தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
2 posters
Page 1 of 1
கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
https://www.tamilauthors.com/04/543.html.
கால் முளைத்த கனவுகள்
நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
வெளியீடு : வசந்தா பதிப்பகம், 2-16, ஆர்.கே இல்லம் முதல் தெரு,
புதிய வசந்த நகர், ஓசூர் – 635 109, பக்கங்கள் : 160, விலை : ரூ. 150
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
******
நூலாசிரியர் கருமலைத் தமிழாழன் அவர்கள் மிகச்சிறந்த மரபுக் கவிஞர். பல்வேறு பரிசும் பாராட்டும் விருதும் பெற்றுள்ள தகைசால் கவிஞர். தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வுக்கு ஓய்வு தந்து ஓய்வின்றி மரபுக் கவிதைகளை எழுதி தமிழன்னைக்கு அணிகலங்கள் பூட்டி வருகின்றார். பல்வேறு இதழ்களில் எழுதி வருகின்றார். அவற்றைத் தொகுத்து தொடர்ந்து நூலாக்கி வருகிறார். இயங்கிக்கொண்டே இருக்கும் இனிய கவிஞருக்கு பாராட்டுக்கள்.
நூல் வெளியானவுடன் மறக்காமல் எனக்கு மதிப்புரைக்காக அனுப்பி விடுவார். அவரது மரபுக்கவிதை ரசிகன் நான். இந்த நூலில் மூன்று பகுதிகளாக கவிதைகள் உள்ளன. முதல்பகுதி தமிழ்க்கால்கள் 38 கவிதைகள் உள்ளன. தமிழ்மொழியின் மேன்மையை மரபில் மகுடம் சூட்டி உள்ளார். குமுகக் கால்கள் என்ற பகுதியில் சமுதாய அவலங்களை எடுத்தியம்பி உள்ளார். கனவுக்கால்கள் என்ற மூன்றாம் பகுதியில் பெண்ணியம் பாடி உள்ளார்.
அருந்தமிழில் பேச வைப்போம்
அருந்தமிழில் பேசுவதே குற்றமாக
அடிக்கின்றார் குழந்தைகளைப் பெற்ற வர்தாம்
பெருமையுடன் மம்மியென அழைப்ப தற்குப்
பெருந்தொகையைக் கட்டணமாகச் செலுத்துகின்றனர்
குழந்தைகள் தமிழில் பேசினால் தண்டத் தொகை வசூலிப்போம் என்று சொல்லும் ஆங்கிலப் பள்ளிகளை சும்மா விட்டு வைத்து விட்டு இருப்பது தமிழகத்தின் அவலம். செத்தப் பிணமென்ற பொருளுடையதை மம்மி என்று அழைக்க்ச் சொல்லும் மடமையும், தமிழகத்தில் அரங்கேறி வரும் அவமானத்தை கவிதை வரிகளின் மூலம் சுட்டி உள்ளார். பாராட்டுகள்.
இலக்கியங்கள் கூறும் வீரம்!
அகமென்றும் புறமென்றும் வாழ்க்கை தன்னை
அருமையாக வகுத்தவர்கள் தமிழர் தாமே!
அகந்தன்னை ஐந்திணையில் உலவ விட்டார்
அரும்புறத்தை எண்திணையில் முழக்க விட்டார்
தமிழ் இலக்கியங்கள் கூறும் வீரத்தை மரபுக் கவிதைகளில் வடித்து படிக்கும் வாசகர்கள் மனதில் வீரத்தை விதைத்து உள்ளார். அகநானூறு, புறநானூறு என அற்புதமான இலக்கியங்கள் கொண்ட மொழி நம் தமிழ்மொழி என்பதை நன்கு பறைசாற்றி உள்ளார்.
என் இலக்கு
செந்தமிழே ஆட்சிமொழி பள்ளி யெல்லாம்
செந்தமிழே கல்விமொழி தெருவி லெல்லாம்
செந்தமிழே பேச்சுமொழி வீட்டிலெல்லாம்
செந்தமிழே மழலை மொழி குவித்திருக்கும்
செந்தமிழின் நூல்களெல்லம் மொழி பெயர்த்தும்
செந்தமிழில் பிறமொழி நூல் ஆக்கம் சேர்த்தும்
எந்தமிழை உலகமொழி ஆக்க லொன்றே
என் இலக்கு என் ஓட்டம் முயல்வேன் செய்வேன்.
தமிழ்மொழி பன்னாட்டு மொழி. ஆனால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தான் தமிழ் இன்னும் ஆகவில்லை. ஆங்கில மொழி போல தமிழ் மொழியை உலக மொழி ஆக்குவேன், முயல்வேன், செய்வேன் என்ற தமிழ்ப்பற்று பாராட்டுகள்.
வணிகமாக விற்கின்ற கல்வி தன்னை
வாங்காமல் இளவயதில் கற்கின்றார்கள்
மணியான தமிழ்வழியைப் பள்ளி யெல்லாம்
மணக்க வைத்தே ஆங்கிலத்தைத் தூக்கெறிந்தார்
கணினிக்குள் நுழைந்திட்ட தமிழை வீட்டுள்
கடைத்தெருவில் மழலை நாவில் ஒலிக்க வைத்தார்
பணியெல்லாம் தமிழ்வழியில் படித்த வர்க்கே
பாங்காகக் கிடைப்பதற்கு சட்டம் செய்தார்.
நூலாசிரியர் கண்ட கனவு நனவாக வேண்டும். ஆனால் இன்றோ நடப்பதோ வேறாக உள்ளது. அரசுப்பள்ளிகளில் மட்டும் வாழ்ந்திட்ட தமிழ்வழிக்கல்வி அங்கும் மூடுவிழா நடத்தப்பட்டு ஆங்கிலவழிக் கல்வியை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆரம்பக்கல்வி தமிழில் தான் இருக்க வேண்டுமென்று சட்டம் செய்தல் வேண்டும். நாட்டில் நடைமுறைப்படுத்திட வேண்டும்.
காமத்தின் கண் பறிப்போம்
மலராத மொட்டதனின் இதழ் கிழித்து
மதுவுண்ட வண்டொன்றைப் பார்த்த துண்டோ
புலராத இரவுக்குள் புணர்தல் போன்று
புரிந்திட்டார் வன்செயலைக் கயவர் சில்லோர்
வலம் வந்து வலம் வந்தே அழகு மொட்டை
வன்புணர்வில் சீரழித்தார் துடிது டிக்க
நிலம் மீதில் எவ்வுயிரும் செய்தி டாத
நீச செயல் செய்வதெல்லாம் மனிதர் தாமே!
சிறுமியை சென்னையில் பதினேழு கயவர்கள் கெடுத்த செய்தி படித்து துடித்து வடித்த கவிதை நன்று. உள்ளத்து உணர்வுகளை கவிதைகளாக யாத்து வாசகர் மனதில் கவி உணர்வை விதைத்து உள்ளார். பாராட்டுகள்.
பச்சோந்தி
மரத்திற்கு மரம் தாவும் மந்தி போல
மனம் தாவிக் கட்சிகளை மாற்றிக் கொள்வர்
உரமின்றிக் கொள்கையின்றிப் பதவிக்காக
உருவத்தை எற்றார்போல் மாற்றிக் கொள்வர்
குரல் மாற்றிப் பேசுகின்ற வித்தைக் காரர்
குடுகுடுப்பைக் காரர்போல் வேடம் கொள்வர்
வரவுக்காகப் பச்சோந்தி போல மாறி
வருவோரின் நிறத்திரையைக் கிழிப்போம் நாமே!
அரசியலில் இன்று நடக்கும் அவலத்தை கவிதைகளில் சுட்டி உள்ளார். கொள்கை ஏதுமின்றி பணத்திற்காக பதவிக்காக வாலாட்டி வரும் போலி அரசியல்வாதிகள் மலிந்து விட்ட காலமிது. அரசியலில் நேர்மை, உண்மை வழக்கொழிந்து விட்டது. ஏமாற்று அரசியலே இன்று நாட்டு நடப்பாக உள்ளது என்பதை உள்ளக்குமுறலுடன் கவிதைகளில் உணர்த்தி உள்ளார்.
உண்மை வழியே உயர்வளிக்கும்
அறுசுவைக்கு நாவடிமை ஆகி விட்டால்
அதிக எடை உடல்சேர நோயோ கூடும்
உறுப்புகள் இயங்காமல் முடங்கிப் போக
உயிர்க்காற்றும் அதனாலே வருதல் போன்று
மறுப்பின்றி உள்ளத்தின் வழி நடந்தால்
மாப்பழி தான் நமக்குவரும் உலகம் ஏசும்
உறுதியுடன் நடப்பதற்கே உள்ள மங்கே
உதவாது ஆசையாலே அழிந்து போவோம்!
அளவோடு உண்டால் வளமோடு வாழலாம். நோயின்றி வாழலாம். உண்மை வழியே உயர்வளிக்கும் என்று அறநெறி கருத்துக்களை மரபுக்கவிதைகளாக வடித்துள்ளார்.
கால் முளைத்த கனவுகள் என்ற நூலின் மூலம் மரபுக்கவிதை விருந்து வைத்துள்ள பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்களுக்கு பாராட்டுகள்
கால் முளைத்த கனவுகள்
நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
வெளியீடு : வசந்தா பதிப்பகம், 2-16, ஆர்.கே இல்லம் முதல் தெரு,
புதிய வசந்த நகர், ஓசூர் – 635 109, பக்கங்கள் : 160, விலை : ரூ. 150
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
******
நூலாசிரியர் கருமலைத் தமிழாழன் அவர்கள் மிகச்சிறந்த மரபுக் கவிஞர். பல்வேறு பரிசும் பாராட்டும் விருதும் பெற்றுள்ள தகைசால் கவிஞர். தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வுக்கு ஓய்வு தந்து ஓய்வின்றி மரபுக் கவிதைகளை எழுதி தமிழன்னைக்கு அணிகலங்கள் பூட்டி வருகின்றார். பல்வேறு இதழ்களில் எழுதி வருகின்றார். அவற்றைத் தொகுத்து தொடர்ந்து நூலாக்கி வருகிறார். இயங்கிக்கொண்டே இருக்கும் இனிய கவிஞருக்கு பாராட்டுக்கள்.
நூல் வெளியானவுடன் மறக்காமல் எனக்கு மதிப்புரைக்காக அனுப்பி விடுவார். அவரது மரபுக்கவிதை ரசிகன் நான். இந்த நூலில் மூன்று பகுதிகளாக கவிதைகள் உள்ளன. முதல்பகுதி தமிழ்க்கால்கள் 38 கவிதைகள் உள்ளன. தமிழ்மொழியின் மேன்மையை மரபில் மகுடம் சூட்டி உள்ளார். குமுகக் கால்கள் என்ற பகுதியில் சமுதாய அவலங்களை எடுத்தியம்பி உள்ளார். கனவுக்கால்கள் என்ற மூன்றாம் பகுதியில் பெண்ணியம் பாடி உள்ளார்.
அருந்தமிழில் பேச வைப்போம்
அருந்தமிழில் பேசுவதே குற்றமாக
அடிக்கின்றார் குழந்தைகளைப் பெற்ற வர்தாம்
பெருமையுடன் மம்மியென அழைப்ப தற்குப்
பெருந்தொகையைக் கட்டணமாகச் செலுத்துகின்றனர்
குழந்தைகள் தமிழில் பேசினால் தண்டத் தொகை வசூலிப்போம் என்று சொல்லும் ஆங்கிலப் பள்ளிகளை சும்மா விட்டு வைத்து விட்டு இருப்பது தமிழகத்தின் அவலம். செத்தப் பிணமென்ற பொருளுடையதை மம்மி என்று அழைக்க்ச் சொல்லும் மடமையும், தமிழகத்தில் அரங்கேறி வரும் அவமானத்தை கவிதை வரிகளின் மூலம் சுட்டி உள்ளார். பாராட்டுகள்.
இலக்கியங்கள் கூறும் வீரம்!
அகமென்றும் புறமென்றும் வாழ்க்கை தன்னை
அருமையாக வகுத்தவர்கள் தமிழர் தாமே!
அகந்தன்னை ஐந்திணையில் உலவ விட்டார்
அரும்புறத்தை எண்திணையில் முழக்க விட்டார்
தமிழ் இலக்கியங்கள் கூறும் வீரத்தை மரபுக் கவிதைகளில் வடித்து படிக்கும் வாசகர்கள் மனதில் வீரத்தை விதைத்து உள்ளார். அகநானூறு, புறநானூறு என அற்புதமான இலக்கியங்கள் கொண்ட மொழி நம் தமிழ்மொழி என்பதை நன்கு பறைசாற்றி உள்ளார்.
என் இலக்கு
செந்தமிழே ஆட்சிமொழி பள்ளி யெல்லாம்
செந்தமிழே கல்விமொழி தெருவி லெல்லாம்
செந்தமிழே பேச்சுமொழி வீட்டிலெல்லாம்
செந்தமிழே மழலை மொழி குவித்திருக்கும்
செந்தமிழின் நூல்களெல்லம் மொழி பெயர்த்தும்
செந்தமிழில் பிறமொழி நூல் ஆக்கம் சேர்த்தும்
எந்தமிழை உலகமொழி ஆக்க லொன்றே
என் இலக்கு என் ஓட்டம் முயல்வேன் செய்வேன்.
தமிழ்மொழி பன்னாட்டு மொழி. ஆனால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தான் தமிழ் இன்னும் ஆகவில்லை. ஆங்கில மொழி போல தமிழ் மொழியை உலக மொழி ஆக்குவேன், முயல்வேன், செய்வேன் என்ற தமிழ்ப்பற்று பாராட்டுகள்.
வணிகமாக விற்கின்ற கல்வி தன்னை
வாங்காமல் இளவயதில் கற்கின்றார்கள்
மணியான தமிழ்வழியைப் பள்ளி யெல்லாம்
மணக்க வைத்தே ஆங்கிலத்தைத் தூக்கெறிந்தார்
கணினிக்குள் நுழைந்திட்ட தமிழை வீட்டுள்
கடைத்தெருவில் மழலை நாவில் ஒலிக்க வைத்தார்
பணியெல்லாம் தமிழ்வழியில் படித்த வர்க்கே
பாங்காகக் கிடைப்பதற்கு சட்டம் செய்தார்.
நூலாசிரியர் கண்ட கனவு நனவாக வேண்டும். ஆனால் இன்றோ நடப்பதோ வேறாக உள்ளது. அரசுப்பள்ளிகளில் மட்டும் வாழ்ந்திட்ட தமிழ்வழிக்கல்வி அங்கும் மூடுவிழா நடத்தப்பட்டு ஆங்கிலவழிக் கல்வியை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆரம்பக்கல்வி தமிழில் தான் இருக்க வேண்டுமென்று சட்டம் செய்தல் வேண்டும். நாட்டில் நடைமுறைப்படுத்திட வேண்டும்.
காமத்தின் கண் பறிப்போம்
மலராத மொட்டதனின் இதழ் கிழித்து
மதுவுண்ட வண்டொன்றைப் பார்த்த துண்டோ
புலராத இரவுக்குள் புணர்தல் போன்று
புரிந்திட்டார் வன்செயலைக் கயவர் சில்லோர்
வலம் வந்து வலம் வந்தே அழகு மொட்டை
வன்புணர்வில் சீரழித்தார் துடிது டிக்க
நிலம் மீதில் எவ்வுயிரும் செய்தி டாத
நீச செயல் செய்வதெல்லாம் மனிதர் தாமே!
சிறுமியை சென்னையில் பதினேழு கயவர்கள் கெடுத்த செய்தி படித்து துடித்து வடித்த கவிதை நன்று. உள்ளத்து உணர்வுகளை கவிதைகளாக யாத்து வாசகர் மனதில் கவி உணர்வை விதைத்து உள்ளார். பாராட்டுகள்.
பச்சோந்தி
மரத்திற்கு மரம் தாவும் மந்தி போல
மனம் தாவிக் கட்சிகளை மாற்றிக் கொள்வர்
உரமின்றிக் கொள்கையின்றிப் பதவிக்காக
உருவத்தை எற்றார்போல் மாற்றிக் கொள்வர்
குரல் மாற்றிப் பேசுகின்ற வித்தைக் காரர்
குடுகுடுப்பைக் காரர்போல் வேடம் கொள்வர்
வரவுக்காகப் பச்சோந்தி போல மாறி
வருவோரின் நிறத்திரையைக் கிழிப்போம் நாமே!
அரசியலில் இன்று நடக்கும் அவலத்தை கவிதைகளில் சுட்டி உள்ளார். கொள்கை ஏதுமின்றி பணத்திற்காக பதவிக்காக வாலாட்டி வரும் போலி அரசியல்வாதிகள் மலிந்து விட்ட காலமிது. அரசியலில் நேர்மை, உண்மை வழக்கொழிந்து விட்டது. ஏமாற்று அரசியலே இன்று நாட்டு நடப்பாக உள்ளது என்பதை உள்ளக்குமுறலுடன் கவிதைகளில் உணர்த்தி உள்ளார்.
உண்மை வழியே உயர்வளிக்கும்
அறுசுவைக்கு நாவடிமை ஆகி விட்டால்
அதிக எடை உடல்சேர நோயோ கூடும்
உறுப்புகள் இயங்காமல் முடங்கிப் போக
உயிர்க்காற்றும் அதனாலே வருதல் போன்று
மறுப்பின்றி உள்ளத்தின் வழி நடந்தால்
மாப்பழி தான் நமக்குவரும் உலகம் ஏசும்
உறுதியுடன் நடப்பதற்கே உள்ள மங்கே
உதவாது ஆசையாலே அழிந்து போவோம்!
அளவோடு உண்டால் வளமோடு வாழலாம். நோயின்றி வாழலாம். உண்மை வழியே உயர்வளிக்கும் என்று அறநெறி கருத்துக்களை மரபுக்கவிதைகளாக வடித்துள்ளார்.
கால் முளைத்த கனவுகள் என்ற நூலின் மூலம் மரபுக்கவிதை விருந்து வைத்துள்ள பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்களுக்கு பாராட்டுகள்
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2632
Points : 6332
Join date : 18/06/2010
Ponmudi Manohar- ரோஜா
- Posts : 178
Points : 226
Join date : 30/03/2013
Age : 66
Location : NAGERCOIL
Similar topics
» கால் முளைத்த கனவுகள்! நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.!
» அகமுகம்! நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» கல்லெழுத்து ! நூல் ஆசிரியர் : புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» செப்பேடு! நூல் ஆசிரியர் : புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» பசி வயிற்றுப் பாச்சோறு! நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அகமுகம்! நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» கல்லெழுத்து ! நூல் ஆசிரியர் : புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» செப்பேடு! நூல் ஆசிரியர் : புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» பசி வயிற்றுப் பாச்சோறு! நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|