தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
சம்மதம் தா கற்பகத்தருவே
2 posters
Page 1 of 1
சம்மதம் தா கற்பகத்தருவே
சம்மதம் தா கற்பகத்தருவே
பாவலர் கருமலைத்தமிழாழன்
பூத்தமுகத் தாமரையில் பூசும் மதியெழிலில்
கோத்த அனிச்சயிதழ்ப் புன்னகையில் – மாத்தமிழே
நேஞ்சம் நிறைந்தாய் இரவெல்லாம் உன்நினைவில்
தஞ்சம் புகுந்தேன் தவித்து !
மொட்டவிழ்ந்த பூமரமே மொய்க்கும் விழிவண்டைக்
கட்டவிழா கொங்கைக்குள் கட்டிவைத்த – கற்பகமே
பட்டத் தழகேஉன் பார்வைக் கடிபணிந்தேன்
எட்டத்தில் கொல்லுவதோ நின்று !
பாரென்னும் பூம்பருவம் பக்கம்வா வென்னுமிதழ்
தேரென்னும் மேனிதழு வென்றுரைக்கச் – சீரென்னும்
நாணம் இடையில் தலைகவிழ்க்க வேகின்றேன்
காமன் கணைமலரால் காண் !
கச்சை நகில்மூடிக் காணும் விழியீர்த்தே
இச்சை பெருக இடையசைத்தாய் – நச்சிமனம்
அன்ன நடைபின்னே அன்பு குடைபிடித்தேன்
என்னைக் குழைவாகத் தைத்து !
கண்ணின் இமைக்குள்ளே காதற்பூ உன்முகத்தை
தண்ணீருள் மீனாகக் காத்ததனால் – மண்ணில்
குருடாய் நடக்கின்றேன் துள்ளும்பூ மானே
திறந்தால்நீ போயிடுவாய் என்று !
கண்திறந்த போதே வரும்கனவு நாயகியே
என்னிதய ஏக்கத்தை எண்ணிப்பார் – உன்மீது
வீசுமிளங் காற்றுவந்து பட்டாலும் என்மேனி
தீசுமந்து போவதுதான் ஏன் !
சந்தனத் தேன்கலசம் சாயாத கோபுரத்தை
முந்தானை மேகத்தால் மூடிவரும் – சுந்தரியே
ஆலய வாசலில் அன்பிற்காய் ஏங்கும்என்
கோலத்தில் நல்லருளைக் கூட்டு !
நாதம் இயற்றும்உன் நாமொழி சொல்கேட்டால்
ஓதமுறு தென்றலுக்கே போதைவரும் – சீத
நிலவொளியும் சொக்கிவிழும் ; நித்திலமே காதல்
நிலவுமொழி நான்வாழச் செப்பு !
காலைக் கதிர்செம்மை கண்ணில் எடுத்துன்றன்
மாலைப் பிறைநுதலில் பொட்டிடுவேன் – கோதையுன்
கார்குழலின் மீதினிலே நட்சத் திரப்பூவை
பார்வியக்க வைப்பேன் பறித்து !
வீட்டருகில் வந்தபோது வாயிற் படிநின்றே
பாட்டிதழில் நீசொன்ன பாகுமொழி – கேட்டசெவி
இன்பத்தை வேற்றொலிகள் ஈர்த்திடாமல் கைபொத்தி
நின்றேன் நினைவில் நினைத்து !
பாதம் பெயர்க்கும்உன் பாங்குதனைப் பார்த்துவிட்டால்
வேத முனிவருக்கும் ஆசைவரும் – காதல்
ரதியாளைக் காமனுமே கைவிடுவான் ; வீட்டுப்
படியிறங்கி வாராமற் பார் !
செந்தூர மாலையிலே சித்திரமே நீநடந்தால்
வெந்துருகி மாலும் கணைதொடுப்பான் – இந்திரையின்
கண்சிவப்பில் சாம்பலாவோம் ; கண்மணியே நாமிணைய
என்பார்வைக் குள்ளே இரு !
பார்வையிலே மின்சாரம் பாய்ச்சுகின்ற பூச்சரமே
ஊர்சனங்கள் மெச்சுகின்ற அச்சாரம் – தார்சரமாய்
நான்சூட்டித் தந்திடுவேன் நாள்மலரே தாகத்தைத்
தேன்ஊற்றித் தீர்க்கவா இன்று !
தங்கமே உன்னைவர தட்சணை வாங்காமல்
மங்கலநாண் இட்டு மகிழ்விப்பேன் – இங்குலவும்
எம்மதம் ஆனாலும் என்னுடலின் பாதிநீயே
சம்மதம் உன்நாவால் தா !
விண்மீன்கள் புள்ளியிடும் வானவில்லோ கோலமிடும்
வெண்ணிலவும் ஆதவனும் தோரண – கற்பகங்கீழ்
குத்து விளக்காய் ஒளிகூட்டும் ; என்னவளாய்
இத்தரையில் நீயாகும் போது !
பாவலர் கருமலைத்தமிழாழன்
பூத்தமுகத் தாமரையில் பூசும் மதியெழிலில்
கோத்த அனிச்சயிதழ்ப் புன்னகையில் – மாத்தமிழே
நேஞ்சம் நிறைந்தாய் இரவெல்லாம் உன்நினைவில்
தஞ்சம் புகுந்தேன் தவித்து !
மொட்டவிழ்ந்த பூமரமே மொய்க்கும் விழிவண்டைக்
கட்டவிழா கொங்கைக்குள் கட்டிவைத்த – கற்பகமே
பட்டத் தழகேஉன் பார்வைக் கடிபணிந்தேன்
எட்டத்தில் கொல்லுவதோ நின்று !
பாரென்னும் பூம்பருவம் பக்கம்வா வென்னுமிதழ்
தேரென்னும் மேனிதழு வென்றுரைக்கச் – சீரென்னும்
நாணம் இடையில் தலைகவிழ்க்க வேகின்றேன்
காமன் கணைமலரால் காண் !
கச்சை நகில்மூடிக் காணும் விழியீர்த்தே
இச்சை பெருக இடையசைத்தாய் – நச்சிமனம்
அன்ன நடைபின்னே அன்பு குடைபிடித்தேன்
என்னைக் குழைவாகத் தைத்து !
கண்ணின் இமைக்குள்ளே காதற்பூ உன்முகத்தை
தண்ணீருள் மீனாகக் காத்ததனால் – மண்ணில்
குருடாய் நடக்கின்றேன் துள்ளும்பூ மானே
திறந்தால்நீ போயிடுவாய் என்று !
கண்திறந்த போதே வரும்கனவு நாயகியே
என்னிதய ஏக்கத்தை எண்ணிப்பார் – உன்மீது
வீசுமிளங் காற்றுவந்து பட்டாலும் என்மேனி
தீசுமந்து போவதுதான் ஏன் !
சந்தனத் தேன்கலசம் சாயாத கோபுரத்தை
முந்தானை மேகத்தால் மூடிவரும் – சுந்தரியே
ஆலய வாசலில் அன்பிற்காய் ஏங்கும்என்
கோலத்தில் நல்லருளைக் கூட்டு !
நாதம் இயற்றும்உன் நாமொழி சொல்கேட்டால்
ஓதமுறு தென்றலுக்கே போதைவரும் – சீத
நிலவொளியும் சொக்கிவிழும் ; நித்திலமே காதல்
நிலவுமொழி நான்வாழச் செப்பு !
காலைக் கதிர்செம்மை கண்ணில் எடுத்துன்றன்
மாலைப் பிறைநுதலில் பொட்டிடுவேன் – கோதையுன்
கார்குழலின் மீதினிலே நட்சத் திரப்பூவை
பார்வியக்க வைப்பேன் பறித்து !
வீட்டருகில் வந்தபோது வாயிற் படிநின்றே
பாட்டிதழில் நீசொன்ன பாகுமொழி – கேட்டசெவி
இன்பத்தை வேற்றொலிகள் ஈர்த்திடாமல் கைபொத்தி
நின்றேன் நினைவில் நினைத்து !
பாதம் பெயர்க்கும்உன் பாங்குதனைப் பார்த்துவிட்டால்
வேத முனிவருக்கும் ஆசைவரும் – காதல்
ரதியாளைக் காமனுமே கைவிடுவான் ; வீட்டுப்
படியிறங்கி வாராமற் பார் !
செந்தூர மாலையிலே சித்திரமே நீநடந்தால்
வெந்துருகி மாலும் கணைதொடுப்பான் – இந்திரையின்
கண்சிவப்பில் சாம்பலாவோம் ; கண்மணியே நாமிணைய
என்பார்வைக் குள்ளே இரு !
பார்வையிலே மின்சாரம் பாய்ச்சுகின்ற பூச்சரமே
ஊர்சனங்கள் மெச்சுகின்ற அச்சாரம் – தார்சரமாய்
நான்சூட்டித் தந்திடுவேன் நாள்மலரே தாகத்தைத்
தேன்ஊற்றித் தீர்க்கவா இன்று !
தங்கமே உன்னைவர தட்சணை வாங்காமல்
மங்கலநாண் இட்டு மகிழ்விப்பேன் – இங்குலவும்
எம்மதம் ஆனாலும் என்னுடலின் பாதிநீயே
சம்மதம் உன்நாவால் தா !
விண்மீன்கள் புள்ளியிடும் வானவில்லோ கோலமிடும்
வெண்ணிலவும் ஆதவனும் தோரண – கற்பகங்கீழ்
குத்து விளக்காய் ஒளிகூட்டும் ; என்னவளாய்
இத்தரையில் நீயாகும் போது !
karumalaithamizhazhan- ரோஜா
- Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 73
Location : Hosur. Tamil nadu, India
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» சம்மதம்.....
» சம்மதம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
» உன் சம்மதம்!!!!!!!!!!!!!
» சம்மதம்!!!!!!!!!!!!!!
» சம்மதம் - ஒரு பக்க கதை
» சம்மதம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
» உன் சம்மதம்!!!!!!!!!!!!!
» சம்மதம்!!!!!!!!!!!!!!
» சம்மதம் - ஒரு பக்க கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|