தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கே ஜி மாஸ்டர் - குடும்ப கட்டுரைகள்

Go down

கே ஜி மாஸ்டர் - குடும்ப கட்டுரைகள்  Empty கே ஜி மாஸ்டர் - குடும்ப கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 14, 2015 7:01 pm

ஒற்றுமைக்கு ஒரு உதாரணம்
--------------------------------------------

நடைமுறையில் ஒற்றுமை என்றால் என்ன என்பதை உதாரண ங்கள் மூலமாகவே வெளிப்படுத்தி வருகின்றோம். சேர்ந்து வாழுதல், ஒன்று சேர்ந்து செயற்படுதல், ஒருவொருக்கு ஒருவர் பாதுகாப்பளித்தல் , பகிர்ந்துண்ணல் என சூழ்நிலைக்கும் தேவைக்கும் ஏற்றவாறு ஒற்றுமைக்கு உதாரணங்களைக் கொடுக்கிறோம்.  ஒற்றுமைக்கு சிறந்த  உதாரணம் ஒன்றை  முன் வைப்பதே இக் கட்டுரையின்  நோக்கம். 

ஒன்றுகூடி வாழுதல் அல்லது சேர்ந்து வாழுதல் ஒற்றுமை எனப் பெரும்பாலானவர்கள் கருதிக்கொள்கிரார்கள். சேர்ந்து வாழுதல் அல்லது கூடி வாழுதல்  ஒற்றுமை அல்ல.   நாம் எல்லோருமே சேர்ந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தச் சேர்ந்து வாழ்தலானது குடும்பம், சமூகம், சமுதாயம், நாடு  எனப பல்வேறு படிகளில் அமைந்துள்ளது. 

இவ்வாறு சேர்ந்து வாழுதல் தவிர்க்க முடியாததாகவும் அமைந்துள்ளது. தவிர்க்க முடியாதது எனக் குறிப்பிடுவதற்கான காரணம் ஒவ்வொரு மனிதனும் தான் சார்ந்து வாழும் சமூகத்தில் தனது அடையாளங்களாக, கலை, கலாச்சாரம், பண்பாடு, மதம், மொழி என  எவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டானோ அவற்றைத் தொடர்ச்சியாக  நிலைப்படுத்துவதற்கு  சேர்ந்து வாழுதல் தவிர்க்க முடியாததாக அமைகின்றது.  ஆனால் எமது அடையாளங்களை நிலைப்படுத்துவதற்கு நாம் சேர்ந்து வாழ்ந்தாலும் ஒற்றுமையாக வாழ்கிறோமா? நிச்சயமாக இல்லை.  ஒரே அடையாளங்களை நாம் கொண்டிருந்தாலும் அந்த அடையாளங்களுக்குள்ளே கற்பனை செய்ய முடியாத அளவுக்கு முரண்பாடுகளை உருவாக்கியுள்ளோம். 

சில சந்தர்ப்பங்களில் ஒன்று சேர்ந்து செயற்படுதல் ஒற்றுமை எனக் கருதப்படுகின்றது. ஒன்று சேர்ந்து வாழ்தலைப் போல் ஒன்று சேர்ந்து செயற்படுதலும் தவிர்க்க முடியாததாகவே உள்ளது. குடும்பம், சமூகம் என்பவற்றின் இயக்கத்திற்கு அவற்றின் அங்கத்தவர்களது முரண்பாடுகளுக்கு அப்பால் அவர்களது செயற்பாட்டின் பெறுபேறுகள் அவசியமாகின்றன. 

ஒரு குடும்பத்தின்  அல்லது சமூகத்தின்  சிறப்பு  என அளவிடப்படுவது  அதன் ஒட்டுமொத்த அங்கத்தவர்களது செயற்பாட்டின் பெறுபேறுகள்  மட்டுமே.  ஆனால், குறிக்கோளை அடைவதற்குத் தேவைப்படும் செயற்பாட்டைப் பெறுவதற்கு வெவ்வேறு அளவிலான அதிகாரம் பயன்படுத்தப் படுகின்றது. சுருக்கமாகக் கூறுவதாயின் அதிகாரம் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சூழலும் தனித்துவம் குழி தோண்டிப் புதைக்கப்படுகின்றது.. ஒற்றுமையின் அடித்தளமே தனித்துவங்களின் சேர்க்கை தான். ஏனெனில் தனித்துவம் ஒப்பீட்டுக்கு இடமளிக்காதது. 

ஒற்றுமையின் அடித்தளமாக அமைவது ஒப்பீட்டுக்கு வாய்ப்பு இல்லாதவற்றின் இணைப்புத்தான்.  இந்த இணைப்பில் ஒப்பீடு இன்மையால் போட்டி இல்லை, பொறாமை இல்லை, முரண்பாடுகளும் இல்லை, இந்த இணைப்பின் செயற்பாட்டுக்கு தமது பங்களிப்பு   பெரியதோ அல்லது சிறியதோ என்ற அளவீடுகளும் இல்லை. இணைப்பில் உள்ள ஒவ்வொன்றும் தனியாக இயங்கினாலும்  சரி அல்லது கூட்டாக இயங்கினாலும் சரி ஒவ்வொரு இயக்கமும் அந்த இணைப்பின் அடிப்படை நோக்கத்திற்கான  இயக்கமாகவே அமையும்.  இத்தனை சிறப்புக்களையும் உள்ளடக்கிய உதாரணம் ஒன்று ஒற்றுமை என்பதற்கு இருக்கின்றதா என்று ஆச்சரியப் படாதீர்கள்.

எமது உடம்பு தான் ஒற்றுமைக்கு  அதி சிறந்த உதாரணம். ஒரு உடம்பு, பல்வேறு உறுப்புக்கள், உறுப்புக்களுக்கு இடையில் ஒப்பீடு இல்லை, போட்டி இல்லை, பொறாமை இல்லை, ஏற்றத் தாழ்வுகள் இல்லை, சண்டை இல்லை. ஒவ்வொரு உறுப்பும் தனித்துவம் ஆனவை. அதே நேரத்தில்  உடம்பின் ஒட்டுமொத்த இயக்கத்தில் ஒவ்வொரு உறுப்பினது பங்களிப்பும் அளவீட்டிற்கு அப்பாற்பட்டவை.  ஒற்றுமையின் அத்தனை அர்த்தங்களையும், சிறப்புக்களையும் கொண்டிருப்பது எமது உடம்பு தான். உடம்பே ஒற்றுமைக்கு அதி சிறந்த உதாரணம்!   
 -  
(நன்றியுடன்: KG Master)
கே ஜி மாஸ்டர் - குடும்ப கட்டுரைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே ஜி மாஸ்டர் - குடும்ப கட்டுரைகள்  Empty Re: கே ஜி மாஸ்டர் - குடும்ப கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 14, 2015 7:06 pm

தவறான கண்டுபிடிப்பு
----------------------------------

மனிதனின் கண்டுபிடிப்புக்கள் எல்லாம் இயற்கையில் உள்ளதை உருமாற்றம் செய்வது மட்டுமே. இயற்கையால் படைக்கப்பட்டவற்றை தனது தேவைக்கேற்ப மாற்றி அமைப்பது தான் மனிதனின் செயற்பாடு. இந்த மாற்றி அமைத்தலுக்குப் பெயர் 'கண்டுபிடிப்பு' என்கிறோம். இங்கே தான் மனிதனின் திறமையின் எல்லை எது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டி இருக்கின்றது. இயற்கையின் படைப்பில் மனிதப் படைப்பு மகத்துவமானது. மனிதப் படைப்புக்கு மிக நெருக்கமாக இருக்கக் கூடிய படைப்பு என்று ஒன்று இல்லை.

மிகவும் தனித்துவமான படைப்பாகிய மனிதப்படைப்பு தனக்கென்றே சில தன்மைகளைப் பெற்றுள்ளது வெளிப்படையானதுதான். இருப்பினும் இந்தத் தன்மைகள் வெளிப்படுத்தப்படாமல், அல்லது வெளிப்படுத்த விரும்பினாலும் வெளிப்படுத்த முடியாமல் இருப்பதற்கும் மனிதனே காரணமாகின்றான். இவற்றிற்கு அடிப்படையாக அமைவது அவனது தவறான கண்டுபிடிப்புக்களே. அதிசயிக்கத்தக்க பல கண்டுபிடிப்புக்களைத் தந்துதவிய மனிதன் ஒரு சில தவறான, அசிங்கமான அறிவியலுக்கு ஒவ்வாதவற்றையும் கண்டுபிடித்துவிட்டான்.

ஆனால் உணர்வும், மூளையும், விழிப்புணர்வும் கொண்ட ஒரேயொரு இனமான மனித இனம் இயற்கையில் இல்லாத ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறது. இயற்கையில் இல்லாத ஒன்றைக் கண்டு பிடித்ததாலோ என்னவோ அது தன்னைத் தானே கொல்லும் ஒன்றாக அமைந்துவிட்டது. அது மட்டுமல்ல ஒவ்வொருவரும் தாமாகவே அதைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். அதைப் பயன் படுத்துபவர் தன்னைத் தானே கொன்று கொண்டிருப்பதை அறியமுடியாத அளவுக்கு தனது கண்டுபிடிப்புக்குள் அகப்பட்டு அல்லற்படுபடுகின்றனர். அந்தக் கண்டுபிடிப்பு என்ன தெரியுமா? ஒப்பீடு செய்தல் (Comparison) .

உண்மையில் மனித அறிவீனத்தின் உச்ச நிலைக் கண்டுபிடிப்புத்தான் தான் ஒப்பீடு செய்தல். இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் தனித்துவமானது. ஒன்றைப்போல் இன்னொன்று படைக்கப்படுவதில்லை. கல்லாகட்டும், மண்ணாகட்டும், மரமாகட்டும், பூவாகட்டும், காயாகட்டும், விலங்குகளாகட்டும், அல்லது மனிதர்களாகட்டும். ஒவ்வொரு உயிரினமும், ஒவ்வொரு படைப்பும் தனித்துவமானது. அப்படியிருக்கும்போது எதற்காக மனிதன் தன்னை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்வதைக் கண்டுபிடித்தான். நமது வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமளித்தாலும் அவை எந்த விதத்திலும் எமது தனித்துவத்தைப் பாதிப்பதாக இருப்பதில்லையே. ஏனெனில் தனித்துவம் என்பது எல்லாவற்றையும் விட உயர்ந்ததல்லவா.

ஒரு மனிதனைப் போல் இன்னொரு மனிதன் இருந்ததும் இல்லை, இருக்கப் போவதுமில்லை என்பது எம்மால் அறியப்பட்ட ஒன்றாக இருந்தும் கூட ஏனிந்த ஒப்பீடு?. யாருடன் யாரை ஒப்பிடுகிறோம்? எப்படி இது புத்திசாலித்னமானதாக அமையும்? என்னை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்வது கோழைத்தனம் அல்லவா. அப்படியிருக்கும் போது கணவனையோ, மனைவியையோ, குழந்தைகளையோ மற்றவர்களுடன் ஒப்பீடு செய்யலாமா? உங்களையோ, உங்கள் கணவன் அல்லது மனைவியையோ, குழந்தைகளையோ அல்லது இன்னொரு மனித உயிரையோ உயர்வாக அல்லது தாழ்வாக ஒப்பீடு செய்து பொருத்தமாக்குவதற்கு இதுவரையில் எவரும் பிறந்ததில்லை. வாழ்ந்து கொண்டிருப் பவர்களில் எவருமில்லை. இனிமேல் பிறக்கப்போவதுமில்லை. ஒப்பீடு என்பது நாமாகக் கண்டுபிடித்துக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு கொடிய நோய். நாமாகக் கைவிட்டால் அது தானாகப் போய்விடும்.

நன்றியுடன் - கேஜி மாஸ்டர்
கே ஜி மாஸ்டர் - குடும்ப கட்டுரைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே ஜி மாஸ்டர் - குடும்ப கட்டுரைகள்  Empty Re: கே ஜி மாஸ்டர் - குடும்ப கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 22, 2015 9:44 am

தொட்டில் முதல்
*************************

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை' என்ற வாக்கியம் பழமையானதும் பழகிப் போனதுமான ஒன்றாகிவிட்டது. உண்மையில் இந்த வாக்கியத்தை முதல் முதல் இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் யார் என்பது எமக்குத் தெரியாவிட்டாலும் இன்று வரை இது சுமந்து செல்லப்படுகின்றது என்பது மட்டும் உண்மை. நாம் தொட்டிலில் எமது வாழ்க்கையைத் தொடங்கிய போது எந்தப் பழககத்துடனும் வரவில்லையே! யார் எமக்குப் பழக்கினார்கள்? எதைப் பழக்கினார்கள்? எப்படிப் பழக்கினார்கள்?

பழக்கியவர்கள் தாம் மறைந்த பின்னரும் அதை சுடுகாடு வரைக்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்று கட்டளை இட்டார்களா? இல்லையே! அப்படியாயின் தொட்டிலில் பழகியது சுடுகாடுவரைக்கும் கொண்டு செல்லப்படுவது எப்படி? யாரால் கொண்டு செல்லப்படுகிறது? இவ்வாறான வினாக்களுக்கு விளக்கம் அளிப்பது மட்டுமல்ல எனது நோக்கம். நேர்மையும் நெஞ்சுத் துணிவும் கொண்டு எதிர்காலத்தைத் தமக்குச் சொந்தமாக்கும் பக்குவத்தை உடைய குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் அவர்களை தொட்டிலில் இருந்து எங்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதயும் விளக்குவது தான் நோக்கம்.

முதலில், ஒரு குழந்தையின் ஆரம்பப் பழக்க வழக்கங்களின் போதகர்களாக, ஆசிரியர்களாக, வழிகாட்டிகளாக பெற்றோர்கள் அமைந்து விடுகிறார்கள். தாயின் மடியில் ஆரம்பிக்கும் ஒரு குழந்தையின் வாழ்க்கை அதே அணைப்பின் உணர்வைக் கொடுக்கும் தொட்டிலுக்கு அறிமுகப் படுத்தப்படுகிறது. தாயின் மடியும் தொட்டிலுமாக மாறி மாறி அதன் வாழ்க்கை நகர்த்தப்படுகின்றது. இவ்வாறு நகர்த்தப்படும் காலப் பகுதியில் பல விடயங்களைக் குழந்தை கற்றுக்கொள்கிறது. கற்றலின் பெரும் பகுதி அதன் அவதானிப்பால் உள்வாங்கப்படுகின்றது. தன்னைச் சுற்றியுள்ள சக்தியின் அதிர்வலைகள் மூலம் அதன் தன்மையை உணர்கிறது. உள்வாங்குகிறது. உதாரணமாக, தாயின் குரலை அந்தக் குரல் உருவாக்கும் அதிர்வலைகள் மூலம் குழந்தை பதிவு செய்து விடுகிறது. 

பதிவு செய்யப்பட்ட பின்னர் மீண்டும் மீண்டும் அந்தக் குரலை கேட்கும் போது அந்தக் குரலை இனம் கண்டுகொள்கின்றது. இவ்வாறாக ஒவ்வொரு ஓசையும் முதலில் அதற்கு அதிர்ச்சி தருவதாக அமைந்தாலும் அந்த ஓசைகள் மீண்டும் மீண்டும் ஒலிக்கப்படும் போது குழந்தைக்கு அது பழக்கப்பட்ட ஒன்றாகி விடுகின்றது. இந்தக் கற்றலானது ஒலி சார்ந்த கற்றலாக அமைகின்றது. ஒலி அதிர்வு சார்ந்த கற்றலே குழந்தையின் ஆரம்பக்கற்றலின் ஒரு பகுதியாகும்.. குழந்தையின் அடுத்த கற்றல் நிலை ஒளி சார்ந்ததாக அமைகின்றது. இப்போது குழந்தையின் பார்வைக்கு உட்படுபவை எல்லாம் அதன் ஆழ்மனதில் படங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. அத்துடன் ஒலியையும் ஒளியையும் இணைத்துக் கொள்ளும் தகுதியும் குழந்தைக்கு ஏற்படுகின்றது. 

இப்போது அது பதிவு செய்துள்ள குரலையும் அதற்கு உரியவரது உருவத்தையும் இனங்கண்டுகொள்கின்றது. இங்கே ஒரு குழந்தையின் கற்றல் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுவதற்கான காரணம் இக்கட்டுரையை உள்வாங்கிக் கொள்ளும் பெற்றோர்கள் ஒரு குழந்தை குறிப்பிட்ட வயதின் பின்னரே தனது கற்றலை ஆரம்பிக்கின்றது என்ற தவறான அபிப்பிராயத்தை அடியோடு அழித்துவிட்டு, குழந்தை அதன் முதலாவது மூச்சிலிருந்தே கற்க ஆரம்பிக்கின்றது என்ற உண்மையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.

அடுத்ததாக, குழந்தையின் பழக்க வழக்கங்கள் பற்றிப் பார்ப்போம். ஒரு குழந்தையின் பழக்கங்கள் என்பன அந்தக் குழந்தைக்கு நாம் கொடுக்கும் பயிற்சிகள் தான். எமது ஒரு செயல் குழந்தைக்கு அது சார்ந்த ஒரு செயலுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். இந்த ஊக்கத்தின் வெளிப்பாடு குழந்தையின் குரல் (ஒலி) சார்ந்ததாகவும் அது உள்வாங்கிக் கொண்ட தன்மையைப் பொறுத்து தனது முகத்தின் பிரதிபலிப்பு (ஒளி) சார்ந்ததாகவும் அமையும். 

இங்கே நாம் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் செயற்படுத்தும் போது அந்தச் செயற்பாட்டுக்கு தொடர்ச்சியாக தனது பிரதிபலிப்பை வெளிப்படுத்தும் குழந்தை அதற்குப் பழக்கப்பட்டுவிடும். இது அக் குழந்தையின் பழக்கமாகி விடும். காலப் போக்கில் ஒரு குழந்தை தனக்குப் பழக்கமாக்கிக் கொண்ட ஒரு விடயத்தை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் முழுமையாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கும். 

ஏனெனில் இப்போது குழந்தைக்கு அது வழக்கமாகிவிட்டது. எனவே ஒரு குழந்தை எதையெல்லாம் பழக்கமாக்கிக் கொள்ளல் வேண்டும் என்பதில் பெற்றோர்கள் அதன் தொட்டில் காலத்தில் இருந்தே கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் அந்தப் பழக்க வழக்கங்கள் எதிகாலத்தை நிர்வகிப்பதில் எவ்வாறான பங்களிப்பைச் செய்யவேண்டும் என்பதிலும் அவதானமாக இருத்தல் வேண்டும்.

பெரும்பாலான பெற்றோர்கள் தமது குழந்தைகளிடம் நெஞ்சுத் துணிவும் நேர்மையும் கொண்டு எதிர்காலத்தைத் தமக்குச் சொந்தமாக்கும் தகுதியை உருவாக்குவதில்லை. மாறாக ஏற்கனவே தாம் தொட்டிலில் நீண்ட காலம் இருந்து தமக்குப் பழக்கமாகிப் பின் வழக்கமாகி, எதிர் நீச்சல் போடுவதற்கான வலிமையை இழக்கவைத்து, தாம் அடிமைகளாக்கப்படுவதற்குக் காரணமான இரவல் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், மரபுகளையும், போலியான குடும்ப அந்தஷ்துக்களையும் தமது குழந்தைகளுக்கும் தொட்டிலிலே கற்றுக் கொடுத்து அறுபது எழுபது வருடங்களுக்குச் சுமக்கவிட்டு அப்படியே சுடுகாட்டுக்கு வழிகாட்டி விடுகிறார்கள்.

 தாம் உயிர் வாழும் காலம் வரை தமது குழந்தைகள் தொட்டிலை விட்டு இறங்குவதற்கு இந்தப் பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. அதனால் தொட்டிலிலே பழக்கப்பட்டது சுகமாகிப் போனதால் இந்தக் குழந்தைகளும் தொட்டிலைவிட்டு இறங்குவதற்கு முயற்சிப்பதுமில்லை. ஏனெனில், தொட்டிலை விட்டு இறங்கினால் எங்கே போவது, என்ன செய்வது என்ற அச்சம் இவர்களுக்கு. ஆனாலும், ஆனாலும்.... ஆனாலும், முற்றுமுழுதான உள்ளுணர்வோடு இரு கரங்களையும் கூப்பி நன்றி கூறுவதற்குத் தகுதி பெற்றுள்ள பெற்றோர்களும் இல்லாமல் இல்லை. இவர்கள் தான் நெஞ்சுத் துணிவும் நேர்மையும் கொண்டு எதிர்காலத்தைச் சொந்தமாக்கித் தாமும் மற்றவர்களும் நற்பயன்களை அடைவதற்குத் தகுதி வாய்ந்த குழந்தைகளை இந்த உலகிற்குத் தருகிறார்கள்.

 இவர்கள் செய்வதெல்லாம் தமது குழந்தைகளைத் தொட்டிலில் இருந்து தொட்டிக்கு நகர்த்தி, அந்தத் தொட்டிக்குள் படிப்படியாக நீர் மட்டத்தை உயர்த்தி நீச்சலைக் கற்றுக் கொடுப்பதுதான். நீந்தப் பழகிவிட்ட குழந்தை குளத்திலும் நீந்தும் கடலிலும் நீந்தும். எதிர் நீச்சலும் போடும். நேர்மையும் நெஞ்சுத் துணிவும் இயல்பாகவே அமைந்துவிடும். நிகழ் காலத்தில் வாழப் பழகிவிடும். அதனால் எதிர் காலத்தைச் சொந்தமாக்கிவிடும். தொட்டிலில் இருந்து தொட்டிக்கு நகர்த்தப்படும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்தத் தகுதியும் திறமையும் உருவாகும். இன்றும் நாளையும் இவர்களுக்குத்தான் சொந்தம்.

நன்றியுடன் - கே.ஜி  மாஸ்டர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே ஜி மாஸ்டர் - குடும்ப கட்டுரைகள்  Empty Re: கே ஜி மாஸ்டர் - குடும்ப கட்டுரைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum