தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Yesterday at 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
சூப்பர் மார்க்கெட்டும் அண்ணாச்சி கடையும்
Page 1 of 1
சூப்பர் மார்க்கெட்டும் அண்ணாச்சி கடையும்
இன்று ஊரெங்கும் பேரங்காடிகள் வெவ்வேறு பெயர்களில் (ஹைபர் மார்க்கெட், சூப்பர் மார்க்கெட்), வடிவங்களில் பெருகி வருகிறது. எங்கு திரும்பினாலும் தள்ளுபடி, ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம், 25-75% தள்ளுபடி, இலவச பாரிக்கிங் வசதி, கணினி பில்லிங் கவுன்டர்கள் என்று நவீன வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பெரிய அறைகள் நம்மை கவர்ந்திழுக்கின்றன.
[You must be registered and logged in to see this link.]
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்ட நுழைவுப்பகுதி, பெட்டகங்களில் அடைக்கப்டட்ட ஜெல்லி, மிட்டாய், ரசாயன பொருட்கள் கலந்த கலர் குளிர்பானங்கள் என்று உடல்நலத்தைப் பேணும் பொருட்கள், கவர்ச்சிகரமான ஷாம்பு, முகப்பசைகள், உதட்டுச் சாயம், அழகுசாதனப் பொருட்கள், எண்ணெய் (ஆயில்) நிரப்பப்பட்ட கண்ணாடிக் குடுவைகள் (பாட்டில்), மாவுப் பொருட்கள், பலசரக்கு மற்றும் மளிகைப் பொருட்கள் ஒருபுறமும், புத்தங்களுக்கென தனி பிரிவு, குழந்தைகளுக்கான பொம்மைகள், பதப்படுத்தப்பட்ட மாமிச உணவுகள், காய்கறிகள் மற்றும் பழவகைகள் என்று எளிதில் கண்டுகொள்ளக்கூடிய வகையில் பெயர்ப் பலகைகள் கடை முழுவதும் தொங்க விடப்பட்டிருக்கும்.
இப்படி நகர்புறங்களில் மெல்ல மெல்ல ஹைடெக் கடைகளின் ஆக்கிரமிப்பு ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மறுபுறம் இதையே குடும்பத் தொழிலாகக் கொண்ட நமது தெருவோர அண்ணாச்சி கடைகள் வேகமாக மறைந்து வருகின்றன.
[You must be registered and logged in to see this link.]
இக்கடைகளின் உரிமையாளர்கள் பெரும்பாலும் நெல்லை மாவட்டத்திலிருந்து குடிபெயர்ந்தவர்கள். அவர்களை பொதுவாக ''அண்ணாச்சி'' என்றழைப்பது வழக்கம். இவர்களின் கடைகள் பெரும்பாலும் மக்கள் அகிகமாக வசிக்கும் இடத்திலோ அல்லது தெருமுனையிலோ இருக்கும். பொதுவாக இரண்டு மூன்று தெருக்களுக்கு ஒரு கடையாக இருக்கும். கடையின் மொத்தப்பகுதி ஏறக்குறைய 150-200 சதுர அடிக்குள் இருக்கும். வெளிப்புறத்தில் பலகைக் கதவுகள் வைக்கப்பட்டு இடையில் இரண்டு அல்லது மூன்று அரிசி மூட்டைகள் அடுக்கப்பட்டு உள்ளிருப்பவருக்கும் வாடிக்கையாளர்க்கும் நடுவே ஒரு தடுப்புச் சுவராக இருக்கும்.
[You must be registered and logged in to see this link.]
கடையின் உரிமையாளர் கல்லாப்பெட்டியின் அருகில் நரம்புகள் பிண்ணப்பட்ட தேய்ந்த மர நாற்காலியில் அமர்ந்திருப்பார். கடையின் உட்புறத்தில் திரைச்சீலையால் மறைக்கப்பட்ட அவர்களது வசிப்பிடமிருக்கும், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு உட்புற அறை தெரியாது. நாற்காலியின் மறுபுறத்தில் தூசி படிந்த நிலையில் பழைய BPL அல்லது Onida டிவியும் மறுபுறம் மாதாந்திர நாட்காட்டியும் சுவற்றில் அறையப்பட்டிருக்கும். நுழைவாயிலின் இரு புறங்களிலும் மூங்கில் நட்டு இடையில் தென்னைவோலை வேயப்பட்டிருக்கும். ஓலையின் நடுவில் பல வண்ணங்களில் நோட்டீஸ்கள் சொருகப்பட்டிருக்கும் - புதிய துணிக்கடை விளம்பரம், மூலம் பௌத்திரம், ஆண்மை குறைவு-செக்ஸ் கவுன்சிலிங் ஸ்பெசலிட் ஆயுர்வேத சித்தர் திருச்சி/சேலம் வருகை பற்றிய மஞ்சள் நிற நோட்டீஸ்கள் இருக்கும். ஓலையின் பின்புறம் பயறுவகைகளை சலித்த ஓடும், வெற்றிலைப் பாக்குக் கறையும் தரையில் பரவலாகக்கிடக்கும். நுழைவாயிலின் முன் நிழலான பகுதியில் பச்சை நிற சோடா/கலர் பாட்டில்கள் சிறிய தண்ணீர் தொட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.
அன்றைய நாட்களில் இதுபோன்று தள்ளுபடி என்ற வார்த்தையை நாம் மறந்தும் கேட்டதில்லை. ஒவ்வொரு பொருளும் அதற்குரிய சரியான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. விலைகளை மறைமுகமாகக் கூட்டியும் இறக்கியும், கலர்கலராக தள்ளுபடி விளம்பரம் செய்யும் இன்றைய போக்கு அன்று கையாளப்படவில்லை. கவர்ச்சியான தள்ளுபடி அறிவித்து அதிக லாபம்/ஆதாயம் பெற அவர்கள் எண்ணயதில்லை. அவர்களின் தள்ளுபடி உக்தி பெரிய ஆதாயத்திற்கான வழியாக இருந்ததில்லை. ஒரு ருபாய்க்கு தேங்காய் வாங்கினால் ஒரு கைப்பிடி கருவேற்பிலை இலவசம், ஐந்து தேன் மிட்டாய்க்கு ஒரு மிட்டாய், இரண்டு நெய் பிஸ்கட்டுக்கு அரை பிஸ்கட் இலவசம். ஆனால் இவையெதுவும் லாப நோக்கிலோ உள் ஆதாயத்திற்காககவோ வழங்கப்படவில்லை, நட்பின் நிமிர்த்தமாகவே வழங்கப்பட்டது. எப்போது கடைக்குச் சென்றாலும் வீட்டில் அனைவரும் நலமா? எக்ஸாம் முடிஞ்சிருச்சா? என்று ஆர்வமாகக் கேட்கும் நம் அண்ணாச்சிகள் இன்று அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டனர்.
இன்று அலங்கார விளக்குகளிலும் கவர்ச்சி தள்ளுபடியிலும் மின்னும் இந்த சூப்பர் மார்க்கெட்களின் அசுர வளர்ச்சி இதுபோன்ற எண்ணற்ற அண்ணாச்சி கடைகளைத் தேய்பிறையாக்கியுள்ளது.[You must be registered and logged in to see this link.]
varun19- புதிய மொட்டு
- Posts : 28
Points : 84
Join date : 04/03/2016
Age : 39
Location : Dubai
Similar topics
» சூப்பர் மார்க்கெட்டும் அண்ணாச்சி கடையும்
» தமிழின் முதல் சூப்பர் சூப்பர் ஸ்டாருக்கு நடந்த ஒரு பரிதாப நினைவஞ்சலி!
» பொத்தகமும் கடையும்
» அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ
» திண்ணைப் பேச்சு வீரரிடம் – ஒரு கண்ணா யிருக்கணும் அண்ணாச்சி
» தமிழின் முதல் சூப்பர் சூப்பர் ஸ்டாருக்கு நடந்த ஒரு பரிதாப நினைவஞ்சலி!
» பொத்தகமும் கடையும்
» அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ
» திண்ணைப் பேச்சு வீரரிடம் – ஒரு கண்ணா யிருக்கணும் அண்ணாச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|