தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm

» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm

» சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 1:20 pm

» இந்தியாவில் இருக்கிறோமா…! – ஒரு நிமிட கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:38 pm

» கருணை அப்டேட்ஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:37 pm

» மரியாதை ! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:36 pm

» தினம் ஒரு மூலிகை- கொடி கள்ளி (அ) பென்சில் கள்ளி
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:34 pm

» ரூ 198-ல் ஒரு மாதத்த்துக்கு ஃபிராட்பேண்ட்…
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:32 pm

» தகுதி இல்லாத குடும்பத் தலைவி! -வலை வீச்சில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:30 pm

» “நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:25 pm

» அறிந்த தலம்-அறியாத தகவல்கள் -திருவாமாத்தூர்
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 3:47 pm

» ஹைகூ
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:55 pm

» பறவையின் கதை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:53 pm

» படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:52 pm

» நட்சத்திரம் உதிரும் வரை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:50 pm

» பயணம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:49 pm

» கடன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:47 pm

» மன்னிப்புக் கேட்கும் கடவுள் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:44 pm

» நிம்மதிச் சன்னதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:34 pm

» கற்கால மனிதன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:31 pm

» எட்டாவது அதிசயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:29 pm

» செங்களம் -இணையத்தொடர் (விமர்சனம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:23 pm

» குடிமகான் – சினிமா விமர்சனம் (குமுதம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:22 pm

» ரேசர் -திரைப்படம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm

» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm

» கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:20 pm

» ஏப் 1-ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:19 pm

» மகேஷ்பாபு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:18 pm

» பருந்தாகுது ஊர்க்குருவி- விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:17 pm

» வீரப்பனின் மகள் அறிமுகமாகும் மாவீரன் பிள்ளை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:16 pm

» செங்களம் – விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:15 pm

» கப்ஜா – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:14 pm

» உலகை வெல்லலாம்! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:13 pm

» குறைகளை பிறரிடம் தேடாதே...!
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:12 pm

» மகாபாரதத்தில் ஒரு காட்சி
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:10 pm

» நம்பிக்கையே வாழ்க்கை! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:09 pm

» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 4:52 pm

» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 4:45 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm

» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm

» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm

» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm

» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மனசுக்குள் பெய்யும் மழை! நூல் ஆசிரியர் : கவிஞர் திருமலை சோமு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Go down

மனசுக்குள் பெய்யும் மழை!   நூல் ஆசிரியர் : கவிஞர் திருமலை சோமு!    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Empty மனசுக்குள் பெய்யும் மழை! நூல் ஆசிரியர் : கவிஞர் திருமலை சோமு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi Sun May 13, 2018 6:28 pm

மனசுக்குள் பெய்யும் மழை!


நூல் ஆசிரியர் : கவிஞர் திருமலை சோமு!



நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.


ஓவியா பதிப்பகம், 17-13-11, சிறிராம் வளாகம், காந்தி நகர் முக்கியச் சாலை, வத்தலக்குண்டு – 624 202.
பக்கம் : 96, விலை : ரூ. 100
******
     ‘மனசுக்குள் பெய்யும் மழை’’’ நூலின் பெயரே கவித்துவமாக உள்ளது. நூலைப் படிக்கும் வாசகர்கள் மனசுக்குள் கவிமழை பெய்துள்ளார். நூலாசிரியர் கவிஞர் திருமலை சோமு அவர்கள் தினமணி நாளிதழின் உதவி ஆசிரியராகவும், தினமணி கவிதைமணி இணையத்தின் பொறுப்பாசிரியராகவும் இருந்து வருகிறார். மூன்று ஆண்டுகளாக வாராவாரம் தலைப்பு தந்து கவிஞர்கள் அனுப்பும் கவிதைகளை இணையத்தில் ஏற்றி வருகிறார்.  வெளிநாட்டில் வாழும் தமிழர்களும் எழுதுகின்றனர்.  தமிழ்ப்பணி செய்து வருவதுடன் கவிதைப் பணியும் செய்துள்ளார்.

     வானிலிருந்து வரும் அமுதம் மழை. உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவர் வழியில் வான்சிறப்பு பாடி உள்ளார். மழை குறித்து ஆய்வு நடத்தி பல்வேறு கோணங்களில் கவிதைகள் வடித்துள்ளார். பாராட்டுக்கள். இத்தகவலை மதுரைக்கு நேரில் வந்து உலகத் தமிழ்ச்சங்கத்திற்கு அரங்கேற்றத்திற்கு வழங்கிச் சென்றார்.  பழகுவதர்கு மிகவும் இனிமையானவர், பண்பாளர், பத்திரிக்கையாளர் என்ற எந்தவித கர்வமும் இல்லாத எளிமையாளர்.

     இனிய நண்பர் பதிப்பாளர் கவிஞர் வதிலை பிரபாவின் பதிப்புரை, முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம், தேனிசை தென்றல் தேவா, திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.கே. ராசராசா, பாடலாசிரியர் சீவன் மயில் ஆகியோரின் அணிந்துரையும் நூலிற்கு அழகு சேர்த்து உள்ளன.

     மழையையும் மனித மனங்களையும் நேசிக்கும் நெஞ்சங்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பது சிறப்பு. தூறல், மழை, சாரல் என்று மழை தொடர்பான தலைப்புகள் நன்று.

     குடை!

     வானம் பூமிக்கு அருளிய கொடை
     மழை! மனிதா நடுவில் ஏன் பிடிக்கணும் குடை!


     குடையை மழைக்குக் காட்டும் கருப்புக்கொடி என்பார் கவிப்பேரரசு வைரமுத்து. அவரது வழியில் இவரும் குடை வேண்டாம் என்கிறார். குடையின்றி மழையில் நனைவதும் ஒரு சுகம் தான்.

     கோடை மழை

     மொட்டை மாடியில்

     வெயிலில் காயும்
     பூந்தொட்டிக்கு

     வரமென வந்தது

     கோடை மழை!


காய்ந்து வறண்டு இருந்த பூந்தொட்டியின் மீது மழை விழுந்ததும் துளிர்த்து விடும் உயிர் வந்து விடும். அதனைக் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகிறார்.

     ஓட்டுக்குள் ஒழுகும் மழை!
     மழை எனக்குள் எரிச்சலூட்டவும் செய்கிறது
     ஓர் இரவில்

     என் வீட்டு ஓட்டுக்குள்
     ஒழுகும் போது மட்டும்!


     ஒரே மழை பலருக்கு மகிழ்வையும் சிலருக்கு எரிச்சலையும் தந்ததை கவிதையாக்கியது சிறப்பு.

     பாவம்! எல்லா பாவங்களையும் தொலைக்க நதியில் நீராடச் சொன்னார்கள்! நதிகளைத் தொலைத்த பாவத்தை எப்படித் தீர்ப்பது!

     ஆற்றுமணல்களைக் கொள்ளையடித்து, ஆறுகளை மலடாக்கி, ஆறு செல்லும் வழிகளையும் அடைத்து, ஆறுகளையே இழந்து வரும் அவலத்தை வருங்கால சமுதாயத்திற்கு வறட்சியை மட்டுமே மிச்சமாக்கும் நாட்டுநடப்பை உணர்த்தியது சிறப்பு.

     வாழ்தல் பெரிது!

    வானம் பெரிது, நிலம் பெரிது, கடல் பெரிது –
    இந்த சிறுமனம் படைத்த மானுடர்களுக்கிடையில்
    வாழ்தலும் பெரிது!

     உண்மை தான் உயிரினங்களில் உயர்ந்த இனம் மனித இனம். ஆனால் அப்படிப்பட்ட மனிதர்கள் சிறுமனம் படைத்து விலங்கிலும் கீழாக மோதி வீழ்வதை நினைத்து வடித்த கவிதை நன்று.

     மனசுக்குள் பெய்யும் மழை! என்ற நூலின் தலைப்பிலான நெடிய கவிதை நன்று. 17 பக்கங்கள் உள்ளன.

     சன்னல் ஓர் தூவானத்தை

     ரசிக்கவும்
     தோட்டத்து இலைகளில்

     தேங்கிய துளிகளில்
     நனையவும்

     யாருக்கும் இப்போது நேரமில்லை!


உண்மைதான்! இயந்திரமயமான இன்றைய நவீன உலகில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வருகின்றனர். இயற்கையை ரசிக்க மழையை ரசிக்க நேரமும் பொறுமையும் இருப்பதில்லை.

     இடியின் ஓசை

     காதுகளில்

     கேட்கும் போதெல்லாம்
     காகித்த்தில் கப்பல் செய்து

     காத்திருந்த்து ஒரு காலம்!


     காகிதக் கப்பல் செய்து விட்டு மழையை ரசித்த மலரும் நினைவுகளை வாசகர்களுக்க் மலர்வித்து வெற்றி பெறுகின்றார்.  இப்படிக்கு மழைநேசன்! என்று நெடிய கவிதையை முடித்துள்ளார். மழைநேசனாக இருந்தால் தான் மழை பற்றி இத்தனை கவிதைகள் வடிக்க முடியும். 

     காதலைப் பாடாத கவிஞர்கள் இல்லை. காதலைப் பாடாதவர்கள் கவிஞரே இல்லை என்பதற்கு ஏற்ப கவிஞர் திருமலை சோமு அவர்களும் பாடி உள்ளார்.

     நல்லதோர் வீணை!

     பின் ஏனோ!

     பேச்சில் வழக்கில்

     பள்ளிப்பாட ஏட்டில்
     திரை இசைப் பாட்டில்

     தமிழர் தம் பெயரில் என
     அனைத்திலும் மெல்லத் தமிழினி சாகும் வகை செய்தோம்.
     நல்லதோர் தமிழ் செய்து – அதை

     நலங்கெட
     நாமும்

     வீதியில் விடலாகுமோ!


     எங்கும் தமிங்கிலம் எதிலும் தமிங்கிலம் என்ற இந்நிலை தொடர்ந்தால் தமிழ் அழிந்து விடும் என்று எச்சரிக்கை செய்த்து சிறப்பு.

     முற்செடிகளாய் உன் நினைவு!

     முட்செடிகளாய் முளைத்து

     வெற்றிடங்களை நிரப்பி
     என் கனவுகளையும்

     நேரங்களையும்
     குத்தி குத்தி ரணமாக்குகிறது

     உன் நினைவு !


     நினைவுகள் அழிவதில்லை. இறுதி மூச்சு உள்ளவரை மூளையின் ஒரு மூலையில் நினைவுகள் நிலைத்தி இருக்கும் என்பதை கவிதையாய் உணர்த்தியது சிறப்பு!

     திருக்குறளே தேசிய நூல்!

     காலத்துக்கு அப்பாலும்

     நிலை பெற்றிருக்கும்
     திருக்குறளே தேசிய நூல்

     மனித குலத்துக்கான
     மேன்மைமிகு நெறிகளை

     ஒன்றரை அடி வரிகளுக்குள்
     வார்த்து தொகுத்த

     தெய்வப் புலவரின்

     திருக்குறளே தேசிய நூல்!


     நடுவணரசு திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க இன்னும் சிந்தித்து வருவது வேதனை!

நூலாசிரியர் கவிஞர் திருமலை சோமு அவர்களுக்கு பாராட்டுக்கள்.  வாழ்த்துக்கள். அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு, மழைச்சாரல் படங்கள் என அனைத்தும் மிக நேர்த்தி. பதிப்பாளர் கவிஞர் வதிலை பிரபா அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

நன்றி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2590
Points : 6206
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கொரோனா உலகம் ! நூல் ஆசிரியர் : திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» காந்தி தேசம் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் ப .திருமலை ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
» குற்றங்களே நடைமுறைகளாய் ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நீர் மேலாண்மையைத் தேடி ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum