தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
நூலின் பெயர் : குட்டியூண்டு மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி
2 posters
Page 1 of 1
நூலின் பெயர் : குட்டியூண்டு மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி
- நூலின் பெயர் : குட்டியூண்டு
- நூல் ஆசிரியர் :
கவிஞர் வசீகரன் - மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி
நூலின் அட்டைப்படமே வசீகரமாக உள்ளது. பின் அட்டையில் நூல் ஆசிரியர்
கவிஞர் வசீகரன் புகைப்படமும். இந்நூல் பற்றிய கருத்து அவரது மொழியிலேயே.
குழந்தைகள் நம் வாழ்வின் வெளிச்சங்கள் அவர்களின் உலகம்
என்பதே தனி, அந்த உலகத்துக்குள் நாம் ஒரு முறை கற்பனையாக நுழைந்து வந்தால்
கூட போதும், அந்த சுகமே தனி, அந்த தனி உலகத்துக்குள் நுழைந்து நடத்தப்பட்ட
எளிய கற்பனை படப்பிடிப்பில் மலர்ந்த மூவரி கவிதைகளே இந்த குட்டியூண்டு.
நூலாசிரியர் கவிஞர் வசீகரன் பொதிகை மின்னல் மாத இதழின்
ஆசிரியர். சிந்தையைக் கவரும் சிந்தனை மிக்க வைர வரிகளை குருந்தகவல் மூலம்
அனுப்பி வருபவர். தொய்வின்றி நூல்களை வெளியிட்டு சாதனை புரிபவர். இளைப்பாற
நேரமின்றி இலக்கிய உலகில் இயங்கி வரும் இனிய உழைப்பாளி. சிறந்த சிந்தனைவாதி
உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஆழ்ந்து படித்து உணர்ந்தவர். இயந்திரமயமான
சென்னை மாநகரத்தில் மனித நேயத்தோடு வாழும் பண்பாளர். மதுரை மற்றும் புதுவை
இலக்கியப் பறவைகளின் வேடந்தாங்கலாகத் திகழ்பவர்.
காவல்துறை கவிஞர் சுடர் முருகையா அவர்களின் அணிந்துரை
சுடரொளி வீசுகின்றது.குழந்தைகளுக்கான ஹைக்கூ என்ற போதிலும்; ஆறிலிருந்து
அறுபது வரை படித்து மகிழும் சிறந்த நூலாக உள்ளது. பல்வேறு சிந்தனைகளை
விதைத்து சிந்திக்க வைக்கின்றது. எள்ளல் சுவையும் துள்ளலாக உள்ளது.
குட்டிக் குழந்தைக்கான ஹைக்கூ. இந்நூலை வாங்கி அவசியம் குழந்தைகளிடம்
கொடுத்து படிக்கச் சொல்ல வேண்டும். மொழி அறிவும் கேள்வி ஞானமும்
குழந்தைகளுக்கு வளரும். முதல் ஹைக்கூ கவிதையிலேயே முத்திரை பதிக்கிறார்.
குட்டியூண்டு நூலின் தலைப்பே குழந்தை மொழியில்.
சாப்பிட மறுத்து
செல்ல அடி வாங்குகிறது
குழந்தையிடம் பொம்மை
இந்த ஹைக்கூவை படிக்கம் போது பல்வேறு சிந்தனைகள்
வருகின்றது. அது தான் ஹைக்கூவின் வெற்றி. பொம்மை சாப்பிடாது அடிக்காதே என
குழந்தைக்கு உணர்த்துகின்றது. குழந்தையே நீ சாப்பிட்டு விடு இல்லை
என்றால்,நீ பொம்மையை அடிப்பதைப் போல உன்னை அன்னை அடிப்பார்கள், இப்படிப் பல
உணர்வுகள் இந்த மூன்று வரிகளில் உள்ளது. இப்படி 144 ஹைக்கூ கவிதைகளின்
தொகுப்பு இந்நூல்.
கணினியுகம், விஞ்ஞான வளர்ச்சி, வசதிகள் பெருகி
விட்டது. அதை விட விவகாரத்துகளும் பெருகி விட்டது. காரணம் சகிப்புத்தன்மை,
பொறுமை,மனிதநேயம்,அன்பு இவை மறந்து கோபம், எரிச்சல், விரக்தி இவை வளர்ந்து
விட்டது. முன்பு போல நீதிநெறிக் கதைகளை படிக்க நேரமில்லை, போதிக்க ஆளும்
இல்லை. இதனால் மனக்கசப்பு உண்டாகி குடும்பத்தில் பிரிவினை பெருகியது.
பிரிந்த அப்பா அம்மா
தூது போகிறது
குழந்தை
குழந்தையின் காரணமாகவே கட்டயாத்தின் பேரில் சிலர்
பிரியாமல் வாழ்கின்றனர் என்பதை உணர்த்துகி;ன்றது. குழந்தை இல்லை என்றால்
பலர் எப்போதே பிரிந்திருப்பேன் என்பார்கள். ஒரு மனிதனை உலகமே பாராட்டும்,
ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பகைமை பாராட்டுவார். இந்நிலை பலரிடம்
காண்கிறோம். பெரியவர்கள் சண்டை போட்டாலும், குழந்தைகள் ஒற்றமையாகவே
இருக்கின்றன என்பதை உணர்த்தும் ஹைக்கூ.
பக்கத்து வீட்டோடு
அம்மா அப்பா அடிதடி
கூட்டாஞ்சோறில் குழந்தை
அமைச்சர் வருகின்றார் என்ற தகவலின் பேரில்
பள்ளிக்குழந்தைகளை வரவேற்க வெயிலில் நிறத்தும் கொடுமைகளை சாடும் ஹைக்கூ.
சுள்ளென்று வெயில்
வரிசையில் குழந்தைகள்
எப்ப வருவார் அமைச்சர்?
குட்டி போடவில்லையே
கவலையில் குழந்தை
புத்தகத்தில் மயிலிறகு
குழந்தை மனத்தை படம் பிடித்து காட்டுகின்றது. நிறைய
இல்லங்களில் கேட்ட உரையாடல் இது. பெற்றோரைப் பார்த்து குழந்தைகள் உங்க
திருமணம் நாங்க பார்க்கவில்லையே என்று, அதனை உணர்த்தும் அழகிய ஹைக்கூ
பெற்றோரை குற்றஞ் சொல்லி
அழுதது குழந்தை
உங்க கல்யாணத்துக்கு ஏன்? கூப்பிடல
இப்படி எள்ளல் சுவையுடன் ஏராளமான ஹைக்கூ கவிதைகள்,
சிந்திக்க வைக்கும் சிறந்த ஹைக்கூ, போதிக்கும் ஹைக்கூ, பலவகையான ஹைக்கூ
நூலில் உள்ளன.
அப்பா வைத்தார்
எலிக்கூண்டில் வடை
பதறும் மழலை மனசு
குழந்தை மனசு பெரியவர்களுக்கும் இருந்தால் நாட்டில்
வன்முறையே இருக்காது.
கணினியில் அமர்ந்து
சொல்லிக் கொடுத்தது குழந்தை
கற்கும் அப்பா
இக்கட்சி இன்று நிறைய வீடுகளில் நடந்து கொண்டிருக்கும்
உண்மை.
துப்பாக்கியால் மிரட்டி
டுமீல் எனச் சுட்டது குழந்தை
பொய்யாகச் சாகும் தந்தை
நம் கண் முன் நடந்த காட்சிகளை காட்சிப்படுத்தி வெற்றி
பெறுகிறார் நூல் ஆசிரியர் வசீகரன்.
மகிழ வைக்கும்
ஒரே அழுகை
பிறந்த மழலை
முரண் சுவையுடன் சிறந்த ஹைக்கூ
பாடையில் தாய்
அழும் குழந்தை
எழுந்து சோறு போடும்மா
சோகத்தை கூட காட்சிப்படுத்தி கண் கலங்க வைத்து
உள்ளார். இது தான் படைப்பாளியின் வெற்றி. மிக மிக எளிமையான சொற்களால் மிக
மிக மிக வலிமையான கருத்துக்களை பதிவு செய்துள்ளார் ஹைக்கூ வடிவில். சில
அறிவு ஜீவிகள் இது என்ன ஹைக்கூவா? ஏன விமர்சனம் செய்யக் கூடும்.
அவர்களுக்கான பதில் “இது தான் ஹைக்கூ” என்பதாகும். ஹைக்கூ உலகில் தனி
முத்திரை பதித்து வரும் நூலாசிரியர் கவிஞர் வசீகரனுக்கு பாராட்டுக்கள்,
வாழ்த்துக்கள், தொடர்ந்து படையுங்கள்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010
Re: நூலின் பெயர் : குட்டியூண்டு மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி
மழலை மலர்கள், மனதை மயக்கும் நிஜங்கள், அவர்களின் உலகமே தனி, கல்லமில்லா வெள்ளைச் சிரிப்பை அள்ளித்தரும் வள்ளல்கள் மழலைகள் அழகிய மதிப்புரை.
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Re: நூலின் பெயர் : குட்டியூண்டு மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி
வணக்கம் மிக்க நன்றி
இரா .இரவி
www.kavimalar.com
http://eraeravi.blogspot.com/
http://eraeravi.wordpress.com/
இரா .இரவி
www.kavimalar.com
http://eraeravi.blogspot.com/
http://eraeravi.wordpress.com/
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010
Similar topics
» நூலின் பெயர்:என்னோடு நீ நூலாசிரியர்:சு.சோலைராஜா நூல் மதிப்புரையாளர்:முனைவர் ச.சந்திரா
» நூலின் பெயர் : சமர்,நூல் விமர்சனம்: கவிஞர் இரா.ரவிநூல் ஆசிரியர் : வித்தகக் கவிஞர் பா.விஜய்
» நூலின் பெயர் : நையப்புடை,நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
» நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி! மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!
» நூலின் பெயர்:கவியமுதம் ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !
» நூலின் பெயர் : சமர்,நூல் விமர்சனம்: கவிஞர் இரா.ரவிநூல் ஆசிரியர் : வித்தகக் கவிஞர் பா.விஜய்
» நூலின் பெயர் : நையப்புடை,நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
» நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி! மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!
» நூலின் பெயர்:கவியமுதம் ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|