தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
நாட்டு மருந்துகளும் சிறுநீரகமும்
4 posters
Page 1 of 1
நாட்டு மருந்துகளும் சிறுநீரகமும்
நாட்டு மருந்துகளும் சிறுநீரகமும்
நமது நாட்டில் பல போர்களுக்கு அங்கில மருந்துகளின் மேல் தவறான அபிப்பிராயங்களும் நம்பிக்கையும் நிலவுகின்றது. முக்கியமாக அதன் பக்க விளைவுகளை பற்றி. குறிப்பாக படித்த மக்களிடம் இது சற்றே அதிகம். இதற்கு பிரபல பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் அடிக்கடி வரும் உடல்நல சம்பந்தமான கட்டுரைகளும் நிகழ்சிகளும் ஒரு காரணம். மேலும் சில பிரபலமானவர்கள் இயற்கை வைத்தியம் மற்றும் நாட்டு வைத்தியங்களின் உயர்வை விளம்பரப்படுத்துவதும் இன்னொரு காரணம். ஆனால் இந்த இயற்கை வைத்திய பிரியர்கள் நடைமுறை வாழ்க்கையில் மிகுந்த புத்திசாலிகள். அவர்களுக்கோ அவர் குடும்பத்தினருக்கோ பெரிய உடல் நலக்குறைவு என்றால் இவர்கள் நாடுவது ஆங்கில வைத்தியத்தைத்தான். உபதேசம் ஊருக்குத்தான். உதாரணமாக தினந்தோறும் ஒரு பிரபலமான தனியார் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் காலை இந்த நாள் இனிய நாளாக இயற்கை வைத்தியத்தின் பெருமைகளை ஓஹோ என்று உயர்த்தி சொல்லிக் கொண்டிருந்த ஒரு பிரபல மனிதர் முற்றிய சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டு பெரிடோனியல் டயாலிசிஸ் எனப்படும் சிகிச்சையால் உயிர் வாழ்ந்து சமீபத்தில் இறந்தும் விட்டது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.
நாம் மக்களிடையே நாட்டு மருந்துகள் (ஆயுர்வேதம், யுனானி, சித்தா முதலானவை) இயற்கையாக கிடைக்கும் செடி, கொடி, வேர்களான மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படுவதால் அவைகள் உடலுக்கு எந்த கெடுதலும் செய்யாது என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. மேலும் இவை நம் நாட்டில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருவதும் இவற்றின் கெடுதலின்மைக்கும் திறனுக்கும் சான்றாக எடுத்து கொள்ளப்படுகின்றது,
ஆனால் காலம் காலமாக பிறரை கொல்வதற்கும் தற்கொலை செய்து கொள்ள, சூனியம் வைப்பது என்று கொடிய நோய்களுக்கு ஒருவரை உள்ளாக்குவது போன்ற காரியங்களுக்கும் செடி, கொடிகளிலிருந்து தயாரித்த விஷங்கள்தான் உபயோகப்படுத்தப்பட்டு வந்துள்ளன என்பது பல பேருக்கு தெரிவதில்லை.
நாட்டு மருந்துகளில் பலவற்றில் உலோக உப்புகள் சேர்க்கப்படுகின்றன. காரீயம், பாதரசம், ஆர்சனிக் முதலான இவை பல வகைகளில் உடலுக்கு ஊறு விளைவிக்கக் கூடியவை. இதனாலேயே பெட்ரோலில் உள்ள காரீயத்தை (Lead) நீக்கிய பின்பே (சுற்று சூழல் மாசு படுவதை தடுக்க) பயன்படுத்த வேண்டும் என்று இப்போது சட்டம் இயற்றப் பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாட்டு மருந்துகளை பரிசோதனை செய்து பார்த்ததில் அவற்றில் பூச்சிக் கொல்லி மருந்துகள், தாது உப்புகள், இன்னும் சிலவற்றில் வெளியே குறிப்பிடாமல் ஆங்கில மருந்துகளும் (உதாரணமாக சர்க்கரை நோய்க்கென்று உள்ள நாட்டு மருந்தில் டயோனில் எனப்படும் ஆங்கில மருந்தையே கலப்படம் செய்வது) உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டு மருந்துகளை சாப்பிட்டதனால் சிறுநீரகம், ஈரல், இரத்த அணுக்களின் எண்ணிக்கை இவை தீவிரமாக பாதிக்கப்பட்டு வைத்தியம் பலனின்றி இறந்தவர்கள் பலர் உண்டு. சிலருக்கு புற்று நோய் கூட வந்துள்ளது. இது இங்கு மட்டும் அல்ல. சமீபத்தில் பெல்ஜியம் நாட்டில் சைனா நாட்டு மருந்து சாப்பிட்டதனால் 107 பேருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சம்பவம் அந்த நாட்டையே உலுக்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சன் டி.வி.யில் சிங்கப்பூரில் உடல் இளைக்க ஒரு நாட்டு மருந்தை சாப்பிட்ட ஒரு இளம் தமிழ் பெண்மணி கல்லீரல் பாதிப்பால் உயிர் இழந்தார் என்பதையும் வேறொரு சிங்கப்பூர் டி.வி.நடிகை அதே மருந்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து உயிர் பிழைத்திருப்பதும் மற்றும் பலர் கடுமையான கல்லீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதும் உங்களில் பலர் பார்த்திருக்கக் கூடும்.
பல மாதங்களுக்கு முன்பு ஹிண்டு பத்திரிக்கையில் சர்க்கரை வியாதியை குணப்படுத்துவதாக ஒரு நாட்டு மருத்துவர் கொடுத்த லேகியத்தை சாப்பிட்டவர் ஒருவர் இரத்த சோக நோய் வந்து வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை சென்று பரிசோதித்ததில் அவருக்கு இரத்தத்தில் காரீயத்தின் அளவு மிக அதிகமாக உள்ளது காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டு அதன் காரணத்தை ஆராய்ந்ததில் அவர் சாப்பிட்ட நாட்டு மருந்தே காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் அவருக்கு நஷ்டஈடு வழங்க அந்த நாட்டு வைத்தியருக்கு உத்தரவிடப்பட்டது. நாட்டு மருத்துவம் பார்த்து அதனால் உடல் நலச் சீர்கேடுகள் ஏற்பட்டாலும் நீதிமன்றத்தை அணுகலாம் என்பதே இன்னும் மக்களில் பலபேருக்கு தெரியவில்லை.
நாட்டு மருந்துகளால் ஏற்படும் தீய விளைவுகள் மூன்று வகையானவை.
1. நாட்டு மருந்துகள், அவற்றில் உள்ள கலப்படங்களால் நேரடியாக உடல் நலம் பாதிப்பு.
2. ஆங்கில மருந்துகளோடு இவற்றை எடுத்துக் கொள்ளும் போது அவை ஆங்கில மருந்துகளின் செயல் திறனை பாதிப்பதால் உண்டாகும் விளைவுகள்.
3. முக்கியமாக நன்கு பலனளிக்கக் கூடியதாக நிரூபிக்கப்பட்ட ஆங்கில வைத்தியங்களை தவிர்த்து இத்தகு போலி வைத்தியங்களை நாடுவதால் வரும் கால தாமதத்தால் ஏற்படும் பண விரையம், கால விரையம், மன உளைச்சல், பின்னர் ஆங்கில வைத்தியத்திலும் சரி செய்ய இயலாத அளவு உடல் நலக் கேடு.
சிறுநீரக நோயாளிகள் - நாட்டு மருந்துகள்
பெரும்பாலான சிறுநீரக நோயாளிகள் உயர் இரத்த அழுத்தம், இருதய வியாதி, இரத்த சோகை முதலான பல வியாதிகளுடன் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டி இருக்கும். இவர்கள் நாட்டு மருந்துகளை உபயோகிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
நாட்டு மருந்துகளின் உட்பொருட்கள் யாவை? அவைகளின் தரம் உறுதி செய்யப்பட்டதா போன்ற கேள்விகளுக்கு எப்போதுமே பதில் இல்லை. ஏனென்றால் அரசாங்கத்தின் தரக்கட்டுப்பாட்டுக்கு இவற்றை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. இதனால் இவற்றின் சுத்தம், பாதுகாப்பு, அதன் விளம்பரப் படுத்தப்படும் பயன் மற்றும் செயல் திறன் இவற்றை நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் முன்பு பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களும் தேவையும் இல்லை.
நாள்பட்ட நிரந்தர சிறுநீரக செயலிழப்பு (CHRONIC KIDNEY FAILURE) என்று கண்டு பிடிக்கப்பட்டவர்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் இந்த நோய் குணமாகாது என்றாலும் கட்டுபடுத்தி வைக்கலாம் என்று கூறப்படும் போது அதை அவர்களின் உள்மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. எந்த நோய் என்றாலும் அதை முழுமையாக குணப்படுத்த வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு. ஆனால் ஆங்கில மருத்துவர்கள் முடியாததை முடியும் என்ற கூறுவதில்லை.
ஆனால் சில இயற்கை வைத்திய நிபுணர்கள் இது போல் உள்ள நோய்களை மற்றும் எடுத்துக் கொண்டு (உதாரணமாக-சர்க்கரை வியாதி, கிட்னி ஃபெயில்யர், புற்று நோய், நாள்பட்ட மூட்டு வலி, ஆஸ்த்மா, சில தோல் வியாதிகள்) அவற்றை முழுமையாக குணமாக்குவதாக உத்திரவாதம் அளிக்கின்றனர். (இவர்கள் ஆங்கில வைத்தியத்தில் முழுமையாக சரி செய்யக் கூடிய வியாதிகளை கண்டு கொள்வதில்லை). இவர்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி செல்லும் அப்பாவி மக்களிடம் மருந்துகளையும் தாங்களே தயாரித்து கொடுப்பதாக சொல்லி பல ஆயிரக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொள்ளுகின்றனர். இவர்களுக்கு படிக்காத பாமர மக்களின் அறியாமையும் சில படித்தவர்களின் பயமுமே மூலதனம்.
இவ்வாறு செலவு செய்தும் நோய் குணமாகாத போது ஏமாற்றப்பட்ட மக்கள் யாரும் அவர்களிடமேயோ அல்லது நீதிமன்றங்களிலோ முறையிடுவதில்லை என்பது இத்தகையவர்களுக்கு மிகவும் சாதகமாக போய் விடுகின்றது.
சிறுநீரக வியாதிகளில் ஆரம்ப நிலைகளில் சிலருக்கு முகம், கை, கால் வீக்கம் இருக்கும். சில நாட்டு மருந்துகள் சிறநீரின் அளவை பெருக்கி இந்த வீக்கத்தை வாங்க செய்யலாம். ஆனால் அதே மருந்துகள் சிறுநீரகங்களை மேலும் பாதித்து இரத்தத்தில் யூரியா, கிரியேட்டின் இவற்றை வேகமாக அதிகரித்து வெகு சீக்கிரத்தில் டயாலிசிஸ் அல்லது சிறநீரக மாற்று சிகிச்சைக்கு நோயாளியை கொண்டு செல்வது பல முறை நடந்து இருக்கின்றது.
கிட்னி ஃபெயில்யர் நோயாளிகள் பொட்டாசியம் என்ற உப்பின் அளவை உணவில் குறைக்க பழம், இளநீர் இவற்றை தவிர்க்கும் படியும், காய்கறிகளை வேக வைத்து நீர் வடி கட்டி பொட்டாசியம் நீக்கி பயன் படுத்தவும் அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் நிறைய மூலிகைகள் அப்படியே பச்சையாக மருந்துகளாக ஆக்கப்படுவதால் அவற்றில் பொட்டாசியம் அதிகம் இருக்கும். இதனால் சிறுநீரக நோயாளியின் உயிருக்கே ஆபத்து.
டயாலிசிஸ் செய்து கொள்பவர்கள் இரத்தம் உறையாமல் இருக்க ஹெபாரின் என்ற மருந்து டயாலிசிஸ் செய்யும் போது செலுத்தப்படுவார்கள். சில நாட்டு மருந்துகள் மேலும் இரத்தத்தின் உறைவுத்தன்மையை பாதிக்க கூடியவை. இவை இரண்டும் சேரும் போது அதிக அளவு இரத்தப்போக்கு ஏற்பட்டு இரத்த சேதம் ஏற்படலாம்.
சிறுநீரமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒருவர் உடம்பின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறப்பட்ட ஒரு நாட்டு மருந்தை எடுத்துக் கொண்டதனால் மிக பயங்கர விளைவுகள் உண்டாகி மாற்றப்பட்ட சிறுநீரகம் கெட்டு உயிர் இழந்த சம்பவம் உண்டு.
கிட்னி ஃபெயில்யர் என்று தெரிந்ததும் பலரும் அதற்கு இனி மேல் டயாலிசிஸ் சிகிச்சை மட்டுமே உண்டு அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சைதான் என்று தாங்களாகவே முடிவு செய்து கொள்கின்றனர். கிட்னி ஃபெயில்யரிலும் முழுவதும் சரியாகக் கூடியவையும் உண்டு. சில சமயம் டயாலிசிஸ் சிகிச்சையை பல வருடங்களுக்கு தள்ளிபோடவும் முடியும். அதில் சிலருக்கு தொடர்ந்து டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சைதான் என்று சிறுநீரக மருத்துவரால் முடிவு செய்யப்படும் போது நோய் இனி சரி செய்ய முடியாத அளவிற்கு முற்றி விட்டது என்று தான் அர்த்தம். எனவே அதை ஏற்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட சிகிச்சைகளை மேற்கொள்வதே சால சிறந்தது. அதை விட்டு இத்தகைய போலி வைத்தியங்களின் மூலம் பண விரையம் மட்டுமல்ல. பொன்னான காலமும் வீணாகி நோயாளியின் உடல் நிலை எந்த வைத்தியத்திலும் சரி செய்ய முடியாதபடி கெட்டு விடக் கூடும்.
எனவே எந்த நோயாளியாக இருந்தாலும் முக்கியமாக சிறுநீரக நோயாளிகள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நாட்டு மருந்துகளை அறவே தவிர்ப்பது நன்று.
நமது நாட்டில் பல போர்களுக்கு அங்கில மருந்துகளின் மேல் தவறான அபிப்பிராயங்களும் நம்பிக்கையும் நிலவுகின்றது. முக்கியமாக அதன் பக்க விளைவுகளை பற்றி. குறிப்பாக படித்த மக்களிடம் இது சற்றே அதிகம். இதற்கு பிரபல பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் அடிக்கடி வரும் உடல்நல சம்பந்தமான கட்டுரைகளும் நிகழ்சிகளும் ஒரு காரணம். மேலும் சில பிரபலமானவர்கள் இயற்கை வைத்தியம் மற்றும் நாட்டு வைத்தியங்களின் உயர்வை விளம்பரப்படுத்துவதும் இன்னொரு காரணம். ஆனால் இந்த இயற்கை வைத்திய பிரியர்கள் நடைமுறை வாழ்க்கையில் மிகுந்த புத்திசாலிகள். அவர்களுக்கோ அவர் குடும்பத்தினருக்கோ பெரிய உடல் நலக்குறைவு என்றால் இவர்கள் நாடுவது ஆங்கில வைத்தியத்தைத்தான். உபதேசம் ஊருக்குத்தான். உதாரணமாக தினந்தோறும் ஒரு பிரபலமான தனியார் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் காலை இந்த நாள் இனிய நாளாக இயற்கை வைத்தியத்தின் பெருமைகளை ஓஹோ என்று உயர்த்தி சொல்லிக் கொண்டிருந்த ஒரு பிரபல மனிதர் முற்றிய சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டு பெரிடோனியல் டயாலிசிஸ் எனப்படும் சிகிச்சையால் உயிர் வாழ்ந்து சமீபத்தில் இறந்தும் விட்டது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.
நாம் மக்களிடையே நாட்டு மருந்துகள் (ஆயுர்வேதம், யுனானி, சித்தா முதலானவை) இயற்கையாக கிடைக்கும் செடி, கொடி, வேர்களான மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படுவதால் அவைகள் உடலுக்கு எந்த கெடுதலும் செய்யாது என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. மேலும் இவை நம் நாட்டில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருவதும் இவற்றின் கெடுதலின்மைக்கும் திறனுக்கும் சான்றாக எடுத்து கொள்ளப்படுகின்றது,
ஆனால் காலம் காலமாக பிறரை கொல்வதற்கும் தற்கொலை செய்து கொள்ள, சூனியம் வைப்பது என்று கொடிய நோய்களுக்கு ஒருவரை உள்ளாக்குவது போன்ற காரியங்களுக்கும் செடி, கொடிகளிலிருந்து தயாரித்த விஷங்கள்தான் உபயோகப்படுத்தப்பட்டு வந்துள்ளன என்பது பல பேருக்கு தெரிவதில்லை.
நாட்டு மருந்துகளில் பலவற்றில் உலோக உப்புகள் சேர்க்கப்படுகின்றன. காரீயம், பாதரசம், ஆர்சனிக் முதலான இவை பல வகைகளில் உடலுக்கு ஊறு விளைவிக்கக் கூடியவை. இதனாலேயே பெட்ரோலில் உள்ள காரீயத்தை (Lead) நீக்கிய பின்பே (சுற்று சூழல் மாசு படுவதை தடுக்க) பயன்படுத்த வேண்டும் என்று இப்போது சட்டம் இயற்றப் பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாட்டு மருந்துகளை பரிசோதனை செய்து பார்த்ததில் அவற்றில் பூச்சிக் கொல்லி மருந்துகள், தாது உப்புகள், இன்னும் சிலவற்றில் வெளியே குறிப்பிடாமல் ஆங்கில மருந்துகளும் (உதாரணமாக சர்க்கரை நோய்க்கென்று உள்ள நாட்டு மருந்தில் டயோனில் எனப்படும் ஆங்கில மருந்தையே கலப்படம் செய்வது) உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டு மருந்துகளை சாப்பிட்டதனால் சிறுநீரகம், ஈரல், இரத்த அணுக்களின் எண்ணிக்கை இவை தீவிரமாக பாதிக்கப்பட்டு வைத்தியம் பலனின்றி இறந்தவர்கள் பலர் உண்டு. சிலருக்கு புற்று நோய் கூட வந்துள்ளது. இது இங்கு மட்டும் அல்ல. சமீபத்தில் பெல்ஜியம் நாட்டில் சைனா நாட்டு மருந்து சாப்பிட்டதனால் 107 பேருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சம்பவம் அந்த நாட்டையே உலுக்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சன் டி.வி.யில் சிங்கப்பூரில் உடல் இளைக்க ஒரு நாட்டு மருந்தை சாப்பிட்ட ஒரு இளம் தமிழ் பெண்மணி கல்லீரல் பாதிப்பால் உயிர் இழந்தார் என்பதையும் வேறொரு சிங்கப்பூர் டி.வி.நடிகை அதே மருந்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து உயிர் பிழைத்திருப்பதும் மற்றும் பலர் கடுமையான கல்லீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதும் உங்களில் பலர் பார்த்திருக்கக் கூடும்.
பல மாதங்களுக்கு முன்பு ஹிண்டு பத்திரிக்கையில் சர்க்கரை வியாதியை குணப்படுத்துவதாக ஒரு நாட்டு மருத்துவர் கொடுத்த லேகியத்தை சாப்பிட்டவர் ஒருவர் இரத்த சோக நோய் வந்து வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை சென்று பரிசோதித்ததில் அவருக்கு இரத்தத்தில் காரீயத்தின் அளவு மிக அதிகமாக உள்ளது காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டு அதன் காரணத்தை ஆராய்ந்ததில் அவர் சாப்பிட்ட நாட்டு மருந்தே காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் அவருக்கு நஷ்டஈடு வழங்க அந்த நாட்டு வைத்தியருக்கு உத்தரவிடப்பட்டது. நாட்டு மருத்துவம் பார்த்து அதனால் உடல் நலச் சீர்கேடுகள் ஏற்பட்டாலும் நீதிமன்றத்தை அணுகலாம் என்பதே இன்னும் மக்களில் பலபேருக்கு தெரியவில்லை.
நாட்டு மருந்துகளால் ஏற்படும் தீய விளைவுகள் மூன்று வகையானவை.
1. நாட்டு மருந்துகள், அவற்றில் உள்ள கலப்படங்களால் நேரடியாக உடல் நலம் பாதிப்பு.
2. ஆங்கில மருந்துகளோடு இவற்றை எடுத்துக் கொள்ளும் போது அவை ஆங்கில மருந்துகளின் செயல் திறனை பாதிப்பதால் உண்டாகும் விளைவுகள்.
3. முக்கியமாக நன்கு பலனளிக்கக் கூடியதாக நிரூபிக்கப்பட்ட ஆங்கில வைத்தியங்களை தவிர்த்து இத்தகு போலி வைத்தியங்களை நாடுவதால் வரும் கால தாமதத்தால் ஏற்படும் பண விரையம், கால விரையம், மன உளைச்சல், பின்னர் ஆங்கில வைத்தியத்திலும் சரி செய்ய இயலாத அளவு உடல் நலக் கேடு.
சிறுநீரக நோயாளிகள் - நாட்டு மருந்துகள்
பெரும்பாலான சிறுநீரக நோயாளிகள் உயர் இரத்த அழுத்தம், இருதய வியாதி, இரத்த சோகை முதலான பல வியாதிகளுடன் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டி இருக்கும். இவர்கள் நாட்டு மருந்துகளை உபயோகிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
நாட்டு மருந்துகளின் உட்பொருட்கள் யாவை? அவைகளின் தரம் உறுதி செய்யப்பட்டதா போன்ற கேள்விகளுக்கு எப்போதுமே பதில் இல்லை. ஏனென்றால் அரசாங்கத்தின் தரக்கட்டுப்பாட்டுக்கு இவற்றை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. இதனால் இவற்றின் சுத்தம், பாதுகாப்பு, அதன் விளம்பரப் படுத்தப்படும் பயன் மற்றும் செயல் திறன் இவற்றை நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் முன்பு பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களும் தேவையும் இல்லை.
நாள்பட்ட நிரந்தர சிறுநீரக செயலிழப்பு (CHRONIC KIDNEY FAILURE) என்று கண்டு பிடிக்கப்பட்டவர்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் இந்த நோய் குணமாகாது என்றாலும் கட்டுபடுத்தி வைக்கலாம் என்று கூறப்படும் போது அதை அவர்களின் உள்மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. எந்த நோய் என்றாலும் அதை முழுமையாக குணப்படுத்த வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு. ஆனால் ஆங்கில மருத்துவர்கள் முடியாததை முடியும் என்ற கூறுவதில்லை.
ஆனால் சில இயற்கை வைத்திய நிபுணர்கள் இது போல் உள்ள நோய்களை மற்றும் எடுத்துக் கொண்டு (உதாரணமாக-சர்க்கரை வியாதி, கிட்னி ஃபெயில்யர், புற்று நோய், நாள்பட்ட மூட்டு வலி, ஆஸ்த்மா, சில தோல் வியாதிகள்) அவற்றை முழுமையாக குணமாக்குவதாக உத்திரவாதம் அளிக்கின்றனர். (இவர்கள் ஆங்கில வைத்தியத்தில் முழுமையாக சரி செய்யக் கூடிய வியாதிகளை கண்டு கொள்வதில்லை). இவர்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி செல்லும் அப்பாவி மக்களிடம் மருந்துகளையும் தாங்களே தயாரித்து கொடுப்பதாக சொல்லி பல ஆயிரக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொள்ளுகின்றனர். இவர்களுக்கு படிக்காத பாமர மக்களின் அறியாமையும் சில படித்தவர்களின் பயமுமே மூலதனம்.
இவ்வாறு செலவு செய்தும் நோய் குணமாகாத போது ஏமாற்றப்பட்ட மக்கள் யாரும் அவர்களிடமேயோ அல்லது நீதிமன்றங்களிலோ முறையிடுவதில்லை என்பது இத்தகையவர்களுக்கு மிகவும் சாதகமாக போய் விடுகின்றது.
சிறுநீரக வியாதிகளில் ஆரம்ப நிலைகளில் சிலருக்கு முகம், கை, கால் வீக்கம் இருக்கும். சில நாட்டு மருந்துகள் சிறநீரின் அளவை பெருக்கி இந்த வீக்கத்தை வாங்க செய்யலாம். ஆனால் அதே மருந்துகள் சிறுநீரகங்களை மேலும் பாதித்து இரத்தத்தில் யூரியா, கிரியேட்டின் இவற்றை வேகமாக அதிகரித்து வெகு சீக்கிரத்தில் டயாலிசிஸ் அல்லது சிறநீரக மாற்று சிகிச்சைக்கு நோயாளியை கொண்டு செல்வது பல முறை நடந்து இருக்கின்றது.
கிட்னி ஃபெயில்யர் நோயாளிகள் பொட்டாசியம் என்ற உப்பின் அளவை உணவில் குறைக்க பழம், இளநீர் இவற்றை தவிர்க்கும் படியும், காய்கறிகளை வேக வைத்து நீர் வடி கட்டி பொட்டாசியம் நீக்கி பயன் படுத்தவும் அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் நிறைய மூலிகைகள் அப்படியே பச்சையாக மருந்துகளாக ஆக்கப்படுவதால் அவற்றில் பொட்டாசியம் அதிகம் இருக்கும். இதனால் சிறுநீரக நோயாளியின் உயிருக்கே ஆபத்து.
டயாலிசிஸ் செய்து கொள்பவர்கள் இரத்தம் உறையாமல் இருக்க ஹெபாரின் என்ற மருந்து டயாலிசிஸ் செய்யும் போது செலுத்தப்படுவார்கள். சில நாட்டு மருந்துகள் மேலும் இரத்தத்தின் உறைவுத்தன்மையை பாதிக்க கூடியவை. இவை இரண்டும் சேரும் போது அதிக அளவு இரத்தப்போக்கு ஏற்பட்டு இரத்த சேதம் ஏற்படலாம்.
சிறுநீரமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒருவர் உடம்பின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறப்பட்ட ஒரு நாட்டு மருந்தை எடுத்துக் கொண்டதனால் மிக பயங்கர விளைவுகள் உண்டாகி மாற்றப்பட்ட சிறுநீரகம் கெட்டு உயிர் இழந்த சம்பவம் உண்டு.
கிட்னி ஃபெயில்யர் என்று தெரிந்ததும் பலரும் அதற்கு இனி மேல் டயாலிசிஸ் சிகிச்சை மட்டுமே உண்டு அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சைதான் என்று தாங்களாகவே முடிவு செய்து கொள்கின்றனர். கிட்னி ஃபெயில்யரிலும் முழுவதும் சரியாகக் கூடியவையும் உண்டு. சில சமயம் டயாலிசிஸ் சிகிச்சையை பல வருடங்களுக்கு தள்ளிபோடவும் முடியும். அதில் சிலருக்கு தொடர்ந்து டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சைதான் என்று சிறுநீரக மருத்துவரால் முடிவு செய்யப்படும் போது நோய் இனி சரி செய்ய முடியாத அளவிற்கு முற்றி விட்டது என்று தான் அர்த்தம். எனவே அதை ஏற்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட சிகிச்சைகளை மேற்கொள்வதே சால சிறந்தது. அதை விட்டு இத்தகைய போலி வைத்தியங்களின் மூலம் பண விரையம் மட்டுமல்ல. பொன்னான காலமும் வீணாகி நோயாளியின் உடல் நிலை எந்த வைத்தியத்திலும் சரி செய்ய முடியாதபடி கெட்டு விடக் கூடும்.
எனவே எந்த நோயாளியாக இருந்தாலும் முக்கியமாக சிறுநீரக நோயாளிகள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நாட்டு மருந்துகளை அறவே தவிர்ப்பது நன்று.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நாட்டு மருந்துகளும் சிறுநீரகமும்
மிக மிக மிக பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: நாட்டு மருந்துகளும் சிறுநீரகமும்
சங்கவி wrote:மிக மிக மிக பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» இரத்தக் கொதிப்பும் சிறுநீரகமும்
» வலி நிவாரணி மருந்துகளும் சிறுநீரகங்களும்
» நாட்டு நடப்பு
» நாட்டு நடப்பு
» நாட்டு நடப்பு..
» வலி நிவாரணி மருந்துகளும் சிறுநீரகங்களும்
» நாட்டு நடப்பு
» நாட்டு நடப்பு
» நாட்டு நடப்பு..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|