தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
மலரினும் மெல்லிய மனம்
3 posters
Page 1 of 1
மலரினும் மெல்லிய மனம்
ஒரே விசயம் மூளைக்குள் உட்கார்ந்து கொண்டு ஆட்டி வைக்கிறது. அந்த சமயத்தில் வேறு எதை பற்றியும் சிந்திக்க முடியாது. வெறுமையின் உச்சியில் நிற்போம். எந்த வேலை செய்தாலும் முழு ஈடுபாடு இருக்காது. எதையாவது செய்து மனதிலிருந்து அந்த நினைவை வெளியேற்ற நினைப்போம். சந்தோசம், துக்கம், கோபம் போன்றவை கண்ணீர் விடுதலின் மூலமும், மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளுதலிலும் குறைந்துவிடும். நான் சொல்வது வேறுவகை உணர்வுகள். இவற்றை பகிர்ந்து கொண்டாலும் இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று ஒரு பார்வைதான் கிட்டும். உணர்வுகளை வெளிக்காட்ட முடியாத சூழ்நிலையில் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு இருப்பது ஒரு வடிகாலாக இருக்கும் - (ஒரு வேளை இது பெண்மை உணர்வாகக்கூட இருக்கலாம்). . நம்மேல் நமக்கு நம்பிக்கை குறையும் நிலை இது.
உதாரணமாக, யாருக்காவது நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு மொக்கையாகி நிற்பது, சில செயல்களை செய்துவிட்டு embarrassing ஆக உணர்வது, அசடு வழிவது, எதிர்த்துப் பேச முடியாத சிறிய நிலையில் உள்ளவர்களுக்கு நியாயம் செய்ய முடியாமல் இருப்பது, சொல்லால் செயலால் அன்றி நினைவுகளால் தவறிழைப்பது - இது மிக முக்கியம் சம்பந்தப் பட்டவர்கள் நம்மை உயர்வாக எண்ணுகையில் நம் மனது நம்மை குறுக வைக்கும். இந்த எண்ணம் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும். குறுகிய நாட்களில் மறைந்துவிடும். அதற்குள், நம்மை மேற்சொன்ன விதத்தில் ஆட்டி வைக்கும். ஆரம்பத்தில் அடிக்கடி மனம் பேசினாலும், நாளைடைவில் பழகிபோய் ஊமையாகிவிடும். அது மிக ஆபத்தானது. ஏனெனில் ஆழ்மனதில் படிந்துவிடும். சமயம் பார்த்து நம்மை ஆட்டி வைகும்.
மின்னழுத்த நிலையில் சர்ஜ் , ஸ்பைக் என்று இரு நிலை உள்ளது. சர்ஜ் 230v லிருந்து 400v வரை செல்லும் , அதிக நேரம் நீடித்து நிற்கும். இதனால் எலெக்ட்ரானிக் உபகரணங்கள் பாழாகும். ஒரு துயர சம்பவம் நம் மனதை அதன் ஆளுமையில் வைத்திருப்பது போல். ஸ்பைக் என்பது 230v லிருந்து 2000vவரைக்கூட செல்லும்.ஆனால் நொடிக்கும் குறைவான நேரம்தான் இருக்கும். இதனால் எலெக்ட்ரானிக் உபகரணங்கள் தீப்பிடிக்கும் அபாயம் கூட உண்டு. நான் சொன்ன உணர்வுகள் இப்படித்தான், சட்டென அதிகபட்ச அதிர்வுகளை உண்டாக்கும்.
ஆழ்கடலில் மிதக்கும் பனிப்பாறைகள் வெளியே சிறிய ஐஸ்கட்டிகளாகத் தெரியும். ஆனால் ஒரு கப்பலையே உடைக்கும் பலம் கொண்டதாக இருக்கும். இந்த உணர்வுகளும் அப்படித்தான், நிறைய சமயத்தில் பழைய நினைவுகளை நினைவூட்டி தயங்க வைக்கும். அந்த தயக்கம் தோல்விக்கு வழி வகுக்கும். இதை எப்படி கடப்பது?
எதனால் இது போன்ற சூழ்நிலையில் சிக்கிக்கொள்கிறோம்? இது போன்ற உணர்வுகள் உங்களுக்கு ஏற்பட்டிருந்ததாக உணர்ந்தால், நீங்கள் உதவும் குணமும், தலைமைப்பண்புகளும் உடைய நல்ல மனிதர். அனைவரையும் நம்மைப்போலவே நினைத்து விடுவோம். முன்பின் தெரியாதவருக்குக்கூட வெகு இயல்பாக உதவி செய்ய முற்படுவோம். அப்படி எல்லோரிடமும் நட்புணர்வுடன் பழகும் சூழலில் , ஒன்றிரண்டு பேர், நம்மை புரிந்து கொள்ளாமல் பேசுவது, நடந்து கொள்வது அந்த இடத்தில் நம்மை அன்னியப்படுத்திவிடும். அதுதான் கூசவும் வைக்கும். தெரிந்தவர்கள் முகத்தை பார்க்கக்கூட தடுத்துவிடும். ஒரு வேகமான இரத்த ஓட்டம் காலிலிருந்து தலை வரை பாயும்.
அது போன்ற ஒரு தருணத்தில் சிவந்து போன முகத்துடன், உணர்ச்சியை துடைத்த பார்வை பார்த்த என் சக ஆசிரியையை நான் பார்த்ததுண்டு. யாருக்கும் தெரியாமல் , சிறிதாக புன்னகைத்து தோளில் நான் கை வைத்தபோது அவர் கொஞ்சம் சரியாகிவிட்டதாக உணர்ந்தாராம். அதை என்னால் எப்படி சரிவர செய்ய முடிந்தது என்று பிறகு யோசித்தேன். அது போன்ற சூழ்நிலையில் நான் சிக்கியிருந்த போது என் உள் மனது ஆறுதல் தேடியிருக்கிறது என்று புரிந்து போனது. இதுதான் நான் சொல்ல வந்தது , இது போன்ற சம்பவங்களில் பார்வையாளரான நம் பங்கும் மிக முக்கியம். ஒரே ஒருவரின் ஆறுதலான , அந்த நிமிடத்து செய்கைகூட நிலைமையை சீர் செய்யும்.
அவ்வாறு இல்லாமல் போனால், இரவு உறக்கத்தை அபகரித்துவிடும். தனியாக இருப்பதை தவிர்த்து, அம்மா/அப்பாவின் மடியில் தலைவைத்துப் படுத்து ஆறுதல் தேடலாம். இல்லையெனில் துணைவர்/ துணைவியிடம் கையை பற்றிக்கொண்டு அமைதியாக அமர்ந்துவிடலாம். விசயம் என்னவென்றால் நம்மை நன்றாக புரிந்து கொண்டவர்கள், அந்த நேரத்தில் கேள்வி கேட்காமல் நம்முடைய தனிமையை அனுமதிப்பார்கள். அது எப்படி தனிமையென்று சொல்லமுடியும் என்று கேட்பீர்கள், நான்தான் சொன்னேனே வெறுமையின் உச்சி என்று, உடலிற்கும் மனதிற்கும் சம்பந்தமில்லாத நிலை, மனம் தனித்துதான் இருக்கும். எதுவுமே இல்லையெனில் மொட்டை மாடியில் நின்று கொண்டு குளிர்ந்த காற்றை நன்றாக உள்ளிழுத்து மன அழுத்ததை வெளியேற்றலாம். வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை தேடலாம். தொடு வானத்தின் பால் வீதியை ரசிக்கலாம். உலகத்தின் சற்று உயரத்திலிருக்கும் சௌகாரியமான கற்பனை நம் இறுக்கத்தை குறைத்துவிடும்.
இனி அடுத்த விசயங்களை பார்க்கலாம். எதிர்த்துப் பேச முடியாத சிறிய நிலையில் உள்ளவர்களுக்கு நியாயம் செய்ய முடியாமல் இருப்பது என்ற நிலை, நமக்குள் இருக்கும் தலைமைப் பண்பின் தூண்டுதல். ஏதேதோ காரணத்திற்காக நம்முடைய நியாயங்கள் அடிமையாக்கப்பட்டிருக்கும். இருந்தாலும் நமக்கு கீழ் உள்ளவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று உள் மனது உறுத்தும். அந்த சூழ்நிலையில் நாம் ஒன்றும் செய்ய முடியாது போகும். இந்த குற்ற உணர்வுகளை நாம் ஜெயித்தாக வேண்டும். உண்மையை சொல்லவேண்டுமெனில் , ஆரம்பத்தில் நம்முடைய நிலைமையே
உறுதியற்றதாக இருக்கும். அந்த நிலையில் போராடினால் நம் மேல் உள்ள நம்பிக்கையையும் சேர்த்து பலி கொடுப்பது போலாகிவிடும். நாம் அப்படியே இருந்தால் இது போன்ற நிகழ்ச்சிகளை வாழ்நாள் முழுவதும் காண வேண்டியிருக்கும். எனவே, வேறு வழியில் இதனை ஈடு செய்ய முயற்சியுங்கள். ஏதாவது ஒரு வழியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். ஒரேயடியாக போராடக்கூடாது. நீங்கள் நல்லது செய்ய நினைப்பதுகூட சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதிப்பாகிவிடும். இந்த விசயத்தை பொறுத்தவரை குற்ற உணர்விலிருந்து வெளி வருவது மட்டுமே முக்கியம். கூடிய விரைவிலேயே உங்கள் மனம் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டு, இது போன்ற சிக்கல்களை சரியாக கையாளும். கொஞ்சம் நம்பிக்கை கொஞ்சம் பொறுமை வேண்டும்.
அடுத்தது, சொல்லால் செயலால் அன்றி நினைவுகளால் தவறிழைப்பது - இது மிக முக்கியம் சம்பந்தப் பட்டவர்கள் நம்மை உயர்வாக எண்ணுகையில் நம் மனது நம்மை குறுக வைக்கும். இந்த எண்ணம் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும். இந்த குற்ற உணர்விலிருந்து எப்படி வெளி வருவது. இது போன்ற சூழ்நிலையில் இரண்டுவித மனநிலைக்கு ஆட்பட்டிருப்போம். ஒன்று நாம் உணர்ந்து கொண்ட உண்மையின் உணர்ச்சிபூர்வ பாதிப்பு, மற்றொன்று இதுவரை நாம் நமக்கு பழக்கி வைத்திருக்கும் தர்ம நெறிகளின் ஆளுமை. முன்னதை விடுப்பதுதான் நியாயம். தவறை உணர்ந்து உடனேயே நம் மனதின் ஓட்டத்தை மாற்றியிருப்போம். ஒரு உதாரணம் பார்க்கலாம். ஒரு வேளை இதுமட்டும்தான் வெளிப்படையாக உரையாடக்கூடியது என்பதால், இதனை உதாரணமாக கொள்கிறேன். ஒருவருக்கு தீங்கிழைக்கப்பட்ட கடும்கோபத்தில், " இவர்களெல்லாம் உயிருடன் இருந்து என்ன செய்யப்போகிறார்களாம்?" என்று தோன்றியிருக்கும். ஒருவருடைய மரணத்தில் நமக்கு மகிழ்ச்சி என்று எண்ணும்போது மனித்தத்துவத்தை இழந்து விடுகிறோம் அல்லவா? நம்முடைய தரம் தாழ்ந்து போனதைப்போல உணர்வோம்.
இதைவிட மோசமானவைகூட இருக்கலாம். நம்மை அறிந்து கொண்ட குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட என்ன செய்லாம். இரண்டுவித மன நிலையிலிருந்து நம்மை பிரிக்க வேண்டும். குற்றம் செய்தவர், நீதிபதி என பிரிய வேண்டும். எப்படி? தனிமையில் ஒரு வெள்ளத்தாளில், உங்களுடைய பெயருக்கு நீங்களே ஒரு கடிதம் எழுத வேண்டும். இது பழைய முறை. இதற்கு பதிலாக ஒரு ஈ-மெயில் தயாரித்து உங்களுடைய மெயில் ஐடிக்கு அதனை அனுப்பிவிடுங்கள். உங்களுடைய தரப்பு நியாயம் அத்தனையும் அதில் இருக்கட்டும். உடனேயே மெயிலை திறந்து பார்க்க வேண்டாம். இந்த வேலையை செய்தபின் உங்களுக்குள் ஒரு தெளிவு பிறக்கும். மறு நாள் மெயில் பார்க்கவும். புதிதாக ஒரு விசயத்தை வாசிப்பதுபோல உணர்வீர்கள். ஆனால், வாசிப்பது நம்முடைய ஆழ்மனம் . இங்குதான் பழைய நினைவுகள் பதுக்கிவைக்கப்பட்டு, அரக்ககுணத்துடன் காத்திருக்கும். பெரிய மீசைமேல் ஏதோ ஒரு பழைய வெறுப்பு நிற்க மீசை வைதிருந்தவரை திருடன் என்று திட்டியவரை கண்டிருக்கிறேன். நன்றாக உடையணியும் பெண்களின் மேல் தவறான எண்ண வீச்சல்கள்.... இதெல்லாம் பெரிய குற்றமில்லை மனதளவில் நினைப்பதுதான். அதை திருத்த வேண்டும்.நாம் மெயிலை படிக்கும்போது நம்முடைய மனதிற்கு தெரிந்துவிடும், இது தவறான செயல் என்று. இரண்டு மூன்று முறை வாசித்தபின் அதனை அழித்து விடுங்கள். தவறான எண்ணங்களும் அழிந்து விடும். இணைய வசதியில்லையெனில் கடிதம் எழுதி கவரில் போட்டு மூடிவிடுங்கள். யார் கையிலும் கிட்டக்கூடாது. படித்தவுடன் எரித்து விடவேண்டும். இந்த செயல்கள் முழுக்க தனிமையில் நடக்க வேண்டும்.
குற்ற உணர்விற்கு மட்டுமல்ல, மனதை அரித்துக் கொண்டிருக்கும் எந்த விசயத்தையும் இவ்வாறு செய்து மாற்றமுடியும். எண்ணங்களின் பிடியிலிருந்து விடுபட்டு நம்முடைய மனதின் மென்மையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதுதான், மனித்தத்துவத்தை மகத்தானதாக்கும்.
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: மலரினும் மெல்லிய மனம்
கொஞ்சம் நீளமான கட்டுரை, மன்னிக்கவும்
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: மலரினும் மெல்லிய மனம்
கொஞ்சம் நீளமான கட்டுரையா இது??? மிகமிகத் தேவையான கட்டுரையல்லவா இது. !!!
எவ்வளவு நுணுக்கமான அலசல்கள் இந்த மெல்லிய உணர்வைப்பற்றி. நீங்கள் மனோதத்துவ நிபுணராக பரிமளிக்கிறீர்கள். எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த கட்டுரை.. அல்ல.. ஆலோசனை.
//எதிர்த்துப் பேச முடியாத சிறிய நிலையில் உள்ளவர்களுக்கு நியாயம் செய்ய முடியாமல் இருப்பது என்ற நிலை//
அலுவலகத்தில் எனது குழுவிலுள்ள நண்பர்களுக்கு, எதுவும் செய்ய இயலாமல் போகும் சூழ்நிலைகளில், நான் இந்த நிலையை அடிக்கடி உணர்ந்திருக்கிறேன்.
மிகவும் பயனுள்ள கட்டுரை, நம் தோட்டத்தின் அத்தனை நண்பர்களுக்கும் சென்று சேர இயன்றதைச் செய்ய "யூஜினிடம்" கேட்டுக்கொள்கிறேன்.
//மின்னழுத்த நிலையில் சர்ஜ் , ஸ்பைக் என்று இரு நிலை உள்ளது. சர்ஜ் 230v லிருந்து 400v வரை செல்லும் , அதிக நேரம் நீடித்து நிற்கும். இதனால் எலெக்ட்ரானிக் உபகரணங்கள் பாழாகும். ஒரு துயர சம்பவம் நம் மனதை அதன் ஆளுமையில் வைத்திருப்பது போல். ஸ்பைக் என்பது 230v லிருந்து 2000vவரைக்கூட செல்லும்.ஆனால் நொடிக்கும் குறைவான நேரம்தான் இருக்கும். இதனால் எலெக்ட்ரானிக் உபகரணங்கள் தீப்பிடிக்கும் அபாயம் கூட உண்டு. //
நீங்க ஆசிரியைதான்... ஒத்துக்கறேன்.
சரியான உதாரணம்... அதையும் ஒத்துக்கறேன்.
எவ்வளவு நுணுக்கமான அலசல்கள் இந்த மெல்லிய உணர்வைப்பற்றி. நீங்கள் மனோதத்துவ நிபுணராக பரிமளிக்கிறீர்கள். எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த கட்டுரை.. அல்ல.. ஆலோசனை.
//எதிர்த்துப் பேச முடியாத சிறிய நிலையில் உள்ளவர்களுக்கு நியாயம் செய்ய முடியாமல் இருப்பது என்ற நிலை//
அலுவலகத்தில் எனது குழுவிலுள்ள நண்பர்களுக்கு, எதுவும் செய்ய இயலாமல் போகும் சூழ்நிலைகளில், நான் இந்த நிலையை அடிக்கடி உணர்ந்திருக்கிறேன்.
மிகவும் பயனுள்ள கட்டுரை, நம் தோட்டத்தின் அத்தனை நண்பர்களுக்கும் சென்று சேர இயன்றதைச் செய்ய "யூஜினிடம்" கேட்டுக்கொள்கிறேன்.
//மின்னழுத்த நிலையில் சர்ஜ் , ஸ்பைக் என்று இரு நிலை உள்ளது. சர்ஜ் 230v லிருந்து 400v வரை செல்லும் , அதிக நேரம் நீடித்து நிற்கும். இதனால் எலெக்ட்ரானிக் உபகரணங்கள் பாழாகும். ஒரு துயர சம்பவம் நம் மனதை அதன் ஆளுமையில் வைத்திருப்பது போல். ஸ்பைக் என்பது 230v லிருந்து 2000vவரைக்கூட செல்லும்.ஆனால் நொடிக்கும் குறைவான நேரம்தான் இருக்கும். இதனால் எலெக்ட்ரானிக் உபகரணங்கள் தீப்பிடிக்கும் அபாயம் கூட உண்டு. //
நீங்க ஆசிரியைதான்... ஒத்துக்கறேன்.
சரியான உதாரணம்... அதையும் ஒத்துக்கறேன்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: மலரினும் மெல்லிய மனம்
கொஞ்சம் கூடிவிட்டது...?. ஒரு விசயத்தை கடைசிவரை ஆராய்ந்தால்தான் முடிவு கிட்டும் என்பது உண்மைதானே. உங்கள் கருத்துரையை முன்னுரையாகப் போட்டால், படிப்பதற்கு யோசிக்க மாட்டார்கள். முழுவது படித்ததற்கு நன்றி. C-SU
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: மலரினும் மெல்லிய மனம்
C-Su wrote:கொஞ்சம் நீளமான கட்டுரையா இது??? மிகமிகத் தேவையான கட்டுரையல்லவா இது. !!!
எவ்வளவு நுணுக்கமான அலசல்கள் இந்த மெல்லிய உணர்வைப்பற்றி. நீங்கள் மனோதத்துவ நிபுணராக பரிமளிக்கிறீர்கள். எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த கட்டுரை.. அல்ல.. ஆலோசனை.
//எதிர்த்துப் பேச முடியாத சிறிய நிலையில் உள்ளவர்களுக்கு நியாயம் செய்ய முடியாமல் இருப்பது என்ற நிலை//
அலுவலகத்தில் எனது குழுவிலுள்ள நண்பர்களுக்கு, எதுவும் செய்ய இயலாமல் போகும் சூழ்நிலைகளில், நான் இந்த நிலையை அடிக்கடி உணர்ந்திருக்கிறேன்.
மிகவும் பயனுள்ள கட்டுரை, நம் தோட்டத்தின் அத்தனை நண்பர்களுக்கும் சென்று சேர இயன்றதைச் செய்ய "யூஜினிடம்" கேட்டுக்கொள்கிறேன்.
//மின்னழுத்த நிலையில் சர்ஜ் , ஸ்பைக் என்று இரு நிலை உள்ளது. சர்ஜ் 230v லிருந்து 400v வரை செல்லும் , அதிக நேரம் நீடித்து நிற்கும். இதனால் எலெக்ட்ரானிக் உபகரணங்கள் பாழாகும். ஒரு துயர சம்பவம் நம் மனதை அதன் ஆளுமையில் வைத்திருப்பது போல். ஸ்பைக் என்பது 230v லிருந்து 2000vவரைக்கூட செல்லும்.ஆனால் நொடிக்கும் குறைவான நேரம்தான் இருக்கும். இதனால் எலெக்ட்ரானிக் உபகரணங்கள் தீப்பிடிக்கும் அபாயம் கூட உண்டு. //
நீங்க ஆசிரியைதான்... ஒத்துக்கறேன்.
சரியான உதாரணம்... அதையும் ஒத்துக்கறேன்.
நிச்சயமாக சென்று சேர வைப்போம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மலரினும் மெல்லிய மனம்
இது போன்ற ஆதரவிற்கு நன்றி யூஜின்
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: மலரினும் மெல்லிய மனம்
தொடருங்கள் உங்கள் படைப்புகளை எப்போதும் நமது தோட்டத்தின் ஆரவு உண்டுsagampari wrote:இது போன்ற ஆதரவிற்கு நன்றி யூஜின்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» உன் மெல்லிய தீண்டலில்.
» மெல்லிய முத்தம்!!!!!!!!!!!!
» தாயின் மெல்லிய பாத ஒலி!
» பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! மலரினும் மெல்லியது காதல் ! கவிஞர் இரா .இரவி !
» மனம்...
» மெல்லிய முத்தம்!!!!!!!!!!!!
» தாயின் மெல்லிய பாத ஒலி!
» பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! மலரினும் மெல்லியது காதல் ! கவிஞர் இரா .இரவி !
» மனம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|