தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
இரண்டாவது கோப்பை’வாசகர்களின் கவிதைகள் - By கவிதைமணி-1
Page 1 of 1
இரண்டாவது கோப்பை’வாசகர்களின் கவிதைகள் - By கவிதைமணி-1
**
முதல் கோப்பைக் காப்பியுடன்
தொடங்கும் விடியலில்
முழுவதுமாக நிறைவதில்லை
மனது.
இரண்டாவது கோப்பைக்கான
இடைவெளியில்
உண்ணுவதற்கு எத்தனையோ
உணவிருந்தும்
மணக்கும் காப்பி யையே
மனம் விரும்புவது
பழக்கமாய்ப் போனது .
பல முறை காப்பி
பருகுவது
உடலுக்கு கேடு என
உணவு ஆராய்ச்சியாளர்கள்
உரைத்தாலும்
ஃபில்டர் காப்பியின்
மணத்திற்கும்
நிறத்திற்கும்
மயங்காதவர் உண்டோ எம்
மண்ணில் !
களிப்பு என்றாலும்
கவலை ஏற்பட்டாலும்
தலை வலி என்றாலும
தடங்கல் வந்தாலும்
உடலும் உள்ளமும்
சட்டென்று
விரும்புவதென்னவோ
ஒரு கோப்பை காப்பி யைத்தான் !
- கே.ருக்மணி, கோவை
**
அருந்துதற்கு இனியதுதான் நல்ல காப்பி
……….அதைப்பற்றி சிறிதுநேரம் சிந்திப் போமே.!
ஒருசெடியை ஊன்றிவளத் துமர மாக்க
……….ஓராயிர லிட்டர்தண் ணீரும் வேண்டும்.!
உருவிலது பெரிதாகி காயும் காய்க்க
……….உழைப்போடு தண்ணீரும் அதிகம் தேவை.!
ஒருகோப்பைத் காப்பிக்குள் ஒளிந்தி ருக்கும்
……….உண்மையிது என்பதுவே வியக்க வைக்கும்.!
பிரச்சாரம் செய்வதற்கு இடையே நீங்கள்
……….பிரியமாக அருந்துகின்ற பானம் தேனீர்..!
தரமாகச் செயல்களையே செய்ய காப்பி
……….தைரியத்தைக் கூட்டுமென மனம்நி னைக்கும்.!
சுரப்பிகளும் நன்றாக வேலை செய்ய
……….சுகந்தருமோர்ப் பானம்தான் சொல்வ துண்டு.!
இரண்டாவ துகோப்பையைநீர் குடிக்கு முன்னே
……….இதையெல்லாம் நினைப்பீரே இயற்கை பற்றி.!
வரமாக இயற்கைதந்த நல்வ ளத்தை
……….வரம்பின்றி அழிப்பதற்கும் அளவு மில்லை.!
உரம்போட்டு வளர்க்கின்றார் செடியை யின்று
……….உள்ளத்தில் நல்லெண்ணம் என்ப தில்லை.!
வரப்போகும் துன்பத்தை அறிந்தும் முன்பே
……….வேண்டுமென்றே செய்விப்ப துமநி யாயம்..!
இரசாய னமில்லாத உணவுப் பண்டம்
……….இன்றைக்கு இருக்கிறதா நீரே சொல்லும்.!
கவிஞர் பெருவை பார்த்தசாரதி
**
இரண்டாவது கோப்பை எதிர்பார்ப்பது தவறு
எல்லோருக்கும் ஒரு கோப்பை என்பதே சரி !
தமிழகம் வந்தபோது காந்தியடிகளுக்கு
தாகம் தணிக்க இளநீர் வழங்கினார்கள் !
குடித்துவிட்டு சுவையாக உள்ளது என்றார்
காந்தியடிகளுக்கு மற்றொரு இளநீர் தந்தனர் !
காந்தியடிகள் வாங்க மறுத்து விட்டார்
காரணம் என்ன ? என்று கேட்டார் தந்தவர் !
மற்றுவருக்கான இளநீரை நான் குடிப்பது
முறையன்று நியாயம் அன்று என்றார் !
இயற்கையின் வளத்தை ஒருவரே
இனிதே அனுபவிப்பது தவறு என்றார் !
வள்ளுவர் வழியில் பகிர்ந்துண்டு வாழ
வழி சொன்னவர் நமது அண்ணல் !
ஒருவருக்கு ஒரு கோப்பை என்று முறையாக
ஒவ்வருவருக்கும் வழங்கிடும் வேளையில் !
ஒருவர் மற்றும் இரண்டாவது கோப்பை
ஒருபோதும் கேட்கக் கூடாது உணர்க !
நாகரிகம் அருந்துவதிலும் வேண்டும்
நாகரிகமன்று இரண்டாவது கோப்பை !
ஆர்வமாய் கேட்கும் இரண்டாவது கோப்பை
அடுத்தவருக்கானது என்பதை அறிந்திடுக !
யாரும் காணவில்லை என இரண்டாவது கோப்பை
யாசிப்பதை உங்கள் மனசாட்சி தடுக்க வேண்டும் !
ஒரு கோப்பை போதும் என்று திருப்தி கொள்க
ஒவ்வருவருக்கும் வேண்டும் நினைவில் கொள்க !
- கவிஞர் இரா .இரவி
**
தேனீர் - முதல் கோப்பைக்கே வழியில்லாதபோது
இரண்டாவது கோப்பைக்கு ஏங்க முடியுமா - ஏழை
மது - முதல் கோப்பைக்கே உடல் நலத்திற்கு கேடு விளையும்போது
இரண்டாவது கோப்பைக்கு ஏங்கும் - மதுப்பிரியர்
விஷம் - முதல் கோப்பையே உயிரை கொல்லும்போது
இரண்டாவது கோப்பைக்கு ஏங்கமுடியமா - தற்கொலையாளி
அமிர்த்தம் - முதல் கோப்பை கிடைத்தபோது
இரண்டாவது கோப்பைக்கும் ஏங்கும் - பேராசைக்காரர்
மருந்து - முதல் கோப்பையிலேயே முகத்தை சுழித்தபோது
இரண்டாவது கோப்பைக்கு மறுக்கும் - நோயாளி
பால் - முதல் கோப்பையிலேயே வயிறு நிறம்பும் போது
இரண்டாவது கோப்பைக்கு போக்கு காட்டும் - குழந்தை
தண்ணீர் - முதல் கோப்பை கிடைத்தபோது
இரண்டாவது கோப்பை மட்டுமல்லாது
பல கோப்பைகளை சேகரித்து வைக்கும் - பொதுஜனம்
மழை நீர் - உயிர்நீர், தண்ணீர் - உயிர்நீர்
குடிநீர் - உயிர்நீர் - உயர்நீர்
மழைநீர் - முதல் கோப்பையிலிருந்து அனைத்தையும் சேகரிப்பும்
உலகை காப்போம், வனத்தை காப்போம், சுற்றுச்சூழலை காப்போம்
- ஆம்பூர் எம். அருண்குமார்.
**
முதல் கோப்பைக் காப்பியுடன்
தொடங்கும் விடியலில்
முழுவதுமாக நிறைவதில்லை
மனது.
இரண்டாவது கோப்பைக்கான
இடைவெளியில்
உண்ணுவதற்கு எத்தனையோ
உணவிருந்தும்
மணக்கும் காப்பி யையே
மனம் விரும்புவது
பழக்கமாய்ப் போனது .
பல முறை காப்பி
பருகுவது
உடலுக்கு கேடு என
உணவு ஆராய்ச்சியாளர்கள்
உரைத்தாலும்
ஃபில்டர் காப்பியின்
மணத்திற்கும்
நிறத்திற்கும்
மயங்காதவர் உண்டோ எம்
மண்ணில் !
களிப்பு என்றாலும்
கவலை ஏற்பட்டாலும்
தலை வலி என்றாலும
தடங்கல் வந்தாலும்
உடலும் உள்ளமும்
சட்டென்று
விரும்புவதென்னவோ
ஒரு கோப்பை காப்பி யைத்தான் !
- கே.ருக்மணி, கோவை
**
அருந்துதற்கு இனியதுதான் நல்ல காப்பி
……….அதைப்பற்றி சிறிதுநேரம் சிந்திப் போமே.!
ஒருசெடியை ஊன்றிவளத் துமர மாக்க
……….ஓராயிர லிட்டர்தண் ணீரும் வேண்டும்.!
உருவிலது பெரிதாகி காயும் காய்க்க
……….உழைப்போடு தண்ணீரும் அதிகம் தேவை.!
ஒருகோப்பைத் காப்பிக்குள் ஒளிந்தி ருக்கும்
……….உண்மையிது என்பதுவே வியக்க வைக்கும்.!
பிரச்சாரம் செய்வதற்கு இடையே நீங்கள்
……….பிரியமாக அருந்துகின்ற பானம் தேனீர்..!
தரமாகச் செயல்களையே செய்ய காப்பி
……….தைரியத்தைக் கூட்டுமென மனம்நி னைக்கும்.!
சுரப்பிகளும் நன்றாக வேலை செய்ய
……….சுகந்தருமோர்ப் பானம்தான் சொல்வ துண்டு.!
இரண்டாவ துகோப்பையைநீர் குடிக்கு முன்னே
……….இதையெல்லாம் நினைப்பீரே இயற்கை பற்றி.!
வரமாக இயற்கைதந்த நல்வ ளத்தை
……….வரம்பின்றி அழிப்பதற்கும் அளவு மில்லை.!
உரம்போட்டு வளர்க்கின்றார் செடியை யின்று
……….உள்ளத்தில் நல்லெண்ணம் என்ப தில்லை.!
வரப்போகும் துன்பத்தை அறிந்தும் முன்பே
……….வேண்டுமென்றே செய்விப்ப துமநி யாயம்..!
இரசாய னமில்லாத உணவுப் பண்டம்
……….இன்றைக்கு இருக்கிறதா நீரே சொல்லும்.!
கவிஞர் பெருவை பார்த்தசாரதி
**
இரண்டாவது கோப்பை எதிர்பார்ப்பது தவறு
எல்லோருக்கும் ஒரு கோப்பை என்பதே சரி !
தமிழகம் வந்தபோது காந்தியடிகளுக்கு
தாகம் தணிக்க இளநீர் வழங்கினார்கள் !
குடித்துவிட்டு சுவையாக உள்ளது என்றார்
காந்தியடிகளுக்கு மற்றொரு இளநீர் தந்தனர் !
காந்தியடிகள் வாங்க மறுத்து விட்டார்
காரணம் என்ன ? என்று கேட்டார் தந்தவர் !
மற்றுவருக்கான இளநீரை நான் குடிப்பது
முறையன்று நியாயம் அன்று என்றார் !
இயற்கையின் வளத்தை ஒருவரே
இனிதே அனுபவிப்பது தவறு என்றார் !
வள்ளுவர் வழியில் பகிர்ந்துண்டு வாழ
வழி சொன்னவர் நமது அண்ணல் !
ஒருவருக்கு ஒரு கோப்பை என்று முறையாக
ஒவ்வருவருக்கும் வழங்கிடும் வேளையில் !
ஒருவர் மற்றும் இரண்டாவது கோப்பை
ஒருபோதும் கேட்கக் கூடாது உணர்க !
நாகரிகம் அருந்துவதிலும் வேண்டும்
நாகரிகமன்று இரண்டாவது கோப்பை !
ஆர்வமாய் கேட்கும் இரண்டாவது கோப்பை
அடுத்தவருக்கானது என்பதை அறிந்திடுக !
யாரும் காணவில்லை என இரண்டாவது கோப்பை
யாசிப்பதை உங்கள் மனசாட்சி தடுக்க வேண்டும் !
ஒரு கோப்பை போதும் என்று திருப்தி கொள்க
ஒவ்வருவருக்கும் வேண்டும் நினைவில் கொள்க !
- கவிஞர் இரா .இரவி
**
தேனீர் - முதல் கோப்பைக்கே வழியில்லாதபோது
இரண்டாவது கோப்பைக்கு ஏங்க முடியுமா - ஏழை
மது - முதல் கோப்பைக்கே உடல் நலத்திற்கு கேடு விளையும்போது
இரண்டாவது கோப்பைக்கு ஏங்கும் - மதுப்பிரியர்
விஷம் - முதல் கோப்பையே உயிரை கொல்லும்போது
இரண்டாவது கோப்பைக்கு ஏங்கமுடியமா - தற்கொலையாளி
அமிர்த்தம் - முதல் கோப்பை கிடைத்தபோது
இரண்டாவது கோப்பைக்கும் ஏங்கும் - பேராசைக்காரர்
மருந்து - முதல் கோப்பையிலேயே முகத்தை சுழித்தபோது
இரண்டாவது கோப்பைக்கு மறுக்கும் - நோயாளி
பால் - முதல் கோப்பையிலேயே வயிறு நிறம்பும் போது
இரண்டாவது கோப்பைக்கு போக்கு காட்டும் - குழந்தை
தண்ணீர் - முதல் கோப்பை கிடைத்தபோது
இரண்டாவது கோப்பை மட்டுமல்லாது
பல கோப்பைகளை சேகரித்து வைக்கும் - பொதுஜனம்
மழை நீர் - உயிர்நீர், தண்ணீர் - உயிர்நீர்
குடிநீர் - உயிர்நீர் - உயர்நீர்
மழைநீர் - முதல் கோப்பையிலிருந்து அனைத்தையும் சேகரிப்பும்
உலகை காப்போம், வனத்தை காப்போம், சுற்றுச்சூழலை காப்போம்
- ஆம்பூர் எம். அருண்குமார்.
**
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: இரண்டாவது கோப்பை’வாசகர்களின் கவிதைகள் - By கவிதைமணி-1
பச்சை வண்ண நிறம் படந்திருந்த
ஒரு தேநீா் கடையினுள்
உன் வருகை நோக்கி காத்திருக்கின்றேன்
இரு கோப்பை தேநீருடன்...
குளத்துநீாில் கை கால் நனைத்து
அலம்பும் குழந்தையின் மனதாய் நான்
குதுகலிக்கிறேன்
இரண்டாவது கோப்பையில் தேநீா்
அருந்துகையிலே
மனிதர்கள் வழிபடும் பஞ்சபூதங்களும் அடங்கும்
என் இரண்டாவது கோப்பை தேனீரில்
குழந்தைகள் தேநீா் அருந்துகையிலே
பொம்மைகளுக்கும்
இரண்டாவது கோப்பையில் தேநீா் ஊற்றியது
தேயிலையைப் பறித்து பறித்து கைசிவந்த
தேயிலை விவசாயின் துயரம் தெரியுமா
இரண்டு கோப்பை தேநீாில்...?
குரு சுரேஷ்.ப, குரோம்பேட்டை
**
முள் முளைத்த மூளைகளுக்கு நடுவே
மூலதனம் முளைத்த மூளைக்கு
சொந்தக்காரரான
காரல்மார்க்ஸோடு
தேனீர் அருந்த
இரண்டாவது கோப்பையோடு
காத்திருக்கிறேன்.
வாழ்கையின் எல்லாத் திசையிலிருந்தும்
துன்பக் காற்று
துரத்தி அடித்தாலும்
அடிபெயரா இமயமாக இருந்து
கம்யுனிச சித்தாந்தம் வடித்த
மன வலிமையோடு உரையாட
இரண்டாவது கோப்பையோடு
காத்திருக்கிறேன்.
பள்ளியில் பரீட்சைத் தாளே
அறிஞர்கள் வியக்கும்
ஆய்வுக் கட்டுரையான
அதிசயத்தைப் பற்றி பேச
இரண்டாவது கோப்பையோடு
காத்திருக்கிறேன்.
உலகின் மிகப் பெரிய நூலகத்தை
அதிக நேரம் பயன்படுத்தி
சேமிக்கப்பட்ட உழைப்பே மூலதனம்
என்ற மாமனிதரோடு உரையாட
இரண்டாவது கோப்பையோடு
காத்திருக்கிறேன்.
பணக்காரப் பெண்ணை
ஏழை கதாநாயகன்
காதலித்து கரம் பிடிக்கும்
பெரும்பாலான தமிழ் சினிமாவிற்கு
கதை தந்த வாழ்க்கைக்கு
சொந்தக்காரரோடு உரையாட
இரண்டாவது கோப்பையோடு
காத்திருக்கிறேன்.
பொருளாதாரப் பிரச்சினையோடு போராடினாலும்
சம்சாரத் தோடு அன்பாய் வாழ்ந்த
ரகசியத்தைப் பற்றி தெரிந்துகொள்ள
இரண்டாவது கோப்பையோடு
காத்திருக்கிறேன்.
ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்
ஏங்கல்ஸ் பற்றி அறிந்து கொள்ளவும்
நீ எழுதிய போது புகைத்த
சுருட்டைகூட சம்பாதிக்காத எழுத்தையும்
தொடர்ந்து எழுதிய
நம்பிக்கை மனிதரோடு உரையாட
இரண்டாவது கோப்பையோடு
காத்திருக்கிறேன்.
-கு.முருகேசன்
**
தேனீர் கோப்பைகள் இரண்டு எப்போதும் பயன்படுத்தப்படாமல் காட்சி அலமாரியில் இருக்கும்,
முதல் கோப்பையில் நாங்கள், இரண்டில் எங்களுடன் மகன்களும்,
உருவப் படங்கள் பொறிக்கப்பட்டு,
அன்பாக ஆதரவாக மிகவும் கவனிப்பவர்களாக தெரிந்தார்கள் - மகன்கள்,
இரண்டாவது கோப்பையில்,
உண்மையில் டாலர் விழுங்கி
பல்லாண்டுகளாகின,
பெரியவன் போன் செய்து பல மாதமாக, சின்னவனோ- ஹாய், டேக்கேர் என்று வாட்ஸா ப்பில் வசனிக்கிறான்,
இரண்டாவது கோப்பையில் மகன்கள் இப்போதும் முறுவலிக்கிறார் கள் அன்பாக, ஆதரவாக,
நிஜத்தில் காணாமல் போயிருந்தார்கள்
டாலர் தேசத்தின் வரைபடத்திற்குள்
கவிதா வாணி, மைசூர்
**
ஒரு கோப்பை காப்பியில்
ஒன்றானோம் வாழ்வில்..!
நன்றாகத்தான்
சென்றாலும்..
நமக்குள் ஏதோ ஒன்று
நம்மை நம்மிடமிருந்து
வேறுபடுத்திக் காட்ட..
மாறுபாடோடு மறுகிக் கிடப்பதுவும் ஏன்?
காலயந்திரம் ஒன்றும் வரப்போவதில்லை
கடந்த காலத்திற்கு கொண்டு போக!
காதலித்த காலத்தை
கொணர்வோம் மீண்டும்..!
உணர்வோம் ..
நமக்கு நாமேயென்று..!
இதழ் சிரிப்புடன்
இதயம் நீ
என்னோடு வருவாயோ?
இரண்டாவது கோப்பைக்கு..!
கவுதம் கருணாநிதி, திருச்சூர், கேரளா
ஒரு தேநீா் கடையினுள்
உன் வருகை நோக்கி காத்திருக்கின்றேன்
இரு கோப்பை தேநீருடன்...
குளத்துநீாில் கை கால் நனைத்து
அலம்பும் குழந்தையின் மனதாய் நான்
குதுகலிக்கிறேன்
இரண்டாவது கோப்பையில் தேநீா்
அருந்துகையிலே
மனிதர்கள் வழிபடும் பஞ்சபூதங்களும் அடங்கும்
என் இரண்டாவது கோப்பை தேனீரில்
குழந்தைகள் தேநீா் அருந்துகையிலே
பொம்மைகளுக்கும்
இரண்டாவது கோப்பையில் தேநீா் ஊற்றியது
தேயிலையைப் பறித்து பறித்து கைசிவந்த
தேயிலை விவசாயின் துயரம் தெரியுமா
இரண்டு கோப்பை தேநீாில்...?
குரு சுரேஷ்.ப, குரோம்பேட்டை
**
முள் முளைத்த மூளைகளுக்கு நடுவே
மூலதனம் முளைத்த மூளைக்கு
சொந்தக்காரரான
காரல்மார்க்ஸோடு
தேனீர் அருந்த
இரண்டாவது கோப்பையோடு
காத்திருக்கிறேன்.
வாழ்கையின் எல்லாத் திசையிலிருந்தும்
துன்பக் காற்று
துரத்தி அடித்தாலும்
அடிபெயரா இமயமாக இருந்து
கம்யுனிச சித்தாந்தம் வடித்த
மன வலிமையோடு உரையாட
இரண்டாவது கோப்பையோடு
காத்திருக்கிறேன்.
பள்ளியில் பரீட்சைத் தாளே
அறிஞர்கள் வியக்கும்
ஆய்வுக் கட்டுரையான
அதிசயத்தைப் பற்றி பேச
இரண்டாவது கோப்பையோடு
காத்திருக்கிறேன்.
உலகின் மிகப் பெரிய நூலகத்தை
அதிக நேரம் பயன்படுத்தி
சேமிக்கப்பட்ட உழைப்பே மூலதனம்
என்ற மாமனிதரோடு உரையாட
இரண்டாவது கோப்பையோடு
காத்திருக்கிறேன்.
பணக்காரப் பெண்ணை
ஏழை கதாநாயகன்
காதலித்து கரம் பிடிக்கும்
பெரும்பாலான தமிழ் சினிமாவிற்கு
கதை தந்த வாழ்க்கைக்கு
சொந்தக்காரரோடு உரையாட
இரண்டாவது கோப்பையோடு
காத்திருக்கிறேன்.
பொருளாதாரப் பிரச்சினையோடு போராடினாலும்
சம்சாரத் தோடு அன்பாய் வாழ்ந்த
ரகசியத்தைப் பற்றி தெரிந்துகொள்ள
இரண்டாவது கோப்பையோடு
காத்திருக்கிறேன்.
ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்
ஏங்கல்ஸ் பற்றி அறிந்து கொள்ளவும்
நீ எழுதிய போது புகைத்த
சுருட்டைகூட சம்பாதிக்காத எழுத்தையும்
தொடர்ந்து எழுதிய
நம்பிக்கை மனிதரோடு உரையாட
இரண்டாவது கோப்பையோடு
காத்திருக்கிறேன்.
-கு.முருகேசன்
**
தேனீர் கோப்பைகள் இரண்டு எப்போதும் பயன்படுத்தப்படாமல் காட்சி அலமாரியில் இருக்கும்,
முதல் கோப்பையில் நாங்கள், இரண்டில் எங்களுடன் மகன்களும்,
உருவப் படங்கள் பொறிக்கப்பட்டு,
அன்பாக ஆதரவாக மிகவும் கவனிப்பவர்களாக தெரிந்தார்கள் - மகன்கள்,
இரண்டாவது கோப்பையில்,
உண்மையில் டாலர் விழுங்கி
பல்லாண்டுகளாகின,
பெரியவன் போன் செய்து பல மாதமாக, சின்னவனோ- ஹாய், டேக்கேர் என்று வாட்ஸா ப்பில் வசனிக்கிறான்,
இரண்டாவது கோப்பையில் மகன்கள் இப்போதும் முறுவலிக்கிறார் கள் அன்பாக, ஆதரவாக,
நிஜத்தில் காணாமல் போயிருந்தார்கள்
டாலர் தேசத்தின் வரைபடத்திற்குள்
கவிதா வாணி, மைசூர்
**
ஒரு கோப்பை காப்பியில்
ஒன்றானோம் வாழ்வில்..!
நன்றாகத்தான்
சென்றாலும்..
நமக்குள் ஏதோ ஒன்று
நம்மை நம்மிடமிருந்து
வேறுபடுத்திக் காட்ட..
மாறுபாடோடு மறுகிக் கிடப்பதுவும் ஏன்?
காலயந்திரம் ஒன்றும் வரப்போவதில்லை
கடந்த காலத்திற்கு கொண்டு போக!
காதலித்த காலத்தை
கொணர்வோம் மீண்டும்..!
உணர்வோம் ..
நமக்கு நாமேயென்று..!
இதழ் சிரிப்புடன்
இதயம் நீ
என்னோடு வருவாயோ?
இரண்டாவது கோப்பைக்கு..!
கவுதம் கருணாநிதி, திருச்சூர், கேரளா
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» ‘இரண்டாவது கோப்பை’வாசகர்களின் கவிதைகள் - By கவிதைமணி
» மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}
» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்! - கவிதைமணி
» இரண்டாவது கோப்பை - By-சீனி
» இரண்டாவது கோப்பை - By-ரமேஷ் கோபாலகிருஷ்ணன்
» மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}
» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்! - கவிதைமணி
» இரண்டாவது கோப்பை - By-சீனி
» இரண்டாவது கோப்பை - By-ரமேஷ் கோபாலகிருஷ்ணன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|