தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நின்று கொல்லும் நீரிழிவும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

3 posters

Go down

நின்று கொல்லும் நீரிழிவும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்  Empty நின்று கொல்லும் நீரிழிவும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

Post by RAJABTHEEN Fri Apr 15, 2011 3:42 pm

நின்று கொல்லும்நீரிழிவும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்


பத்தும்பறந்திடும் பசி வந்தால் மறைந்திடும் என்பது வாழ்க்கையில் ஒவ்வொருவருமேஉணர்ந்திருக்கும் வாழ்வியல் யதார்த்தம். அதாவது மானம், கல்வி, அறிவு, தவம், தாளாண்மை, பலம், வன்மை, தானம், முயற்சி, காதல் என்பவையேபசியினால் பறந்திடும் பத்துமாகும். ஆனால் பசிக்கு அளவுடன் புசிக்காதுவிடின்பத்துடன் பதினொன்றாக அரிய உயிரையே பறிகொடுக்கும் பரிதாபம் நமக்கு ஏற்படும்.


மனித வாழ்விலேசந்தோஷம் என்றாலே இனிப்பு என்பதே பொருள். ஆனால் அளவுக்கு மீறினால் அமர்தமும்நஞ்சு என்பது ஆன்றோர் வாக்கு. அவ்வாறே இன்மையைக் கொடுக்கும் இந்த இனிப்பு நமதுஇரத்தத்தில் அதிகமாகும்போது அதுவே நமது உயிரைக் குடிக்கும் விஷமாக மாறுகிறது.இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருந்தால் தான் நமது உடலும் ஆரோக்கியமானநிலையில் இருக்கும்.


நம் வயிற்றுப்பகுதியில், கல்லீரலுக்கு சற்று கீழே கணையம் எனப்படும்சுரப்பி காணப்படுகிறது. இதனால் சுரக்கப்படும் இன்சுலின் (Insulin) என்னும் சுரப்பினாலேயே இரத்தத்தில்சர்க்கரையின் அளவு சமநிலையில் பேணப்படுகிறது. நாம் உண்ணும் உணவில் மாச்சத்து (Carbohydrate) அதிகமாகும் போது அது குளுக்கோசாக மாறிஇரத்தத்தில் கலக்கும்போது இன்சுலினால் சர்க்கரை சமநிலை பேணப்பட மிகுதி சர்க்கரைநமது உடலில் கிளைக்கோசனாக (Glycogen)சேமித்துவைக்கப்படுகிறது. பிறகு உடலுக்குத் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இக்கிளைக்கோசன்குளுக்கோசாக மாறி சக்தியைத் தருகிறது. இந்தப் பணி சரிவர நடைபெற வேண்டுமென்றால்நமது கல்லீரலும் எந்தப் பாதிப்பும் இல்லாது நன்கு வேலை செய்ய வேண்டும்.


நீரிழிவு நோய்இன்சுலின் அளவு குறைவதாலும் (InsulinDeficiency) கணையம், கல்லீரல் போன்றவை நோய்க்குட்பட்டு இருக்கும் நிலையில் சுரந்த இன்சுலின்சரிவர உபயோகப்படுத்தப் படாமல் இருப்பதாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவுஅதிகமாகிHyperglycemia என்ற நிலை ஏற்படுகிறது. இதையே நாம்சர்க்கரைநோய் அல்லது நீரிழிவு நோய் என்கிறோம்.

நீரிழிவு நோயின்அறிகுறிகள்

1. அடிக்கடிசிறுநீர் கழித்தல் (Polyaria)
2. அடிக்கடிசிறுநீர் கழித்தலால் தாகம் அதிகரித்தல் (Excesssive Thirst)
3. களைப்புத்தன்மை (Weakness)
4. எடை குறைவு (Weight Loss)
5. பசிஅதிகரித்தல் (Increasedappetite)
6. நாவறட்சி (Dry mouth)
7. காயம்ஏற்பட்டால் விரைவில் ஆறாமை.


நீரிழிவுநோயினால் பாதிக்கப்படும் உறுப்புகள்
ரெட்டினா பகுதிபாதிப்படைவதனால் கண் பார்வையை இழக்கும் சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்குடயபடிக் ரெட்டினோபதி (DiabeticRetinopathy) என்று பெயர். அதிகளவுசிறுநீர் கழிப்பதனாலும் சிறுநீரகங்களின் அதிகளவு செயற்பாட்டின் காரணமாகவும்சிறுநீரகங்கள் பாதிப்படைகின்றன. இதற்கு டயபடிக் நெவ்ரோபதி (Diabetic Nepropathy) என்று பெயர். இரத்தக்குழாய்கள்சுருக்கமடைவதினால் கை, கால் என்பனவற்றின் இழையங்களுக்குத் தேவையான போஷாக்குச்சரிவரக் கிடைக்கப் பெறாததினால் கலங்களுக்குத் தேவையான போஷாக்கின்மையால் கலங்கள்இறக்கத் தொடங்குகின்றன. இதன் அறிகுறியாக பாதிக்கப்பட்ட பகுதிகள் கறுத்தும்உணர்ச்சியற்றும் போகின்றன. இதுவே டயபடிக் கங்கரின் (Diabetic Gangrene) என்றழைக்கப்படுகிறது. இதனால் நாம்பாதிப்பேற்படும் உறுப்பை இழக்க வேண்டியும் வரலாம். இது மட்டுமின்றி மாரடைப்பு, இதய நோய்கள் என்பனவும் ஏற்படவும் வாய்ப்புண்டு. அத்துடன் சர்க்கரை வியாதி கை, கால் நரம்புகள், எலும்புகளையும் பாதிக்கின்றன. இது டயபடிக்நியூரோபதி (DiabeticNeuropathy) எனப்படும்.இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தசைப்பிடிப்பு, வலி, எரிச்சல் மற்றும் மூட்டுவலி போன்ற அறிகுறிகள் தெரியும். நீரிழிவு நோய்உள்ளவர்கள் சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்காக உபயோகிக்கும் மாத்திரைகளை எடுத்தபின்னர் உணவு உட்கொள்ளத் தவறுவதும் அதாவது உண்பதில் நேரந்தவறாமைகடைப்பிடிக்கப்படாமையும், பயத்தினால் சர்க்கரையின் அளவை அளவிற்கு மீறிக்குறைப்பதும் கூட ஆபத்தை விளைவிக்கும். சர்க்கரையின் அளவு குறைந்தால் (Low Blood Sugar) மயக்கம், உடல் வியர்த்தல்போன்றவை ஏற்படும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

நின்று கொல்லும் நீரிழிவும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்  Empty Re: நின்று கொல்லும் நீரிழிவும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

Post by RAJABTHEEN Fri Apr 15, 2011 3:43 pm

இந்நிலையைத்தவிர்க்க நீரிழிவு நோயாளிகள் எப்போதும் சர்க்கரையோ அன்றி இனிப்புகள் எதாவதோகைவசம் வைத்திருத்தல் அவசியம். சர்க்கரைக் குறைவை கவனித்து நிவர்த்தி செய்யவிடின்மேலும் குறைந்து கோமா (Coma) நிலை ஏற்படும் அபாயம் உண்டு.

நமது உடலில்சர்க்கரை அதிகமானாலும் சரி, குறைந்தாலும் சரி பாதிப்பு நமக்குத்தான். எனவேநீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மூலிகைகள், உணவு முறைகள், உடற்பயிற்சி ஆகியவற்றை முறையாக மேற்கொள்வதன்மூலம் எந்தவிதமான பின்விளைவுகளும் இன்றி நன்றாக வாழலாம் என்பது உறுதி.


தேவையானமூலிகைகள்
வேப்பிலை, வில்வம், அத்தியிலை, முருங்கையிலை, அருகம்புல், நெல்லி, நாவல், சிறுகுறிஞ்சான், கீழாநெல்லி, மாவிலை, வெற்றிலை எல்லா இலைகளையும் நன்கு உலர்த்தி பொடி செய்து கொள்ளவும்.இதிலிருந்து இரண்டு தேக்கரண்டி தூள் எடுத்து நீரில் கலந்து காலை, மாலை இரவு உணவிற்கு முன்பாக உண்டுவர பலன் கிடைப்பது உறுதி.


உணவு முறைகள்
தானியங்கள், காய்கள், கொட்டை வகைகள், கீரைகள், பழங்கள் ஆகியவை உணவில் அதிகம் இடம் பெற வேண்டும். காய்களில் வெண்டை, வெள்ளரி, புடலங்காய், சுரைக்காய், கொத்தமல்லியிலை, வெங்காயம், முள்ளங்கி, பாகற்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கூடியளவு அவித்துச்சாப்பிடுவதைத் தவிர்த்து பச்சையாக உண்பதே சாலச்சிறந்தது. ஆரம்பத்தில் இயற்கைஉணவுகளை உண்பது சற்றுக் கடினமாக இருந்தாலும் தொடர்ந்து பின்பற்றும் போதுசர்க்கரை வியாதி விரைவில் குணமடைய வாய்ப்புண்டு. இயற்கையுணவுகளினால் இன்சுலின்இயற்கையாக உடலில் அதிகம் உற்பத்தியாகும். மேலும் சர்க்கரை வியாதியினால் உண்டாகும்பக்க விளைவுகளான பார்வைக் கோளாறு,சிறுநீரகக் கோளாறு, இருதயப் பாதிப்பு, இரத்தக் குழாய்களில் பாதிப்பு, நரம்பு எலும்புகளில் பாதிப்பு என்பவையும் தடுக்கப்படும்.


சாதாரணமாகவேமனிதனாகப் பிறந்த எவரும் கட்டுப்பாடுடன் வாழ்ந்தால் என்றும் நலமாக வாழலாம்.


கட்டுப்பாடுஎன்பது உணவில், உடலில், உணர்வில் என்றுமூன்றிலும் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாகக்கடைப்பிடிக்க வேண்டும்.


1. அதாவதுமுதலில் நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ளல் வேண்டும். அதாவது சுயக்கட்டுப்பாடு(Self Control). தமக்கு வந்திருக்கும் நோயைப் பற்றியேசிந்தித்துப் பயந்து இன்னும் நோயை அதிகரித்துக் கொள்ளாது இது நோயே கிடையாது, இதை என்னால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என உணர்தல் வேண்டும்.இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பும்தவிர்க்கப்படும்.


2. தம்மை உணரப்பழகிக் கொள்ள வேண்டும். நம்மை உணர்தல் என்பது நம் அன்றாடப் பழக்க வழக்கங்களில்ஒரு முறைப்பாட்டை உண்டாக்கிக் கொள்ளல் என்று பொருள். அதாவது Systematic எதை எப்போது எப்படிச் செய்ய வேண்டும் என்பது.இதில் மருந்து பாவிக்கும் முறைகள்,உணவுமுறைகள் என்பனஅடங்கும்.

3. தினமும்உடற்பயிற்சியை மேற்கொள்ளல்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

நின்று கொல்லும் நீரிழிவும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்  Empty Re: நின்று கொல்லும் நீரிழிவும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

Post by RAJABTHEEN Fri Apr 15, 2011 3:43 pm

4. மனம் ஒருகுரங்கு. எனவே அதை அடக்கியாளப் பழகுதல், அதாவது எதையும்சாதிக்கும் ஆர்வம் நம்மை நாம் தன்னம்பிக்கைக்குள் தோய்ப்பதிலிருந்தேஆரம்பிக்கின்றது. தன்னம்பிக்கையே எந்த ஒரு வெற்றிக்கும் உரமாக அமைகிறது. இதுவேநோயை வெல்வதற்குரிய சக்தியை வழங்குகிறது.


5. மனவுறுதிஎன்பது அதாவது எதையும் தாங்கக் கூடிய இதயம். அது இயற்கையாகவே நம்மிடத்தில் அமைத்துக்கொள்ள நாம் பழகிக் கொள்ள வேண்டும்.


இவையே நாம்நீரிழிவு நோயைக் கொண்டிருந்தால் கடைப்பிடிக்க வேண்டிய பயிற்சிகள் ஆகும். இத்தகுபயிற்சிகளை மேற்கொள்வதனாலேயே நாம் இந்த நோயிலிருந்து விடுபடும் உணர்வை (Relax) அடைவதோடு நோயிருப்பினும் நோயற்ற நூற்றாண்டுவாழ்வைப் பெற்றவர்களாவோம்.

ஆகவே இவற்றைக்கருத்தில் கொண்டு நீரிழிவு நோய் வந்தாலும், அதனை ஒரு நோய்உபாதையாகக் கொள்ளாமல் நோயையே வென்று வாழ்வோமாக.


சர்க்கரை நோயும்இரத்தக் கொதிப்பும் பாதிப்பும்


இரத்தக்கொதிப்பு நோயை Silent Killer என்கிறார்களே அதன் காரணத்தைப் பார்ப்போம்.


டைபாய்டு, மலேரியாவைப் போல ரத்தக் கொதிப்பு 200/120 இருப்பவர் கூட சர்வசாதாரணமாகத்தான் இருப்பார்கள். ஆனால் அவருடைய உடலில் விபரீத விளைவுகள் அமைதியாகநடந்து கொண்டிருக்கும். அது அவருக்குத் தெரியாது. முக்கியமாக ரத்தக்கொதிப்பினால் இதயம் வீங்கிவிடும். இதயச் செயலிழப்புக்கும் பாதை தரும். மூளையில்ரத்தக் குழாய் வெடித்து பக்க வாதம் வர வழிவகுக்கும். கண்களில் உள்ள விழித்திரையில்ரத்தக் கசிவு ஏற்பட்டு பார்வை இழக்க நேரிடும். இதயத்தமனி ரத்த நாளங்களில் அடைப்பைஉண்டாக்கி மாரடைப்பைத் துரிதப்படுத்தும்.


சிறுநீரகத்தின்செயல்பாடு குறைந்து அது சீக்கிரத்தில் பழுதடைந்துவிடும். நீரிழிவு நோய்க்குரியசிக்கல்களைத் துரிதப்படுத்தும். இத்தனை கொடிய விளைவுகளும் ஒரே நாளில்நிகழந்துவிடாது. சிறுகச் சிறுகத் தான் நிகழும். ஆனால் அது நோயாளிக்குத் தெரியாது.ஆகையினால் தான் இந்தப் பெயர்.


மேலேசொல்லப்பட்ட அறிகுறிகள் ஒருவருக்குத் தென்பட்டால் அவருக்கு சர்க்கரை நோய்இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. உடனடியாக அவர் தனது மருத்துவரை கலந்து மருத்துவபரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியமாகும். மாறாக நூற்றுக்கு நாற்பது பேருக்கு இந்தஅறிகுறிகள் இல்லாமலேயே சர்க்கரை நோய் இருக்கலாம். அவர்கள் வேறு ஏதாவதுநோய்களுக்காக ரத்தப் பரிசோதனை செய்துகொள்ளும் போது தான் தங்களுக்கு சர்க்கரைநோய் இருப்பதையும் அறிய முடியும்.


ஆகையால்நடைமுறையில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளதா, இல்லையா என்பதைத்தீர்மானிப்பது ரத்தப் பரிசோதனைதான், குளுக்கோஸ்டாலரன்ஸ் டெஸ்ட் மூலம் இந்த நோயை உறுதிப்படுத்தலாம். ரத்தச் சர்க்கரை அளவும்இதற்கு உதவும். உணவு உட்கொள்ளாத நிலையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 முதல்120 மில்லி கிராம் சதவீதமும், உணவு உட்கொண்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்துரத்தப் பரிசோதனை மேற்கொள்ளும்போது, சர்க்கரையின்அளவு 120 முதல் 160 மில்லி கிராம் சதவீதமும் இருக்க வேண்டும். இதற்குக் கூடுதலாகரத்தத்தில் சர்க்கரையின் அளவு இருந்தால் அவருக்கு சர்க்கரை நோய் உள்ளது எனத்தீர்மானிக்கலாம்.


பொதுவாகவே இந்தசர்க்கரை நோய் என்பது, பெற்றோர் இருவருக்குமே சர்க்கரை நோய்இருந்தால், தங்கள் பிள்ளைகளுக்கும் வரும் வாய்ப்பு 100சதவீதம். இவை தவிர உடல் பருமனாக இருப்பது, உடற்பயிற்சிஇல்லாதது, மனக்கவலை, உற்சாகமற்றவாழ்க்கை முறைகள், தொடர்ச்சியாக ஏற்படும் தொற்று நோய்கள், அடுத்தடுத்து கருத்தரிப்பது ஆகிய காரணங்கள் சர்க்கரை நோய் ஏற்படுத்தவாய்ப்பாகும். அவற்றில் இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோய், இன்சுலின் சாரா சர்க்கரை நோய் என்று இரு வகைகள் உண்டு. முதலாவது வகைநோயாளிகள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியைப் போட்டுக் கொள்ள வேண்டும்.இரண்டாவது வகையினர் தேவைப்படும் காலங்களில் மட்டும் இந்த ஊசியை போட்டுக்கொள்ளலாம். மற்றபடி சர்க்கரை நோய் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டாலே போதும்.அது கட்டுப்படுவதோடு பிற பிரச்னைகளையும் ஏற்படுத்தாது.


முக்கியமாககொழுப்புச் சத்துள்ள உணவை குறைத்து உணவை கட்டுப்படுத்த வேண்டும். இனிப்புவகைகளையும், மாவுச்சத்து நிறைந்த உணவுகளையும் அளவோடு உண்டு, தினமும் நடைப் பயிற்சி மேற்கொள்ளுதல் சிறந்த பலனை அளிக்கும். உடற்பயிற்சியும்கூட முடிந்தால் காலை, மாலை என இருவேளைகளிலும் செய்தல் நல்லது.


உடல் எடையைஉங்கள் வயதிற்கேற்ப கட்டுப்படுத்துங்கள். மனக் கவலைக்கு இடம் அளிக்காதீர்கள்.பழங்களை சாப்பிடும்போது கூட ஆரஞ்சு, ஆப்பிள், பப்பாளி, கொய்யா இவற்றில் ஏதாவது ஒன்றில் தினமும்மூன்று சுளைகள் சாப்பிடலாம். நாவின் ருசிக்கு ஆசைப்பட்டு அளவு கூடினால்ஆபத்துதான். பழங்களில் கூட வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் போன்றவற்றை விலக்க வேண்டும். புரதச் சத்து உணவுகளை அதிகப்படுத்திக்கொள்ளலாம். சாதத்தின் அளவை குறைத்துக் கொண்டு தினமும் பச்சை காய்கறிகள், கீரை வகைகள் சேர்த்துக் கொள்வது நலம் பயக்கும். இடைவேளை நேரங்களில் சுண்டல், காய்கறி சூப் சாப்பிடலாம். காபியில் சர்க்கரையை குறைத்தல், நார்ச்சத்துள்ள காய்கறிகள், இனிப்பு குறைந்த எந்த வகை உணவையும் சேர்த்துக்கொள்ளலாம்.

நன்றியுடன்பகிரப்படுகிறது: றொசாரியோ ஜோர்ஜ்யின் ''வளமான வாழ்விற்குஉணவே மருந்து.''
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

நின்று கொல்லும் நீரிழிவும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்  Empty Re: நின்று கொல்லும் நீரிழிவும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

Post by sivarathy Fri Apr 15, 2011 3:57 pm

''வளமான வாழ்விற்குஉணவே மருந்து.''
உண்மை உண்மை பகிர்வுக்கு நன்றிகள்.
sivarathy
sivarathy
ரோஜா
ரோஜா

Posts : 217
Points : 343
Join date : 13/03/2011

Back to top Go down

நின்று கொல்லும் நீரிழிவும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்  Empty Re: நின்று கொல்லும் நீரிழிவும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 15, 2011 4:17 pm

sivarathy wrote:''வளமான வாழ்விற்குஉணவே மருந்து.''
உண்மை உண்மை பகிர்வுக்கு நன்றிகள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நின்று கொல்லும் நீரிழிவும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்  Empty Re: நின்று கொல்லும் நீரிழிவும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum