தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனேby அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 1:20 pm
» இந்தியாவில் இருக்கிறோமா…! – ஒரு நிமிட கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:38 pm
» கருணை அப்டேட்ஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:37 pm
» மரியாதை ! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:36 pm
» தினம் ஒரு மூலிகை- கொடி கள்ளி (அ) பென்சில் கள்ளி
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:34 pm
» ரூ 198-ல் ஒரு மாதத்த்துக்கு ஃபிராட்பேண்ட்…
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:32 pm
» தகுதி இல்லாத குடும்பத் தலைவி! -வலை வீச்சில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:30 pm
» “நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:25 pm
» அறிந்த தலம்-அறியாத தகவல்கள் -திருவாமாத்தூர்
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 3:47 pm
» ஹைகூ
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:55 pm
» பறவையின் கதை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:53 pm
» படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:52 pm
» நட்சத்திரம் உதிரும் வரை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:50 pm
» பயணம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:49 pm
» கடன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:47 pm
» மன்னிப்புக் கேட்கும் கடவுள் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:44 pm
» நிம்மதிச் சன்னதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:34 pm
» கற்கால மனிதன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:31 pm
» எட்டாவது அதிசயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:29 pm
» செங்களம் -இணையத்தொடர் (விமர்சனம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:23 pm
» குடிமகான் – சினிமா விமர்சனம் (குமுதம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:22 pm
» ரேசர் -திரைப்படம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:20 pm
» ஏப் 1-ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:19 pm
» மகேஷ்பாபு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:18 pm
» பருந்தாகுது ஊர்க்குருவி- விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:17 pm
» வீரப்பனின் மகள் அறிமுகமாகும் மாவீரன் பிள்ளை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:16 pm
» செங்களம் – விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:15 pm
» கப்ஜா – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:14 pm
» உலகை வெல்லலாம்! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:13 pm
» குறைகளை பிறரிடம் தேடாதே...!
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:12 pm
» மகாபாரதத்தில் ஒரு காட்சி
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:10 pm
» நம்பிக்கையே வாழ்க்கை! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:09 pm
» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 4:52 pm
» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 4:45 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm
» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm
» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm
எங்கே போயிற்று எங்கள் கிராமம்
2 posters
Page 1 of 1
எங்கே போயிற்று எங்கள் கிராமம்
எங்கே போயிற்று எங்கள் கிராமம்
பாவலர் கருமலைத்தமிழாழன்
பனிபடர்ந்த இளங்காலை பச்சைப் பட்டாய்ப்
படர்ந்திருந்த பசும்வயல்கள் கடலைப் போன்றே
இனிமையுடன் அலைதந்த பரந்த ஏரி
இன்னிசையில் மயக்கிநின்ற குயிலின் தோப்பு
அணியணியாய் எழில்மலர்கள் பூத்த தோட்டம்
அனைவரையும் நடுங்கவைத்த குளிரின் போர்வை
மனிதநேயம் மிக்கிருந்த மனிதர் கூட்டம்
மரங்களைப்போல் மொட்டையாகிப் போன தின்று !
ஒற்றையடி மண்பாதை கமுகும் தெங்கும்
ஓங்கிநின்று தென்றலொடு மொழிந்த பேச்சும்
கற்றைகுழல் கார்முகில்கள் கூடிக் கூடிக்
கரைந்ததனால் நிறைந்திருந்த குளங்கள் கேணி
சுற்றிசுற்றி உடன்வந்த ஆடு மாடு
சுந்திரமாய்க் கையிலுண்ட கோழி குஞ்சு
வற்றாதப் பாசத்தால் வாழ்ந்த சுற்றம்
வறிதாகி வெறுமையெனப் போன தின்று !
குடிசைகளின் முற்றத்தில் மாவுக் கோலம்
கிருமிகளை அழிப்பதற்கே மெழுகும் சாணம்
வடிக்கின்ற கைக்குத்தல் அரிசிக் கஞ்சி
வஞ்சனைகள் இல்லாத வெள்ளைப் பேச்சு
நடிப்பறியா உண்மையான உடலு ழைப்பு
நல்லதற்கும் கெட்டதற்கும் உதவும் நெஞ்சு
படிப்பில்லா பட்டறிவின் மேதைத் தன்மை
பழங்கதையாய்க் கனவாகப் போன தின்று !
-1-
களைபிடிங்கி நாற்றுநட்டுப் பாட்டுப் பாடி
களத்துமேட்டில் நெல்லடித்து மூட்டை கட்டி
வனைந்தகொம்பு மாட்டுவண்டி மேலே யேற்றி
வான்நிலவு வெளிச்சத்தில் வீட டைந்து
கிளையசையும் மரத்தடியின் கட்டில் மீது
கிழத்திக்கை வெற்றிலையின் சுவையில் மூழ்கக்
களைப்புதனை நீக்கிவிட்ட தூய்மை காற்று
காலத்தால் மாறியெங்கோ போன தின்று !
நுங்குநுரை யோடுவரும் புதுவெள் ளத்தில்
நீந்திவீர சாகசங்கள் மெச்சச் செய்து
செங்கரும்பு தோட்டத்துள் அத்தைப் பெண்ணின்
செவ்விதழில் தேனள்ளிக் குடித்துக் காய்த்துத்
தொங்குகின்ற மாங்கனிகள் பறித்துக் கங்குல்
தெருக்கூத்தில் மாமனறி யாமல் தந்து
நங்கையொடு வரப்புதனில் நடந்த காட்சி
நனவேட்டின் சுவடுகளாப் போன தின்று !
குருவிகளின் கூடுகளும் கீச்கீச் சென்று
குலவுவதும் மரத்தினிலே கொத்திக் கொத்தி
அருங்கிளிகள் விட்டபழம் சுவையே யென்று
அணில்கடித்துத் தின்னுவதும் செடியில் பூத்து
அருகழைக்கும் வாசமலர் அழைப்பை ஏற்று
அழகாகப் பறந்துவரும் பட்டாம் பூச்சி
கருவண்டின் ரீங்காரம் தும்பிக் கூட்டம்
கவிதைக்குள் கிராமத்தைப் புதைத்த தின்று !
-2-
விளைநிலங்கள் கூறுபோட்டு விற்க லாச்சி
விண்முட்டும் மாடிகளாய் முளைக்க லாச்சு
களைகளெனக் கம்பிவேலி வளர லாச்சு
கபடுகளும் கயமைகளும் பெருக லாச்சு
விளைந்திருந்த மனிதநேயம் புதைய லாச்சு
வீண்பகட்டு நாகரீகம் படர லாச்சு
துளைவிழுந்த ஓசோனின் படலம் போன்றே
தூய்மையிலா புதியமாற்றம் வந்த தின்று !
மண்வாசத் தெருவினிலே தாரின் நாற்றம்
மலர்வாசக் காற்றினிலே புகையின் நாற்றம்
கண்மகிழ்ந்த தோப்பினிலே தொழிலின் கூடம்
காதினித்த புள்ளொலியில் சங்கின் ஓலம்
தண்ணீரில் தொழிற்சாலைக் கழிவின் தேக்கம்
தரையெல்லாம் சாக்கடையின் கால்வாய் ஓட்டம்
வெண்ணிலவாய்க் குளிர்ந்திருந்த சுற்றுச் சூழல்
வெப்பத்தால் மாசாகிக் கெட்ட தின்று !
புதுமுகங்கள் பழகுதற்கே அஞ்சு கின்ற
புதுமனங்கள் பார்க்கின்ற போது மட்டும்
வெதுவெதுப்பாய்ப் புன்னகைக்கும் வெளிமு கங்கள்
விஞ்ஞான வளர்ச்சியிலே குதித்து வந்த
புதுமைகளின் தோரணங்கள் எந்தி ரங்கள்
புரிகின்ற அதிசயங்கள் மனிதர் கூட
அதுவான அவலங்கள் செக்கு மாட்டின்
அரிதாரம் பூண்டதுவே கிராம மின்று !
-3-
தொடர்வண்டி பேருந்து பலவாய் ஆகி
தொடர்கின்ற பயணங்கள் எளிதாய் ஆகி
நடக்கின்ற விபத்தாலே குருதி சிந்தி
நாள்தோறும் உயிர்பலிகள் மலிவாய் ஆகி
இடநெருக்கம் மக்கள்தம் பெருக்க மாகி
இயல்பான நடைமுறைகள் வேக மாகி
கடல்நடுவில் அமைதியென இருந்த வாழ்வில்
கரையலையின் ஆரவாரம் வந்த தின்று !
வன்முறைகள் ஆபாச விளம்ப ரங்கள்
வகைவகையாய்க் கல்விதனை ஏலம் போட்டே
நன்முறையில் விற்கின்ற கலைக்கூ டங்கள்
நடுப்பகலில் கற்பழிப்புக் கலவ ரங்கள்
புன்மைகளின் தேரோட்டம் பொழுது போக்காய்ப்
புதுமுறையில் கணினிகளில் சூதாட் டங்கள்
கன்றுயென வைக்கோலைக் காட்டிப் பாலைக்
கறக்கின்ற போலிகளே நிறைந்த தின்று !
அலங்கார வண்டிகளின் அணிவ குப்பு
அரசியலின் தில்லுமுல்லு வெற்றுப் பேச்சு
இலஞ்சத்தின் கோரமான தாண்ட வங்கள்
இலவுகாத்த கிளிகளென ஏழை மக்கள்
மலர்ந்துள்ள புதியமாற்றம் எல்லாம் இங்கே
மணமில்லா மலர்களென காட்சி நல்க
புலராதோ நற்காலம் என்ற ஏக்கப்
பெருமூச்சில் தகிக்கிறது கிராம மின்று !
-4-
பாவலர் கருமலைத்தமிழாழன்
பனிபடர்ந்த இளங்காலை பச்சைப் பட்டாய்ப்
படர்ந்திருந்த பசும்வயல்கள் கடலைப் போன்றே
இனிமையுடன் அலைதந்த பரந்த ஏரி
இன்னிசையில் மயக்கிநின்ற குயிலின் தோப்பு
அணியணியாய் எழில்மலர்கள் பூத்த தோட்டம்
அனைவரையும் நடுங்கவைத்த குளிரின் போர்வை
மனிதநேயம் மிக்கிருந்த மனிதர் கூட்டம்
மரங்களைப்போல் மொட்டையாகிப் போன தின்று !
ஒற்றையடி மண்பாதை கமுகும் தெங்கும்
ஓங்கிநின்று தென்றலொடு மொழிந்த பேச்சும்
கற்றைகுழல் கார்முகில்கள் கூடிக் கூடிக்
கரைந்ததனால் நிறைந்திருந்த குளங்கள் கேணி
சுற்றிசுற்றி உடன்வந்த ஆடு மாடு
சுந்திரமாய்க் கையிலுண்ட கோழி குஞ்சு
வற்றாதப் பாசத்தால் வாழ்ந்த சுற்றம்
வறிதாகி வெறுமையெனப் போன தின்று !
குடிசைகளின் முற்றத்தில் மாவுக் கோலம்
கிருமிகளை அழிப்பதற்கே மெழுகும் சாணம்
வடிக்கின்ற கைக்குத்தல் அரிசிக் கஞ்சி
வஞ்சனைகள் இல்லாத வெள்ளைப் பேச்சு
நடிப்பறியா உண்மையான உடலு ழைப்பு
நல்லதற்கும் கெட்டதற்கும் உதவும் நெஞ்சு
படிப்பில்லா பட்டறிவின் மேதைத் தன்மை
பழங்கதையாய்க் கனவாகப் போன தின்று !
-1-
களைபிடிங்கி நாற்றுநட்டுப் பாட்டுப் பாடி
களத்துமேட்டில் நெல்லடித்து மூட்டை கட்டி
வனைந்தகொம்பு மாட்டுவண்டி மேலே யேற்றி
வான்நிலவு வெளிச்சத்தில் வீட டைந்து
கிளையசையும் மரத்தடியின் கட்டில் மீது
கிழத்திக்கை வெற்றிலையின் சுவையில் மூழ்கக்
களைப்புதனை நீக்கிவிட்ட தூய்மை காற்று
காலத்தால் மாறியெங்கோ போன தின்று !
நுங்குநுரை யோடுவரும் புதுவெள் ளத்தில்
நீந்திவீர சாகசங்கள் மெச்சச் செய்து
செங்கரும்பு தோட்டத்துள் அத்தைப் பெண்ணின்
செவ்விதழில் தேனள்ளிக் குடித்துக் காய்த்துத்
தொங்குகின்ற மாங்கனிகள் பறித்துக் கங்குல்
தெருக்கூத்தில் மாமனறி யாமல் தந்து
நங்கையொடு வரப்புதனில் நடந்த காட்சி
நனவேட்டின் சுவடுகளாப் போன தின்று !
குருவிகளின் கூடுகளும் கீச்கீச் சென்று
குலவுவதும் மரத்தினிலே கொத்திக் கொத்தி
அருங்கிளிகள் விட்டபழம் சுவையே யென்று
அணில்கடித்துத் தின்னுவதும் செடியில் பூத்து
அருகழைக்கும் வாசமலர் அழைப்பை ஏற்று
அழகாகப் பறந்துவரும் பட்டாம் பூச்சி
கருவண்டின் ரீங்காரம் தும்பிக் கூட்டம்
கவிதைக்குள் கிராமத்தைப் புதைத்த தின்று !
-2-
விளைநிலங்கள் கூறுபோட்டு விற்க லாச்சி
விண்முட்டும் மாடிகளாய் முளைக்க லாச்சு
களைகளெனக் கம்பிவேலி வளர லாச்சு
கபடுகளும் கயமைகளும் பெருக லாச்சு
விளைந்திருந்த மனிதநேயம் புதைய லாச்சு
வீண்பகட்டு நாகரீகம் படர லாச்சு
துளைவிழுந்த ஓசோனின் படலம் போன்றே
தூய்மையிலா புதியமாற்றம் வந்த தின்று !
மண்வாசத் தெருவினிலே தாரின் நாற்றம்
மலர்வாசக் காற்றினிலே புகையின் நாற்றம்
கண்மகிழ்ந்த தோப்பினிலே தொழிலின் கூடம்
காதினித்த புள்ளொலியில் சங்கின் ஓலம்
தண்ணீரில் தொழிற்சாலைக் கழிவின் தேக்கம்
தரையெல்லாம் சாக்கடையின் கால்வாய் ஓட்டம்
வெண்ணிலவாய்க் குளிர்ந்திருந்த சுற்றுச் சூழல்
வெப்பத்தால் மாசாகிக் கெட்ட தின்று !
புதுமுகங்கள் பழகுதற்கே அஞ்சு கின்ற
புதுமனங்கள் பார்க்கின்ற போது மட்டும்
வெதுவெதுப்பாய்ப் புன்னகைக்கும் வெளிமு கங்கள்
விஞ்ஞான வளர்ச்சியிலே குதித்து வந்த
புதுமைகளின் தோரணங்கள் எந்தி ரங்கள்
புரிகின்ற அதிசயங்கள் மனிதர் கூட
அதுவான அவலங்கள் செக்கு மாட்டின்
அரிதாரம் பூண்டதுவே கிராம மின்று !
-3-
தொடர்வண்டி பேருந்து பலவாய் ஆகி
தொடர்கின்ற பயணங்கள் எளிதாய் ஆகி
நடக்கின்ற விபத்தாலே குருதி சிந்தி
நாள்தோறும் உயிர்பலிகள் மலிவாய் ஆகி
இடநெருக்கம் மக்கள்தம் பெருக்க மாகி
இயல்பான நடைமுறைகள் வேக மாகி
கடல்நடுவில் அமைதியென இருந்த வாழ்வில்
கரையலையின் ஆரவாரம் வந்த தின்று !
வன்முறைகள் ஆபாச விளம்ப ரங்கள்
வகைவகையாய்க் கல்விதனை ஏலம் போட்டே
நன்முறையில் விற்கின்ற கலைக்கூ டங்கள்
நடுப்பகலில் கற்பழிப்புக் கலவ ரங்கள்
புன்மைகளின் தேரோட்டம் பொழுது போக்காய்ப்
புதுமுறையில் கணினிகளில் சூதாட் டங்கள்
கன்றுயென வைக்கோலைக் காட்டிப் பாலைக்
கறக்கின்ற போலிகளே நிறைந்த தின்று !
அலங்கார வண்டிகளின் அணிவ குப்பு
அரசியலின் தில்லுமுல்லு வெற்றுப் பேச்சு
இலஞ்சத்தின் கோரமான தாண்ட வங்கள்
இலவுகாத்த கிளிகளென ஏழை மக்கள்
மலர்ந்துள்ள புதியமாற்றம் எல்லாம் இங்கே
மணமில்லா மலர்களென காட்சி நல்க
புலராதோ நற்காலம் என்ற ஏக்கப்
பெருமூச்சில் தகிக்கிறது கிராம மின்று !
-4-
karumalaithamizhazhan- ரோஜா
- Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 71
Location : Hosur. Tamil nadu, India
Re: எங்கே போயிற்று எங்கள் கிராமம்
அருமை தொடருங்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

» எங்கே போயிற்று, பெண் விடுதலை!
» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) - கவிஞர் இரா. இரவி
» எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காதத் தமிழென்றுச் சங்கே முழங்கு...
» இறைவன் எங்கே? இறை தூதர்கள் எங்கே?
» கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) - கவிஞர் இரா. இரவி
» எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காதத் தமிழென்றுச் சங்கே முழங்கு...
» இறைவன் எங்கே? இறை தூதர்கள் எங்கே?
» கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|