தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Mon Mar 17, 2014 11:51 am

தூக்கமே விழிப்பு{புதுக் கவிதை}
*
தூக்கம் வரவில்லை எனப்
புரண்டுப் புரண்டுப் படுத்தான்.
தூக்காமல் எவ்வளவு நேரந்தான்
விழித்திருப்பதென எழுந்துப் போய்
தண்ணீர்க் குடித்து விட்டு வந்து
படுக்கையில் உட்கார்ந்தான்.
எதையோ யோசித்தவாறு மீண்டும்
படுக்கையில் சாயந்தான்.
*
தூக்கம் வரவில்லை துங்க முயற்சித்தான்
படுத்தவாறே தியானப்
பயிற்சி செய்துப் பார்த்தான்.
தூக்கம் வருவதாகக் காணோம்
மீண்டும் எழுந்துப் போய்
சிறுநீர்க் கழித்து விட்டுவந்துக்
கடிகாரத்தில் நேரம் பார்த்தான்
மணி ஐந்துக் காட்டியது முள்கள்.
*
தூங்க முயற்சிக்காமல் விழித்திருந்தான்
வாசலில் காலிங் பெல் அடிக்கும்
சத்தங் கேட்டுப் போய் கதவைத் திறந்தான்.
எதிரில்,பயணக் களைப்பும்
அசதியுமாய் கலைந்தக் கூந்தலுமாய்
நின்றிருந்தாள். ஊருக்குப் போய்த்
திரும்பி வந்த மனைவி, குழந்தைகள்
அவனுக்குப் பின்னாலேயே நின்று
அவர்களை வரவேற்றதுப் பூனைக் குட்டி…!!

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Tue Mar 18, 2014 12:43 pm

*
சமாளிப்பு{புதுக் கவிதை}
*
தாமதமாகப் போகக் கூடாதென்று
சீக்கிரமாய் வந்துக் காத்திருந்தேன்.
பஸ் போய் வி்ட்டாத வென
அருகிலிருந்தவரிடம் கேட்டேன்
பஸ் போய்விட்டது என்றார்கள்.
வேறொன்றில் போகலாமென
விசாரித்தால்
ரோடு வேலை நடக்கிறது
அந்தப் பக்கம் போகாது என்றார்கள்.
வேறு பஸ் எப்பொழுது வரும் என்று
சொல்வதற்கில்லை.காத்திருப்பதும்
காலவிரயமென சேர் ஆட்டோவில்
ஏறப் போனால் உள்ளே கூட்ட நெரிசல்
உட்கார இடமில்லை.
அடுதது, என்ன செய்வ தென்று
முடிவெடுப்பதற்குள் போக வேண்டிய
பஸ் வந்து நின்றது. ஏறினேன்.
எப்படியோ,
தாமதத்திற்குக் காரணம்
கேட்டால் என்ன சொல்லி
சமாளிக்கலாம்? என்ற சிந்தனையோடு
உள்ளே நுழைந்தேன். சட்டென
மூலையில் உதித்ததொரு
சின்னக் காரணம்… 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Wed Mar 19, 2014 10:17 am

பெரும் தயக்கம்{புதுக் கவிதை}
*
ஊரிலிருந்து வந்தவர்
யாரென்று எனக்குத் தெரியவில்லை.
நீங்க யாரென்று கேட்டதற்கு
உறவினர் ஒருவரின்
பெயரைச் சொல்லி
அவர்களுக்குச் சொந்த மென்று
விவரமாய்ச் சொன்னார்.
என்ன விஷயமாக வந்தீர்கள்
என்று கேட்டேன். தேடி வந்தச்
செய்தியைச் சொன்னார்.
*
ஊர்காரர் என்றாலும்
அறிமுகமில்லாதவர்க்கு
எப்படி உதவி செய்வ தென்று
பெரும் தயக்கம்.
சரி பார்க்கலாம் என்றேன்.
”கொஞ்சம் பார்த்து செய்யுங்க” என்று
கெஞ்சிக் கேட்டு விடைப் பெற்றார்.
மறு முனையிலிருந்து
போன் வந்தது.
“நம்ம ஊரிலிருந்து பையன்
ஒருத்தன் வருவா, வந்தா?
ஏதாச்சும் சொல்லி
சமாளியப்போ” என்றார்
அனுப்பி வைத்த உறவுக்காரர்.
 

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Sat Mar 22, 2014 11:22 am

இன்று அதிகம்….!! {புதுக்கவிதை}
*
நம்பிக்கை,அவநம்பிக்கை என்பது
அவரவர்களின் மனநிலைத்
தீர்மானக்கும் செயல்
ஒருத்தரை எப்படி நம்புவது
என்றொரு சந்தேகம் மனதில்
எழுகிறது அனைவருக்கும்.
நம்பிக்கையாளன் என்று
நம்புவதற்கு ஏதேனும்
அளவுக் கோல் உண்டோ? உண்டு.
நம்பிக்கையானவர் என்று
நம்புவதற்கு நம்பிக்கையான
ஒருவர் உறுதியளித்தால்
நம்பி்க்கையாளன் என்று
நம்புகிறார்கள் சந்தேகத்தோடு,
எப்பொழுதும், யாரையும் எடுத்த
எடுப்பிலேயே நம்புவதில்லை.
நம்பிக்கையான மனிதர்களைப்
பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது
.இன்று.
சொல்லும் செயலும்
நம்பிக்கைக் குரியதாக இருந்தாலும்
ஏனோ, அவர்களின் மீது
நம்பிக்கை வருவதில்லை சட்டென
நம்பிக்கையோடு நம்புவர்கள்
கொஞ்சம் பேர் தான்.
நம்பிக்கையோடு ஏமாறுபவர்கள் தான்
அதிகம் இன்று…!!
 

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Mar 22, 2014 12:54 pm

ஏமாற்று உலகம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Sat Mar 22, 2014 5:58 pm

சரியா சொன்னீங்க இரமேஷ்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 26, 2014 12:12 pm

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Thu Mar 27, 2014 4:14 pm

அவன்…!!
*
அவன் எப்படிப்பட்ட
மனம் படைத்தவ னென்று
குயிலிடம் கேட்டார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்ட
குணவா னென்று
குருவியிடம் கேட்டார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்ட                                    
இயல்புடையவ னென்று
வண்ணத்துப் பூச்சியிடம் கேட்டார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்ட
செயல்பாடுகள் நிறைந்தவன் என்று
காக்கையிடம் கேட்டார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்டப்
பேச்சாளன் என்று கிளிகளிடம்
கேட்டார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை
*
அவன் எப்படிப்பட்ட
இல்லறத்தான் என்று
அவன் வீட்டின்
பல்லியிடம் கேட்டார்கள்ர                              
அதற்குச் சொல்லத் தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்ட
விசுவாசமுள்ளவன் என்று
அவன் வீட்டில் வளரும்
நாயிடம் விசாரித்தார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை
*
அவன் எப்படிப்பட்டவன் என்று
ஒரு மனிதனிடம் கேட்டார்கள்
அவன் படபட வென்று
தப்பும் தவறுமாய்
அவனைப் பற்றின
உண்மையைப்  புராணத்தைத்
தைரியமாய் சில நொடிகளில்
புட்டுப் புட்டு வைத்தான்.
*

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 27, 2014 10:58 pm

அழகு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Fri Mar 28, 2014 2:00 pm

தனிமை {புதுக் கவிதை}
*
தனிமையிலிருந்து
தனிமையை உணர்ந்து
அமைதி பெறலா மென்று
தனிமையிலிருந்தேன்
தனிமையிலிருக்கும்
என்னைப் பார்த்து
நக்கலாய்ச் சிரித்தது
சுவரிலிருந்தப் பல்லி.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 01, 2014 7:52 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 02, 2014 8:09 am

ந.க.துறைவன் wrote:தனிமை {புதுக் கவிதை}
*
தனிமையிலிருந்து
தனிமையை உணர்ந்து
அமைதி பெறலா மென்று
தனிமையிலிருந்தேன்
தனிமையிலிருக்கும்
என்னைப் பார்த்து
நக்கலாய்ச் சிரித்தது
சுவரிலிருந்தப் பல்லி.

*
 மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Thu Apr 03, 2014 7:13 pm

நன்றி இனியவன்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Tue Apr 15, 2014 11:51 am

மழை பார்த்து நாளாச்சு…!!
*
அங்கே
மழை பெய்கிறதென்று
சொன்னார்கள்.
இங்கே
சின்னதாய்
துளி மழை கூட
பெய்யவில்லை.
*
மேகங்கள்
ஏமாற்றக் கற்றுக்
கொண்டு விட்டனவோ?
காற்று
மேகங்களைக்
கடத்திச் சென்று
அங்கே
பெய்விக்கிறதோ?
*
மழையைப் பார்த்து
பல நாள்களாச்சு
இன்று
மழை வருமா?
*
 
 

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Tue Apr 15, 2014 11:52 am

மழை பார்த்து நாளாச்சு…!!
*
அங்கே
மழை பெய்கிறதென்று
சொன்னார்கள்.
இங்கே
சின்னதாய்
துளி மழை கூட
பெய்யவில்லை.
*
மேகங்கள்
ஏமாற்றக் கற்றுக்
கொண்டு விட்டனவோ?
காற்று
மேகங்களைக்
கடத்திச் சென்று
அங்கே
பெய்விக்கிறதோ?
*
மழையைப் பார்த்து
பல நாள்களாச்சு
இன்று
மழை வருமா?
*
 
 

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Wed Apr 16, 2014 11:02 am

கூழாங்கற்கள்
1.
ஒய்வு
பெற்றவர்கள்
என்று தான்
பெயர்.
அவர்களுக்கு
ஒய்வென்பதே
இல்லை.
ஏதேனுமொரு
வேலையாய்
அலைகிறார்கள்
ஆங்காங்கே…!!
2.
எந்த ஒர்
காதலும்
நிறைவேறாமல்
போவதில்லை
தோல்வியென்றாலும்…
வெற்றியென்றாலும்..!!
*
3.
சுப நிகழ்வுகளிலும்
அசுப நிகழ்வுகளிலும்
நம்மோடு
இணைந்திருப்பது
தொடுக்கப்பட்ட
தொடு்க்கப்படாத
வண்ண வண்ண
அழகிய மலர்கள்
அழகிய மாலைகள்
மலர்கள்
இப்பிரபஞ்த்தின்
உயிர்கள்
*  

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Wed Apr 16, 2014 11:03 am

கூழாங்கற்கள்
1.
ஒய்வு
பெற்றவர்கள்
என்று தான்
பெயர்.
அவர்களுக்கு
ஒய்வென்பதே
இல்லை.
ஏதேனுமொரு
வேலையாய்
அலைகிறார்கள்
ஆங்காங்கே…!!
2.
எந்த ஒர்
காதலும்
நிறைவேறாமல்
போவதில்லை
தோல்வியென்றாலும்…
வெற்றியென்றாலும்..!!
*
3.
சுப நிகழ்வுகளிலும்
அசுப நிகழ்வுகளிலும்
நம்மோடு
இணைந்திருப்பது
தொடுக்கப்பட்ட
தொடு்க்கப்படாத
வண்ண வண்ண
அழகிய மலர்கள்
அழகிய மாலைகள்
மலர்கள்
இப்பிரபஞ்த்தின்
உயிர்கள்
*  

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Fri Apr 18, 2014 10:46 am

பாதை{யில்} உபாதை{ கவிதைக் காட்சி. }
*
நாளும் வளர்கிறது
நகரம்.
அகன்று விரிந்த சாலைகள்
நடைபாதையெல்லாம் கடைகள்
பரபரப்பான வியாபாரம்
எங்கும் மக்கள் கூட்டம்
மிகுந்த நெரிசல், இடிசல்.
*
ஆக்ரமிப்புக் கடைகள்
அகற்றப்படுகின்றன
நடைபாதைகளில்
நெரிசல் குறைந்து
இடிபாடுகளில்லாமல்
போக முடிகிறது.
சற்றே நிம்மதியாய்…
*
மழை நாள்களில்
சாக்கடைக் கழிவுகள்
தேங்கிய பகுதிகளில்
சேறும் சகதியுமாய்…
நிரம்பி வழிகிறது
சரியா? தப்பா?
பாண்டி விளையாடி
நடக்கிறார்கள்
பாதசாரிகள்.
*
மேடும் பள்ளமும்
சாலையின் புண்கள்
ஆறாத ரணங்கள்
கவனமாய்
போகவில்லையெனில்
வாகன விபத்துக்கள்
மனிதர்களின் நெஞ்சைப்
பதற வைக்கிறது
அகால மரணம்
உயிரிழப்புக்கள்.
*

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 18, 2014 1:44 pm

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Sat Apr 19, 2014 10:03 am

*
கூழாங்கற்கள் { புதுக்கவிதைகள் }
*
நேசிப்பவர்கள்
எப்பொழுதேனும்
எப்பிரச்சினையாலோ
பிரிந்து விடுகிறார்கள்
எந்தத் தயக்கமு மின்றி
பிரிந்தவர்கள்
எப்பொழுதேனும்
சந்திக்க நேர்கையில்
பேசிக்
கொள்பவர்களும் உண்டு.
பேசாமல்
முகத்தைத் திருப்பிக்
கொள்வாரும் உண்டு.
நேசிப்பது உறவு
பிரிவது துறவு.
 
2
நேசிப்பவர்கள்
இருவருமே
நேர்மையாகவே
நேசிக்கிறார்கள்
நேசிப்பவர்களுக்குள் தான்
எப்படியோ?
அந்த நேசிப்பில்
முரண் வந்து
முன் நிற்கிறது
முரண்களில்
முகிழ்வது தான்
காதலோ?.
3.
குழந்தைகளின்
நேசிப்பில்
எந்தக் கல்மிஷமும்
இருப்பதில்லை.
கூளமாய் மண்டிக்
கடக்கிறது
மனிதர்களின்
நேசிப்பில்
ஆயிரமாயிரம்
கல்மிஷங்கள்…!!

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Sat Apr 19, 2014 10:04 am

*
கூழாங்கற்கள் { புதுக்கவிதைகள் }
*
நேசிப்பவர்கள்
எப்பொழுதேனும்
எப்பிரச்சினையாலோ
பிரிந்து விடுகிறார்கள்
எந்தத் தயக்கமு மின்றி
பிரிந்தவர்கள்
எப்பொழுதேனும்
சந்திக்க நேர்கையில்
பேசிக்
கொள்பவர்களும் உண்டு.
பேசாமல்
முகத்தைத் திருப்பிக்
கொள்வாரும் உண்டு.
நேசிப்பது உறவு
பிரிவது துறவு.
 
2
நேசிப்பவர்கள்
இருவருமே
நேர்மையாகவே
நேசிக்கிறார்கள்
நேசிப்பவர்களுக்குள் தான்
எப்படியோ?
அந்த நேசிப்பில்
முரண் வந்து
முன் நிற்கிறது
முரண்களில்
முகிழ்வது தான்
காதலோ?.
3.
குழந்தைகளின்
நேசிப்பில்
எந்தக் கல்மிஷமும்
இருப்பதில்லை.
கூளமாய் மண்டிக்
கடக்கிறது
மனிதர்களின்
நேசிப்பில்
ஆயிரமாயிரம்
கல்மிஷங்கள்…!!

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 22, 2014 5:02 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Wed Apr 23, 2014 11:03 am

கூழாங்கற்கள்
*
1.
அருகில் எவரும் இல்லை
கண்கள் மூடியிருந்தார்
கண்கள்
திறந்துப் பார்த்தார்
அருகில் எவரும் இல்லை.!!.
*
2
கண்டிப்பாக இன்று
வருவதாகத்தான்
சொன்னார்.
கண்டிப்பாக
வருவாறென்று தான்
காத்திருக்கிறேன்.
கண்டிப்பாக
வருகிறேனென்று
சொன்னவர்
வரவேயில்லை
கண்டிப்பாக…!!.
3.
நண்பரைத் தேடி
அவர் வீட்டற்குச் சென்றேன்.
கேட்டிலிருந்த நாய்
அன்னியரென்று
என்னைப் பார்த்து
பலமாய் குரைத்தது.
நாய் குரைத்தலின்
குரல் கேட்டு
வெளியில் வந்த
நண்பர் சொன்னார்.
“ டேய், போடா
நம்ம சாருடா ” என்றார்.
சட்டென்று குரைப்பதை
நிறுத்தியது நாய்..!!
***
.

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Apr 26, 2014 10:26 pm

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Tue Apr 29, 2014 10:31 am

பயந்திருக்குமோ மரம்…? { புதுக்கவிதை }.
*
மரத்தை
வெட்டிக் கொண்டிருந்தார்கள்
அருகிலிருந்த மரம்
எந்த அசைவுமின்றி
மௌனமாகக் கொஞ்ச நேரம்
பார்த்துக் கொண்டிருந்தது.
என்றேனு மொரு நாள்
நமக்கும்
இந்த கதி தானோ? என்று
சிந்தித்திருக்குமோ?
என்னவோ அப்பொழுது
மரத்தை
வெட்டியவர்கள்
அதனருகில் வந்து
நின்றனர்.
மரம் பயந்திருக்கும் ?
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum