தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
எது சரியான முடிவு?
3 posters
Page 1 of 1
எது சரியான முடிவு?
ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான். வாணி எதையும் தீர ஆலோசித்துத் தான் செய்வது வழக்கம். இந்த மூவரும் ஒரு நிறுவனத்தில் பொறுப்பான வேலை ஒன்றுக்கான நேர்முகத்தேர்விற்குச் சென்றார்கள். கடைசிச்சுற்றில் இந்த மூவரில் ஒருவர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற நிலையில் இந்த மூவரிடமும் தனித்தனியாக ஒரே கேள்வி கேட்கப்பட்டது.
"நீங்கள் ஒரு குறிப்பிட்ட தண்டவாளத்தின் அருகில் நின்றுகொண்டு இருக்கிறீர்கள். அதில் இருந்து சிறிது தொலைவில் அந்த இருப்புப்பாதை இரண்டாகப் பிரிகின்றது. அதில் ஒன்று பயன்பாட்டில் இருப்பது, ஒன்று பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டது. நீங்கள் நின்றிருக்கும் இடத்தின் அருகில்தான் புகைவண்டியின் தடத்தை (தண்டவாளத்தை) மாற்றப்படுத்தப்படும் கருவி உள்ளது. பயன்பாட்டில் இருக்கும் தண்டவாளத்தில் ஏழெட்டு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றன. பயன்படுத்தப்படாத தண்டவாளத்தில் ஒரு குழந்தை மாத்திரம் தனியாக விளையாடிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது ஒரு புகைவண்டி வேகமாக வருகிறது என்று கொள்வோம். நீங்கள் என்ன செய்வீர்கள்? யாரைக்காப்பாற்றுவீர்கள்?" என்று கேட்டார் தேர்வாளர்.
இதே கேள்வி உங்களிடம் கேட்கப்படுகிறது என்று கொள்வோம். இதற்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்? அதை யோசித்துவிட்டு, பின் படிப்பதைத் தொடருங்கள்.
ராணி "புகைவண்டியின் போக்கை மாற்றி ஏழெட்டு குழந்தைகளைக்காப்பாற்றுவேன்", என்று சட்டென்று பதில் சொன்னாள். வேணியோ யோசித்துக்கொண்டே இருந்தாள். 'நான் மாற்றிவிடுவேன்' 'இல்லை, மாற்றினால் ஒரு அப்பாவிக்குழந்தை செத்துவிடும்.' 'இல்லை மாற்றிவிடத்தான் வேண்டும் இல்லையென்றால் பல குழந்தைகள் செத்துவிடும்' என்று மாறி மாறி யோசித்ததால் அவள் பதில் சொல்லமுடியாமல் திணறினாள்.
வாணி சில விநாடிகள் சிந்தித்துவிட்டு "நான் எதுவுமே செய்யமாட்டேன், வண்டி அதன்போக்கில் போகட்டும் என்று விட்டுவிடுவேன்" என்று பதில் சொன்னாள். இதில் எந்த பதில் சரியானது? யாருக்கு வேலை கிடைத்திருக்கும் என நினைக்கிறீர்கள்?
இப்படிப்பட்ட ஒரு சூழலில் செயலில் இறங்காமல் குழம்பி நிற்பதால் என்ன பயன்? வேணியால் நிறுவனத்தில் ஏற்படும் எந்த சிக்கலுக்கும் விடை காண முடியாது என்பதால் வேணி தேர்ந்தெடுக்கப்படவில்லை.
ஒரு குழந்தையைப் பலி கொடுப்பதன்மூலம் மற்ற பல குழந்தைகளைக் காப்பாற்றமுடியும் என்பதால், பலரும் ராணி கூறிய முடிவைத்தான் எடுத்திருப்பார்கள். பொதுவாகப்பார்க்கையில் தர்க்க ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் அதுதான் நல்ல முடிவு என அனைவருக்கும் தோன்றலாம்.ஆனால் அது சரியானதுதானா?
புகைவண்டி வராத தண்டவாளத்தில் விளையாடும் குழந்தை, ஒரு தவறும் செய்யவில்லை. கைவிடப்பட்ட தண்டவாளம் என்பதால், பாதுகாப்பானது என்று கருதியே அக்குழந்தை அங்கு விளையாடுகிறது. ஆனால் மற்ற குழந்தைகளோ அறியாமை காரணமாகவோ, அசட்டுத் தைரியத்தின் காரணமாகவோ பயன்பாட்டில் இருக்கும் தண்டவாளத்தில் விளையாடுகின்றனர். தவறு செய்த மற்றவர்களுக்காக, சரியான இடத்தில் விளையாடும் குழந்தையைப் பலிகொடுப்பது நியாயமா?
இந்த விதமான பிரச்னைகளைத்தான் நாம் நாள்தோறும் எதிர்நோக்கி வருகின்றோம். பெரும்பாலானவர்கள் செய்யும் தவறுகளால், அல்லது பெரும்பாலான அறியாமை நிறைந்தவர்களைக் காக்கவேண்டி, சரியான முடிவை எடுத்தவர்கள் பலி கொடுக்கப்படுவது அடிக்கடி நடைபெறுகிறது.
இதில் வாணி எடுத்த முடிவுதான் சரியான முடிவு. ஏனெனில், பயன்படுத்தப்படும் தண்டவாளத்தில் விளையாடும் குழந்தைகள், அத்தடத்தில் புகைவண்டி வரக்கூடும் என்று அறிந்து விழிப்புடன் இருப்பார்கள். புகைவண்டியின் சத்தம் கேட்டதும் அக்குழந்தைகள் தண்டவாளத்தில் இருந்து விலகி ஓடிவிடலாம். ஆனால் பயன்படுத்தாத தண்டவாளத்தில் விளையாடும் குழந்தை அங்கு புகைவண்டி வரும் என்றே எதிர்பார்த்திருக்காதே? திடீரென்று அத்தடத்தில் புகை வண்டி வருமானால், அக்குழந்தை சுதாரித்துக்கொள்ளக்கூட நேரமிருக்காது என்பதால் அக்குழந்தை இறந்துவிடுவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது.
அது மட்டுமல்ல, கைவிடப்பட்ட தண்டவாளத்தில் புகைவண்டியைத் திருப்புவது சரியான முடிவு என எப்படிச் சொல்லமுடியும்? எதற்காக அந்தத் தடம் கைவிடப்பட்டது என்பதை அறியாமல் புகைவண்டியை அங்கு மாற்றி அனுப்பி, வண்டியே விபத்துக்குள்ளாகிவிட்டால்? தவறு செய்த சில குழந்தைகளைக் காப்பாற்ற, ஒரு குழந்தையை மட்டுமல்ல, ஏராளமான பயணிகளை அபாயத்துக்குள்ளாக்கலாமா?
இதையெல்லாம் சில விநாடிகளிலேயே சிந்தித்து, சரியான முடிவை எடுத்த வாணிக்கே அந்நிறுவனம் வேலை கொடுத்தது.
எந்தக்கடினமான சூழலிலும், குழம்பி நிற்காமல் அதே சமயம் உணர்ச்சிகளுக்கு மட்டும் இடம் கொடுத்து அவசரப்பட்டு முடிவெடுக்காமல், ஒரு பிரச்னையைப் பல கோணங்களிலும் யோசித்து முடிவெடுப்பது அவசியம் என்று காட்டுவதற்காகக் கேட்கப்படும் ஒரு புதிர் இது.
ஒரு பிரச்னையை ஒரு கோணத்தில் மட்டும் அணுகுவது எப்பொழுதும் தவறானது. அதேபோல், வாழ்க்கை என்பது கணக்குப்பாடம் அல்ல, ஒரு கேள்விக்கு ஒரு விடைதான் என்று கூறுவதற்கு. ஒவ்வொரு சிக்கலுக்கும் பலவேறு கோணங்களும் அதை விடுவிக்கப் பலவிதமான வழிகளும் இருக்கலாம். ஒரே ஒரு விடைதான் என்று நினைக்காமல், திறந்த மனத்துடன் அச்சிக்கலை அணுகுவது சரியான முடிவுகளை எடுக்க உதவி செய்யும். பலவிதமான வழிகளையும் அவற்றின் சாதக பாதகங்களையும் அலசி ஆராய்ந்து, பின்னர் அவற்றுள் எது மிக அதிகப்பயனை அளிக்க முடியும், அல்லது மிகக் குறைந்த சேதத்தை விளைவிக்கும் என்பதைக் கண்டறிந்து அந்த முடிவை எடுக்கலாம்.
எதையும் அலசி ஆராயாமல் விரைந்து எடுக்கும் முடிவுகள், பல நேரங்களில் சரியாக இருப்பதில்லை. அதற்காக சிந்தனை செய்துகொண்டே இருந்தால் ஏற்படும் காலதாமதமும் நட்டத்தை உண்டாக்கும். வேகம், விவேகம் இரண்டும் சரியான விகிதத்தில் கலந்திருப்பதே சரியான முடிவைத்தரும். மூளையை மட்டும் பயன்படுத்தி தர்க்க ரீதியாக எடுக்கப்படும் முடிவுகளோ, இதயத்தை மட்டும் பயன்படுத்தி அதாவது உணர்ச்சிகளால் உந்தப்பட்டு எடுக்கப்படும் முடிவுகளோ ஒருதலைப்பட்சமாக இருக்க நேரிடலாம். உணர்ச்சி, அறிவாற்றல் இரண்டும் கலந்து முடிவுகள் எடுக்கப்படுவதுதான் சாலச்சிறந்தது.
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: எது சரியான முடிவு?
//உணர்ச்சி, அறிவாற்றல் இரண்டும் கலந்து முடிவுகள் எடுக்கப்படுவதுதான் சாலச்சிறந்தது.//
[You must be registered and logged in to see this image.] இதை கதை மூலமாக தெளிவு படுத்தியமைக்கு நன்றி
[You must be registered and logged in to see this image.] இதை கதை மூலமாக தெளிவு படுத்தியமைக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: எது சரியான முடிவு?
அருமை தோழி.. அற்புதமான சிந்தனை...
//பெரும்பாலான அறியாமை நிறைந்தவர்களைக் காக்கவேண்டி, சரியான முடிவை எடுத்தவர்கள் பலி கொடுக்கப்படுவது அடிக்கடி நடைபெறுகிறது.//
அருமை
//பெரும்பாலான அறியாமை நிறைந்தவர்களைக் காக்கவேண்டி, சரியான முடிவை எடுத்தவர்கள் பலி கொடுக்கப்படுவது அடிக்கடி நடைபெறுகிறது.//
அருமை
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எது சரியான முடிவு?
இதை நீங்கள் விவாதகளத்தில் கேள்வியாக கேட்டிருந்தால், நம் நண்பர்களின் பதில்களையும் தெரிந்திருக்கலாம்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எது சரியான முடிவு?
தெரியாம போட்டுட்டேன் அனிஷ் மன்னிச்சிருங்க ! இனிமே எதனா இருந்தா போடுறேன் ! சரியா? நன்றி !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: எது சரியான முடிவு?
க.வனிதா wrote:தெரியாம போட்டுட்டேன் அனிஷ் மன்னிச்சிருங்க ! இனிமே எதனா இருந்தா போடுறேன் ! சரியா? நன்றி !
சரி சரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» சரியான என் இதயம்கூட......
» சரியான போட்டி…!!
» காதல்தான் சரியான வழி ...!
» சரியான சந்தேகப் பிராணி...!
» சபாஷ் சரியான போட்டி.
» சரியான போட்டி…!!
» காதல்தான் சரியான வழி ...!
» சரியான சந்தேகப் பிராணி...!
» சபாஷ் சரியான போட்டி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|