தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஹசாரே போராட்டத்துக்கு அனுமதி ரத்து! டெல்லியில் திக் திக்!

4 posters

Go down

ஹசாரே போராட்டத்துக்கு அனுமதி ரத்து! டெல்லியில் திக் திக்!   Empty ஹசாரே போராட்டத்துக்கு அனுமதி ரத்து! டெல்லியில் திக் திக்!

Post by thaliranna Mon Aug 15, 2011 9:40 pm

ஹசாரே போராட்டத்துக்கு அனுமதி ரத்து! டெல்லியில் திக் திக்!


புதுடில்லி: காந்தியவாதியான அன்னா ஹசாரே நாளை ( செவ்வாய்க்கிழமை) நடத்தவிருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு வழங்கிய அனுமதியை போலீசார் ரத்து செய்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ஹசாரே குழுவினர் டில்லியில் நாளை அணுக வேண்டிய விஷயங்கள் குறித்து அவசரமாக ஆலோசித்து வருகின்றனர். அனுமதியை மீறும் பட்சத்தில் டில்லியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை எற்படும். இதனையடுத்து டில்லி நகர் முழுவதும் போலீசார் உஷாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அரசு நினைத்தது போல் வரைவு மச‌ோதா : ஊழல் குற்றம் புரிவோரை தண்டிக்கும் லோக்பால் மசோதாவில் மாற்றம் செய்ய வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருந்தது நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிரான அலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து கமிட்டி அமைத்து அப்போதைக்கு இந்த பிரச்னைக்கு அரசு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால் சமூக ஆர்வலர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்ட விஷயங்கள் முற்றிலும் இந்த மசோதாவில் புறக்கணிக்கப்பட்டு அரசு நினைத்தது போல் கொண்டு வந்திருக்கிறது. நடப்பு பார்லி., கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவாதத்திற்கு பின்னர் மசோதா நிறைவேற்றப்படும் . ஹசாரே குழுவினர் பரிந்துரைத்த அம்சங்கள் இல்லாமல் இந்த மசோதா முழு வடிவம் பெற்றால் எவ்வித பலனையும் தராது என்றும் இது ஒரு ஜோக்பால் என்றும் விமர்சித்தனர்.

நிபந்தனையுடன் கூடிய அனுமதி: இந்நிலையில் சுதந்திர தினநாளில் மீண்டும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஹசாரே அறிவித்துள்ளார். இதற்கு போலீசார் கடந்த வாரம் 22 நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை வழங்கினர். அதாவது 16 ம் தேதி ( செவ்வாய்க்கிழமை) முல் 18 ம்தேதி வரை 72 மணி நேரம் மட்டுமே உண்ணாவிரதம் இருக்க வேண்டும். ஜெய்ப்பிரகாஷ் நாராயண் பார்க்கில் நடத்திக்கொள்ளும் இந்த போராட்டத்தில் 5 ஆயிரம் பேர் வரை மட்டுமே பங்கேற்கலாம். மேலும் வாகனங்கள் அதிக அளவு வரக்கூடாது. போராட்ட பந்தல் தவிர ஏனைய இடங்களில் யாரும் கூடி நிற்க கூடாது என்றும் உள்பட 22 நிபந்தனைகள் விதித்தனர்.

இந்த நிபந்தனை ஜனநாயகத்தை கொலை செய்வது என்றும், அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது என்றும் ஹசாரே குழுவினர் கருத்து தெரிவித்திருந்தனர். பிரதமருக்கும் கடிதமும் எழுதி , நிபந்தனையையும் ஏற்க மறுத்தனர். கோர்ட் கைதுக்கு தயார் என்றும் தெரிவித்திருந்தனர்.

ஹசாரேயின் போராட்டம் நியாயமற்றது, இவரே ஒரு ஊழல்வாதி என்றும் காங்கிரஸ் தனது எதிர்ப்பை தெரிவித்தது. அமைச்சர்கள் பிரணாப், கபில்சிபல் , அம்பிகாசோனி, மற்றும் காங்.,உயர் மட்ட தலைவர்கள் ஹசாரேயை கடுமையாக விமர்சித்தனர். ஹசாரே ஒரு ஊழல்வாதி என்றும் வர்ணித்தது.

இந்நிலையில் ஹசாரேவுக்கு வழங்கிய அனுமதியை போலீசார் ரத்து செய்துள்ளனர். சட்ட மீறல்கள் நடக்கும் என்று கருதினால் போலீசார் எவ்வித முடிவும் எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் கூறியுள்ள கருத்தின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி ரத்து செய்யப்படுவதாக டில்லி போலீசார் கூறியுள்ளனர்.

டில்லியில் பதட்டம் தொற்றிக்கொண்டது: போலீசார் அனுமதி ரத்து செய்யப்பட்டதை அடுத்து நாளை ( 16 ம் தேதி) போராட்டம் துவங்குமா அல்லது ரத்தாகுமா என்ற கேள்வி எழும்பியுள்ளது. அனுமதியை மீறி துவங்கும் பட்சத்தில் ஹசாரே மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் டில்லியில் இன்று முதல் பதட்டம் தொற்றிக்கொண்டது.

இந்த போராட்டத்தில் பங்கேற்க சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடுவர், இதனால் சட்டச்சிக்கல் ஏற்படும் என உளவுத்துறை அளித்துள்ள தகவலை அடுத்து டில்லி போலீசார் அனுமதி ரத்து முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் போலீசாரின் அனுமதி மறுப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஹசாரே குழுவினர் தங்களுடைய ஆதரவாளர்கள் திட்டமிட்டபடி அனைவரும் மற்றொறு சாகீத் பார்க்கிற்கு வருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஹசாரே ஆதரவாளர்கள் போராட்டம் : வலுவான லோக்பால் மசோதா உருவாக்க வலியுறுத்தி அன்னா ஹசாரே நாளை முதல் உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருந்தார். முதலில் அனுமதி கொடுத்திருந்த டில்லி போலீசார் அனுமதியை ரத்து செய்து விட்டனர். தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க சென்றால் தடுத்துநிறுத்துவோம் என கூறியுள்ளனர். இதனிடையே உண்ணாவிரதத்திற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டதை கண்டித்து டில்லி ஜெய்பிரகாஷ் பூங்கா முன்பு ஹசாரே ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

டில்லி போலீசுக்கு ஹசாரே கண்டனம் : உண்ணாவிரதத்திற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டதற்கு ஹசாரே குழுவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அக்குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அனுமதி ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது. போலீசார் விதித்த 22 நிபந்தனைகளில் 6 நிபந்தனைகள் சட்டவிரோதமானவை. பொது மக்கள் அனைவரும் ஷாகித் பூங்காவிற்கு வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம் என கூறியுள்ளார். இதனிடையே அர்விந்த் கெஜ்ரிவால் கூறுகையில், நாளை திட்டமிட்டபடி உண்ணாவிரதத்தை துவக்கலாம் என ஹசாரே கூறியுள்ளார். ஊழலுக்கு எதிராக பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். இந்த போராட்டம் ஜனநாயகத்தை காப்பதற்காக நடக்கிறது என கூறியுள்ளார்.

ஹசாரே உண்ணாவிரதம்: அம்பிகா சோனி தகவல்:அன்னா ஹசாரே உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து டில்லியில் பேட்டியளித்த மத்திய அமைச்சர் அம்பிகா சோனி, டில்லி போலீசார் அரசியல் நெருக்கடிகளுக்கு உட்பட்டு செயல்படவில்லை. ஹசாரேவின் போராட்டம் மற்றும் நம்பிக்கை குறித்து புரியவில்லை. லோக்பால் மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்படவில்லை என கூறினார்.

ராஜ்காட்டில் அன்னா ஹசாரே:டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா சமாதிக்கு ஹசாரே வந்தார். அங்கு வருகையில் முக்கிய மான நாளுக்கு முன்னர் இங்கு பலம் மற்றும் ஊக்கம் பெற வந்துள்ளதாக கூறினார். அங்கு அன்னா ஹசாரே பிரார்த்தனை செய்தார். ஹசாரேவுடன், அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். இதனிடையே திடீரென ஹசாரே ராஜ்காட்டிற்கு வந்துள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ள டில்லி போலீசாரும், ராஜ்காட்டிற்கு வந்துள்ளனர். அங்கு அவர்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர். மேலும் அங்கு வரும் ஹசாரே ஆதரவாளர்கள் குறித்து ஆய்வு செய்யவும் முடிவு செய்துள்ளனர்.மேலும் .6.45 மணிக்கு மேல் ஹசா‌ரே வெளியேறுவாரா எனவும் போலீசார் ஆயு்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹசாரே விவகாரம்: தே.ஜ., கூட்டணி நாளை ஆலோசனை : அன்னா ஹசாரேவின் காலவரையற்ற உண்ணாவிரதத்திற்கு டில்லி போலீசார் அனுமதி மறுத்தது குறித்து விவாதிக்க தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் டில்லியில் நாளை கூடி ஆலோசனை நடத்த உள்ளது. அப்போது இந்த விவகாரத்தில் தே.ஜ., எடுக்க வேண்டிய நிலை குறித்து முடிவு செய்யப்படுகிறது.
நன்றி தினமலர்.[You must be registered and logged in to see this link.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ஹசாரே போராட்டத்துக்கு அனுமதி ரத்து! டெல்லியில் திக் திக்!   Empty Re: ஹசாரே போராட்டத்துக்கு அனுமதி ரத்து! டெல்லியில் திக் திக்!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Aug 15, 2011 10:22 pm

இனிமேல் எந்த ஒரு தனி மனிதனாலும் சமுதாயத்தை மாற்றி அமைத்துவிட முடியாது. அரசியல்வாதிகளால் மட்டுமே சாதிக்க முடியும்(அரசியல்வாதி தனி மனிதன் அல்ல).
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

ஹசாரே போராட்டத்துக்கு அனுமதி ரத்து! டெல்லியில் திக் திக்!   Empty Re: ஹசாரே போராட்டத்துக்கு அனுமதி ரத்து! டெல்லியில் திக் திக்!

Post by அ.இராமநாதன் Mon Aug 15, 2011 10:28 pm

[You must be registered and logged in to see this image.]

-
காங்கிரஸ் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று, அன்னா ஹசாரே மறுத்து இருக்கிறார்.

மராட்டிய மாநில அரசு நியமித்த நீதிபதி சாவந்த் கமிஷன் அறிக்கையில், அன்னா ஹசாரே ஊழல்வாதி என்று குறிப்பிட்டு இருந்ததாகவும், அவருடைய பிறந்த நாளுக்கு ரூ.2.20 லட்சம் செலவிடப்பட்டதாகவும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மனீஷ்திவாரி நேற்று குற்றம் சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்த அன்னா ஹசாரே கூறியதாவது:-

"லோக்பால் மசோதா வரைவுக்குழு என்று அமைக்கப்பட்டதோ அன்று முதலே, என்னைத்தவிர எங்கள் குழுவினருக்கு எதிராக புகார்கள் வரத்தொடங்கி விட்டன. தற்போது என் மீதும் புகார் கூறி இருக்கிறார்கள். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாதவை. என் மீதான புகாரை நிரூபிக்க முடியுமா?

மத்திய அரசு எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறது. சாவந்த் கமிஷன் நான் ஊழல் புரிந்ததாக கூறவில்லை. எனது பிறந்த நாளை நான் ஒரு போதும் கொண்டாடியது இல்லை. சிலர் எனது பிறந்த நாளை கொண்டாட விரும்பினார்கள். ஆனால், அறக்கட்டளை ஒதுக்கிய பணம் திருப்பி அனுப்பப்பட்டு விட்டது". இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

ஹசாரே போராட்டத்துக்கு அனுமதி ரத்து! டெல்லியில் திக் திக்!   Empty Re: ஹசாரே போராட்டத்துக்கு அனுமதி ரத்து! டெல்லியில் திக் திக்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Aug 16, 2011 12:41 pm

சியர்ஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஹசாரே போராட்டத்துக்கு அனுமதி ரத்து! டெல்லியில் திக் திக்!   Empty Re: ஹசாரே போராட்டத்துக்கு அனுமதி ரத்து! டெல்லியில் திக் திக்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்துக்கு குவிகிறது ஆதரவு: ஊழலுக்கு எதிராக திரளுகின்றனர் மக்கள்
» அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்துக்கு குவிகிறது ஆதரவு: ஊழலுக்கு எதிராக திரளுகின்றனர் மக்கள்
» டெல்லியில் பிரதமர் நடத்திய கூட்டம்- அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு
» காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
» இரவில் தனிமையில் இருந்தால் திக்…திக்…

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum