தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
பிரான்ஸ் தமிழர்களை பின்பற்றுவார்களா உலகத்தமிழர்கள்?
Page 1 of 1
பிரான்ஸ் தமிழர்களை பின்பற்றுவார்களா உலகத்தமிழர்கள்?
பிரான்ஸ் தமிழர்களை பின்பற்றுவார்களா உலகத்தமிழர்கள்? - அனலை நிதிஸ் ச. குமாரன்
பல உலக நாடுகளுடன் சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் விடுதலைப்புலிகளை சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்த்தது. இந்த முடிவை மீள் பரிசீலனை செய்து தமிழீழ விடுதலைக்காக ஆயுத வழியில் போராடி மே 2009-இல் ஆயுதங்களை மௌனிக்க செய்வதாக அறிவித்த ஒரு இயக்கத்தை எதற்காக தொடர்ந்தும் தடைசெய்து வைத்திருக்க வேண்டும் என்கிற கேள்வியுடன் களம் இறங்கியுள்ளது பிரான்ஸின் தமிழ் நடுவம் என்கிற அமைப்பு. இவ்வமைப்பின் உள்நோக்கம் என்ன என்கிற வாக்குவாதத்தை புறம் தள்ளிவிட்டு தமிழர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பயங்கரவாத முத்திரையை நீக்க நடவடிக்கை எடுக்க முற்படும் அமைப்புக்களுக்கு ஆதரவு அளிப்பதே புத்திசாலித்தனம்.
குறிப்பிடப்பட்ட தமிழ் நடுவம் என்கிற அமைப்பு பல வெகுசனப் போராட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் புலிகள் மீதான தடை தொடர்ந்தும் நீடிக்கப்படுகிறது. பிற நாடுகளில் வதியும் தமிழர்களும் பிரான்ஸின் தமிழ் நடுவகத்தின் செயலை முன்னுதாரணமாக எடுத்து வெகுசனப் போராட்டங்களை நடத்துவதன் மூலமாக புலிகள் மீது போடப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுப்பார்களா என்பதே தமிழர்களின் மனங்களில் எழும் கேள்வி.
ஐரோப்பிய தமிழ் சமூகத்தின் சனநாயகவழிச் செயற்பாடுகளை ஊக்குவிக்க ஐரோப்பிய ஒன்றியம் தனது பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகளை நீக்கக் கோரும் வெகுசனப் போராட்ட முன்னெடுப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை (2 சனவரி) தமிழர் நடுவம் - பிரான்ஸினால் உத்தியோகபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது. பல பொதுசன போராட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக இந்த அமைப்பு அறிவித்தது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் பொது அமைப்பு பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் செயற்பாட்டாளர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் என சொல்லப்பட்டது.
இப்புதிய ஆண்டிலாவது ஈழத்தமிழர்களின் அடுத்த கட்டத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க உலக நாடுகள் வழி அமைத்துக் கொடுக்க வேண்டுமென்பதே பல தமிழர்களின் அவா. 2009-இல் ஆயுதங்களை மௌனிப்பதாக புலிகள் அறிவித்தார்கள். ஆயுதம் மீது காதல் கொண்ட மனநோயாளி தான் இல்லை என்பதை பல ஆண்டுகளுக்கு முன்னரே புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனினால் அடித்துக்கூறப்பட்டது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரை செய்வதாக கூறி தமிழின அழிப்பையே மேற்கொண்டுவந்த சிறிலங்கா அரசுஇ உலக நாடுகளின் ஆதரவைப் பெறவே புலிகள் ஆயுதங்கள் மீதுதான் அதீத நம்பிக்கையை வைத்து போர் செய்து வந்தார்கள் என்கிற பொய்யான பரப்புரையை மேற்கொண்டது. உலக நாடுகளும் இதனை ஏற்று தமிழ் மக்களை அழிக்க உதவிகளை வழங்கி வந்துள்ளது.
தமிழ் மக்களின் நியாயபூர்வமான போராட்டத்தை மழுங்கடிக்க உதவிய உலக நாடுகளுக்கு மே 2009-இல் இடம்பெற்ற சம்பவம் பாரிய தலையிடியை கொடுத்தது. பல நாடுகள் சிறிலங்காவின் போரையே கண்டிக்குமளவு புலிகளின் திறனாய்வு இருந்தது. அடித்தால் திருப்பி அடிப்பார்கள் புலிகள் என்று எண்ணினார்கள் ஈழத்தமிழரின் விடுதலையை விரும்பாத பல நாடுகள். இந்நாடுகளின் எண்ணங்களுக்கு மாறாக இறுதிவரை மௌனத்தை கடைப்பிடித்தார்கள் புலிகள்;. சிறிலங்காவுக்கு ஆதரவளித்த நாடுகள் பல புலிகள் அப்பாவி சிங்களவர்களை கொலை செய்வார்கள் என்று கூட நினைத்திருந்தார்கள். இதன் மூலமாக புலிகளை இராஜதந்திர ரீதியில் மரணிக்கப் பண்ணலாம் என்று மனப்பால் குடித்தவர்களுக்கு தமிழர்கள் முட்டாள்கள் இல்லை என்பதை புலிகள் நிரூபித்தார்கள்.
ஈழப் போராட்டத்தை புலம்பெயர் இழைஞர்களிடம் ஒப்படைப்பதாகவும் சனநாயக வழிமூலம் அடுத்த கட்ட ஈழப்போரை தொடருவதன் மூலமாக தமிழீழ தனியரசுக்கான போராட்டத்தை துரிதப்படுத்தலாம் என்கிற நோக்கத்தினாலையோ என்னவோ புலிகளின் தலைமை துன்பகரமான முடிவை எடுத்தது.
சனநாயக போராட்டமே வெற்றியைத் தேடித்தரும்
விடுதலை என்பது காசு கொடுத்து வாங்கும் பொருளல்ல. இரத்தம் சிந்தி பல துயர்களினூடாக வருவதுதான் உண்மையான சுதந்திரம். தியாகம் இல்லாமல் ஒரு நாட்டை பெற்றால் குறிப்பிட்ட அந்த நாட்டில் வாழும் மக்கள் சுதந்திரத்திற்கு பின்னர் பல இடர்களை சந்திப்பார்கள். மேற்கு பாகிஸ்தானிடமிருந்து கிழக்கு பாகிஸ்தான் (பங்களாதேஷ்) என்கிற நாடு இந்தியாவின் துணையுடன் விடுதலையை பெற்றது. இதன் விடுதலையென்பது குறுகிய காலத்திற்குள் இடம்பெற்றது. உண்மையான தியாகம் என்றால் என்ன என்று பல பங்களாதேஷிகளுக்கு தெரியாமலே சுதந்திரம் கிடைக்கபெற்றது. சுதந்திரம் கிடைத்து சில தசாப்தங்கள் ஆனாலும் இன்றும் இந்நாடு வறுமைக்கோட்டின் கீழ் தான் உள்ளது. அன்றாட சீவியத்திற்காக பல லட்சம் மக்கள் திண்டாடுகிறார்கள். ஈழ விடுதலை என்பது அப்படியல்ல. நாளையே ஈழம் கிடைத்தால் சிங்கப்பூரை விட ஆசியாவின் முன்மாதிரியான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக மாறும்.
நடந்த சம்பவங்களை மனதில் கொண்டு அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்வதே புத்திசாலித்தனம். நான்காம் கட்ட ஈழப் போரில் இடம்பெற்ற தமிழின அழிப்பை உலக நாடுகளே கண்டிக்குமளவு வளர்ச்சிகண்டுள்ளது. ருவாண்டா கொசோவோ யுகோஸ்லாவிய போன்ற கொடுமையான இன அழிப்புகளை ஒட்டியே ஈழத் தமிழரின் அழிவையும் உலக நாடுகள் பார்க்க ஆரம்பித்துள்ளன. போரக்; குற்றத்திற்காக சிறிலங்காவின் அரச தலைவர்கள் இராணுவ அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட பலரை போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர உலக நாடுகள் முன்வரத் தொடங்கியுள்ளது. உலகத்தமிழர்களின் தொடர் சனநாயக வழிப் போராட்டங்களினாலேயே உலக நாடுகள் சிறிலங்காவுக்கு எதிரான கொள்கை மாற்றத்தை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
அன்று புலிகள் ஆயுதங்களை மௌனிக்க செய்யாமல் இருந்திருந்தால் உலக நாடுகளே இணைந்து ஒட்டுமொத்த ஈழத்தமிழரையும் அழித்திருப்பார்கள். சனநாயக வழியினூடகவே ஈழத்தமிழரின் விடுதலையை அடைய முடியும். ஈழத் தமிழர்களின் பிரச்சினையை உலக நாடுகளிடம் எடுத்துக்கூறி அவர்களின் ஆதரவை பெறுவதனாலையே ஈழத்தமிழரின் விடுதலையை பெற முடியும். பலவிதமான சனநாயக வழிப் போராட்டங்களை புலம்பெயர் ஈழத்தமிழர் மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும்.
தொடர் போராட்டங்களினூடாகவேதான் உலக நாடுகளின் கண்களை திறக்க முடியும். ஈழத்தில் நடைபெறும் சம்பவங்கள் உட்பட ஈழத் தமிழருக்கு எதிராக சிறிலங்காவில் தற்போது இடம்பெறும் சம்பவங்களையும் உலகநாடுகள் முன் கொண்டுசென்று நியாயம் கேட்பதுடன் ஈழத்தமிழர்கள் ஓன்றும் ஆயுதம் மீது காதல் கொண்ட மனநோயாளிகள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். பௌத்த சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபோதும் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மாட்டார்கள் என்பதை உலக நாடுகள் உணரும் விதமாக செயற்பட வேண்டும்.
புலிகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கச்செய்வதன் மூலமாக தமிழர்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் இனமில்லை என்பதை உலகறியச் செய்ய முடியும். புலிகளின் தடையை உலக நாடுகள் நீக்குவதனூடாக ஈழத்தமிழர் சிந்திய குருதிக்கும் பட்ட இன்னல்களுக்கும் ஓர் அர்த்தம் உண்டாகும். இதனூடாக ஈழத்தமிழரின் விடுதலையை விரைந்து மேற்கொள்ள வழியமைக்கப்படும்.
பல உலக நாடுகளுடன் சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் விடுதலைப்புலிகளை சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்த்தது. இந்த முடிவை மீள் பரிசீலனை செய்து தமிழீழ விடுதலைக்காக ஆயுத வழியில் போராடி மே 2009-இல் ஆயுதங்களை மௌனிக்க செய்வதாக அறிவித்த ஒரு இயக்கத்தை எதற்காக தொடர்ந்தும் தடைசெய்து வைத்திருக்க வேண்டும் என்கிற கேள்வியுடன் களம் இறங்கியுள்ளது பிரான்ஸின் தமிழ் நடுவம் என்கிற அமைப்பு. இவ்வமைப்பின் உள்நோக்கம் என்ன என்கிற வாக்குவாதத்தை புறம் தள்ளிவிட்டு தமிழர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பயங்கரவாத முத்திரையை நீக்க நடவடிக்கை எடுக்க முற்படும் அமைப்புக்களுக்கு ஆதரவு அளிப்பதே புத்திசாலித்தனம்.
குறிப்பிடப்பட்ட தமிழ் நடுவம் என்கிற அமைப்பு பல வெகுசனப் போராட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் புலிகள் மீதான தடை தொடர்ந்தும் நீடிக்கப்படுகிறது. பிற நாடுகளில் வதியும் தமிழர்களும் பிரான்ஸின் தமிழ் நடுவகத்தின் செயலை முன்னுதாரணமாக எடுத்து வெகுசனப் போராட்டங்களை நடத்துவதன் மூலமாக புலிகள் மீது போடப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுப்பார்களா என்பதே தமிழர்களின் மனங்களில் எழும் கேள்வி.
ஐரோப்பிய தமிழ் சமூகத்தின் சனநாயகவழிச் செயற்பாடுகளை ஊக்குவிக்க ஐரோப்பிய ஒன்றியம் தனது பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகளை நீக்கக் கோரும் வெகுசனப் போராட்ட முன்னெடுப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை (2 சனவரி) தமிழர் நடுவம் - பிரான்ஸினால் உத்தியோகபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது. பல பொதுசன போராட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக இந்த அமைப்பு அறிவித்தது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் பொது அமைப்பு பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் செயற்பாட்டாளர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் என சொல்லப்பட்டது.
இப்புதிய ஆண்டிலாவது ஈழத்தமிழர்களின் அடுத்த கட்டத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க உலக நாடுகள் வழி அமைத்துக் கொடுக்க வேண்டுமென்பதே பல தமிழர்களின் அவா. 2009-இல் ஆயுதங்களை மௌனிப்பதாக புலிகள் அறிவித்தார்கள். ஆயுதம் மீது காதல் கொண்ட மனநோயாளி தான் இல்லை என்பதை பல ஆண்டுகளுக்கு முன்னரே புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனினால் அடித்துக்கூறப்பட்டது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரை செய்வதாக கூறி தமிழின அழிப்பையே மேற்கொண்டுவந்த சிறிலங்கா அரசுஇ உலக நாடுகளின் ஆதரவைப் பெறவே புலிகள் ஆயுதங்கள் மீதுதான் அதீத நம்பிக்கையை வைத்து போர் செய்து வந்தார்கள் என்கிற பொய்யான பரப்புரையை மேற்கொண்டது. உலக நாடுகளும் இதனை ஏற்று தமிழ் மக்களை அழிக்க உதவிகளை வழங்கி வந்துள்ளது.
தமிழ் மக்களின் நியாயபூர்வமான போராட்டத்தை மழுங்கடிக்க உதவிய உலக நாடுகளுக்கு மே 2009-இல் இடம்பெற்ற சம்பவம் பாரிய தலையிடியை கொடுத்தது. பல நாடுகள் சிறிலங்காவின் போரையே கண்டிக்குமளவு புலிகளின் திறனாய்வு இருந்தது. அடித்தால் திருப்பி அடிப்பார்கள் புலிகள் என்று எண்ணினார்கள் ஈழத்தமிழரின் விடுதலையை விரும்பாத பல நாடுகள். இந்நாடுகளின் எண்ணங்களுக்கு மாறாக இறுதிவரை மௌனத்தை கடைப்பிடித்தார்கள் புலிகள்;. சிறிலங்காவுக்கு ஆதரவளித்த நாடுகள் பல புலிகள் அப்பாவி சிங்களவர்களை கொலை செய்வார்கள் என்று கூட நினைத்திருந்தார்கள். இதன் மூலமாக புலிகளை இராஜதந்திர ரீதியில் மரணிக்கப் பண்ணலாம் என்று மனப்பால் குடித்தவர்களுக்கு தமிழர்கள் முட்டாள்கள் இல்லை என்பதை புலிகள் நிரூபித்தார்கள்.
ஈழப் போராட்டத்தை புலம்பெயர் இழைஞர்களிடம் ஒப்படைப்பதாகவும் சனநாயக வழிமூலம் அடுத்த கட்ட ஈழப்போரை தொடருவதன் மூலமாக தமிழீழ தனியரசுக்கான போராட்டத்தை துரிதப்படுத்தலாம் என்கிற நோக்கத்தினாலையோ என்னவோ புலிகளின் தலைமை துன்பகரமான முடிவை எடுத்தது.
சனநாயக போராட்டமே வெற்றியைத் தேடித்தரும்
விடுதலை என்பது காசு கொடுத்து வாங்கும் பொருளல்ல. இரத்தம் சிந்தி பல துயர்களினூடாக வருவதுதான் உண்மையான சுதந்திரம். தியாகம் இல்லாமல் ஒரு நாட்டை பெற்றால் குறிப்பிட்ட அந்த நாட்டில் வாழும் மக்கள் சுதந்திரத்திற்கு பின்னர் பல இடர்களை சந்திப்பார்கள். மேற்கு பாகிஸ்தானிடமிருந்து கிழக்கு பாகிஸ்தான் (பங்களாதேஷ்) என்கிற நாடு இந்தியாவின் துணையுடன் விடுதலையை பெற்றது. இதன் விடுதலையென்பது குறுகிய காலத்திற்குள் இடம்பெற்றது. உண்மையான தியாகம் என்றால் என்ன என்று பல பங்களாதேஷிகளுக்கு தெரியாமலே சுதந்திரம் கிடைக்கபெற்றது. சுதந்திரம் கிடைத்து சில தசாப்தங்கள் ஆனாலும் இன்றும் இந்நாடு வறுமைக்கோட்டின் கீழ் தான் உள்ளது. அன்றாட சீவியத்திற்காக பல லட்சம் மக்கள் திண்டாடுகிறார்கள். ஈழ விடுதலை என்பது அப்படியல்ல. நாளையே ஈழம் கிடைத்தால் சிங்கப்பூரை விட ஆசியாவின் முன்மாதிரியான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக மாறும்.
நடந்த சம்பவங்களை மனதில் கொண்டு அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்வதே புத்திசாலித்தனம். நான்காம் கட்ட ஈழப் போரில் இடம்பெற்ற தமிழின அழிப்பை உலக நாடுகளே கண்டிக்குமளவு வளர்ச்சிகண்டுள்ளது. ருவாண்டா கொசோவோ யுகோஸ்லாவிய போன்ற கொடுமையான இன அழிப்புகளை ஒட்டியே ஈழத் தமிழரின் அழிவையும் உலக நாடுகள் பார்க்க ஆரம்பித்துள்ளன. போரக்; குற்றத்திற்காக சிறிலங்காவின் அரச தலைவர்கள் இராணுவ அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட பலரை போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர உலக நாடுகள் முன்வரத் தொடங்கியுள்ளது. உலகத்தமிழர்களின் தொடர் சனநாயக வழிப் போராட்டங்களினாலேயே உலக நாடுகள் சிறிலங்காவுக்கு எதிரான கொள்கை மாற்றத்தை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
அன்று புலிகள் ஆயுதங்களை மௌனிக்க செய்யாமல் இருந்திருந்தால் உலக நாடுகளே இணைந்து ஒட்டுமொத்த ஈழத்தமிழரையும் அழித்திருப்பார்கள். சனநாயக வழியினூடகவே ஈழத்தமிழரின் விடுதலையை அடைய முடியும். ஈழத் தமிழர்களின் பிரச்சினையை உலக நாடுகளிடம் எடுத்துக்கூறி அவர்களின் ஆதரவை பெறுவதனாலையே ஈழத்தமிழரின் விடுதலையை பெற முடியும். பலவிதமான சனநாயக வழிப் போராட்டங்களை புலம்பெயர் ஈழத்தமிழர் மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும்.
தொடர் போராட்டங்களினூடாகவேதான் உலக நாடுகளின் கண்களை திறக்க முடியும். ஈழத்தில் நடைபெறும் சம்பவங்கள் உட்பட ஈழத் தமிழருக்கு எதிராக சிறிலங்காவில் தற்போது இடம்பெறும் சம்பவங்களையும் உலகநாடுகள் முன் கொண்டுசென்று நியாயம் கேட்பதுடன் ஈழத்தமிழர்கள் ஓன்றும் ஆயுதம் மீது காதல் கொண்ட மனநோயாளிகள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். பௌத்த சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபோதும் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மாட்டார்கள் என்பதை உலக நாடுகள் உணரும் விதமாக செயற்பட வேண்டும்.
புலிகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கச்செய்வதன் மூலமாக தமிழர்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் இனமில்லை என்பதை உலகறியச் செய்ய முடியும். புலிகளின் தடையை உலக நாடுகள் நீக்குவதனூடாக ஈழத்தமிழர் சிந்திய குருதிக்கும் பட்ட இன்னல்களுக்கும் ஓர் அர்த்தம் உண்டாகும். இதனூடாக ஈழத்தமிழரின் விடுதலையை விரைந்து மேற்கொள்ள வழியமைக்கப்படும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» மலேசியத் தமிழர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது
» விண்வெளித் தமிழர்களை வாழ்த்துவோம்! கவிஞர் இரா. இரவி
» பிரான்ஸ் நாட்டின் சிலந்தி மனிதன் (வீடியோ இணைப்பு)
» ஆன்மீகம் _லூர்துமாதா வரலாறு -பிரான்ஸ்
» ஈழத் தமிழர்களை கொன்ற பொன்சேகா! சிறையில் கதறல்! விரைவில் ராஜபக்சே?
» விண்வெளித் தமிழர்களை வாழ்த்துவோம்! கவிஞர் இரா. இரவி
» பிரான்ஸ் நாட்டின் சிலந்தி மனிதன் (வீடியோ இணைப்பு)
» ஆன்மீகம் _லூர்துமாதா வரலாறு -பிரான்ஸ்
» ஈழத் தமிழர்களை கொன்ற பொன்சேகா! சிறையில் கதறல்! விரைவில் ராஜபக்சே?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|