தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



திசைகளாகும் திருப்பங்கள் ! (தன்னம்பிக்கை & விழிப்புணர்வு கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : அருட் தந்தை ஆ. லொயோலா ! அணிந்துரை கவிஞர் இரா. இரவி !

Go down

திசைகளாகும் திருப்பங்கள் ! (தன்னம்பிக்கை & விழிப்புணர்வு கட்டுரைகள்)  நூல் ஆசிரியர் : அருட் தந்தை ஆ. லொயோலா !  அணிந்துரை   கவிஞர் இரா. இரவி ! Empty திசைகளாகும் திருப்பங்கள் ! (தன்னம்பிக்கை & விழிப்புணர்வு கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : அருட் தந்தை ஆ. லொயோலா ! அணிந்துரை கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Wed Mar 22, 2017 9:58 am

திசைகளாகும் திருப்பங்கள் !
(தன்னம்பிக்கை & விழிப்புணர்வு கட்டுரைகள்)

நூல் ஆசிரியர் : அருட் தந்தை ஆ. லொயோலா !

அணிந்துரை   கவிஞர் இரா. இரவி !

      மதம் பரப்ப வந்த ஜி.யு.போப் அவர்கள் தமிழ் பரப்பியது போலவே,  பல அருட்தந்தையர் மதம் தாண்டி தமிழ் மொழியின் மீது ஈர்ப்புக் கொண்டு, பற்றுக் கொண்டு தமிழ் வளர்த்து வருகின்றனர்.

     அருட்தந்தை ஆ. லொயோலா அவர்கள்.  பரபரப்பான ‘அருட்தந்தை’ பணிகளுக்கிடையே இலக்கியத்திற்கு  நேரம் ஒதுக்கி தன்னம்பிக்கை & விழிப்புணர்வு கட்டுரைகள் வடித்துள்ளார்  இந்த நல்ல நூலிற்கு அணிந்துரை வழங்கிட தந்து உதவிய இனிய நண்பர் முனைவர் முதுநிலைத் தமிழாசிரியர் ஞா. சந்திரன் அவர்களுக்கு முதல் நன்றி.

      இந்த நூலில் மொத்தம் 20 கட்டுரைகள் உள்ளன.  முத்தாய்ப்பான நல் முத்திரைப் பதிக்கும் கட்டுரைகள் இன்றைய இளைய சமுதாயத்தினர் அவசியம் படிக்க வேண்டிய அற்புத நூல்.  இன்றைய மாணவர்கள் பலர், பாடம் தாண்டி பொது நூல்கள் படிப்பதில் ஆர்வம் இருப்பதில்லை.  இந்த நூலை கல்லூரிக்கு பாடமாக்கினால் வேறு வழியின்றி படிக்க நேரிடும்.  அவர்கள் மனதில் நல்விதை விதைத்து, தன்னம்பிக்கை வளர்த்து, நேர்வழியில், அறவழியில் நடந்து, முன்னேறி சாதித்து, சிகரம் தொட்டிட உதவிடும் மிகச் சிறந்த நூலாகும் இந்நூல்.

      அருட்தந்தையாக இருந்து கொண்டு, நாளிதழ்கள், இதழ்களில் வரும் தன்னம்பிக்கை தொடர்பான தகவல்களைத் திரட்டி கட்டுரைகள் வடித்துள்ளார். பாராட்டுகள்.  படித்து விட்டு மனதிற்குள் பாராட்டிய பல நிகழ்வுகள் இந்த நூலில் உள்ளன.

                முதல் கட்டுரையான “மாத்தி யோசி” யில், பீகார் மாநிலத்தில் பிறந்த தஷ்ரத்மான்ஜி” என்ற "மலை மனிதர்" தனிஒரு மனிதனாகவே மலையைத் தகர்த்து பாதை அமைத்து ஊருக்கு உதவிய நிகழ்வை எடுத்து இயம்பி கட்டுரை வடித்துள்ளார்.

      கட்டுரையின் தொடுப்பு, எடுப்பு, முடிப்பு மூன்றும் முத்தாய்ப்பு.  முதல் கட்டுரையின் முடிப்பு, பதச்சோறாகப் பாருங்கள்.

"நினைப்பது ஒன்று. நடப்பது இன்னொன்று.
      நாம் நடப்பதை எல்லாம் நல்லதாய் எண்ணிக் கொள்வோம். 
      நாம் நினைப்பது ஒரு நாள் நிச்சயம் நடக்கும்.  
      தன்னம்பிக்கையை மட்டும் தளரவிடாதே."

சென்னை மழையில் மதங்கள் தாண்டி மனிதநேயத்தோடு உதவிய யூனுஸ் பற்றி எடுத்து இயம்பி அற்புதக்  கட்டுரைகள் வடித்துள்ளார்.  நேர்மறை சிந்தனை விதைக்கும் விதமாக, நேர்மையை, அறத்தை வலியுறுத்தும் விதமாக கவிதைகள், பொன்மொழிகள், திருக்குறள் என பொருத்தமான இடங்களில் மேற்கோள் காட்டி மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்.  மனச்சோர்வு, கவலை உள்ளவர்கள் இந்த நூல் படித்தால் அவற்றிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சி அடைந்து சாதனைப் படைப்பார்கள் என்று உறுதி கூறலாம்.

“மனித நேயத்தோடு வாழ்ந்துபார். 
மனிதப்பிறவியின் மகத்துவம் புரியும்”.

"தன்னைப்பற்றியும் கவலைப்படாமல் அடுத்தவரைப் பற்றியும் அக்கறை கொள்ளாமல் ஓர் அபாயகரமான தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது”.
 
உண்மை தான். சில இளைஞர்கள் எந்தவித அக்கறையுமின்றி, இலட்சியமுமின்றி, மதுக்கடைகளில் அடிமையாகி வரும் அவலம் நாட்டில் அரங்கேறி வருவதைக் கண்டு வருத்தமுற்று.  அவர்களுக்கு விழிப்புணர்வு விதைக்கும் விதமாக கட்டுரைகள் வடித்து உள்ளார்.  அப்படிப்பட்டவர்கள் இந்நூல் ஆழ்ந்துப் படித்தால் திருந்துவது உறுதி என்று உறுதியிட்டு கூறலாம்.

வெள்ளை என்றால் உயர்வு, கருப்பு என்றால் தாழ்வு என்ற தவறான கற்பிதம், உலகம் முழுவதும் நிகழ்ந்து வருகின்றது.  அந்தத் தவறான கருத்தைத் தகர்க்கும் விதமாக “நிறமே நிரந்தரம்” கட்டுரை உள்ளது.  கருப்பு என்பதும் நிறம் தான். தாழ்வு மனப்பான்மை கூடவே கூடாது என்று நன்கு வலியுறுத்தி உள்ளார்.

“அறிதிறன் பேசி அடிமைத்தனம்” (SMARTPHONE ADDICTION) கட்டுரைமிக நன்று. காலத்திற்கேற்ற கட்டுரை.  இன்றைய இளைய தலைமுறை அடிமையாகி வருவதும் உண்மையே.  உடலுக்கு ஏற்படும் தீங்குகளை இழிவாக எடுத்து இயம்பி. அதிலிருந்து விடுபட ஆலோசனைகள் வழங்கி உள்ளார்.  படிக்கும் வாசகர்கள் மனதில் மாற்றம் உருவாக்கும் நல்ல நூல்.அறிதிறன் பேசியை ஊறுகாய் போல தொட்டுக் கொள்ள வேண்டும் .சோறு போல உண்ணக்  கூடாது .என்பதை உணர்ந்து ,அளவோடு பயன்படுத்துவது சிறப்பு .

"வன்முறையில்லா உலகம்" கட்டுரையில் வன்முறைகளின் வகைகளை எடுத்து இயம்பி வன்முறை இல்லாத அமைதி பூங்காவாக மாறிட அறிவார்ந்த அறிவுரைகள் வழங்கி உள்ளார்.
  “கருணையுடன் இருப்பது, அகிம்சையைக் கடைப்பிடிப்பது, தேவையில் இருப்போருக்கு உதவுவது, அன்பை விதைப்பது, அறத்தை அறிவுறுத்துவது,  மானிடத்தின் மகத்துவத்தை போற்றுவது, இயற்கையைப் பேணிக்காப்பது.  பிறர்நல அக்கறை பகிர்வு மனப்பான்மை இருக்கக் குணம், நட்பு கொள்ளுதல், உடனிருக்கும் உணர்வு, தோழமை உணர்வு,  நல்லிணக்கச் செயல்பாடுகள்."

உலகப் பொதுமறை திருக்குறளில் குறிப்பிட்டது போல மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்திட, வாழ்வாங்கு வாழ்ந்திட அறவுரையை அறிவுரையாக வழங்கி உள்ள நூல்.

‘எம் மொழியே எம் உயிரே’ என்ற கட்டுரையில், உலகின் முதல் மொழியான தமிழ் மொழியின் சிறப்பை நன்கு எடுத்து இயம்பி உள்ளார்.

‘தாய்மொழி எம் உயிர்மொழி’ என்கிறார். கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்களின் கூற்றை மேற்கோள் காட்டி தமிழருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

“மிகப் பெரிய அவலம் என்னவென்றால் தமிழை யாரும் வந்து அழிக்கவில்லை.  தமிழனே அழித்துக் கொண்டிருக்கிறான்”.

பொருத்தமான ஹைக்கூ ஒன்றை மேற்கோள் காட்டி உள்ளார் .

“மாடு கூட அம்மா என்கிறது 
பச்சைத் தமிழன் பிள்ளையோ 
மம்மி என்கிறது.” 

 தமிழர்களின் இல்லங்களில் இருந்து மம்மி, டாடி என்ற சொற்கள் ஒழிக்கப்பட வேண்டும். ஊடகங்கள் பரப்பிடும் தமிங்கிலம் ஒழிந்து, நல்ல தமிழ் பேசிட தமிழர்கள் முன்வர வேண்டும். இப்படி பல சிந்தனைகளை விதைத்தது கட்டுரை.

இப்படி நூல் முழுவதும் 40 கட்டுரைகளும் சமுதாயத்தை சீர்படுத்தும் விதமாக நல்ல பல தகவல்களின் சுரங்கமாக மகிழ்வான நிகழ்வுகள் பலவற்றை நினைவூட்டும் விதமாக தன்னலமின்றி பொதுநல நோக்குடன் நேர்மையான வழியில் தாய்மொழிப் பற்றுடன் வாழ வழி சொல்லி உள்ள நூலை நூலாசிரியர் அருட்தந்தை ஆ. லொயோலா அவர்களுக்கு பாரட்டுகள். வாழ்த்துகள். 
இதுபோன்ற நல்ல நூல்களை தமிழ்ச் சமூகத்திற்கு தொடர்ந்து நல்கிட வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து முடிக்கின்றேன்.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

https://www.facebook.com/rravi.ravi

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
Attachments area
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2635
Points : 6341
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» முரண் ! நூல் ஆசிரியர் : அருட்தந்தை கவிஞர் லொயோலா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
»  புத்தனைத் தேடும் போதி மரங்கள் !! நூல் நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மொழி ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum