தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சமச்சீரான உணவு முறைகள்

3 posters

Go down

சமச்சீரான உணவு முறைகள் Empty சமச்சீரான உணவு முறைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 06, 2010 5:52 pm

மனித இனத்தின் முதல் எதிரி நாக்குதாங்க. நாமெல்லாம் நாக்கு ருசிக்கு அடிமையாகி உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதில்லை. ஒன்னரை அங்குல நாக்கு நம்மை எப்படி எல்லாம் ஆட்டி வைக்குது பாருங்க.
வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டா மனசும் வயிறும் நிரம்பி விடும். ஆனா உடலுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் கிடைக்கிறதா என்று நாம் யோசிப்பதே இல்லை.

நம் முன்னோர்கள் ரொம்பப் புத்திசாலிகள். எல்லாச் சத்துகளும் உரிய அளவில் கிடைக்கும் வகையில் தான் உணவுப் பழக்கத்தைக் கடைப் பிடித்தனர். ஆனால் காலப் போக்கில் மேற்கத்திய நாகரீகத் தாக்கம், பொருளாதார, சமூக நிலையில் ஏற்பட்டுள்ள அதி வேக மாற்றங்களால் நமது உணவுப் பழக்க வழக்கத்திலும் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மண் பானையில் சாதம் வடித்தால் நல்லது தான். அதற்காக தற்போது மண் பானையைத் தேடி அலைய முடியாது. மண் பானைச் சமையல் நடை முறைக்கும் ஒத்து வராது.

ஆனால் நாம் என்ன சாப்பிடுகிறோம், அதில் என்னென்ன சத்து இருக்கு, உடலின் அன்றாட இயக்கத்துக்குத் தேவையான சத்து நம் உணவில் இடம் பெற்றுள்ளதா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஏதோ வெந்ததைத் தின்னு விதி வந்தால் சாவோம் என்ற நிலையில் தான் காலத்தைத் தள்ளிக் கொண்டு இருக்கிறோம்.

கையில வருது; வாயிலே போகுது; வயிறு ரொம்புது ஆனா உடம்பு பட்டினி கிடக்கு. நம்மில் பெரும்பாலானோரது நிலை இது தான். பிடித்ததை விரும்பி வயிறு முட்டச் சாப்பிடுகிறோம். உடலுக்குத் தேவையான சத்து அதில் உள்ளதா, அதனால் உடல் நலத்துக்கு நன்மையா? கெடுதலா எனக் கவலைப்படுவதில்லை. இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் உரிய விகிதத்தில் கிடைப்பதில்லை.

ரோடு மோசமாக இருக்கும் போது காரை எவ்வளவு சிறப்பாக சர்வீஸ் செய்தாலும் பயன் இல்லை. அது போல் நோய் வந்து எவ்வளவு சிறப்பாகச் சிகிச்சை அளித்தாலும் சமச்சீரான உணவு சாப்பிட்டு உடல் நலத்தைப் பேணிக் காக்கா விட்டால் உரிய பலன் இல்லை. நோய் திரும்பவும் தாக்கும்.

உடலின் தேவையின் அடிப்படையில் ஊட்டச் சத்துகள் இரு வகையாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அவை பெரிய ஊட்டச் சத்துகள் (Macro Nutrients), சிறிய ஊட்டச் சத்துகள் (Micro Nutrients).

கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து), புரதம், கொழுப்பு ஆகியவை பெரிய ஊட்டச் சத்துகளாகும். பெரிய ஊட்டச் சத்துகள் உடலுக்கு அதிக அளவில் தேவைப் படுகிறது. உடல் இயக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் எரி சக்தியாக இவை செயல் படுகின்றன.

வைட்டமின் மற்றும் தாதுப் பொருள்கள் சிறிய ஊட்டச் சத்துகள் ஆகும். இவை உடலுக்குச் சிறிதளவே தேவை என்றாலும் உடல் இயக்கத்துக்கு மிக மிக அவசியமானது.

சத்துகள் அல்லாத பிற பொருள்கள் :

நமது உணவில் ஊட்டச் சத்துகள் அல்லாத பிற பொருள்களை வாசனை, ருசி, செரிமானத்துக்காகச் சேர்க்கிறோம். பூண்டு, சீரகம், வெந்தயம் போன்ற பொருள்கள் ஊட்டச் சத்துகள் ஆகாது. ஆனால் இப்பொருள்களில் வாசனை மட்டு மின்றி சில மருத்துவக் குணங்களும் உள்ளன.

உடல் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள் :

புரதச் சத்து அடங்கிய உணவுகள் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன. (உதாரணம்) பருப்பு, பயறு வகைகள், பால், இறைச்சி, மீன், பறவை இறைச்சி, போன்றவற்றில் புரதச் சத்து அதிகமாக உள்ளது.

உடலுக்குச் சக்தி அளிக்கும் உணவுகள் :

கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) மற்றும் கொழுப்புச் சத்து உள்ள உணவுகள் உடலுக்கு சக்தி அளித்து செயலாற்றச் செய்கின்றன. அரிசி, கோதுமை போன்ற தானிய வகைகள், சர்க்கரை, கிழங்கு வகைகள் ஆகியவற்றில் மாவுச் சத்து அதிகமாக உள்ளது. எண்ணெய், நெய் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது.

உடலைப் பராமரித்து பாதுகாக்கும் உணவுகள் :

வைட்டமின்கள், தாதுப் பொருள் அடங்கிய உணவுகள் உடலைப் பாதுகாத்து பராமரிக்கின்றன. காய், கனிகள் மற்றும் பால் போன்றவற்றில் வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் உள்ளன.

இந்த உணவு வகைகள் உரிய விகிதத்தில் கலந்திருப்பதே சமச்சீரான உணவு.
சத்துகள் சமவிகிதத்தில் கிடைக்கும் வகையில் நமது அன்றாட சாப்பாடு அமைய வேண்டும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சமச்சீரான உணவு முறைகள் Empty Re: சமச்சீரான உணவு முறைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 06, 2010 5:54 pm

காலை உணவு :

காலை எழுந்தவுடன் பால் குடிப்பது மிகவும் நல்லது. பொதுவாக தென்னிந்தியர்களின் பழக்கத்துக்கு ஏற்ப காலையில் இட்லி, தோசை, உப்புமா, கிச்சடி இப்படி ஏதாவது ஒன்றைச் சாப்பிடுகிறோம்.
உடல் வளர்ச்சிக்குப் புரதச் சத்து மிக அவசியம். எனவே காலைச் சாப்பாட்டில் புரதச் சத்து அதிகம் உள்ள பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சாம்பார், சட்னி :

எனவே இட்லிக்கு, சட்னியுடன் சாம்பாரும் சேர்க்கப் பட வேண்டும். சட்னியோ அல்லது சாம்பாரோ ஏதாவது ஒன்று மட்டும் போதாது.
சாம்பாரில் புரதச் சத்து கிடைக்கும். சட்னியைப் பொருத்த வரை புதினா, கொத்து மல்லி, கருவேப்பிலை, தக்காளி, சட்னிகளில் வைட்டமின் சத்து கிடைக்கும்.
சாம்பாரில் பருப்பு இருப்பதோடு காய்கறிகளும் சேர்க்கப் பட்டால் இன்னும் நல்லது. இட்லி , பொங்கல், தோசை போன்ற வற்றில் ஏற்கெனவே பருப்பு சேர்க்கப் பட்டாலும் சாம்பாரும் அவசியம். சப்பாத்திக்கு "டால்" சேர்த்துக் கொள்ளலாம்.
ரொட்டி என்றால் வெறும் ரொட்டி மட்டும் சாப்பிடாமல் காய்களைத் துண்டுகளாக ("சான்ட்விச்") வெட்டிச் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

காலை 11 மணி :

மோர் அல்லது இளநீர் சாப்பிடலாம். காய்கள் கலந்து சூப் அல்லது பழச் சாறு இதில் ஏதாவது ஒன்று குடிக்கலாம். ஆனால் கண்டிப்பாக காபி, டீ, சாப்பிடக் கூடாது.

மதிய உணவு :

மதிய உணவும் ஊட்டச் சத்து நிறைந்ததாக இருப்பது நல்லது. சாதம், காய்கறிகள் கலந்த சாம்பார், பொரியல், தயிர், ஆகியவையே சரிசமவிகித ஊட்டச் சத்தைக் கொடுக்கும். வற்றல் குழம்பு என்றால் பருப்பு சேர்க்கப் பட்ட கூட்டு அவசியம். ஏனெனில் சாம்பாருக்குப் பதிலாக கூட்டில் பருப்பு, காய்கறிகள் சேர்க்கப் படுவதால் வற்றல் குழம்புக்குக் கூட்டு அவசியம். தயிர் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

சிப்ஸ், வடாம், அப்பளம் வேண்டாம் :

அப்பளம் சாப்பிடுவதால் நாக்குக்கு வேண்டுமானால் ருசியாக இருக்கலாம். ஆனால் உடலுக்கு எந்த நன்மையும் இல்லை. மதிய உணவில் மேற் சொன்ன காய் பொறியலுடன் வேண்டுமானால் அப்பளம் தொட்டுக் கொள்ளலாம். ஆனால் காய்களுக்குப் பதிலாக அப்பளம், வடாம், சிப்ஸ் போன்ற வற்றை மட்டுமே தொட்டுக் கொண்டு சாப்பிடுவது எந்த விதப் பலனையும் தராது.

ரசம் போதாது :

சில நேரங்களில் கூட்டு, பொரியல், சாம்பார் வைப்பதற்கு நேரம் இருக்காது. எனவே பலர் ரசம் வைத்து அப்பளம் பொரித்துச் சாப்பிடுவார்கள். இது தவறு. ரசத்தில் போதிய ஊட்டச் சத்துகள் கிடையாது. எனவே பருப்பு துவையல் வைத்துக் கொள்ளலாம். அதோடு காய்கறிகளை (கேரட், வெள்ளறிக்காய், வெங்காயம் ) பச்சையாக நறுக்கிச் சாப்பிடலாம்.

தேநீர் நேரம் :

தேநீர் நேரத்தில் (மாலை 4 மணி முதல் 5 - க்குள்) தேநீருடன் ஏதாவது சுண்டல், வேர்க்கடலை, முளைக் கட்டிய பயறு சாப்பிடலாம். முடிந்தால் அந்தந்த சீசனில் மலிவாகக் கிடைக்கும் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவதும் நல்லது. எண்ணெய்யில் தயாரிக்கப் பட்ட பஜ்ஜி, போண்டா போன்றவற்றை முடிந்தளவு தவிர்ப்பது நல்லது.

இரவு உணவு :

இரவு உணவு மதியச் சாப்பாடு போல இருக்கலாம் அல்லது டிபன் சாப்பிடலாம். இரவு சப்பாத்தி சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள பருப்பு கலந்த கூட்டு அவசியம்.
எல்லாச் சத்துகளும் அடங்கிய உணவை என்றோ ஒரு நாள் மட்டும் சாப்பிட்டால் போதாது. தினமும் சமவிகித ஊட்டச் சத்து அடங்கிய உணவில் அக்கறை செலுத்த வேண்டும். அவரவர் வசதிக்கு ஏற்ப கிடைக்கும் உணவு வகையைச் சாப்பிடலாம்.

பசி எடுத்தால் தான் சாப்பாடு

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். உணவு கூழ் போல் ஆகும் வரை வாயில் வைத்து நன்றாக மென்று பின்னர் விழுங்க வேண்டும். சவைத்து, சுவைத்துச் சாப்பிடுவது உணவு எளிதில் ஜீரணமாக உதவுகிறது.
சாப்பிடும் போது மிகவும் தளர்வாக, அமைதியாக இருக்க வேண்டும். மனக் கவலை, பயம், கோபம், வருத்தம் போன்ற உணர்வுகளோடு சாப்பிடுவது ஜீரணக் கோளாறுகள் ஏற்பட வழி வகுக்கும்.

அதிகம் தண்ணீர் வேண்டாம் :

சாப்பிடும் போது அதிகமாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடுவதற்கு 30 நிமிஷங்களுக்கு முன்பாக 2 டம்பளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அது போல் சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் தண்ணீர் குடிப்பதால் உணவு சரியாக ஜீரணமாவதற்கு முன்பாகவே வயிற்றில் இருந்து குடலுக்கு தள்ளப் பட்டு விடும். சாப்பிடும் போது காரமாக இருந்து, கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் சிறிதளவு தண்ணீர் குடிக்கலாம்.

உடனே தூங்க வேண்டாம் :

சாப்பிட்ட உடன் தூங்கக் கூடாது. உணவு வகைகள் ஜீரணமாவதற்குச் சீரான ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். தூங்கும் போது ஜீரணத்துக்குத் தேவையான ரத்தம் கிடைக்காது. இதனால் ஜீரணக் கோளாறுகள் ஏற்படும். எனவே சாப்பிட்டு மூன்று மணி நேரத்துக்குப் பின்னர் தான் தூங்க வேண்டும்.

இரவு சாப்பாடு எப்போது? :

இரவு 7.30 முதல் 8 மணிக்குள் சாப்பிடுவது நல்லது. அப்போது தான் தூங்கச் செல்லும் போது உணவு ஜீரணமாகி இருக்கும். நேரம் கழித்துச் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறுகள் ஏற்படும்.
சாப்பிட்ட பின்னர் உடற் பயிற்சி செய்யக் கூடாது. உடற் பயிற்சி செய்யும் போது தசைகளுக்கு அதிக ரத்தம் செல்லும். இதனால் ஜீரண உறுப்புகள் முறையாகச் செயல் பட போதிய ரத்தம் கிடைக்காது. சாப்பிட்டு 3 அல்லது 4 மணி நேரத்துக்குப் பின்னர் உடற் பயிற்சியில் ஈடுபடலாம். பொதுவாக வெறும் வயிற்றில் உடற் பயிற்சி செய்வது நல்லது.

பசி எடுத்தால் தான் சாப்பாடு :

ஒவ்வொரு முறையும் பசி ஏற்பட்ட பின்னர் தான் சாப்பிட வேண்டும். பசி ஏற்பட்டால் தான் ஏற்கெனவே சாப்பிட்ட உணவு செரித்து விட்டதாகக் கருத முடியும்.
பசி எடுக்காத நிலையில் மீண்டும் சாப்பிடுவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். உடலில் நச்சுப் பொருள்கள் தேங்கி பல்வேறு நோய்களுக்கு வழி வகுத்து விடும்.
பசி எடுக்காத நிலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பின் விளைவுகளை உடனடியாக நாம் உணர முடியாது. அதன் அறிகுறிகள் வெளிப்பட சில வாரங்கள், சில மாதங்கள், ஏன் ஆண்டுகள் கூட ஆகலாம். அஜீரணக் கோளாறுகள் நீண்ட நாள்களுக்கு இருந்தால் அதைக் குணப் படுத்துவது அவ்வளவு எளிதல்ல.

நன்றி கூடல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சமச்சீரான உணவு முறைகள் Empty Re: சமச்சீரான உணவு முறைகள்

Post by manjubashini Mon Dec 06, 2010 9:01 pm

எல்லோரும் படித்து அறிய வேண்டிய பதிவு இது.... அன்பு நன்றிகள் யூஜின் பகிர்வுக்கு....
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்

Back to top Go down

சமச்சீரான உணவு முறைகள் Empty Re: சமச்சீரான உணவு முறைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 07, 2010 4:18 pm

manjubashini wrote:எல்லோரும் படித்து அறிய வேண்டிய பதிவு இது.... அன்பு நன்றிகள் யூஜின் பகிர்வுக்கு....
சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சமச்சீரான உணவு முறைகள் Empty Re: சமச்சீரான உணவு முறைகள்

Post by tthendral Tue Dec 07, 2010 11:23 pm

சப்பாத்திக்கு "டால்" சேர்த்துக் கொள்ளலாம்.
"டால்" - அப்படீன்னா என்னாங்க? கன்னத்தில் அறை
tthendral
tthendral
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 27
Points : 36
Join date : 23/11/2010
Location : பெங்களூரு

Back to top Go down

சமச்சீரான உணவு முறைகள் Empty Re: சமச்சீரான உணவு முறைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 11, 2010 12:52 pm

tthendral wrote:
சப்பாத்திக்கு "டால்" சேர்த்துக் கொள்ளலாம்.
"டால்" - அப்படீன்னா என்னாங்க? கன்னத்தில் அறை

டால் என்றால் பருப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சமச்சீரான உணவு முறைகள் Empty Re: சமச்சீரான உணவு முறைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum