தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கரடிக்குக் கிடைத்த பரிசு
2 posters
Page 1 of 1
கரடிக்குக் கிடைத்த பரிசு
ஒரு காட்டிலே குண்டோதரன் என்ற கரடிக் குட்டியொன்று இருந்தது. அது வீட்டில் அம்மா அப்பாவுக்கு எந்த உதவியும் செய்யாது. மூன்று வேளையும் மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டுவிட்டு எப்போதும் தூங்கி வழியும். விழித்திருக்கும் கொஞ்ச நேரத்திலும் தீய நண்பர்களோடு சேர்ந்து ஊரைச் சுற்றும். அரட்டை அடித்து வெட்டியாக பொழுதைப் போக்கும். தன்னைவிட வலிமை குறைந்த விலங்குகளை மிரட்டி உருட்டித் துன்புறுத்தி மகிழும்.
ஒருநாள் மாலை தூக்கம் கலைந்து எழுந்த குண்டோதரன், அம்மாவைத் தேடி சமையலறைக்குள் சென்றது. அம்மா கரடியோ முகமெல்லாம் வியர்த்துப் போய் தலையைப் பற்றிக் கொண்டு வருத்தமாக அமர்ந்திருந்தது.
அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத குண்டோதரன், ""எங்கே எனக்கு டிபன்?'' என்று கேட்டு உறுமியது.
அம்மா கரடி கெஞ்சும் குரலில், ""மகனே குண்டோதரா! அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. சமையலுக்கு தண்ணி பிடிச்சுட்டு வர உடம்பில தெம்பில்லை. ரெண்டு குடம் தண்ணி பிடிச்சுட்டு வந்து தாயேன்...'' என்று வேண்டியது.
தாயின் மேல் கொஞ்சமும் இரக்கமில்லாத குண்டோதரன், ""இதோ பார் கிழவி! எனக்கு வேலை இருக்கு. நான் இன்னும் ஒரு மணி நேரத்தில திரும்பி வருவேன். அதற்குள்ள சமைச்சு வைச்சுடு. இல்லாட்டா நடக்கறதே வேற!'' என்று மிரட்டிவிட்டு வெளியேறியது.
தெருவிலே பிற விலங்குகளின் குட்டிகளெல்லாம் மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றிடம் வகை வகையான பொம்மைகளும் சுவையான தின்பண்டங்களும் இருந்தன. குண்டோதரனுக்கு ஒரே வியப்பு! பொறாமை!
அருகிலே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு முயல் குட்டிகளின் காதைப் பற்றி முரட்டுத்தனமாக தூக்கிய குண்டோதரன், ""ஏய்... இந்தப் பொம்மைகள், தின்பண்டங்களை எல்லாம் உங்களுக்குக் கொடுத்தது யார்?'' என்று அதட்டிக் கேட்டது.
அஞ்சி நடுங்கியவாறே முயல் குட்டிகள் கூறின- ""அண்ணா... கொஞ்ச நேரத்துக்கு முன்னால கிறிஸ்துமஸ் தாத்தா இங்க வந்தாரு... அவருதான் எங்களுக்கு இந்தப் பரிசுகளைக் கொடுத்தாரு...''
""அப்படின்னா கிறிஸ்துமஸ் தாத்தா எனக்கேன் பரிசு தரல?'' என்று கோபத்தோடு உறுமியது குண்டோதரன்.
""அதை நீங்கதாண்ணா அவர்கிட்ட கேட்கணும்...'' என்றன முயல்கள் தாழ்ந்த குரலில்.
""கேட்கறேன்... கேட்கறேன்... அவரோட தாடியைப் பிடிச்சு கேட்கத்தான் போறேன்... அவர் இப்போ எங்கேயிருக்கார்?''
""காளி கோயில் வேப்ப மர நிழல்ல ஓய்வெடுத்துக்கிட்டு இருக்கார்...''
முயல்களைத் தூக்கி எறிந்த குண்டோதரன் உடனே காளி கோயிலை நோக்கி ஓடியது. கோயில் அருகே கிறிஸ்துமஸ் தாத்தாவின் கலைமான் வண்டி நின்றுகொண்டிருந்தது. களைத்துப் போயிருந்த கலைமான்களுக்கு அன்வர் என்ற ஆட்டுக்குட்டியும், சலீம் என்ற புலிக் குட்டியும் புல்லை ஊட்டிக் கொண்டிருந்தன.
வேப்ப மரத்து நிழலிலே அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தார் கிறிஸ்துமஸ் தாத்தா. திபுதிபுவென்று ஓடிவந்த குண்டோதரன் கரடியை அன்வர் ஆட்டுக் குட்டியும் சலீம் புலிக்குட்டியும் தடுக்க முயன்றன. ஆனால் அவற்றை இடித்துத் தள்ளிவிட்டுத் தாத்தாவிடம் ஓடியது குண்டோதரன்.
அவரை உலுக்கி, ""ஏய் கிழவா... எழுந்திரு... எழுந்திரு...'' என்று கூச்சலிட்டது.
கிறிஸ்துமஸ் தாத்தா மெல்லக் கண் விழித்தார். குண்டோதரனைப் பார்த்துப் புன்னகைத்தார். ""என்ன குண்டோதரா... ஏன் என்னை எழுப்பினாய்?'' என்றார் அமைதியான குரலில்.
""காட்டில் இருக்கும் விலங்குகளுக்கு எல்லாம் பரிசளித்த நீங்கள் எனக்கு மட்டும் ஏன் பரிசு தரவில்லை?'' என்று கேட்டது குண்டோதரன்.
கிறிஸ்துமஸ் தாத்தா மெல்லச் சிரித்தார். ""உனக்குப் பரிசுதானே வேண்டும்? இதோ தருகிறேன்!'' என்றபடியே இடுப்பிலிருந்த மந்திரக் கோலை எடுத்தார். குண்டோதரனை நோக்கி ஒரு வீசு வீசினார்.
உடனே-
குண்டோதரன் ஒரு 10 வயதுச் சிறுவனாக மாறியது!
தாத்தா அடுத்த வீசு வீசினார்.
அந்தச் சிறுவன் நகரத்திலே இருந்த ஒரு பெரிய ரொட்டிக் கடை முன் நின்று கொண்டிருந்தான்.
கிறிஸ்துமஸுக்காகவும் புத்தாண்டுக்காகவும் அங்கே சுவையான ரொட்டிகளும் கேக்குகளும் செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. அவற்றிலிருந்து எழுந்த இனிய மணம் பசியைத் தூண்டியது. கரடிச் சிறுவன் நாவிலே எச்சில் ஊற அவற்றையே உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தான்.
கடை முதலாளி முறுக்கு மீசையை வருடியபடியே, ""என்னடா பையா... கடையிலே வேலை செய்யிறியா? நிறைய கேக்குகள் சாப்பிடத் தர்றேன்...'' என்று ஆசை காட்டினார்.
பையனும் ஆவலோடு தலையாட்டினான்.
ஆனால் பாவம் அவன். அந்தக் கடையில் அவன் கொத்தடிமை ஆக்கப்பட்டுவிட்டான்.
சரியான உணவோ, கூலியோ கொடுக்கப்படாமல் 18 மணி நேரம் வேலை செய்ய வைக்கப்பட்டான். வேலையென்றால் எளிமையான வேலை இல்லை. இடுப்பொடியும் அளவுக்கு கடுமையான வேலைகள்!
வேகாத வெயிலில் நீண்ட தொலைவு நடந்து சென்று குடங்களிலே தண்ணீர் பிடித்துவந்தான். பெரிய பெரிய பாத்திரங்களை தேய்த்தான். அடுத்தவர்களின் துணிகளைத் துவைத்தான். மாவு பிசைந்தான். அடுமனையின் வெப்பத்திலே வெந்து தவித்தான்...
அது மட்டுமல்லாது அவனை ஆளாளுக்கு அடித்து உதைத்தார்கள்... மிரட்டி உருட்டினார்கள்.
பையன் மனம் நொந்துபோய் கலங்கி அழுதான். தான் கரடிக் குட்டியாக இருந்தபோது செய்த தவறுகளையெல்லாம் நினைத்து வருந்தினான்.
அன்று திடீரென அந்த ரொட்டிக் கடைக்கு காவல் துறை அதிகாரிகளும் தொழிலாளர் நலத் துறை அதிகாரிகளும் வந்தார்கள். சிறுவர்களை வைத்து வேலை வாங்கியதற்காக கடை முதலாளியை பிடித்துச் சென்றார்கள்.
அம்மா, அப்பா பெயரையோ, சொந்த ஊர் எதுவென்றோ சொல்லத் தெரியாத கரடிப் பையனை ஒரு தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்தார்கள்.
அந்தத் தொண்டு நிறுவனத்திலே, பெற்றோரை இழந்து சாலையோரமாகச் சுற்றித் திரிந்து கொண்டிருந்த சிறுவர், சிறுமியர் பலர் இருந்தனர். கரடிப் பையனும் அவர்களோடு சேர்க்கப்பட்டான்.
பெற்றோர் இல்லாமல் அந்தச் சிறுவர்கள் பட்ட துன்பங்களையெல்லாம் அறிந்தபோது தன்னுடைய அம்மா, அப்பாவின் அருமை பெருமைகளை கரடிப் பையன் உணர்ந்தான். அவர்களுக்காக ஏங்கினான்.
மேலும் தொண்டு நிறுவனத்திலே அவனுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தார்கள். திருக்குறள், ஆத்திச்சூடி எல்லாம் கற்பித்தார்கள். அதனால் கரடிப் பையன் பண்பட்டவனானான்.
ஒருநாள் இரவு அவன் கனவிலே கிறிஸ்துமஸ் தாத்தா அழைப்பது போல இருந்தது. பையன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். அவனிருந்த மூன்றாவது மாடியின் ஜன்னலோரமாக, அந்தரத்தில் நிஜமாகவே கிறிஸ்துமஸ் தாத்தாவின் கலைமான் வண்டி நின்றுகொண்டிருந்தது.
கிறிஸ்துமஸ் தாத்தா புன்னகையோடு அவனை அழைத்தார்.
உடனே ஜன்னல் கம்பிகள் மறைந்து போயின. கரடிப் பையன் இடைவெளி வழியே மகிழ்ச்சியோடு தாவி வண்டியில் குதித்தான். கிறிஸ்துமஸ் தாத்தா அவனை அன்போடு அணைத்துக் கொண்டார். கலைமான் வண்டி முகில்களுக்கு இடையே மின்னல் வேகத்தில் பறந்தது.
விடிந்தபோது அவர்கள் காட்டிலே இருந்தார்கள்.
பையன் மறுபடியும் குண்டோதரனாய் மாறியிருந்தான்.
குண்டோதரன் கரடி கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு நன்றி கூறிவிட்டு வீட்டை நோக்கி ஓடியது- அம்மாவுக்கு உதவி செய்ய!
நன்றி குறும்பலாப்பேரி பாண்டியன்.
ஒருநாள் மாலை தூக்கம் கலைந்து எழுந்த குண்டோதரன், அம்மாவைத் தேடி சமையலறைக்குள் சென்றது. அம்மா கரடியோ முகமெல்லாம் வியர்த்துப் போய் தலையைப் பற்றிக் கொண்டு வருத்தமாக அமர்ந்திருந்தது.
அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத குண்டோதரன், ""எங்கே எனக்கு டிபன்?'' என்று கேட்டு உறுமியது.
அம்மா கரடி கெஞ்சும் குரலில், ""மகனே குண்டோதரா! அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. சமையலுக்கு தண்ணி பிடிச்சுட்டு வர உடம்பில தெம்பில்லை. ரெண்டு குடம் தண்ணி பிடிச்சுட்டு வந்து தாயேன்...'' என்று வேண்டியது.
தாயின் மேல் கொஞ்சமும் இரக்கமில்லாத குண்டோதரன், ""இதோ பார் கிழவி! எனக்கு வேலை இருக்கு. நான் இன்னும் ஒரு மணி நேரத்தில திரும்பி வருவேன். அதற்குள்ள சமைச்சு வைச்சுடு. இல்லாட்டா நடக்கறதே வேற!'' என்று மிரட்டிவிட்டு வெளியேறியது.
தெருவிலே பிற விலங்குகளின் குட்டிகளெல்லாம் மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றிடம் வகை வகையான பொம்மைகளும் சுவையான தின்பண்டங்களும் இருந்தன. குண்டோதரனுக்கு ஒரே வியப்பு! பொறாமை!
அருகிலே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு முயல் குட்டிகளின் காதைப் பற்றி முரட்டுத்தனமாக தூக்கிய குண்டோதரன், ""ஏய்... இந்தப் பொம்மைகள், தின்பண்டங்களை எல்லாம் உங்களுக்குக் கொடுத்தது யார்?'' என்று அதட்டிக் கேட்டது.
அஞ்சி நடுங்கியவாறே முயல் குட்டிகள் கூறின- ""அண்ணா... கொஞ்ச நேரத்துக்கு முன்னால கிறிஸ்துமஸ் தாத்தா இங்க வந்தாரு... அவருதான் எங்களுக்கு இந்தப் பரிசுகளைக் கொடுத்தாரு...''
""அப்படின்னா கிறிஸ்துமஸ் தாத்தா எனக்கேன் பரிசு தரல?'' என்று கோபத்தோடு உறுமியது குண்டோதரன்.
""அதை நீங்கதாண்ணா அவர்கிட்ட கேட்கணும்...'' என்றன முயல்கள் தாழ்ந்த குரலில்.
""கேட்கறேன்... கேட்கறேன்... அவரோட தாடியைப் பிடிச்சு கேட்கத்தான் போறேன்... அவர் இப்போ எங்கேயிருக்கார்?''
""காளி கோயில் வேப்ப மர நிழல்ல ஓய்வெடுத்துக்கிட்டு இருக்கார்...''
முயல்களைத் தூக்கி எறிந்த குண்டோதரன் உடனே காளி கோயிலை நோக்கி ஓடியது. கோயில் அருகே கிறிஸ்துமஸ் தாத்தாவின் கலைமான் வண்டி நின்றுகொண்டிருந்தது. களைத்துப் போயிருந்த கலைமான்களுக்கு அன்வர் என்ற ஆட்டுக்குட்டியும், சலீம் என்ற புலிக் குட்டியும் புல்லை ஊட்டிக் கொண்டிருந்தன.
வேப்ப மரத்து நிழலிலே அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தார் கிறிஸ்துமஸ் தாத்தா. திபுதிபுவென்று ஓடிவந்த குண்டோதரன் கரடியை அன்வர் ஆட்டுக் குட்டியும் சலீம் புலிக்குட்டியும் தடுக்க முயன்றன. ஆனால் அவற்றை இடித்துத் தள்ளிவிட்டுத் தாத்தாவிடம் ஓடியது குண்டோதரன்.
அவரை உலுக்கி, ""ஏய் கிழவா... எழுந்திரு... எழுந்திரு...'' என்று கூச்சலிட்டது.
கிறிஸ்துமஸ் தாத்தா மெல்லக் கண் விழித்தார். குண்டோதரனைப் பார்த்துப் புன்னகைத்தார். ""என்ன குண்டோதரா... ஏன் என்னை எழுப்பினாய்?'' என்றார் அமைதியான குரலில்.
""காட்டில் இருக்கும் விலங்குகளுக்கு எல்லாம் பரிசளித்த நீங்கள் எனக்கு மட்டும் ஏன் பரிசு தரவில்லை?'' என்று கேட்டது குண்டோதரன்.
கிறிஸ்துமஸ் தாத்தா மெல்லச் சிரித்தார். ""உனக்குப் பரிசுதானே வேண்டும்? இதோ தருகிறேன்!'' என்றபடியே இடுப்பிலிருந்த மந்திரக் கோலை எடுத்தார். குண்டோதரனை நோக்கி ஒரு வீசு வீசினார்.
உடனே-
குண்டோதரன் ஒரு 10 வயதுச் சிறுவனாக மாறியது!
தாத்தா அடுத்த வீசு வீசினார்.
அந்தச் சிறுவன் நகரத்திலே இருந்த ஒரு பெரிய ரொட்டிக் கடை முன் நின்று கொண்டிருந்தான்.
கிறிஸ்துமஸுக்காகவும் புத்தாண்டுக்காகவும் அங்கே சுவையான ரொட்டிகளும் கேக்குகளும் செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. அவற்றிலிருந்து எழுந்த இனிய மணம் பசியைத் தூண்டியது. கரடிச் சிறுவன் நாவிலே எச்சில் ஊற அவற்றையே உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தான்.
கடை முதலாளி முறுக்கு மீசையை வருடியபடியே, ""என்னடா பையா... கடையிலே வேலை செய்யிறியா? நிறைய கேக்குகள் சாப்பிடத் தர்றேன்...'' என்று ஆசை காட்டினார்.
பையனும் ஆவலோடு தலையாட்டினான்.
ஆனால் பாவம் அவன். அந்தக் கடையில் அவன் கொத்தடிமை ஆக்கப்பட்டுவிட்டான்.
சரியான உணவோ, கூலியோ கொடுக்கப்படாமல் 18 மணி நேரம் வேலை செய்ய வைக்கப்பட்டான். வேலையென்றால் எளிமையான வேலை இல்லை. இடுப்பொடியும் அளவுக்கு கடுமையான வேலைகள்!
வேகாத வெயிலில் நீண்ட தொலைவு நடந்து சென்று குடங்களிலே தண்ணீர் பிடித்துவந்தான். பெரிய பெரிய பாத்திரங்களை தேய்த்தான். அடுத்தவர்களின் துணிகளைத் துவைத்தான். மாவு பிசைந்தான். அடுமனையின் வெப்பத்திலே வெந்து தவித்தான்...
அது மட்டுமல்லாது அவனை ஆளாளுக்கு அடித்து உதைத்தார்கள்... மிரட்டி உருட்டினார்கள்.
பையன் மனம் நொந்துபோய் கலங்கி அழுதான். தான் கரடிக் குட்டியாக இருந்தபோது செய்த தவறுகளையெல்லாம் நினைத்து வருந்தினான்.
அன்று திடீரென அந்த ரொட்டிக் கடைக்கு காவல் துறை அதிகாரிகளும் தொழிலாளர் நலத் துறை அதிகாரிகளும் வந்தார்கள். சிறுவர்களை வைத்து வேலை வாங்கியதற்காக கடை முதலாளியை பிடித்துச் சென்றார்கள்.
அம்மா, அப்பா பெயரையோ, சொந்த ஊர் எதுவென்றோ சொல்லத் தெரியாத கரடிப் பையனை ஒரு தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்தார்கள்.
அந்தத் தொண்டு நிறுவனத்திலே, பெற்றோரை இழந்து சாலையோரமாகச் சுற்றித் திரிந்து கொண்டிருந்த சிறுவர், சிறுமியர் பலர் இருந்தனர். கரடிப் பையனும் அவர்களோடு சேர்க்கப்பட்டான்.
பெற்றோர் இல்லாமல் அந்தச் சிறுவர்கள் பட்ட துன்பங்களையெல்லாம் அறிந்தபோது தன்னுடைய அம்மா, அப்பாவின் அருமை பெருமைகளை கரடிப் பையன் உணர்ந்தான். அவர்களுக்காக ஏங்கினான்.
மேலும் தொண்டு நிறுவனத்திலே அவனுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தார்கள். திருக்குறள், ஆத்திச்சூடி எல்லாம் கற்பித்தார்கள். அதனால் கரடிப் பையன் பண்பட்டவனானான்.
ஒருநாள் இரவு அவன் கனவிலே கிறிஸ்துமஸ் தாத்தா அழைப்பது போல இருந்தது. பையன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். அவனிருந்த மூன்றாவது மாடியின் ஜன்னலோரமாக, அந்தரத்தில் நிஜமாகவே கிறிஸ்துமஸ் தாத்தாவின் கலைமான் வண்டி நின்றுகொண்டிருந்தது.
கிறிஸ்துமஸ் தாத்தா புன்னகையோடு அவனை அழைத்தார்.
உடனே ஜன்னல் கம்பிகள் மறைந்து போயின. கரடிப் பையன் இடைவெளி வழியே மகிழ்ச்சியோடு தாவி வண்டியில் குதித்தான். கிறிஸ்துமஸ் தாத்தா அவனை அன்போடு அணைத்துக் கொண்டார். கலைமான் வண்டி முகில்களுக்கு இடையே மின்னல் வேகத்தில் பறந்தது.
விடிந்தபோது அவர்கள் காட்டிலே இருந்தார்கள்.
பையன் மறுபடியும் குண்டோதரனாய் மாறியிருந்தான்.
குண்டோதரன் கரடி கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு நன்றி கூறிவிட்டு வீட்டை நோக்கி ஓடியது- அம்மாவுக்கு உதவி செய்ய!
நன்றி குறும்பலாப்பேரி பாண்டியன்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கரடிக்குக் கிடைத்த பரிசு
படிபினையான் கதை நன்றி ..........
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: கரடிக்குக் கிடைத்த பரிசு
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு
» அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு – முல்லா கதை
» கிடைத்த கவிதை...
» இன்றைய முக்கிய செய்தி ..........
» வேடனுக்கு கிடைத்த முக்தி
» அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு – முல்லா கதை
» கிடைத்த கவிதை...
» இன்றைய முக்கிய செய்தி ..........
» வேடனுக்கு கிடைத்த முக்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|