தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! விமர்சனம் - கவிஞர் புதுயுகன் ! கல்லூரி துணை முதல்வர், இலண்டன்

2 posters

Go down

கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! விமர்சனம் - கவிஞர் புதுயுகன் ! கல்லூரி துணை முதல்வர், இலண்டன் Empty கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! விமர்சனம் - கவிஞர் புதுயுகன் ! கல்லூரி துணை முதல்வர், இலண்டன்

Post by eraeravi Mon Mar 09, 2015 8:19 pm

கவியமுதம் !

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

விமர்சனம் - கவிஞர் புதுயுகன் !
கல்லூரி துணை முதல்வர், லண்டன்
pudhuyugan@yahoo.com



எட்டு கோப்பைகளில் கவியமுதம் !
இனிய நண்பர் கவிஞர் இரா இரவி அவர்களின் 14-வது நூல் வானதி பதிப்பகம் வெளியிட்டு பலரது பாராட்டைப் பெற்றிருக்கும் 'கவியமுதம்'. 

நூலினுள், ‘நம்பிக்கைச் சிறகுகள்’, ‘உணர்ச்சி ஊர்வலம்’ என எட்டு கோப்பைகளில் பரிமாறி இருக்கிறார் இந்தக் கவியமுதத்தை. 

‘ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு வைரம்’ என்று ‘பொழுதைத் திட்டமிடு’ எனச் சொல்லும் கவிஞர் ‘வரலாறு படைத்திடு’ என்று அதே பக்கத்தில் அறிவுறுத்துகிறார். விநாடிகளை வைரங்களாக பார்கத் தெரிந்தவராலேயே வரலாறு படைத்திட முடியுமன்றோ! 

தமிழுக்கென்று ஒரு பகுதியை ஒதுக்கி பல கவிகள் செய்திருக்கிறார் இவர். அதில் முக்கியமானது 'உலகின் முதல் மொழி உருக்குலையலாமா?’ என்ற கேள்விக்கவி. 

‘தமிங்கலம் பேசுவதை உடன் நிறுத்திடுவோம்!’ என்று தமிழ்க்கடலில் திமிங்கல வேட்டை நடத்துகிறார். 

பகுத்தறிவுச் சிந்தனையை தவறாமல் தொடர்ந்து முன்னிறுத்தி வருபவர் கவிஞர் இரவி அவர்கள். தமிழர்கள் வாழ்வில் உடனடித்தேவை பகுத்தறிவே என்று முழங்கி 'எதையும் ஏன்? எதற்கு? எப்படி? எங்கு? எதனால்? எனக் கேட்டுப் பழகு’ என்கிறார். ‘எல்லாமறிந்த புத்தர், ஏதுமறியாத புது சிசு - இவர்கள் இருவர் தவிர மற்ற அத்தனை பேருக்கும் கேள்விகள் தோன்றவே செய்யும்’ என்ற பொன்மொழியை நினைவுபடுத்துகிறார். 

இன்றைய தேசச் சூழல்களையும் தனது கவிதைகளில் வைத்திருக்கிறார் இந்நூலில். 

திருவள்ளுவரைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும் பல கவிதைகளில் செய்திருக்கும் இவர், திருக்குறளை தேசிய நூலாக்கும் முயற்சிகள் அதிகரித்து வரும் இவ்வேளையில் அதையே கோரிக்கையாக வைத்தும் ஒரு கவிதை செய்திருக்கிறார். 
அதைப்போல வேட்டிக்குத் தடை என்ற செய்தியை வரிந்து கட்டிக்கொண்டு இப்படி விளாசுகிறார் ‘தமிழ்நாட்டில் தமிழர் உடைக்குத் தடையா?’ என்ற கவிதையில்; 

‘தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம் எங்கள் வேட்டி! 
தடை செய்வதற்கு நீங்கள் யாரடா வெட்டி?’ 



பெரியார், காமராசர், கவியசு கண்ணதாசன்,கவிஞர் வாலி என இவரது நெஞ்சம் கவர்தவர்கள் பலரை நெஞ்சினிக்க தமிழால் அலங்கரிக்கிறார். அதில் என்னைக் கவர்ந்தவை ‘நெல்சன் மண்டேலா’ மற்றும் ‘தில்லையாடி வள்ளியம்மை’ பற்றிய கவிதைகள் தாம். 

‘கருப்பு இருளன்று ஒளியென்று உணர்த்தியவரே' என்று முன்னவரை போற்றுகிறவர் பின்னவரின் வாழ்வு மொத்தத்தையும் தனது கவிதையில் எழுதி நம் மனதில் ஒரு பெருமித மழையை பொழியச் செய்து போகிறார். வள்ளியம்மை பற்றிய கவிதை இந்தத் தொகுத்தியின் சிறந்த கவிதை என்று சொல்லி விடலாம். 

அதுமட்டுமல்ல இவர்களை எல்லாம் புதிய தலைமுறைகளின் தலைகளுக்குள் பதிவிறக்கம் செய்ததற்கே கவிஞர் பாராட்டுக்குரியவர் ஆகிறார்! 

உன் புகைப்படத்தை 
அஞ்சலில் அனுப்ப வேண்டாம் 
... பதிக்கும் முத்திரைகள் 
உனக்கு வலிக்கா விட்டாலும் 
எனக்கு வலிக்கும் 

கனமான கவிதைகளுக்கு நடுவே காதல் மணமும் தான் கமழ்கிறது! 
சாதிவெறி, உழைப்பாளர் பெருமை, புகையிலை கொடுமை என்று பல சமூகப் பதிவுகளையும் இவரது கவிதைகளில் பார்க்க முடிகிறது. 

நூல் முழுதும் பொருத்தமான படங்கள் கவிதைகளுக்கு உற்ற தோழிகளாக வலம் வருகின்றன. முனைவர் இரா மோகன் அவர்களும் முதுமுனைவர் இறைஅன்பு அவர்களும் நூலுக்கு நல்ல அணிந்துரைகள் கொடுத்திருக்கிறார்கள். 

நிறைவான இந்தக் கவிதைகளைப் படைத்த கவிஞரைப் பற்றி ஒரு சுவாரசிய செய்தி - அவரே சமீபத்தில் முகநூலில் பதிவிட்டது. 

இவரது மகனது பாடப் புத்தகத்தில் இவர் எழுதிய 10 ஹைகூக்கள் மனப்பாடப் பகுதியாக - மகனின் பெருமையாக, தந்தையின் மகிழ்வாக – அமைந்திருந்ததாம். இது உழைப்பின் புன்னகை. மதிப்பெண் இருந்தும் கல்லூரி செல்ல இயலாத சூழல். அங்கிருந்து கிளம்பி இப்படி விரிந்திருக்கிறார் இந்த விருட்சம் என அறியும் போது நமது மனங்கள் கரங்கள் இல்லாமலே கரவொலி செய்கின்றன. 

இதுவும் இவரது கவிதைகளில் ஒன்று என்றே கருதுகிறேன். இப்படி, புத்தகப் பக்கம் தாண்டி வாழ்கையின் பக்கங்களிலும் கவிதை எழுதுபவர்களே நல்ல கவிஞர்கள். 

இவரது கவிப்பணி வெண்பனிப் போல குளிர்ச்சியாய், மகிழ்ச்சியாய் மேலும் தொடர வாழ்த்துக்கள். மொத்தத்தில் கவியமுதம் எட்டு கோப்பைகளில் பல்சுவை அமுதம்! 


வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/- பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com இணையம் www.vanathi.in





http://eluthu.com/kavithai/236479.html
-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! விமர்சனம் - கவிஞர் புதுயுகன் ! கல்லூரி துணை முதல்வர், இலண்டன் Empty Re: கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! விமர்சனம் - கவிஞர் புதுயுகன் ! கல்லூரி துணை முதல்வர், இலண்டன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 17, 2015 2:22 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! விமர்சனம் - கவிஞர் புதுயுகன் ! கல்லூரி துணை முதல்வர், இலண்டன் Empty Re: கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! விமர்சனம் - கவிஞர் புதுயுகன் ! கல்லூரி துணை முதல்வர், இலண்டன்

Post by eraeravi Tue Mar 17, 2015 10:15 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! விமர்சனம் - கவிஞர் புதுயுகன் ! கல்லூரி துணை முதல்வர், இலண்டன் Empty Re: கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! விமர்சனம் - கவிஞர் புதுயுகன் ! கல்லூரி துணை முதல்வர், இலண்டன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நீங்காத நினைவுகள் ! நூல் ஆசிரியர் :எழுத்தாளர் திரு. ஐ.தி. சம்பந்தன் !இலண்டன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் ! கவிஞர் புதுயுகன் ! லண்டன் !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் புதுயுகன் லண்டன்
» மடித்து வைத்த வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கதவு இல்லாத கருவூலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum