தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ந.க.துறைவனின் புதுக்கவிதை

2 posters

Go down

ந.க.துறைவனின் புதுக்கவிதை Empty ந.க.துறைவனின் புதுக்கவிதை

Post by ந.க.துறைவன் Sat Feb 22, 2014 11:33 am

வாழ்ந்தவர்களை
வாழ்கிறவர்கள்
நினைக்கிறார்கள்.


வாழ்கின்றவர்களை                                                   
வாழ்கிறவர்களே
வெறுக்கிறார்கள் 
                                                    
வாழ்கிறவர்களைப் பார்த்து
வாழப் போகிறவர்கள்
நொந்துக் கொள்கிறார்கள்.


பல சமயங்களில்
என்னடா வாழ்க்கை
இதுவென்று
சலித்துக் கொள்கிறார்கள்.


இந்த
அங்கலாய்ப்புகளைக் கேட்டு
நக்கலாய் சிரித்தது
வெளி வாராந்தவில்
 தொட்டியில் வளர்ந்து
பூத்து மலர்ந்திருக்கும்

ரோஜாப் பூக்கள்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவனின் புதுக்கவிதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 24, 2014 12:26 am

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவனின் புதுக்கவிதை

Post by ந.க.துறைவன் Fri Feb 28, 2014 6:32 pm

ஃ யாருமென் பரந்த மனசைப்
புரிந்திடவில்லை யெனப்
பலரிடம் சொல்லிப் புலம்பியவன்
பூரணமாய் மற்றவர் மனசை
உணர்ந்து நடப்பதாய்
என்னவொரு
அதீதநினைப்பு.
 
ஃ எதையோ பறிகொடுத்தவனாய்
எதற்காக இங்கே நிற்கிறாய் என
எனக்காகப் பரிவு காட்டியவர்க்குத்
தெரியவில்லை, பறிகொடுப்பதற்கு
என்னிடம் இன்னுமென்ன
மிச்சமிருக்கிறதென்று?
 
ஃ கூடிக்கூடி நிறைய
எதைப் பற்றியோ பேசினார்கள்
ஏதோ ஒன்று அப்பேச்சினால்
முடிவானதாய்ப் பாவித்து
அனைவரும் கலைந்தனர்
அதிர்ச்சியோ மகிழ்ச்சியோ
துயரமோ வெளிக்காட்டாமல்.

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவனின் புதுக்கவிதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Mar 02, 2014 9:39 am

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவனின் புதுக்கவிதை

Post by ந.க.துறைவன் Wed Mar 05, 2014 12:29 pm

சிதறு தேங்காய்
*
செய்த தவறுக்கோ
செய்யாத தவறுக்கோ
தலையில் குட்டிக்
கொண்டுத் தோப்புக்
கரணம் போடுகிறார்கள்
வினாயகர் எதிரில்,
அப் பக்தர்களை
வேடிக்கைப் பார்க்கின்றன
சிதறு தேங்காய்ப்
பொறுக்க வந்தக்
காக்கைகள்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவனின் புதுக்கவிதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 06, 2014 9:18 am

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவனின் புதுக்கவிதை

Post by ந.க.துறைவன் Sat Mar 08, 2014 10:11 am

நண்பர்கள்…
*
தாயுமாகி உதவிச் செய்தத் தியாக முகம்
ஓயாது என்றும் துணையிருந்தத் துறைமுகம்
நட்புக்கு இலக்கணமாய் திகழ்ந்த திருமுகம்
அன்பு முகமானக் கீதா ஆறுமுகம்.
*
சாமியை வணங்காத நாத்திகச் சாமி
ஓமக்குச்சி உடல் தேகச் சாமி்
இசைப் பாடல் பாடும் அய்யா சாமி.
மீசைத் தடவிப் பேசிடும் முனுசாமி.
*
தீயப் பழக்க மில்லாதத் திகம்பரச் சாமி
மெல்ல உதட்டில் சிரிக்கும் மௌனச் சாமி.
கரும்பாய் பேசிப்பேசி  இனிக்கும் நல்லச் சாமி.
குறும்புத் தம்பிச் சுறுசுறுப்புக் குப்புச் சாமி.
*
ஊரில் நடக்கும் குசும்பு சம்பவங்களை
உணர்ச்சித் தூண்டும் பாவளையில்
புணர்ச்சிக் கதைகள் சொல்லிச் சொல்லி
உறங்காமல் செய்வார் சுப்பைய்யா வாத்தியயார்.
*
,இன்னும் பலப்பல இனிய நண்பர்கள்
இவ்வணியில் உண்டு நிறையச் சொல்லிடவே
இன்று எங்கெங்கோ இருக்கிறார்கள்-நினைவில்
இனிதே வாழ்ந்து வருகிறார்கள் எனது நண்பர்கள்.
 

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவனின் புதுக்கவிதை

Post by ந.க.துறைவன் Mon Mar 10, 2014 10:47 am

கழிகிறது நேரம்
*
பேச்சுக்குப் பேச்சுப்
புரிகிறதா, புரிகிறதா? என்று    
பேசிக் கொள்கிறார்கள்.
எது புரிந்தது எது பரியாதது?
என்பதெல்லாம்
சொல்பவர்க்கும் கேட்பவர்க்கும்
மட்டு்ம் தானே தெரியும்?
அவர்களது பேச்சுத் திறன்
உங்களுக்குப் புரிகிறதா?
இன்னும் பலருக்கும்
புரியாமலேயே இருக்கிறது
அந்தப் பூடகமானப்
பேச்சின் சாரம்.
அப்படிப் பேசிக் கொண்டே
போனதில் வீணாய் கழிகிறது
பொன்னான நேரம்.

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவனின் புதுக்கவிதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 12, 2014 9:43 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவனின் புதுக்கவிதை

Post by ந.க.துறைவன் Thu Mar 13, 2014 1:29 pm

நன்றி திரு.யூஜின் சார்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவனின் புதுக்கவிதை

Post by ந.க.துறைவன் Tue Mar 25, 2014 11:34 am

மாயா ஜாலம் { புதுக் கவிதை}
*
வெளியிலிருந்துப்
பார்த்தேன்
உள்ளிருப்பது
எதுவும் தெரியவில்லை
உள்ளிலிருந்துப்
பார்த்தேன்
வெளியிலிருப்ப தெல்லாம்
நன்குத் தெரிந்ததுக்
எல்லாம், அந்தக்
கண்ணாடிக் காட்டும்
மாயா ஜாலம்.   

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவனின் புதுக்கவிதை

Post by ந.க.துறைவன் Wed Mar 26, 2014 11:13 am

அய்யனாரு…!!
*
அய்யனாரு உருவம் பாரு
கண்களிலே கோபம் பாரு
கருத்த மீசை அழகைப் பாரு
பெரிய வாளைக் கையில் பாரு.
*
குதிரையிலே அய்யனாரு
குந்தியிருக்கும் ஜோரைப் பாரு
பக்கத்திலே துணையைப் பாரு
பத்தினிப் பெண் தாயைப் பாரு.
*
சுட்டெரிக்கும் வெயில் பாரு
வெட்ட வெளியின் தகிப்பைப் பாரு
வேப்ப மர நிழலைப் பாரு
வெப்பந் தணியும் உணர்ந்துப் பாரு.
*
குழந்தைகளின் ஆட்டம் பாரு
வாலிபர்கள் சேட்டைப் பாரு
கன்னிப் பெண்கள் கண்ணைப் பாரு
ஆண்களின் அரட்டைப் பாரு.
*
கிழவிகளின் பக்திப் பாரு
முதியவர்களின் குசும்பைப் பாரு.
பலியாடு முழிப்பைப் பாரு
பூசாரியின் சிரிப்பைப் பாரு.
*
பொங்கப் பானைப் பொங்குதுப் பாரு
பொண்ணுங்க முகத்தில் சிரிப்பைப் பாரு
வாழையிலைப் படையல் பாரு
மாவிளக்கு வரிசைப் பாரு.
*
கற்பூர ஆரத்திப் பாரு
கன்னத்திலே போட்டுப் பாரு
குல தெய்வத்தை வணங்கிப் பாரு
வரம் கொடுப்பாள் நாளும் பாரு.

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவனின் புதுக்கவிதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 26, 2014 11:15 am

சிறப்பாக உள்ளது தொடருங்கள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவனின் புதுக்கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum