தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்தியாவில் இருக்கிறோமா…! – ஒரு நிமிட கதை
by அ.இராமநாதன் Yesterday at 10:38 pm

» கருணை அப்டேட்ஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 10:37 pm

» மரியாதை ! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 10:36 pm

» தினம் ஒரு மூலிகை- கொடி கள்ளி (அ) பென்சில் கள்ளி
by அ.இராமநாதன் Yesterday at 10:34 pm

» ரூ 198-ல் ஒரு மாதத்த்துக்கு ஃபிராட்பேண்ட்…
by அ.இராமநாதன் Yesterday at 10:32 pm

» தகுதி இல்லாத குடும்பத் தலைவி! -வலை வீச்சில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» “நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» அறிந்த தலம்-அறியாத தகவல்கள் -திருவாமாத்தூர்
by அ.இராமநாதன் Yesterday at 3:47 pm

» ஹைகூ
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:55 pm

» பறவையின் கதை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:53 pm

» படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:52 pm

» நட்சத்திரம் உதிரும் வரை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:50 pm

» பயணம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:49 pm

» கடன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:47 pm

» மன்னிப்புக் கேட்கும் கடவுள் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:44 pm

» நிம்மதிச் சன்னதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:34 pm

» கற்கால மனிதன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:31 pm

» எட்டாவது அதிசயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:29 pm

» செங்களம் -இணையத்தொடர் (விமர்சனம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:23 pm

» குடிமகான் – சினிமா விமர்சனம் (குமுதம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:22 pm

» ரேசர் -திரைப்படம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm

» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm

» கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:20 pm

» ஏப் 1-ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:19 pm

» மகேஷ்பாபு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:18 pm

» பருந்தாகுது ஊர்க்குருவி- விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:17 pm

» வீரப்பனின் மகள் அறிமுகமாகும் மாவீரன் பிள்ளை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:16 pm

» செங்களம் – விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:15 pm

» கப்ஜா – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:14 pm

» உலகை வெல்லலாம்! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:13 pm

» குறைகளை பிறரிடம் தேடாதே...!
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:12 pm

» மகாபாரதத்தில் ஒரு காட்சி
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:10 pm

» நம்பிக்கையே வாழ்க்கை! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:09 pm

» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 4:52 pm

» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 4:45 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm

» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm

» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm

» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm

» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm

» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm

» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) -    கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm

» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி  ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி

Go down

வேறென்ன வேண்டும்   களவு போக!   நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் !    நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Empty வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm

வேறென்ன வேண்டும் 
களவு போக!

நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் !


[size=15]நூல் மதிப்புரை கவிஞர் இரா. இரவி ![/size]

எழிலினி பதிப்பகம், 15ஏ, முதல் மாடி, காசா மேஜர் சாலை, எழும்பூர், சென்னை-600 098. பக்கம் : 92, விலை : ரூ.170.
 நூல் மதிப்புரை கவிஞர் இரா. இரவி
******
நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. நூலாசிரியர் கவிதாயினி புதுக்கவிதைகளை காதல் கவிதைகளாக வழங்கி உள்ளார். நூல் கட்டி அட்டை உள்படம் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. எழிலினி பதிப்பகத்திற்கு பாராட்டுகள்.
நாடறிந்த பெண் கவிஞர் சக்திஜோதி அவர்கள் சிறப்பான அணிந்துரை நல்கி உள்ளார். கிருஷ்ணகிரி கவிஞர் பிரபு சங்கர் வாழ்த்துரை வழங்கி உள்ளார். 80 புதுக்கவிதைகள் உள்ளன. கவிதைகளில் இளமை, புதுமை, இனிமை என பல மைகள் உள்ளன.
அன்பு வாழ்த்து
நிலை மாறும் வாழ்வில் மாசுபடாமல்
      மாற்றத்தை சுவைக்காதது உன்
      அன்பு மட்டுமே அம்மா!

முதல் கவிதையில் முத்தாய்ப்பாக அம்மாவின் என்றும் மாறாத அன்பை உணர்த்தி உள்ளார்.
கடமைகளின் காவல் மட்டுமல்ல
      என் திறமைகளின் திறவுகோலும்
      நீ அல்லவா!

திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு அம்மா உதவியதை அழகிய சொல்லாட்சிகளுடன் உணர்த்தியது சிறப்பு.
குளிர் காயும் காதல்!
தனிமையின் / தணலில் / உன் முத்தம்
      சத்தங்களைப் / போர்த்திக் கொண்டு
      குளிர்காய்கிறதென் / காதல்!

காதல் கவிதைகளில் முத்தம் வராமல் இருக்குமா? குறிப்பாக நெற்றி முத்தம் பல இடங்களில் வருகின்றன. தனிமையில் இனிமை காண முடியுமா? முடியும் காதல் நினைவுகளை அசை போட்டால் தனிமையும் இனிமையாகும் என உணர்த்திய கவிதை நன்று.
உயிர் நனைக்கும் காபி!
என்ன தான் மோகத்தில்
      மூழ்கித் திளைத்தாலும் / தொடக்கத்திலோ முடிவிலோ
      உயிர் நனைக்குமந்த / நெற்றி முத்தம்போல் தான்
      இந்த காபியும் /  நொடிகளில் / பரவசமாக்கும்
      நாட்களை!

நெற்றி முத்தம் என்பது உயிர் நனைக்கும் என்கிறார். தலைவன் தலைவி கூடலில் நெற்றி முத்தம் என்பது சிறந்த இடம் வகிக்கின்றன.  இதழ் முத்தத்தை விட நெற்றி முத்தம் மேன்மையானது, மென்மையானது என்பதை உணர்ந்து எழுதி உள்ளார், பாராட்டுகள்.  இனிவரும் காலங்களில் தலைவன், தலைவி கடைபிடிக்கலாம். அறியாதவர்கள் அறிந்து கொள்ளலாம் நெற்றி முத்தத்தின் சிறப்பை.
எல்லா / கவிதைகளும்
      வார்த்தைகளால் / ஆனதல்ல

உண்மை தான் வெறும் கற்பனை சொற்களால் நிரப்புவது கவிதையன்று. உணர்ந்த உணர்வை, உண்மையை உணர்த்துவதே  உன்னதக் கவிதையாகும். 
நளபாகம்!
சூடாய் / குளிராய் / காரமாய் / தித்திப்பாய்
      நீளமாய் / ஈரமாய் / துவர்ப்பாய் / உப்பாய்
      உன் அவ்வப்போது / சுவை மாறும்
      உன் முத்தங்கள் / நளபாகத்தில் சேருமா?

அறுசுவை உணவு கேள்விப்பட்டு இருக்கிறோம்.  அறுசுவை முத்தம் என்கிறார்கள். முத்தமிட்டுக் கொண்டே காதலர்கள் மட்டும் உணர்ந்த ரகசியம். உணவு விருந்து போல அறுசுவை முத்த விருந்தும் நளபாகத்தில் சேருமா? என்று கேள்வி கேட்டு முடித்துள்ளார்.  இனி நளபாகத்தில் முத்தமும் சேர்ந்து விடும்.
முத்தத்தின் வேதியியல்!
சட்டென என் / தட்பவெப்ப நிலை
      மாறி விடும் / காதோரம் நீ தருமந்த
      ஒற்றை முத்தத்தின் வேதியியல்!

இந்த மழைக்காலத் தேநீருக்கு எதிர்பாராத நேரத்தில் தலைவன் தலைவிக்கு முத்தம் தந்து அவளது தட்பவெப்ப நிலையையே மாற்றி விடுகிறான்வெப்பமாக்கி விடுகிறான் அல்லது குளிராக்கி விடுகிறான். வேதியியல் மாற்றம் நிகழ்த்தி விடுகிறான் தலைவன் ஒற்றை முத்தத்தால்.
அவன்!
கவிதை எழுதத் / தெரியாதென்கிறான்
      என்னை / கவிதையாக்கும் / அவன்

தலைவியையே கவிதையாக மாற்றும் தலைவனுக்கு கவிதை எழுதிடத் தெரியாமலா இருக்கும். தலைவன் சொல்லும் பொய்யை தலைவி கண்டுபிடித்து விடுகிறாள்.  இனி தலைவன் கவிதை எழுதி விடுவான் என்பது உண்மை.
தேன் நீ!
வேப்பம் பூ / நாட்களின் நடுவில்
      துளி நேரத் தேனாய் / நீ!

சோகமான கவலையான நாட்களில் தலைவி தலைவனைச் சந்திக்கும் துளிநேரம் தேன்துளி போல இனிக்கும் என்பது உண்மை தானே.
எரியமாகிறேன் நான்!
கவிதைகளிலும் / கதைகளிலும் / கண்டிராத
      காதலை / கண் வழி கடத்துகிறாய்!
      நிலைத்த பார்வையில் / நிரம்பி வழியும்
      காதலில் / நிலை கொள்ளாமல் / நீந்தும் கால்கள்
      கற்ற கல்வி என்ன / கடமை என்ன / காத்து வந்த
      கண்ணியமெல்லாம் / காணாமல் போனதே!

தலைவன் தலைவியை இமைக்காமல் உற்றுநோக்கி கடத்தி விடுகிறான். கண்வழியே கடத்துகின்றான்.  கடமை, கண்ணியம், கட்டுப்பாடுகளை எல்லாம் ஒற்றைப் பார்வையில் தகர்த்து விடுகிறான். காதல் ரசவாதக் கவிதைகள் நூல் முழுவதும் நிரம்பி உள்ளன. காதலர்கள் இளம் இணையர்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய காதல் கவிதை நூல் இது.
காதல் போதை
அந்த / திராட்சை ரசமும் / நானும் ஒன்று தான்
      நிறத்தில் மட்டுமல்ல / ஒரே காதலோடு
      பெருகும் சுவையோடு / காத்திருப்பதிலும் தான்!

சுவையோடு காத்திருக்கும் திராட்சை ரசமும் தலைவியும் ஒன்று தான் என்ற ஒப்பீடு நன்று. நிற ஒப்பீடும் நன்று. காதல் ரசம் சொட்டச் சொட்ட காதல் கவிதைகள் வடித்துள்ளார்.
கவிதாயினி தீபிகா சுரேஷ் அவர்களின் வேறென்ன வேண்டும் களவு போக’ நூலின் மூலம் நமது உள்ளங்கள் களவு போகின்றன. காதல் கவிதைகள் படிக்க சுகமானது சுவையானது அவரவர் காதலை அசை போட்டுக் கொள்ள உதவும் விதமாக மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றி பெறுகின்றன கவிதைகள், வாழ்த்துகள்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2590
Points : 6206
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிதாயினி .G மஞ்சுளா
» கனவு மெய்ப்பட வேண்டும் ! நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ஆ. குமாரி லெட்சுமி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» விச்சுவை! (புதுக்கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார் ! ஆசிரியர் : “கவிதை உறவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum