தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
நேரம் கிடைக்கின்ற போது தவறாமல் படியுங்கள் - KG மாஸ்டர் இன் வாழ்க்கை கட்டுரைகள்
Page 1 of 1
நேரம் கிடைக்கின்ற போது தவறாமல் படியுங்கள் - KG மாஸ்டர் இன் வாழ்க்கை கட்டுரைகள்
அறிந்ததும் அறியவேண்டியதும்
------------------------------------------------
அறிந்திருத்தல் சம்பந்தமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது, எதை அறிந்திருக்கின்றோம், எவ்வாறு அறிந்திருக்கின்றோம், எவ்வளவு அறிந்திருக்கின்றோம் என்பவை தான். எதை அறிந்திருக்கின்றோம் என்பதை நாம் எமது நினைவுகளின் தொகுப்பில் இருந்துதான் அடையாளம் காண முடியும். நிகழ்வுகளின் சேகரிப்புத்தான் நினைவுகள். இந்த நிகழ்வுகள் ஐம்புலன்களின் ஊடாக எமது ஆழ் மனதில் பதியப்படுகின்றன. தொட்டுணர்தல், சுவைத்தல், பார்த்தல், நுகர்தல், கேட்டல் என்பவற்றின் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. இப்பதிவுகளை நாம் அறிந்திருத்தல் என்கிறோம்.
எந்தெந்த விடயங்களை நாம் அறிந்திருக்கின்றோம் என்பதை நாம் இலகுவாக அடையாளம் காண்பதற்கு, ஒன்றை நாம் பார்க்கும்போதோ, கேட்கும்போதோ, நுகரும்போதோ, சுவைக்கும் போதோ அல்லது தொட்டு உணரும்போதோ உடனடியாக அதை அடையாளப்படுத்தவோ அல்லது இனங்கண்டு கொள்ளவோ முடியுமாயின் அது ஒரு மீள் நிகழ்வாக இருப்பதனால் அந்த விடயம் ஏற்கனவே அறியப்பட்டாதாக அமைகின்றது. மாறாக, நாம் எதிர்கொள்ளும் ஒன்றை அடையாளப்படுத்தவோ அல்லது இனங்கண்டு கொள்ளவோ முடியாவிடின் அது இதுவரையில் அறியப்படவில்லை என்பதாகப் பொருள்படும்.
அடுத்து, எவ்வளவு அறிந்துள்ளோம் என்பதைப் பொறுத்தவரையில் நாம் எந்தவிதமான அளவீட்டையும் மேற்கொள்ள முடியாது. ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று ஒரு விடயம் மீண்டும் நிகழும்போது அதை இனங்கான முடியுமாயின் அதை அறிந்திருக்கின்றோம் என்பதால் நிகழ்வுகளால் மட்டுமே எமது அறிதலை அளவிடமுடியும். ஆனால் நிகழ்வுகளின் எண்ணிக்கை வரையறையற்று இருப்பதனால் நாம் எவ்வளவு அறிந்துள்ளோம் என்பதை அளவிடுவதற்கு வாய்ப்பு இல்லை.
அறிந்திருத்தலில் உள்ள மிகப் பெரிய பின்னடைவு என்னவெனில் நாம் அறிவு பூர்வமாக ஏற்றுக்கொண்டவை அனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டவையாகவே அமைகின்றன. ஆனால் நம்பிக்கை அதன் தன்மையில் பலவீனமானது ('நம்பிக்கையின் இரு பலவீனங்கள்' என்ற கட்டுரையை வாசிக்கவும்). நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டவை அனைத்தும் பிறரின் உள்ளீடுகளே. இந்த உள்ளீடுகள் மதம், மொழி, கலாச்சாரம், பண்பாடு, சட்ட திட்டங்கள், சமுதாய ஒழுங்கு விதிகள் என்ற வடிவில் எமக்குள் செலுத்தப்படுகின்றன. இவ்வாறு உள்வாங்கப்பட்டவற்றை நாம் வேறுபாடுகளைக் கண்டறியும் கருவியாக பயன்படுத்திக் கொள்கிறோம். இதனால் நாம் அறிந்திருப்பவை அனைத்தும் வேறுபாடுகளே. எமக்கும் பிறருக்குமான வேறுபாடுகளே.
நாம் அறிந்திருக்கும் இந்த வேறுபாடுகள் தான் எமக்குள் பிளவுகளையும், பிரச்சனைகளையும், முரண்பாடுகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த வேறுபாடுகள் அனைத்தினதும் தயாரிப்பாளர்கள் நாம் தான். இந்த வேறுபாடுகள் குடும்பத்துக்குள், குடும்பங்களுக்கிடையில், சமூகத்துக்குள், சமூகங்களுக்கிடையில், நாட்டுக்குள், நாடுகளுக்கிடையில் வெறுப்பை உருவாக்கி அதன் மூலம் ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டிருக்கின்றோம். இந்த அழிவில் இருந்து எம்மை நாம் காப்பாற்றிக் கொள்வதற்கு அறிந்துகொள்ள வேண்டியது எமக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான ஒத்த இயல்புகளைத் தான். அப்போது தான் மனிதன் மனிதனாக வாழ முடியும். எனவே, இதுவரை நாம் அறிந்திருக்கும் வேறுபாடுகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு எமக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான ஒத்த இயல்புகளை அறிந்து கொள்வோம்.
நன்றியுடன் - KG Master
------------------------------------------------
அறிந்திருத்தல் சம்பந்தமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது, எதை அறிந்திருக்கின்றோம், எவ்வாறு அறிந்திருக்கின்றோம், எவ்வளவு அறிந்திருக்கின்றோம் என்பவை தான். எதை அறிந்திருக்கின்றோம் என்பதை நாம் எமது நினைவுகளின் தொகுப்பில் இருந்துதான் அடையாளம் காண முடியும். நிகழ்வுகளின் சேகரிப்புத்தான் நினைவுகள். இந்த நிகழ்வுகள் ஐம்புலன்களின் ஊடாக எமது ஆழ் மனதில் பதியப்படுகின்றன. தொட்டுணர்தல், சுவைத்தல், பார்த்தல், நுகர்தல், கேட்டல் என்பவற்றின் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. இப்பதிவுகளை நாம் அறிந்திருத்தல் என்கிறோம்.
எந்தெந்த விடயங்களை நாம் அறிந்திருக்கின்றோம் என்பதை நாம் இலகுவாக அடையாளம் காண்பதற்கு, ஒன்றை நாம் பார்க்கும்போதோ, கேட்கும்போதோ, நுகரும்போதோ, சுவைக்கும் போதோ அல்லது தொட்டு உணரும்போதோ உடனடியாக அதை அடையாளப்படுத்தவோ அல்லது இனங்கண்டு கொள்ளவோ முடியுமாயின் அது ஒரு மீள் நிகழ்வாக இருப்பதனால் அந்த விடயம் ஏற்கனவே அறியப்பட்டாதாக அமைகின்றது. மாறாக, நாம் எதிர்கொள்ளும் ஒன்றை அடையாளப்படுத்தவோ அல்லது இனங்கண்டு கொள்ளவோ முடியாவிடின் அது இதுவரையில் அறியப்படவில்லை என்பதாகப் பொருள்படும்.
அடுத்து, எவ்வளவு அறிந்துள்ளோம் என்பதைப் பொறுத்தவரையில் நாம் எந்தவிதமான அளவீட்டையும் மேற்கொள்ள முடியாது. ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று ஒரு விடயம் மீண்டும் நிகழும்போது அதை இனங்கான முடியுமாயின் அதை அறிந்திருக்கின்றோம் என்பதால் நிகழ்வுகளால் மட்டுமே எமது அறிதலை அளவிடமுடியும். ஆனால் நிகழ்வுகளின் எண்ணிக்கை வரையறையற்று இருப்பதனால் நாம் எவ்வளவு அறிந்துள்ளோம் என்பதை அளவிடுவதற்கு வாய்ப்பு இல்லை.
அறிந்திருத்தலில் உள்ள மிகப் பெரிய பின்னடைவு என்னவெனில் நாம் அறிவு பூர்வமாக ஏற்றுக்கொண்டவை அனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டவையாகவே அமைகின்றன. ஆனால் நம்பிக்கை அதன் தன்மையில் பலவீனமானது ('நம்பிக்கையின் இரு பலவீனங்கள்' என்ற கட்டுரையை வாசிக்கவும்). நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டவை அனைத்தும் பிறரின் உள்ளீடுகளே. இந்த உள்ளீடுகள் மதம், மொழி, கலாச்சாரம், பண்பாடு, சட்ட திட்டங்கள், சமுதாய ஒழுங்கு விதிகள் என்ற வடிவில் எமக்குள் செலுத்தப்படுகின்றன. இவ்வாறு உள்வாங்கப்பட்டவற்றை நாம் வேறுபாடுகளைக் கண்டறியும் கருவியாக பயன்படுத்திக் கொள்கிறோம். இதனால் நாம் அறிந்திருப்பவை அனைத்தும் வேறுபாடுகளே. எமக்கும் பிறருக்குமான வேறுபாடுகளே.
நாம் அறிந்திருக்கும் இந்த வேறுபாடுகள் தான் எமக்குள் பிளவுகளையும், பிரச்சனைகளையும், முரண்பாடுகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த வேறுபாடுகள் அனைத்தினதும் தயாரிப்பாளர்கள் நாம் தான். இந்த வேறுபாடுகள் குடும்பத்துக்குள், குடும்பங்களுக்கிடையில், சமூகத்துக்குள், சமூகங்களுக்கிடையில், நாட்டுக்குள், நாடுகளுக்கிடையில் வெறுப்பை உருவாக்கி அதன் மூலம் ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டிருக்கின்றோம். இந்த அழிவில் இருந்து எம்மை நாம் காப்பாற்றிக் கொள்வதற்கு அறிந்துகொள்ள வேண்டியது எமக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான ஒத்த இயல்புகளைத் தான். அப்போது தான் மனிதன் மனிதனாக வாழ முடியும். எனவே, இதுவரை நாம் அறிந்திருக்கும் வேறுபாடுகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு எமக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான ஒத்த இயல்புகளை அறிந்து கொள்வோம்.
நன்றியுடன் - KG Master
Last edited by கவிப்புயல் இனியவன் on Mon Jul 20, 2015 11:58 am; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: நேரம் கிடைக்கின்ற போது தவறாமல் படியுங்கள் - KG மாஸ்டர் இன் வாழ்க்கை கட்டுரைகள்
உறவுக்கும் உணர்வுக்கும் தடையானது
---------------------------------------------------------
உறவுக்கும் உணர்வுக்கும் தடையானது எது?' என்றதும் முதலில் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது என்னவெனில் ஏதோ ஒன்று இந்த இரண்டுக்கும் தடையாக இருக்கின்றது என்பது தான். அதாவது உறவுக்கு எது தடையாக இருக்கின்றதோ அதுவே உணர்வுக்கும் தடையாக இருக்கின்றது என்பதாகும். ‘உறவுக்குத் தடையானது எது?’ என்றதும் பல விடயங்கள் எமது மனக் கண் முன் குவிந்து விடுகின்றன.. உறவுக்குத் தடையானவையாக போட்டி, பொறாமை, சந்தேகம், அகம்பாவம், துரோகம், தற்பெருமை, பொய் பேசுதல், சுயநலம் போன்றவை உள்ளடங்கலாகப் பல விடயங்கள் அமைகின்றன.
உணர்வுகளைப் பொறு த்தவரையில் அவற்றின் சிறப்பம்சம் என்னவெனில் ஒவ்வொரு உணர்வும் தனித்தே இயங்கும் என்பதாகும். உறவு என்பது கூட்டு அல்லது இணைப்பு என்பதை அடித்தளமாகக் கொண்டது. ஆனால் உணர்வுகளோ ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இயங்குவதில்லை. அவை தனித்தனியாகவே வெளிப்படும். அதாவது ஒரே நேரத்தில் ஒருவர் கவலை கொண்டவராகவும் மகிழ்ச்சியுடையவராகவும் இருக்க முடியாது. அதே போன்றே ஒருவர் கோபமாக இருப்பார் அல்லது சாந்தமாக இருப்பார். அதுமட்டுமன்றி உணர்வுகள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உறவுக்குத் தடையாக இருப்பதுமில்லை. உதாரணமாக, தனது பிள்ளை மீது ஒரு தாய்க்கு கோபம் ஏற்படும் போது அது உறவைப் பாதிப்பது மிகவும் அரிதானதாகவே நிகழ்கின்றது.
இப்போது உறவுக்கும் உணர்வுக்கும் தடையானது எது என்பதைப் பார்ப்போம். கேள்வி அல்லது வினா (Question) என்பதே உறவுக்கும் உணர்வுக்கும் தடையானதாக அமைகின்றது. 'கேள்வியா?' 'கேள்வி இல்லாமல் எப்படி விடயங்களை அறிந்து கொள்வது?'. 'கேள்வி பிறந்ததால் தானே மனிதன் இந்த அளவிற்கு அறிவாலும் ஆற்றலாலும் வளர்ந்திருக்கின்றான்?' என்றெல்லாம் கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டு காலத்தை வீணாக்காதீர்கள்.
மனைவியைப் பார்த்து 'நீ என் மனைவியா?' என்றால் பந்தம் போய்விடும். தாயைப் பார்த்து 'நீ என் தாயா? என்றால் பாசம் தொலைந்து விடும். நண்பனைப் பார்த்து 'நண்பனா நீ?' என்றால் நட்புப் போய்விடும். இவை எல்லாம் கேள்வியின் விளைவுகள் தான். அதே போன்று தான் வார்த்தைகளால் அன்றி உள்ளுணர்வால் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விடயங்களில் கேள்விகளைத் தொடுப்பதன் மூலம் அதன் உண்மைத் தன்மையை நாம் உள்வாங்க முடியாமல் போய்விடுகிறது. உதாரணமாக, ஒரு குழந்தையின் சிரிப்பை உள்ளுணர்வால் உள்வாங்குவதற்குப் பதிலாக அது ஏன் சிரிக்கின்றது என்று கேட்போமாயின் குழந்தையின் சிரிப்பின் உணர்வு ரீதியான இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும்.
இப்போது நாம் கேள்வி என்றால் என்ன? என்பதைப் புரிந்துகொள்வோம்.
கேள்வி என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. எது எதுவோ அதை அதுவாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்மையினதும் உள்ளதை உள்ளபடி உணர்ந்து கொள்ளவதில் (புரிதலில்) ஏற்படும் தடுமாற்றத்தினதும் வெளிப்பாடே கேள்வியாகும். ஏற்றுக்கொள்ளலும், புரிதலும் அதிகரிக்க அதிகரிக்க கேள்விகள் குறையும். கேள்விகளைக் குறைக்கக் குறைக்க ஏற்றுக்கொள்ளலும் புரிதலும் வளரும். உறவுக்கும் உணர்வுக்குமான தடைகள் அற்றுப் போகும்.
நன்றியுடன்: KG Master
---------------------------------------------------------
உறவுக்கும் உணர்வுக்கும் தடையானது எது?' என்றதும் முதலில் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது என்னவெனில் ஏதோ ஒன்று இந்த இரண்டுக்கும் தடையாக இருக்கின்றது என்பது தான். அதாவது உறவுக்கு எது தடையாக இருக்கின்றதோ அதுவே உணர்வுக்கும் தடையாக இருக்கின்றது என்பதாகும். ‘உறவுக்குத் தடையானது எது?’ என்றதும் பல விடயங்கள் எமது மனக் கண் முன் குவிந்து விடுகின்றன.. உறவுக்குத் தடையானவையாக போட்டி, பொறாமை, சந்தேகம், அகம்பாவம், துரோகம், தற்பெருமை, பொய் பேசுதல், சுயநலம் போன்றவை உள்ளடங்கலாகப் பல விடயங்கள் அமைகின்றன.
உணர்வுகளைப் பொறு த்தவரையில் அவற்றின் சிறப்பம்சம் என்னவெனில் ஒவ்வொரு உணர்வும் தனித்தே இயங்கும் என்பதாகும். உறவு என்பது கூட்டு அல்லது இணைப்பு என்பதை அடித்தளமாகக் கொண்டது. ஆனால் உணர்வுகளோ ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இயங்குவதில்லை. அவை தனித்தனியாகவே வெளிப்படும். அதாவது ஒரே நேரத்தில் ஒருவர் கவலை கொண்டவராகவும் மகிழ்ச்சியுடையவராகவும் இருக்க முடியாது. அதே போன்றே ஒருவர் கோபமாக இருப்பார் அல்லது சாந்தமாக இருப்பார். அதுமட்டுமன்றி உணர்வுகள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உறவுக்குத் தடையாக இருப்பதுமில்லை. உதாரணமாக, தனது பிள்ளை மீது ஒரு தாய்க்கு கோபம் ஏற்படும் போது அது உறவைப் பாதிப்பது மிகவும் அரிதானதாகவே நிகழ்கின்றது.
இப்போது உறவுக்கும் உணர்வுக்கும் தடையானது எது என்பதைப் பார்ப்போம். கேள்வி அல்லது வினா (Question) என்பதே உறவுக்கும் உணர்வுக்கும் தடையானதாக அமைகின்றது. 'கேள்வியா?' 'கேள்வி இல்லாமல் எப்படி விடயங்களை அறிந்து கொள்வது?'. 'கேள்வி பிறந்ததால் தானே மனிதன் இந்த அளவிற்கு அறிவாலும் ஆற்றலாலும் வளர்ந்திருக்கின்றான்?' என்றெல்லாம் கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டு காலத்தை வீணாக்காதீர்கள்.
மனைவியைப் பார்த்து 'நீ என் மனைவியா?' என்றால் பந்தம் போய்விடும். தாயைப் பார்த்து 'நீ என் தாயா? என்றால் பாசம் தொலைந்து விடும். நண்பனைப் பார்த்து 'நண்பனா நீ?' என்றால் நட்புப் போய்விடும். இவை எல்லாம் கேள்வியின் விளைவுகள் தான். அதே போன்று தான் வார்த்தைகளால் அன்றி உள்ளுணர்வால் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விடயங்களில் கேள்விகளைத் தொடுப்பதன் மூலம் அதன் உண்மைத் தன்மையை நாம் உள்வாங்க முடியாமல் போய்விடுகிறது. உதாரணமாக, ஒரு குழந்தையின் சிரிப்பை உள்ளுணர்வால் உள்வாங்குவதற்குப் பதிலாக அது ஏன் சிரிக்கின்றது என்று கேட்போமாயின் குழந்தையின் சிரிப்பின் உணர்வு ரீதியான இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும்.
இப்போது நாம் கேள்வி என்றால் என்ன? என்பதைப் புரிந்துகொள்வோம்.
கேள்வி என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. எது எதுவோ அதை அதுவாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்மையினதும் உள்ளதை உள்ளபடி உணர்ந்து கொள்ளவதில் (புரிதலில்) ஏற்படும் தடுமாற்றத்தினதும் வெளிப்பாடே கேள்வியாகும். ஏற்றுக்கொள்ளலும், புரிதலும் அதிகரிக்க அதிகரிக்க கேள்விகள் குறையும். கேள்விகளைக் குறைக்கக் குறைக்க ஏற்றுக்கொள்ளலும் புரிதலும் வளரும். உறவுக்கும் உணர்வுக்குமான தடைகள் அற்றுப் போகும்.
நன்றியுடன்: KG Master
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: நேரம் கிடைக்கின்ற போது தவறாமல் படியுங்கள் - KG மாஸ்டர் இன் வாழ்க்கை கட்டுரைகள்
மனிதனின் உணவு எது?:
நாம் உண்ணும் உணவு பற்றி பல்வேறு கருத்துக்கள் எம்மிடம் உண்டு. அசைவ உணவை உண்பவர்கள் உயிர்களைக் கொல்கிறார்கள் அல்லது கொல்வதற்கு ஊக்கமளிக்கிறார்கள், இது தவிர்க்கப்படல் வேண்டும் என்று ஒருசாராரும், ‘உணவுக்காக உயிர்களைக் கொன்றுதான் ஆக வேண்டும், உயிருள்ளவற்றை உண்டு தானே உயிர் வாழ முடியும், தாவரங்களும் உயிருள்ளவை தானே, அப்படியானால் அதுவும் கொலை தானே என்று இன்னொரு சாராரும் தமது கருத்துக்களைப் பதிவு செய்கிறார்கள்.
ஒவ்வொரு உயிரினமும் அதன் வாழ்தலுக்காக, உயிருள்ளவற்றை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, உயிர்த் தன்மையை இழப்பதற்கு முன் உண்டு தான் வாழவேண்டும். இயற்கையானது ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதன் உணவாக அமைய வேண்டியதை மிகத் தாராளமாகப் படைத்திருக்கிறது. இந்தப் படைப்பின் சிறப்பைக் கூறுவதாயின் உணவாக அமைய வேண்டியதன் அளவு அதை உண்பதை விடப் பலமடங்கு அதிகமாக இருப்பது தான். அதாவது, தாவரங்களை உண்ணும் விலங்குகளை விட தாவரங்கள் மிக அதிகமாகவும், தாவர விலங்குகள் எண்ணிக்கை, அவற்றை உண்ணும் மாமிச விலங்குகளை விட மிக அதிகமாகவும் படைக்கப் பட்டிருக்கிறன. உணவுத் தட்டுப்பாடு என்பது இயற்கையில் அறவே கிடையாது.
ஒவ்வொரு உயிருக்கும் அதன் உணவை இனங்கண்டு கொள்ளும் இயல்பை இயற்கை கொடுத்திருக்கிறது. ஒரு சிங்கத்தின் உணவானது மாமிசமாகும். ஒரு மானின் உணவு தாவரமாகும். மனிதனின் உணவு?
இயற்கையின் படைப்பில் இரண்டு வகையான உயிரினங்களே இருக்கின்றன. வாழ்வதற்காக (Living nature) பிறப்பவை ஒரு வகை, வழங்குவதற்காக (Giving nature) பிறப்பவை மறு வகை. இந்த வேறுபாட்டை ஒவ்வொரு மனிதனாலும் புரிந்துகொள்ள முடியம். வழங்குவதற்காகப் பிறப்பவை அனைத்தும் தாம் வாழ்ந்து கொண்டே வழங்குபவையாகும்.
மனிதனின் தெரிவு செய்யும் தகுதியானது ஏனைய உயிரினங்களில் இருந்து அவனை வேறுபடுத்துகின்றது. இந்தத் தகுதியால் மனித இனம் உயர்ந்த உயிரினம் என்றும் கருதப்படுகின்றது. உணவின் தெரிவில் உயர்ந்த உயிரினமாகக் கருதப்படுவதற்கு மனிதன் என்ன செய்ய வேண்டும்? சைவ உணவு, அசைவ உணவு என்ற வேறுபாட்டை விடுத்து தனது உணவாக அமைவது வாழ்வதற்காகப் பிறந்துள்ளதா அல்லது வழங்குவதற்காகப் பிறந்துள்ளதா என்பதில் தெளிவிருந்தால் போதும்.
நன்றியுடன் KG Master.
நாம் உண்ணும் உணவு பற்றி பல்வேறு கருத்துக்கள் எம்மிடம் உண்டு. அசைவ உணவை உண்பவர்கள் உயிர்களைக் கொல்கிறார்கள் அல்லது கொல்வதற்கு ஊக்கமளிக்கிறார்கள், இது தவிர்க்கப்படல் வேண்டும் என்று ஒருசாராரும், ‘உணவுக்காக உயிர்களைக் கொன்றுதான் ஆக வேண்டும், உயிருள்ளவற்றை உண்டு தானே உயிர் வாழ முடியும், தாவரங்களும் உயிருள்ளவை தானே, அப்படியானால் அதுவும் கொலை தானே என்று இன்னொரு சாராரும் தமது கருத்துக்களைப் பதிவு செய்கிறார்கள்.
ஒவ்வொரு உயிரினமும் அதன் வாழ்தலுக்காக, உயிருள்ளவற்றை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, உயிர்த் தன்மையை இழப்பதற்கு முன் உண்டு தான் வாழவேண்டும். இயற்கையானது ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதன் உணவாக அமைய வேண்டியதை மிகத் தாராளமாகப் படைத்திருக்கிறது. இந்தப் படைப்பின் சிறப்பைக் கூறுவதாயின் உணவாக அமைய வேண்டியதன் அளவு அதை உண்பதை விடப் பலமடங்கு அதிகமாக இருப்பது தான். அதாவது, தாவரங்களை உண்ணும் விலங்குகளை விட தாவரங்கள் மிக அதிகமாகவும், தாவர விலங்குகள் எண்ணிக்கை, அவற்றை உண்ணும் மாமிச விலங்குகளை விட மிக அதிகமாகவும் படைக்கப் பட்டிருக்கிறன. உணவுத் தட்டுப்பாடு என்பது இயற்கையில் அறவே கிடையாது.
ஒவ்வொரு உயிருக்கும் அதன் உணவை இனங்கண்டு கொள்ளும் இயல்பை இயற்கை கொடுத்திருக்கிறது. ஒரு சிங்கத்தின் உணவானது மாமிசமாகும். ஒரு மானின் உணவு தாவரமாகும். மனிதனின் உணவு?
இயற்கையின் படைப்பில் இரண்டு வகையான உயிரினங்களே இருக்கின்றன. வாழ்வதற்காக (Living nature) பிறப்பவை ஒரு வகை, வழங்குவதற்காக (Giving nature) பிறப்பவை மறு வகை. இந்த வேறுபாட்டை ஒவ்வொரு மனிதனாலும் புரிந்துகொள்ள முடியம். வழங்குவதற்காகப் பிறப்பவை அனைத்தும் தாம் வாழ்ந்து கொண்டே வழங்குபவையாகும்.
மனிதனின் தெரிவு செய்யும் தகுதியானது ஏனைய உயிரினங்களில் இருந்து அவனை வேறுபடுத்துகின்றது. இந்தத் தகுதியால் மனித இனம் உயர்ந்த உயிரினம் என்றும் கருதப்படுகின்றது. உணவின் தெரிவில் உயர்ந்த உயிரினமாகக் கருதப்படுவதற்கு மனிதன் என்ன செய்ய வேண்டும்? சைவ உணவு, அசைவ உணவு என்ற வேறுபாட்டை விடுத்து தனது உணவாக அமைவது வாழ்வதற்காகப் பிறந்துள்ளதா அல்லது வழங்குவதற்காகப் பிறந்துள்ளதா என்பதில் தெளிவிருந்தால் போதும்.
நன்றியுடன் KG Master.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: நேரம் கிடைக்கின்ற போது தவறாமல் படியுங்கள் - KG மாஸ்டர் இன் வாழ்க்கை கட்டுரைகள்
புத்திசாலித்தனம்
ஒவ்வொரு உயிருக்கும் அதன் வாழ்வை நல்ல முறையில் வாழ்வதற்குத் தேவையான புத்திசாலித்தனம் இயற்கையால் கொடுக்கப்பட்டிருக்கிறது. மனிதன் உள்ளடங்கலாக உயிருள்ள அனைத்திற்கும் இந்தக் கொடை கிடைத்திருக்கிறது. மனிதனைத் தவிர ஏனைய உயிரினங்கள் அனைத்தும் இந்தப் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வாழ்வை நல்ல முறையில் வாழ்ந்து பூர்த்தி செய்கின்றன.
மனிதன் மட்டும் இயற்கையால் கொடுக்கப்பட்ட புத்திசாலித்தனத்தைப் புறக்கணித்து குழப்பமாக வாழ்கிறானே, எதனால்?
வாழ்வின் ஆரம்பத்தில் இருந்தே மனிதனுக்கு அதற்கான வாய்ப்பு மறுக்கப்படுவது தான் காரணம். குழந்தை பிறந்தவுடனேயே அதன் புத்திசாலித்தனம் மறைக்கப்பட்டு, மறுக்கப்படுகிறது. பெற்றோர்கள் தங்களது புத்திசாலித்தனத்திற்கு ஏற்ப குழந்தையை மாற்றிவிடுகிறார்கள். பெற்றோர்களும் இவ்வாறு தான் மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரிவதில்லை. அவர்களும் இரவல் புத்தியில் தான் வாழ்வை ஆரம்பித்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது தான் அதற்கான காரணமாகும்.
இயற்கை கொடுத்துள்ள புத்திசாலித்தனமானது, தனிப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் தனித்துவமானது. மனிதனைத் தவிர மற்றைய உயிரினங்கள் ஒவ்வொன்றும் தமது இனத்துடன் சேர்ந்து வாழ்ந்தாலும் தமக்கென, தனித்துவமாக இயற்கையால் தரப்பட்டுள்ள புத்திசாலித்தனத்திற்கு ஏற்ப வாழ்க்கையை நகர்த்துகின்றன. உதாரணமாக, ஒவ்வொரு விலங்கும் அதன் இனத்தின் பகுதியாக இருந்துகொண்டு அதற்கென கொடுக்கப்பட்டுள்ள புத்திசாலித்தனத்திற்கு ஏற்ப வாழ்கிறது.
மனித இனத்தின் ஒவ்வொரு அங்கத்தவருக்கும் அதே வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருந்தாலும், சாதி, சமயம், மொழி, கலாச்சாரம், பணப்பாடு, போன்ற பிரிவுகளையும் வரையறைகளையும் உருவாக்கி, வியாபாரியாகவும், வியாபாரப் பொருளாகவும் மாற்றமடைந்து, தனித்துவத்தையும். அந்தத் தனித்துவத்திற்கான புத்திசாலித் தனத்தையும் இழந்துவிட்டான்.
இருப்பினும், இயற்கை அளித்துள்ள தனித்துவத்தையும் அதற்கான புத்திசாலித்தனத்தையும் வாழ்தலின் நகர்வாகக் கொள்ளும் ஒரு மனிதன் எதற்கும் அடிமையாவதில்லை. அவனை அடிமைப்படுத்தவும் முடியாது.
நன்றியுடன் – கேஜீ மாஸ்டர்
ஒவ்வொரு உயிருக்கும் அதன் வாழ்வை நல்ல முறையில் வாழ்வதற்குத் தேவையான புத்திசாலித்தனம் இயற்கையால் கொடுக்கப்பட்டிருக்கிறது. மனிதன் உள்ளடங்கலாக உயிருள்ள அனைத்திற்கும் இந்தக் கொடை கிடைத்திருக்கிறது. மனிதனைத் தவிர ஏனைய உயிரினங்கள் அனைத்தும் இந்தப் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வாழ்வை நல்ல முறையில் வாழ்ந்து பூர்த்தி செய்கின்றன.
மனிதன் மட்டும் இயற்கையால் கொடுக்கப்பட்ட புத்திசாலித்தனத்தைப் புறக்கணித்து குழப்பமாக வாழ்கிறானே, எதனால்?
வாழ்வின் ஆரம்பத்தில் இருந்தே மனிதனுக்கு அதற்கான வாய்ப்பு மறுக்கப்படுவது தான் காரணம். குழந்தை பிறந்தவுடனேயே அதன் புத்திசாலித்தனம் மறைக்கப்பட்டு, மறுக்கப்படுகிறது. பெற்றோர்கள் தங்களது புத்திசாலித்தனத்திற்கு ஏற்ப குழந்தையை மாற்றிவிடுகிறார்கள். பெற்றோர்களும் இவ்வாறு தான் மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரிவதில்லை. அவர்களும் இரவல் புத்தியில் தான் வாழ்வை ஆரம்பித்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது தான் அதற்கான காரணமாகும்.
இயற்கை கொடுத்துள்ள புத்திசாலித்தனமானது, தனிப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் தனித்துவமானது. மனிதனைத் தவிர மற்றைய உயிரினங்கள் ஒவ்வொன்றும் தமது இனத்துடன் சேர்ந்து வாழ்ந்தாலும் தமக்கென, தனித்துவமாக இயற்கையால் தரப்பட்டுள்ள புத்திசாலித்தனத்திற்கு ஏற்ப வாழ்க்கையை நகர்த்துகின்றன. உதாரணமாக, ஒவ்வொரு விலங்கும் அதன் இனத்தின் பகுதியாக இருந்துகொண்டு அதற்கென கொடுக்கப்பட்டுள்ள புத்திசாலித்தனத்திற்கு ஏற்ப வாழ்கிறது.
மனித இனத்தின் ஒவ்வொரு அங்கத்தவருக்கும் அதே வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருந்தாலும், சாதி, சமயம், மொழி, கலாச்சாரம், பணப்பாடு, போன்ற பிரிவுகளையும் வரையறைகளையும் உருவாக்கி, வியாபாரியாகவும், வியாபாரப் பொருளாகவும் மாற்றமடைந்து, தனித்துவத்தையும். அந்தத் தனித்துவத்திற்கான புத்திசாலித் தனத்தையும் இழந்துவிட்டான்.
இருப்பினும், இயற்கை அளித்துள்ள தனித்துவத்தையும் அதற்கான புத்திசாலித்தனத்தையும் வாழ்தலின் நகர்வாகக் கொள்ளும் ஒரு மனிதன் எதற்கும் அடிமையாவதில்லை. அவனை அடிமைப்படுத்தவும் முடியாது.
நன்றியுடன் – கேஜீ மாஸ்டர்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: நேரம் கிடைக்கின்ற போது தவறாமல் படியுங்கள் - KG மாஸ்டர் இன் வாழ்க்கை கட்டுரைகள்
வாழாமல் இறக்கும் உயிரினம்
மனிதனைத் தவிர ஏனைய உயிரினங்களுக்குக் ‘காலம்’ என்று ஒன்று இல்லை. இயற்கையின் இயக்கத்துடன் இணைந்து செயற்படுவதால் அவை இயற்கை கொடுத்துள்ள வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கின்றன.
மனிதனோ இயற்கையின் அதி விசேட கொடையாகத் தனக்குத் தரப்பட்டிருக்கும் ‘தெரிவு செய்யும்’ ஆற்றலைத் தவறாகப் புரிந்து கொண்டு இயற்கையின் இயக்கத்தைக் ‘காலம்’ எனப் பெயரிட்டு நேற்றைய நினைவுகளிலும் நாளைய கனவுகளிலும் நகர்ந்து கொண்டு ‘இன்று’ என்ற அளப்பரிய கொடையை இழந்து விடுகிறான்.
‘இன்று’ வாழாத எந்த உயிரும் என்றுமே வாழ்வதில்லை. பாவம் மனிதன், இன்று வாழ்வதற்கான முழுமையான வாய்ப்பு இருந்தும் இயற்கையின் இயக்கத்துடன் இணையாமல் நினைவுகளிலும் கனவுகளிலும் சிக்குண்டு ‘இன்றை’ இழந்து வாழாமலே இறந்து போகிறான்.
- நன்றியுடன் - KG Master
மனிதனைத் தவிர ஏனைய உயிரினங்களுக்குக் ‘காலம்’ என்று ஒன்று இல்லை. இயற்கையின் இயக்கத்துடன் இணைந்து செயற்படுவதால் அவை இயற்கை கொடுத்துள்ள வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கின்றன.
மனிதனோ இயற்கையின் அதி விசேட கொடையாகத் தனக்குத் தரப்பட்டிருக்கும் ‘தெரிவு செய்யும்’ ஆற்றலைத் தவறாகப் புரிந்து கொண்டு இயற்கையின் இயக்கத்தைக் ‘காலம்’ எனப் பெயரிட்டு நேற்றைய நினைவுகளிலும் நாளைய கனவுகளிலும் நகர்ந்து கொண்டு ‘இன்று’ என்ற அளப்பரிய கொடையை இழந்து விடுகிறான்.
‘இன்று’ வாழாத எந்த உயிரும் என்றுமே வாழ்வதில்லை. பாவம் மனிதன், இன்று வாழ்வதற்கான முழுமையான வாய்ப்பு இருந்தும் இயற்கையின் இயக்கத்துடன் இணையாமல் நினைவுகளிலும் கனவுகளிலும் சிக்குண்டு ‘இன்றை’ இழந்து வாழாமலே இறந்து போகிறான்.
- நன்றியுடன் - KG Master
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: நேரம் கிடைக்கின்ற போது தவறாமல் படியுங்கள் - KG மாஸ்டர் இன் வாழ்க்கை கட்டுரைகள்
மனக்குழப்பம்
சாதாரணமாக நாம் எல்லோரும் 'மனக்குழப்பம்' என்றால் மனம் குழம்பிப்போய் இருப்பது எனக் கருதுகிறோம். எதனால் குழப்பம் ஏற்படுகிறது? மனத்தைக் குழப்புவது எது? மனம் குழம்புகிறதா அல்லது குழப்புகிறதா? என்னென்ன சம்பவங்கள் அல்லது சந்தர்ப்பங்களில் மனம் குழம்புகிறது அல்லது குழப்பத்தை உண்டாக்குகிறது? ஒவ்வொரு முறையும் குழம்புவதற்கு அல்லது குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அந்தச் சம்பவம் அல்லது சந்தர்ப்பம் காரணமா அல்லது எல்லாவகையான குழப்பத்துக்கும் ஒரே காரணமா? கேள்வி மேல் கேள்வி கேட்டு உங்களைக் குழப்புவதிலும் ஒரு காரணம் உண்டு.
'மனக்குழப்பம்' என்பது பல வடிவங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. தடுமாற்றம், திகைப்பு, வெட்கம், கலக்கம், அச்சம், ஆர்வமின்மை, பலவீனம், தெளிவின்மை, அமைதியின்மை எனப் பல வடிவங்களில் அடையாளப்படுத்தப்படுகின்றது. மனக்குழப்பம் என்பது வெவ்வேறான வடிவங்களைப் பெற்றிருந்தாலும் நாம் கவனத்திலும் கருத்திலும் வைத்திருக்க வேண்டிய விடயம் மனம் குழம்புகிறதா அல்லது குழப்புகிறதா? என்பதுதான். இதை நாம் தெளிவாகப புரிந்து கொள்வதற்கு முதலில் 'மனம்' என்றால் என்ன என்பதை அறிந்துகொள்வோம்.
மனம் என்பது நினைவுகளின் பண்டகசாலை. நமது நாளாந்த நகர்வில் உள்வாங்கிக் கொண்ட அனைத்தையும் சேகரித்து வைத்துக்கொண்டிருக்கும் பண்டகசாலை. உதாரணமாகக் கூறுவதாயின் இது ஒரு கணணி (computer)போன்றது. ஒரு கணனியில் நாம் சேகரித்து வைக்கும் தரவுகள் போன்று எமது மனமும் தரவுகளைச் சேகரித்து வைக்கும்.
மனக்குழப்பத்தை மிகவும் இலகுவாகப் புரிந்துகொள்வதற்கு எமது மனத்திற்கும் ஒரு கணனிக்கும் இடையிலான அடிப்படை வேறுபாட்டைக் கவனத்தில் கொள்வது அவசியம். அதாவது நாம் ஒரு தரவை அல்லது பதிலை கணனியிடம் கேட்டால் அதற்குப் பொருத்தமான தரவு அல்லது பதில் ஏற்கனவே இருக்குமாயின் சரியான விடையைத் தரும். மாறாக பொருத்தமான பதில் இல்லாவிடில் 'பதில் இல்லை' என்று கூறும் அல்லது ‘கேள்வியைச் சரிபார்க்கவும்’ என்று எங்களைக் கேட்கும். உதாரணமாக, ஒரு கணனியில் ஐந்தும் எட்டும் சேர்ந்தால் பதின்மூன்று என்று பதிவு செய்திருப்போமாயின் ஏழும் ஆறும் எத்தனை என்று கேட்டால் பதில் கிடைக்காது.
ஆனால் மனமானது தான் ஏற்கனவே பதிவு செய்துள்ள விடயங்களில் இருந்து பல்வேறு தெரிவுகளைத் தந்து குழப்பிக்கொண்டிருக்கும். இதுவே மனக் குழப்பத்திற்கான அடிப்படையாகும். எப்படி?
மனக்குழப்பம் ஏற்படுவதற்கான காரணமாக அமைவது எமது மனம் எமது கேள்விக்கு இது தான் விடை என்பதைத் திட்டவட்டமாகத் தராதது தான். திட்டவட்டமான பதிலை மனத்தால் தரமுடியாமல் போவதற்கான காரணம் எமது கேள்விகள் ஏற்கனவே மனம் சேகரித்து வைத்திருக்கும் தகவலுடன் நேரடியான தொடர்பைப் பெறாதிருப்பது தான். வேறொருவகையில் கூறுவதாயின், கேள்விகள் புதிதாக இருக்கும் ஆனால் மனமோ பழைய தகவல்களிலிருந்து விடையைத் தேடும். இந்த நடவடிக்கையே மனக்குழப்பத்திற்குக் காரணமாக அமைகின்றது. அதாவது நமது வாழ்க்கை புதிய கேள்விகளை முன்வைத்துக் கொண்டிருக்கும். ஆனால் மனமோ பழைய தகவல்களில் விடையைத் தேடிக்கொண்டிருக்கும்.
இந்த முரண்பட்ட செயற்பாடே மனக் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. இந்தக் குழப்பத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கு நாம் கருத்தி கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில், நமது வாழ்க்கை முன்வைக்கும் ஒவ்வொரு கேள்வியும் புதிய கேள்வி என்பதுதான். அதாவது வாழ்க்கை ஒரு பொழுதும் ஒரு கேள்வியை ஒரு முறைக்கு மேல் முன்வைப்பதில்லை என்பது தான். கேள்விகள் புதிதாக இருப்பதால் பதில்களும் புதிதாக இருத்தல் வேண்டும்.
வாழ்க்கையின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கிடைக்கும். அதுவரை பொறுமையாக இருப்பது தான் மனக் குழப்பத்தை தவிர்ப்பதற்கான ஒரே வழியாகும்.
நன்றியுடன் KG Master
சாதாரணமாக நாம் எல்லோரும் 'மனக்குழப்பம்' என்றால் மனம் குழம்பிப்போய் இருப்பது எனக் கருதுகிறோம். எதனால் குழப்பம் ஏற்படுகிறது? மனத்தைக் குழப்புவது எது? மனம் குழம்புகிறதா அல்லது குழப்புகிறதா? என்னென்ன சம்பவங்கள் அல்லது சந்தர்ப்பங்களில் மனம் குழம்புகிறது அல்லது குழப்பத்தை உண்டாக்குகிறது? ஒவ்வொரு முறையும் குழம்புவதற்கு அல்லது குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அந்தச் சம்பவம் அல்லது சந்தர்ப்பம் காரணமா அல்லது எல்லாவகையான குழப்பத்துக்கும் ஒரே காரணமா? கேள்வி மேல் கேள்வி கேட்டு உங்களைக் குழப்புவதிலும் ஒரு காரணம் உண்டு.
'மனக்குழப்பம்' என்பது பல வடிவங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. தடுமாற்றம், திகைப்பு, வெட்கம், கலக்கம், அச்சம், ஆர்வமின்மை, பலவீனம், தெளிவின்மை, அமைதியின்மை எனப் பல வடிவங்களில் அடையாளப்படுத்தப்படுகின்றது. மனக்குழப்பம் என்பது வெவ்வேறான வடிவங்களைப் பெற்றிருந்தாலும் நாம் கவனத்திலும் கருத்திலும் வைத்திருக்க வேண்டிய விடயம் மனம் குழம்புகிறதா அல்லது குழப்புகிறதா? என்பதுதான். இதை நாம் தெளிவாகப புரிந்து கொள்வதற்கு முதலில் 'மனம்' என்றால் என்ன என்பதை அறிந்துகொள்வோம்.
மனம் என்பது நினைவுகளின் பண்டகசாலை. நமது நாளாந்த நகர்வில் உள்வாங்கிக் கொண்ட அனைத்தையும் சேகரித்து வைத்துக்கொண்டிருக்கும் பண்டகசாலை. உதாரணமாகக் கூறுவதாயின் இது ஒரு கணணி (computer)போன்றது. ஒரு கணனியில் நாம் சேகரித்து வைக்கும் தரவுகள் போன்று எமது மனமும் தரவுகளைச் சேகரித்து வைக்கும்.
மனக்குழப்பத்தை மிகவும் இலகுவாகப் புரிந்துகொள்வதற்கு எமது மனத்திற்கும் ஒரு கணனிக்கும் இடையிலான அடிப்படை வேறுபாட்டைக் கவனத்தில் கொள்வது அவசியம். அதாவது நாம் ஒரு தரவை அல்லது பதிலை கணனியிடம் கேட்டால் அதற்குப் பொருத்தமான தரவு அல்லது பதில் ஏற்கனவே இருக்குமாயின் சரியான விடையைத் தரும். மாறாக பொருத்தமான பதில் இல்லாவிடில் 'பதில் இல்லை' என்று கூறும் அல்லது ‘கேள்வியைச் சரிபார்க்கவும்’ என்று எங்களைக் கேட்கும். உதாரணமாக, ஒரு கணனியில் ஐந்தும் எட்டும் சேர்ந்தால் பதின்மூன்று என்று பதிவு செய்திருப்போமாயின் ஏழும் ஆறும் எத்தனை என்று கேட்டால் பதில் கிடைக்காது.
ஆனால் மனமானது தான் ஏற்கனவே பதிவு செய்துள்ள விடயங்களில் இருந்து பல்வேறு தெரிவுகளைத் தந்து குழப்பிக்கொண்டிருக்கும். இதுவே மனக் குழப்பத்திற்கான அடிப்படையாகும். எப்படி?
மனக்குழப்பம் ஏற்படுவதற்கான காரணமாக அமைவது எமது மனம் எமது கேள்விக்கு இது தான் விடை என்பதைத் திட்டவட்டமாகத் தராதது தான். திட்டவட்டமான பதிலை மனத்தால் தரமுடியாமல் போவதற்கான காரணம் எமது கேள்விகள் ஏற்கனவே மனம் சேகரித்து வைத்திருக்கும் தகவலுடன் நேரடியான தொடர்பைப் பெறாதிருப்பது தான். வேறொருவகையில் கூறுவதாயின், கேள்விகள் புதிதாக இருக்கும் ஆனால் மனமோ பழைய தகவல்களிலிருந்து விடையைத் தேடும். இந்த நடவடிக்கையே மனக்குழப்பத்திற்குக் காரணமாக அமைகின்றது. அதாவது நமது வாழ்க்கை புதிய கேள்விகளை முன்வைத்துக் கொண்டிருக்கும். ஆனால் மனமோ பழைய தகவல்களில் விடையைத் தேடிக்கொண்டிருக்கும்.
இந்த முரண்பட்ட செயற்பாடே மனக் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. இந்தக் குழப்பத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கு நாம் கருத்தி கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில், நமது வாழ்க்கை முன்வைக்கும் ஒவ்வொரு கேள்வியும் புதிய கேள்வி என்பதுதான். அதாவது வாழ்க்கை ஒரு பொழுதும் ஒரு கேள்வியை ஒரு முறைக்கு மேல் முன்வைப்பதில்லை என்பது தான். கேள்விகள் புதிதாக இருப்பதால் பதில்களும் புதிதாக இருத்தல் வேண்டும்.
வாழ்க்கையின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கிடைக்கும். அதுவரை பொறுமையாக இருப்பது தான் மனக் குழப்பத்தை தவிர்ப்பதற்கான ஒரே வழியாகும்.
நன்றியுடன் KG Master
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» கே ஜி மாஸ்டர் கட்டுரைகள்
» கே ஜி மாஸ்டர் - குடும்ப கட்டுரைகள்
» வாழ்க்கை சுத்த போர்னு தோணுதா? அப்போ வாங்க கொஞ்ச நேரம் கால் வீசி ஊஞ்சல் ஆடலாம்!
» தவறாமல் பார்த்து செல்ல்லுங்க
» கடவுளை தவறாமல் வழிபட்டால்..
» கே ஜி மாஸ்டர் - குடும்ப கட்டுரைகள்
» வாழ்க்கை சுத்த போர்னு தோணுதா? அப்போ வாங்க கொஞ்ச நேரம் கால் வீசி ஊஞ்சல் ஆடலாம்!
» தவறாமல் பார்த்து செல்ல்லுங்க
» கடவுளை தவறாமல் வழிபட்டால்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|