தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சம்மதம் தா கற்பகத்தருவே

2 posters

Go down

சம்மதம்  தா  கற்பகத்தருவே Empty சம்மதம் தா கற்பகத்தருவே

Post by karumalaithamizhazhan Thu Oct 30, 2014 8:16 pm

சம்மதம்   தா   கற்பகத்தருவே
               பாவலர்  கருமலைத்தமிழாழன்
 
பூத்தமுகத்    தாமரையில்    பூசும்    மதியெழிலில்
கோத்த    அனிச்சயிதழ்ப்    புன்னகையில் – மாத்தமிழே
நேஞ்சம்    நிறைந்தாய்    இரவெல்லாம்    உன்நினைவில்
தஞ்சம்    புகுந்தேன்    தவித்து !
 
மொட்டவிழ்ந்த    பூமரமே    மொய்க்கும்    விழிவண்டைக்
கட்டவிழா    கொங்கைக்குள்    கட்டிவைத்த – கற்பகமே
பட்டத்    தழகேஉன்    பார்வைக்    கடிபணிந்தேன்
எட்டத்தில்    கொல்லுவதோ    நின்று !
 
பாரென்னும்    பூம்பருவம்    பக்கம்வா    வென்னுமிதழ்
தேரென்னும்    மேனிதழு    வென்றுரைக்கச் – சீரென்னும்
நாணம்    இடையில்    தலைகவிழ்க்க    வேகின்றேன்
காமன்    கணைமலரால்    காண் !
 
கச்சை    நகில்மூடிக்    காணும்    விழியீர்த்தே
இச்சை    பெருக    இடையசைத்தாய் – நச்சிமனம்
அன்ன    நடைபின்னே    அன்பு    குடைபிடித்தேன்
என்னைக்   குழைவாகத்    தைத்து !
 
கண்ணின்    இமைக்குள்ளே    காதற்பூ    உன்முகத்தை
தண்ணீருள்    மீனாகக்    காத்ததனால் – மண்ணில்
குருடாய்    நடக்கின்றேன்    துள்ளும்பூ     மானே
திறந்தால்நீ    போயிடுவாய்    என்று !
 
 
 
கண்திறந்த    போதே    வரும்கனவு    நாயகியே
என்னிதய   ஏக்கத்தை    எண்ணிப்பார் – உன்மீது
வீசுமிளங்    காற்றுவந்து    பட்டாலும்    என்மேனி
தீசுமந்து    போவதுதான்    ஏன் !
 
சந்தனத்    தேன்கலசம்    சாயாத    கோபுரத்தை
முந்தானை    மேகத்தால்    மூடிவரும் – சுந்தரியே
ஆலய    வாசலில்    அன்பிற்காய்    ஏங்கும்என்
கோலத்தில்    நல்லருளைக்    கூட்டு !
 
நாதம்    இயற்றும்உன்    நாமொழி    சொல்கேட்டால்
ஓதமுறு    தென்றலுக்கே    போதைவரும் – சீத
நிலவொளியும்    சொக்கிவிழும் ;  நித்திலமே    காதல்
நிலவுமொழி    நான்வாழச்    செப்பு !
 
காலைக்    கதிர்செம்மை    கண்ணில்    எடுத்துன்றன்
மாலைப்    பிறைநுதலில்    பொட்டிடுவேன் – கோதையுன்
கார்குழலின்    மீதினிலே    நட்சத்    திரப்பூவை
பார்வியக்க    வைப்பேன்    பறித்து !
 
வீட்டருகில்    வந்தபோது    வாயிற்    படிநின்றே
பாட்டிதழில்    நீசொன்ன    பாகுமொழி – கேட்டசெவி
இன்பத்தை    வேற்றொலிகள்    ஈர்த்திடாமல்    கைபொத்தி
நின்றேன்    நினைவில்    நினைத்து !
 
 
 
 
பாதம்    பெயர்க்கும்உன்    பாங்குதனைப்    பார்த்துவிட்டால்
வேத    முனிவருக்கும்    ஆசைவரும் – காதல்
ரதியாளைக்    காமனுமே    கைவிடுவான் ;   வீட்டுப்
படியிறங்கி    வாராமற்   பார் !
 
செந்தூர    மாலையிலே    சித்திரமே   நீநடந்தால்
வெந்துருகி    மாலும்    கணைதொடுப்பான் – இந்திரையின்
கண்சிவப்பில்    சாம்பலாவோம் ;   கண்மணியே    நாமிணைய
என்பார்வைக்    குள்ளே   இரு !
 
பார்வையிலே    மின்சாரம்    பாய்ச்சுகின்ற    பூச்சரமே
ஊர்சனங்கள்    மெச்சுகின்ற    அச்சாரம் – தார்சரமாய்
நான்சூட்டித்    தந்திடுவேன்    நாள்மலரே    தாகத்தைத்
தேன்ஊற்றித்    தீர்க்கவா    இன்று !
 
தங்கமே    உன்னைவர    தட்சணை    வாங்காமல்
மங்கலநாண்    இட்டு    மகிழ்விப்பேன் – இங்குலவும்
எம்மதம்     ஆனாலும்    என்னுடலின்    பாதிநீயே
சம்மதம்    உன்நாவால்    தா !
 
விண்மீன்கள்    புள்ளியிடும்    வானவில்லோ    கோலமிடும்
வெண்ணிலவும்    ஆதவனும்    தோரண – கற்பகங்கீழ்
குத்து    விளக்காய்    ஒளிகூட்டும் ;   என்னவளாய்
இத்தரையில்    நீயாகும்    போது !
karumalaithamizhazhan
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 73
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

சம்மதம்  தா  கற்பகத்தருவே Empty Re: சம்மதம் தா கற்பகத்தருவே

Post by அ.இராமநாதன் Sat Nov 01, 2014 7:38 am

[img][You must be registered and logged in to see this image.][/img]
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum