தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்!

2 posters

Go down

 தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்!  Empty தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்!

Post by அ.இராமநாதன் Sun May 11, 2014 8:46 am


"ஆலூர், அரசலூர், அத்திப்பட்டு என்ற ஊரின்
பெயர்களெல்லாம் நமது மரங்களின் பெயரால்தான்
வைக்கப்பட்டன. உசிலம் மரங்கள் நிறைந்திருந்ததால்
உசிலம்பட்டி என்று பெயர் வைத்தனர். ஆக நமது
மண்ணும் கலாசாரமும் மரங்களை அடிப்படையாகக்
கொண்டுதான் அமைந்தது.

இப்போது அந்நிய தாவரங்கள் கோலோச்சும் காலம்.
அதனால் தமிழகம் பாலையாக மாற வாய்ப்பு அதிகம்
உண்டு. அதிலிருந்து மீள நாம் நமது தமிழ்
தாவரங்களை தத்து எடுத்து வளர்க்க வேண்டும்' என்று
எச்சரிக்கை விடுகிறார் பட்டிவீரன் பட்டியைச் சேர்ந்த
கண்ணன். இவர் கொடைக்கானலை மையமாகக்
கொண்டு இயங்கும் பழனிமலை பாதுகாப்புக் கழகத்தை
நடத்தி வருபவர்களுள் ஒருவர்.

இந்த அமைப்பின் முக்கியபணி.. தமிழ் தாவரங்களின்
நாற்றுகள் உருவாக்கி வளர்ப்பது. அவற்றின் பயன்
பாட்டை பிரபலப்படுத்துவது.

முப்பது வருடமாக தமிழ் தாவரங்களைப் பற்றி
ஆய்வு செய்து 45 வகையான அறிய தாவரங்களையும்,
20 வகையான கட்டுமான மரக்கன்றுகளையும் பாது
காத்து அவற்றின் நாற்றுகளை வளர்த்து வரும்
கண்ணனிடம் பேசியதிலிருந்து சுவாரசியமான அதே
நேரம் தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு தந்த
செய்திகளில் சிலவாசகர் பார்வைக்கு...
-
"இப்போ களைக்கொல்லி மிஷின், களைக்கொல்லி
மருந்துன்னு விவசாயத்தில் களைகளுக்கு செலவு
செய்யுறோம். உண்மையில் இங்கு இருப்பதெல்லாம்
நம்முடைய களைகள் இல்லை. வெளிநாட்டிலிருந்து
வந்த களைகள்தான். குறிப்பா தோல் அரிப்பு,
ஆஸ்துமா அலர்ஜியை உண்டாக்குள் வெட்ட வெட்ட
வளரும் பார்த்தீனிய செடிகள் நம் நாட்டுக்கானது
அல்ல.

அதை ஒழிக்க எளிய வழி நாம் துத்திச் செடியை
வளர்த்தாலே போதும். அந்தப் பகுதியில் பார்த்தீனியம்
தலைக்காட்டாது.

மேற்குத் தொடர்ச்சி மலை மீது இருந்த தமிழ்
தாவரங்களை அழித்து சவுக்கும் தைலமரமும், சீமை
கருவேலமும் வளர நாம் வழிவகுத்ததால்தான்
நமக்கு மழை பொய்த்துப் போனது. இதை நான்
சொல்லல, அமெரிக்க விவசாய கழகம் சொல்கிறது.
-
ஊஞ்சலூர் என்ற பெயருக்குப் பின்னால் குறிஞ்சால்
என்ற தாவரம் இருக்கு. இந்த மரத்திலிருந்து பெறப்
படும் மரக்கரி சக்கிவாய்ந்தது. இரண்டாம் உலகப்
போரின்போது குறிஞ்சால் மரத்திலிருந்து எடுக்கப்பட்ட
கரியைக்கொண்டுதான் தென்னிந்திய ரயில்வேயின்
வண்டிகள் ஓடின.

இப்போ அதை யாரும் கண்டுக்கவேயில்லை' என்று
சொல்லிக் கொண்டே போனவரிடம், "சரிங்க, நடந்து
முடிந்ததைப் பற்றிப்பேசுவதை விட இப்போது
இருக்கும் தலைமுறை என்ன பண்ணணும் சொல்லுங்க'
என்றதும் "தமிழ் தாவரங்களை எல்லா இடங்களிலும்
வளர்க்கணும். நம்ம கவனம் அதன்மேல் குவியணும்.

அதுதான் நம்மண்ணை, கலாசாரத்தைக் காக்கும்'
என்றார். எப்படிதான் பூச்சிக் காணாமப் போச்சு.
அதைப் பெருக்கணும்னா, குறிஞ்சாங்கொடி, கிலுகிலுப்பை,
தேள் கொடுக்கு போன்ற தாவரங்களை வளர்க்கணும்.
அதை வளர்த்தா ஒரு செடியைத் தேடி ஐம்பது
வண்ணத்துப் பூச்சாவது அந்த இடத்துக்க வந்துடும்.

பேர் தெரியா குரோட்டன்ஸ் செடியைத் தொட்டியில்
வளர்ப்பதால் என்ன பயன்? அதற்குப் பதில் காட்டு
எலுமிச்சை, காட்டு கறிவேப்பிலை, இதுமாதிரி
வளர்த்தா சின்னச் சின்னப் பறவைகள் பழங்களை
சாப்பிட வர ஏதுவாகும்.

கல்லூரி மற்றும் அலுவலகத்தை மட்டுமில்லாமல்
வீட்டையும் குளுமையாக்க, காற்றை சுத்திகரிக்க
வேப்ப மரத்தின் ஐந்து வகைகளையும் நடலாம் என்றார்.

இயற்கையோட இயைந்த வாழ்வுக்கு நமது தமிழ்
தாவரங்களே வழின்னு சொல்றீங்க. பொருளாதார
ரீதியில் விவசாயிக்கு இது எப்படி உதவும்? என்றதும்
"தேக்கு மரத்தையே கட்டிக்கிட்டு அழாம, பத்து
வருடத்தில் பயன்தரும் கட்டுமான மரங்களை
விவசாயம் செய்யலாம்.

குமிழ், தடசு, சந்தன வேங்கை, வாகை போன்ற நல்ல
பயன்தரும். குமிழ் மரங்களை ஒரு ஏக்கரில் 160 தமிழ்
மரங்கள் வைத்தால் பத்து வருடத்தில் 4,85,000 ரூபாய்
வருமானம் தரும். அந்த மரத்தின் இலைச்சாறு
வெள்ளைப்படுதல், வெட்டைக்கு மருந்து. அந்த மரத்தின்
சின்னக் குச்சிகள் தீக்குச்சி, பென்சில் செய்ய பயன்படும்.

பெரிய மரம் கதவு ஜன்னலுக்கு உதவும். ஆக, இப்படித்
தமிழ்ச்சூழல், வாழ்வு, பொருளாதாரம் என எல்லாவற்றுக்கும்
தமிழ் தாவரங்களை தத்து எடுத்து வளர்த்தால் தமிழ்
வாழ்வும் மண்ணும் பாலையாவதில் இருந்து தப்பிக்கும்'
என எச்சரிக்கை விடுக்கிறார் இயற்கை ஆர்வலர் கண்ணன்.
-
---------------------------------
நன்றி: கல்கி
- அமிர்தா


Last edited by அ.இராமநாதன் on Sun May 11, 2014 1:45 pm; edited 1 time in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்!  Empty Re: தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun May 11, 2014 11:08 am

பகிர்வு அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» ஒற்றைத் தலைவலியா ? கவனம் எடுங்கள்...
» ஆரணி அக்கவின் பூனைக்குட்டிகளை தத்து எடுத்த் வளர்ப்பது யாரு?
» நீங்கள் தமிழ் FM பிரியரா? இதோ உங்களுக்காக அணைத்து தமிழ் FM களும் ஒரே இடத்தில்,
» தமிழ் மக்கட் பெயர்கள் - நல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum