தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
தவறு செய்தால் மன்னிப்புக்கேள்
5 posters
Page 1 of 1
தவறு செய்தால் மன்னிப்புக்கேள்
என். நடராஜன் நாகரெத்தினம்
மகன் அழைக்கிறான். எனவே ராமசாமி, மனைவியுடன் அமெரிக்கா போகத் தயாராகிறார். பத்து அல்லது இருபது வருடம் முன்னால் இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அமெரிக்காவில் பல இடங்களைச் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டிருப்பார். வயது கூடிவரும்போது ஆசைகளை அது அழித்துவிடும் இல்லையா?
இப்போது போவது பேரனுடன் சில மாதங்களைச் செலவழிக்க ஆசைப்பட்டுத்தான்.
சிரமமான 18 மணி நேரத்திற்கு குறையாத பயணம். மகன் வீட்டை அடைந்து ஒரு சில நாட்கள் நன்றாகவே கழிந்தன. பேரனுக்கு பரிசு தர விரும்பாத தாத்தா உண்டா?
மகனிடம் ஒரு உதவி கேட்கிறார். சமயம் கிடைத்தபோது தன்னை கடைகளுக்கு அழைத்துச் செல்ல கேட்டுக் கொள்கிறார்.
உடனே மகன் கோபம் கொள்கிறான். “பணம் இங்கே கொட்டிக் கிடக்கவில்லை… இன்னமும் ஏதோதோ…” தந்தைக்குப் புரிகிறது. மகனுக்கு ஏதோ பணமுடை போலும். தந்தை இடை மறிக்கிறார். ‘தான் வரும்போது பரிசுகளை வாங்கத் தேவையான பணம் கொண்டு வந்திருப்பதாகவும், தான் கேட்பது, முடிந்தபோது கடைகளுக்கு அழைத்துச் செல்லும் உதவி மாத்திரமே’ என்று சொன்னார்.
தனையன் தான் அவசரப்பட்டதை உணர்ந்து உடனே, தன் பணப் புழக்கத்தில் கஷ்டம் இருப்பதாகச் சொல்லியிருக்கலாம். அதோடு மரியாதை இல்லாமல் பேசியதற்கு மன்னிப்புக் கேட்டிருக்கலாம். பெரியவர்களும் அதோடு மறந்திருப்பார்கள்.
ஆனால், மகனுக்கு அது சரி எனத் தோன்றவில்லையோ? தவறு செய்வதில் சிறிதும் குறையாத தனது தன்மானத்திற்கு தந்தையிடம் மன்னிப்புக் கேட்டால் குறைவுவரும் என்ற பயமா?
‘உன்னிடம் ஏது பணம்? எல்லாமே என் பணம் தான். என் பணத்தில் எனக்கே பரிசு தருவது என்ன ஒரு செயல்’ என்றெல்லாம் மேலும் மேலும் விடாமல் தொடர, பெரியவர்கள் இனிமேல் தன் வாழ்நாளுக்கும் இந்த மகனின் தொடர்பு போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, துயரத்துடன் நாடு திரும்பியதாக முடிகிறது இந்த கதை.
பெற்றோர் துக்கத்தைச் சுமந்தாலும், தன் புத்திர செல்வங்களைக் கண்டு பயந்தாலும், அவர்களை முழுவதும் வெறுப்பதோ அல்லது அவர்களுக்கு கேடு செய்வதோ இல்லை.
ஒருவர் மிகவும் தைரியசாலி என்றால், அவர் பொய் சொல்லாதவராக இருக்க வேண்டும். தான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்வதில் தயங்கக் கூடாது. இவை இரண்டும் இல்லாதவர் ஒரு கோழைதான். மன்னிப்புக் கேட்டவர் எவரையும் நாம் வாழும் சமூகத்தில் குறைவாக மதிப்பிட்டதில்லை. தவறு செய்தும் மன்னிப்புக் கேட்காதவர்கள், நிரந்தரமாக புண்பட்டவரின் வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்கிறார்கள்.
உங்கள் புத்திர செல்வங்களுக்கு நீங்கள் அளிக்கும் உண்மையான செல்வம், காசு, பணம், நிலம், வீடு அல்ல. அவர்கள் சிறு வயதிலே தவறு செய்யும்போது, மனதார மன்னிப்புக் கேட்கும் ஒரு குணத்தை, இது வீட்டிலும், வாழும் சமூகத்திலும், விரோதங்கள் வளராமல் செய்யும்.
இந்த குணம் வளர்க்காதவர்கள், தோல்விகளைச் சுமப்பார்கள்.
வெற்றிக்கு ஒரு வழி
நமக்கு பாதகமான சூழ்நிலைகளை சாதகமாக மாற்றுவது.
துயர் உன்னை தொடரும்போது துவளாதே, துரத்து
நல்லவரோ, தீயவரோ, வல்லவரோ, எளியவரோ, சாமியாரோ, குடும்பியோ, மனிதனோ, மிருகமோ யாரும் என்றுமே. எப்போதும் துயரம் தொடராமல் வாழ்ந்ததில்லை. துயரத்திலிருந்து தப்பித்ததில்லை. யாருமே வாழ்வின் ஆரம்பம் முதல் முடிவு வரை சாதகமான சூழ்நிலையில் மாத்திரம் வாழ்ந்து, மடிந்ததில்லை.
துயரம் நம்மை பல உருவங்களில் துரத்தும். உதாரணமாக தொழில் நஷ்டம், வேலையில் தொல்லை, நமக்கும் நம்மை அடுத்தோர்க்கும் உடல் நலக்கேடு. முயற்சிகளில் தோல்வி, பிரியமானவரின் பிரிவு இதுபோன்ற துயரம் தரும் நிகழ்ச்சிகள் எல்லாருடைய வாழ்விலும், வெவ்வேறு கட்டங்களில் நுழைவது இயற்கையே.
இவைகளை எவ்வாறு எதிர்கொண்டு வெல்லுவது என்ற சிந்தனை நமக்கு வேண்டும். அய்யோ, அப்பா என்று கதறி மற்றவரின் அனுதாபங்களைத் தேடுவதும், ஓடி ஒளிவதும், தற்கொலை, கொலை போன்ற அறிவற்ற செயல்களும், நமக்கு நல்ல பலனைத் தராது.
மாறாக, முயற்சியும் துணிவும் கொண்டால், நாம் அடைந்த துயரத்தை நமக்கே சாதகமாகப் பயன்படுத்தும் வழிகள் பிறக்கும். அதனால் நமது வாழ்வு சிறப்பாக இருக்கும்.
நாம் மனது வைத்தால், எந்த பாதகமான சூழ்நிலையையும் சாதகமாக மாற்றிக் கொள்ள முடியும்.
இறைவனின் தூதுவராக நாம் வணங்கும் புனிதர் யேசு சிலுவையில் அறையப்பட்டார். மக்களை நல்வழிப்படுத்தப் பாடுபட்ட தீர்க்கதரிசியார் முகம்மது கல்லால் அடிக்கப்பட்டார். அப்படி இருக்கும்போது, பழி பாவங்களில் சிக்கி சாதாரண மக்களாக உழலும் நாம் எம்மாத்திரம்?
அதுவும் உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும், இன்று நேற்றல்ல, காலம் காலமாக நடைபெறும் அதிசயம். இதனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,
படைத்த கடவுளே ஆசைப்பட்டாலும், தீமையை என்றுமே தனியே பிரித்து அதை அழிக்க முடியாது. தீமை, நன்மையின் பிரிக்க முடியாத பாகம்.
உயிரினமான நாம் எல்லோருமே நம்மை அறிந்தோ, அறியாமலோ, விரும்பியும் விரும்பாமலும், சாதகமான மற்றும் பாதகமான சூழ்நிலைக்கு மாறி மாறி தள்ளப்படுகின்றோம்.
சாதகமான சூழ்நிலையிலும் குதூகலிக்கும் நாம், பாதகமான சூழ்நிலைகளில், நிலை தடுமாறி விடுகிறோம். இந்த கடவுளின் படைப்பில், ஏனோ தவிர்க்க வேண்டிய ஒரு தவறு நடந்து விட்டதைப் போல நினைத்துக் கொள்கிறோம். குமுறுகிறோம்.
அப்படியானால், “துன்பம் வந்தால் என்னதான் செய்ய வேண்டும்?” என்ற கேள்விக்கு பதில், “அடுத்து வரும் கதையின் கதாநாயகனான கழுதையைப் பின்பற்ற வேண்டும்” என்பதே.
துயரத்துக்கு நம்மேல் ஏன் அப்படி ஒரு பாசம்?
முக்கியமான காரணம் என்று பார்த்தால் நமது அநியாய ஆசைகள் வழக்கமான தப்புக் கணக்குகள் மற்றவரை ஏமாற்ற முயற்சி செய்வது உழைக்காமல் உயர்வைத் தேடுவது அதிக லாபம் தேடுவது இது போல பல வழுக்கலான விவகாரங்கள் துயரமாக மாறி மனிதனைத் துரத்துகிறது.
உயிரினம் எல்லாமே, எப்போதுமே மற்ற உயிரினத்தால் ஏதாவது ஒரு வகையில், பயனோ அல்லது பயமோ கொண்டு வாழ்ந்து வருகிறது. இதோடு இயற்கையும் கூட்டணி அமைக்கும்போது வாழ்க்கை சூடு பிடிக்கிறது.
இங்கே பாருங்க அதிசயத்தை!
எந்தவொரு உயிரோ அல்லது பொருளோ, நல்லதோ, பொல்லாததோ மற்றவரை வெவ்வேறு விதமாகப் பாதிக்கும் அல்லது பலன் தரும். குழப்பமா? மேலே கூறின இயற்கையின் சீற்றம் பொது மக்கள் பலரின் உயிரைக் குடித்து, பலரின் வாழ்க்கையைச் சிதைத்தாலும், அதுவே, சில அரசு அலுவலர், சில அரசியல்வாதிகள் என்ற வேறு சில மக்களை பெரும் செல்வம் பெற்று பெருவாழ்வு வாழ காரணமாகிறது அல்லவா?
சிலருக்கு நன்மை தரும் ஒரு உயிரோ, ஒரு பொருளோ, மற்ற பலருக்கு வெவ்வேறு அளவுகளில் தீமை தரும். சிலருக்கு தீமை தருமென நம்பப்படுபவை பலருக்கு பல்வேறு அளவுகளில் நன்மையும் தருவதால், எதையுமே, எவரையுமே, எக்காலத்திலும் நன்மை, தீமை என்று இனம் காண முடியாது.
மகன் அழைக்கிறான். எனவே ராமசாமி, மனைவியுடன் அமெரிக்கா போகத் தயாராகிறார். பத்து அல்லது இருபது வருடம் முன்னால் இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அமெரிக்காவில் பல இடங்களைச் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டிருப்பார். வயது கூடிவரும்போது ஆசைகளை அது அழித்துவிடும் இல்லையா?
இப்போது போவது பேரனுடன் சில மாதங்களைச் செலவழிக்க ஆசைப்பட்டுத்தான்.
சிரமமான 18 மணி நேரத்திற்கு குறையாத பயணம். மகன் வீட்டை அடைந்து ஒரு சில நாட்கள் நன்றாகவே கழிந்தன. பேரனுக்கு பரிசு தர விரும்பாத தாத்தா உண்டா?
மகனிடம் ஒரு உதவி கேட்கிறார். சமயம் கிடைத்தபோது தன்னை கடைகளுக்கு அழைத்துச் செல்ல கேட்டுக் கொள்கிறார்.
உடனே மகன் கோபம் கொள்கிறான். “பணம் இங்கே கொட்டிக் கிடக்கவில்லை… இன்னமும் ஏதோதோ…” தந்தைக்குப் புரிகிறது. மகனுக்கு ஏதோ பணமுடை போலும். தந்தை இடை மறிக்கிறார். ‘தான் வரும்போது பரிசுகளை வாங்கத் தேவையான பணம் கொண்டு வந்திருப்பதாகவும், தான் கேட்பது, முடிந்தபோது கடைகளுக்கு அழைத்துச் செல்லும் உதவி மாத்திரமே’ என்று சொன்னார்.
தனையன் தான் அவசரப்பட்டதை உணர்ந்து உடனே, தன் பணப் புழக்கத்தில் கஷ்டம் இருப்பதாகச் சொல்லியிருக்கலாம். அதோடு மரியாதை இல்லாமல் பேசியதற்கு மன்னிப்புக் கேட்டிருக்கலாம். பெரியவர்களும் அதோடு மறந்திருப்பார்கள்.
ஆனால், மகனுக்கு அது சரி எனத் தோன்றவில்லையோ? தவறு செய்வதில் சிறிதும் குறையாத தனது தன்மானத்திற்கு தந்தையிடம் மன்னிப்புக் கேட்டால் குறைவுவரும் என்ற பயமா?
‘உன்னிடம் ஏது பணம்? எல்லாமே என் பணம் தான். என் பணத்தில் எனக்கே பரிசு தருவது என்ன ஒரு செயல்’ என்றெல்லாம் மேலும் மேலும் விடாமல் தொடர, பெரியவர்கள் இனிமேல் தன் வாழ்நாளுக்கும் இந்த மகனின் தொடர்பு போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, துயரத்துடன் நாடு திரும்பியதாக முடிகிறது இந்த கதை.
பெற்றோர் துக்கத்தைச் சுமந்தாலும், தன் புத்திர செல்வங்களைக் கண்டு பயந்தாலும், அவர்களை முழுவதும் வெறுப்பதோ அல்லது அவர்களுக்கு கேடு செய்வதோ இல்லை.
ஒருவர் மிகவும் தைரியசாலி என்றால், அவர் பொய் சொல்லாதவராக இருக்க வேண்டும். தான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்வதில் தயங்கக் கூடாது. இவை இரண்டும் இல்லாதவர் ஒரு கோழைதான். மன்னிப்புக் கேட்டவர் எவரையும் நாம் வாழும் சமூகத்தில் குறைவாக மதிப்பிட்டதில்லை. தவறு செய்தும் மன்னிப்புக் கேட்காதவர்கள், நிரந்தரமாக புண்பட்டவரின் வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்கிறார்கள்.
உங்கள் புத்திர செல்வங்களுக்கு நீங்கள் அளிக்கும் உண்மையான செல்வம், காசு, பணம், நிலம், வீடு அல்ல. அவர்கள் சிறு வயதிலே தவறு செய்யும்போது, மனதார மன்னிப்புக் கேட்கும் ஒரு குணத்தை, இது வீட்டிலும், வாழும் சமூகத்திலும், விரோதங்கள் வளராமல் செய்யும்.
இந்த குணம் வளர்க்காதவர்கள், தோல்விகளைச் சுமப்பார்கள்.
வெற்றிக்கு ஒரு வழி
நமக்கு பாதகமான சூழ்நிலைகளை சாதகமாக மாற்றுவது.
துயர் உன்னை தொடரும்போது துவளாதே, துரத்து
நல்லவரோ, தீயவரோ, வல்லவரோ, எளியவரோ, சாமியாரோ, குடும்பியோ, மனிதனோ, மிருகமோ யாரும் என்றுமே. எப்போதும் துயரம் தொடராமல் வாழ்ந்ததில்லை. துயரத்திலிருந்து தப்பித்ததில்லை. யாருமே வாழ்வின் ஆரம்பம் முதல் முடிவு வரை சாதகமான சூழ்நிலையில் மாத்திரம் வாழ்ந்து, மடிந்ததில்லை.
துயரம் நம்மை பல உருவங்களில் துரத்தும். உதாரணமாக தொழில் நஷ்டம், வேலையில் தொல்லை, நமக்கும் நம்மை அடுத்தோர்க்கும் உடல் நலக்கேடு. முயற்சிகளில் தோல்வி, பிரியமானவரின் பிரிவு இதுபோன்ற துயரம் தரும் நிகழ்ச்சிகள் எல்லாருடைய வாழ்விலும், வெவ்வேறு கட்டங்களில் நுழைவது இயற்கையே.
இவைகளை எவ்வாறு எதிர்கொண்டு வெல்லுவது என்ற சிந்தனை நமக்கு வேண்டும். அய்யோ, அப்பா என்று கதறி மற்றவரின் அனுதாபங்களைத் தேடுவதும், ஓடி ஒளிவதும், தற்கொலை, கொலை போன்ற அறிவற்ற செயல்களும், நமக்கு நல்ல பலனைத் தராது.
மாறாக, முயற்சியும் துணிவும் கொண்டால், நாம் அடைந்த துயரத்தை நமக்கே சாதகமாகப் பயன்படுத்தும் வழிகள் பிறக்கும். அதனால் நமது வாழ்வு சிறப்பாக இருக்கும்.
நாம் மனது வைத்தால், எந்த பாதகமான சூழ்நிலையையும் சாதகமாக மாற்றிக் கொள்ள முடியும்.
இறைவனின் தூதுவராக நாம் வணங்கும் புனிதர் யேசு சிலுவையில் அறையப்பட்டார். மக்களை நல்வழிப்படுத்தப் பாடுபட்ட தீர்க்கதரிசியார் முகம்மது கல்லால் அடிக்கப்பட்டார். அப்படி இருக்கும்போது, பழி பாவங்களில் சிக்கி சாதாரண மக்களாக உழலும் நாம் எம்மாத்திரம்?
அதுவும் உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும், இன்று நேற்றல்ல, காலம் காலமாக நடைபெறும் அதிசயம். இதனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,
படைத்த கடவுளே ஆசைப்பட்டாலும், தீமையை என்றுமே தனியே பிரித்து அதை அழிக்க முடியாது. தீமை, நன்மையின் பிரிக்க முடியாத பாகம்.
உயிரினமான நாம் எல்லோருமே நம்மை அறிந்தோ, அறியாமலோ, விரும்பியும் விரும்பாமலும், சாதகமான மற்றும் பாதகமான சூழ்நிலைக்கு மாறி மாறி தள்ளப்படுகின்றோம்.
சாதகமான சூழ்நிலையிலும் குதூகலிக்கும் நாம், பாதகமான சூழ்நிலைகளில், நிலை தடுமாறி விடுகிறோம். இந்த கடவுளின் படைப்பில், ஏனோ தவிர்க்க வேண்டிய ஒரு தவறு நடந்து விட்டதைப் போல நினைத்துக் கொள்கிறோம். குமுறுகிறோம்.
அப்படியானால், “துன்பம் வந்தால் என்னதான் செய்ய வேண்டும்?” என்ற கேள்விக்கு பதில், “அடுத்து வரும் கதையின் கதாநாயகனான கழுதையைப் பின்பற்ற வேண்டும்” என்பதே.
துயரத்துக்கு நம்மேல் ஏன் அப்படி ஒரு பாசம்?
முக்கியமான காரணம் என்று பார்த்தால் நமது அநியாய ஆசைகள் வழக்கமான தப்புக் கணக்குகள் மற்றவரை ஏமாற்ற முயற்சி செய்வது உழைக்காமல் உயர்வைத் தேடுவது அதிக லாபம் தேடுவது இது போல பல வழுக்கலான விவகாரங்கள் துயரமாக மாறி மனிதனைத் துரத்துகிறது.
உயிரினம் எல்லாமே, எப்போதுமே மற்ற உயிரினத்தால் ஏதாவது ஒரு வகையில், பயனோ அல்லது பயமோ கொண்டு வாழ்ந்து வருகிறது. இதோடு இயற்கையும் கூட்டணி அமைக்கும்போது வாழ்க்கை சூடு பிடிக்கிறது.
இங்கே பாருங்க அதிசயத்தை!
எந்தவொரு உயிரோ அல்லது பொருளோ, நல்லதோ, பொல்லாததோ மற்றவரை வெவ்வேறு விதமாகப் பாதிக்கும் அல்லது பலன் தரும். குழப்பமா? மேலே கூறின இயற்கையின் சீற்றம் பொது மக்கள் பலரின் உயிரைக் குடித்து, பலரின் வாழ்க்கையைச் சிதைத்தாலும், அதுவே, சில அரசு அலுவலர், சில அரசியல்வாதிகள் என்ற வேறு சில மக்களை பெரும் செல்வம் பெற்று பெருவாழ்வு வாழ காரணமாகிறது அல்லவா?
சிலருக்கு நன்மை தரும் ஒரு உயிரோ, ஒரு பொருளோ, மற்ற பலருக்கு வெவ்வேறு அளவுகளில் தீமை தரும். சிலருக்கு தீமை தருமென நம்பப்படுபவை பலருக்கு பல்வேறு அளவுகளில் நன்மையும் தருவதால், எதையுமே, எவரையுமே, எக்காலத்திலும் நன்மை, தீமை என்று இனம் காண முடியாது.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: தவறு செய்தால் மன்னிப்புக்கேள்
சிந்திக்கவேண்டிய தகவல்...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தவறு செய்தால் மன்னிப்புக்கேள்
சிந்திக்கவேண்டிய தகவல்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தவறு செய்தால் மன்னிப்புக்கேள்
சிந்திக்க வேண்டிய பகிர்வு .
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: தவறு செய்தால் மன்னிப்புக்கேள்
சிந்திக்க வேண்டிய பயனுள்ள பகிர்வு பகிர்வுக்கு நன்றி அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|