து பள்ளிகளே சிறைக் கூடங்களாக மாறி விட்டன .பிடிக்காத
மொழியில் பாடங்களை கட்டாயப் படுத்தி படிக்க வைக்கும் அவலம் .கவிக்கோ
அப்துல் ரகுமான் சொன்னது போல புத்தகங்கள் குழந்தைகளை கிழித்து விடுகின்றன
.அதனால்தான் குழந்தைகள் விடுமுறை நாளை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர் .
கோடையும் குளிர்ந்தது
குழந்தைகளுக்கு
கோடை விடுமுறை ! நிகரில்லா உறவான நிகரில்லா உறவான அன்னையின் மேன்மையை அழகாக உணர்த்தும் ஹைக்கூ .
உயிரை
பணயம் வைத்து
உயிர் தந்தவள் தாய் !
நம் நாட்டில் கூலி வேலை பார்த்தாவது தன் குழந்தையைப் படிக்க வைக்கும் பெற்றோர்கள் உள்ளனர். அவர்களின் ஒப்பற்ற தியாகத்தை நினைவூட்டும் ஹைக்கூ இதோ !
பிள்ளை புத்தகம் சுமக்க
செங்கல் சுமக்கிறாள்
தாய் !
தமிழ்நாட்டில் ஆங்கிலப் பள்ளிகளில் குழந்தைகள் தமிழில் பேசினால் அபராதம் கேட்கும் அவலம் தமிழகத்தில் உள்ளது .
மழலைகள் விரும்புவதில்லை ஆங்கில மொழியை ,ஆனால் பெற்றோர்கள் திட்டமிட்டு
பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சு கலக்கின்றனர் .அம்மா அப்பா என்ற அழகு மிக்க
தமிழ்ச் சொற்கள் இருக்க மம்மி டாடி என்று அழைக்க வற்புறுத்துகின்றனர்
.ஆங்கிலேயர் யாராவது தங்கள் குழந்தைகளை அவர்கள் தாய் மொழி தவிர்த்து பிற
மொழியில் அழைக்க சொல்வார்களா ? சிந்திக்க வேண்டும் .அதனை உணர்த்தும் ஹைக்கூ.
ஆங்கிலப் பள்ளி வாசலில்
அம்மா என்றது
விழுந்த குழந்தை !
வாழ்வியல் தத்துவம் உணர்த்தும் ஹைக்கூ .
குழந்தை இருந்தால் மகிழ்ச்சி
குழந்தையாய் இருந்தால்
என்றுமே மகிழ்ச்சி !
நகரத்து குழந்தைகளுக்கு நெல் விளையும் நிலம் பற்றி எதுவுமே தெரியாது வளர்க்கின்றனர்
தெரிகின்றது கணினி
தெரியவில்லை கழனி
தற்கால குழந்தைகள் !
நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .தொய்வின்றி எழுதுங்கள் .
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2616
Points : 6284
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|