தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கைவிடப்பட்ட நபிவழியில் பெருநாள் தொழுகை!

2 posters

Go down

கைவிடப்பட்ட நபிவழியில் பெருநாள் தொழுகை! Empty கைவிடப்பட்ட நபிவழியில் பெருநாள் தொழுகை!

Post by abuwasmee Sun Aug 28, 2011 7:46 pm

http://abuwasmeeonline.blogspot.com

நோக்கம்:
நோன்பு பெருநாள் அல்லாஹ்வை நினைவு கூறுவதற்காகவும், அவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது. எனவே இந்நாள் இறைவனை நினைவு கூறுவதற்கான நாள் என்பது தெளிவாகிறது. ஆனால் இதையெல்லாம மறந்துவிட்டு பெருநாளை சந்தோஷமாக கொண்டாடுகிறோம் என்ற பெயரில் அன்று குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பது, மது அருந்துவது, சூதாடுவது போன்ற அனைத்து தீமையான செயல்களையும் இந்த பெருநாளன்றுதான் செய்கிறார்கள்.
பெருநாள் தொழுகை:
பருவமடைந்த ஆண், பெண் அனைவரின் மீதும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும்.
தொழுகை நேரம்:
பெருநாள் அன்று முதல் வேளையாக தொழுகையை முடிப்பது சிறந்ததாகும். ஆனால் அதிகமான இடங்களில் காலை 10:30 மணிவரை தாமதப்படுத்தி பெருநாள் தொழுகையை தொழுகின்றனர். நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு செய்தார்களோ அவ்வாறுதான் தொழவேண்டும்.

இன்றைய தினத்தில் நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். (அறிவிப்பவர் : பர்ரா பின் ஆஸிப் (ரலி) நூல்:புகாரி)
எங்கே தொழ வேண்டும்?
திடலில்தான் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை நிறைவேற்றியுள்ளார்கள். நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள்ஆகிய இருபெருநாள்களிலும் சிறப்புத்தொழுகை இரண்டுரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இருபெருநாள் தொழுகையையும்திடலில் தான்தொழ வேண்டும்.“மற்றபள்ளிகளில் தொழுவதைவிட மஸ்ஜிதுன்நபவியில் தொழுவது 1000 மடங்குநன்மை அதிகம்” (புகாரீ) என்றுசொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையைமஸ்ஜிதுந் நபவீயில்தொழாமல் திடலில்தொழுததன் மூலம்திடலில் தொழுவதன்முக்கியதுவத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவேஇரு பெருநாள்தொழுகைகளையும் திடலில்தான் தொழவேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் நோன்புப்பெருநாளிலும், ஹஜ்ஜுப்பெருநாளிலும் (பள்ளிக்குச்செல்லாமல்) முஸல்லாஎன்ற திடலுக்குச்செல்பவர்களாக இருந்தனர்.அறிவிப்பவர்: அபூஸயீத்அல்குத்ரீ (ரலி),நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.
தடுப்பு (சுத்ரா):
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் சுத்ரா வைத்து தொழுதுள்ளார்கள். நோன்பு பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஓர் ஈட்டி நாட்டப்படும். நபி (ஸல்) அவர்கள் அதை நோக்கி தொழுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி)
பெருநாள் தொழுகையில் பெண்கள்:
பெருநாள்தொழுகையில் பெண்கள்கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும்.மேலும் மாதவிடாய்ஏற்பட்ட பெண்களும்திடலுக்கு வரவேண்டும். அவர்கள்தொழுகையைத் தவிரமற்ற நல்லகாரியங்களில் கலந்துகொள்ள வேண்டும்.
இரு பெருநாட்களிலும்மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்றகன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு)அனுப்புமாறும், அப்பெண்கள்வீட்டிலிருந்து வெளியாகிமுஸ்லிம்கள் தொழுகின்றஇடத்திற்குச் சென்றுஅவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும், தொழுமிடத்தை விட்டுமாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டோம. பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின்தூதரே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில்என்ன செய்வது?” என்றார். அதற்கு, “அவளுடைய தோழிதனது (உபரியான)மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்” என நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்:உம்மு அத்திய்யா(ரலி), நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.
ஒரு வழியில்சென்று மறுவழியில் திரும்புதல்:
பெருநாள்தொழுகைக்காகத் திடலுக்குச்செல்லும் போதுஒரு வழியில்சென்று வேறுவழியாகத் திரும்புவதுநபி வழியாகும்.பெருநாள் வந்துவிட்டால் நபி
ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்)பாதையை மாற்றிக்கொள்வார்கள்.அறிவிப்பவர்: ஜாபிர் ரலி), நூல்: புகாரீ
தொழுகைக்குமுன் சாப்பிடுதல்:
நோன்புப்பெருநாள் தொழுகைக்குமுன்னர் நபி (ஸல்) அவர்கள்சாப்பிட்டு விட்டுதொழச் செல்வார்கள்.சில பேரீச்சம்பழங்களை உண்ணாமல்நோன்புப் பெருநாளில் தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள்புறப்பட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் ரலி), நூல்: புகாரீ.
நோன்புப்பெருநாள் தினத்தில்நபி (ஸல்)அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்படமாட்டார்கள். ஹஜ்ஜுப்பெருநாளில் (குர்பானிபிராணியை) அறுக்கும்வரை சாப்பிடமாட்டார்கள்.அறிவிப்பவர்: புரைதா ரலி), நூல்: இப்னுகுஸைமா
முன்பின் சுன்னத்துகள் இல்லை:
இரு பெருநாள்தொழுகைகளுக்கு முன்பின் சுன்னத்துகள்கிடையாது. நபி (ஸல்) அவர்கள்இரு பெருநாள்தொழுகைக்கு முன்னரும், பின்னரும் எந்தத்தொழுகையையும் தொழுததில்லை.
நபி (ஸல்)அவர்கள் பெருநாளன்று (திடலுக்குச்) சென்றுஇரண்டு ரக்அத்கள்தொழுதனர். அதற்குமுன்னும், பின்னும்எதையும் தொழவில்லை. அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி),நூல்கள்: புகாரீ, முஸ்லிம் .
பாங்கு இகாமத் இல்லை:
இரு பெருநாள்தொழுகைக்கும் பாங்கு, இகாமத் கிடையாது. இரு பெருநாள் தொழுகையை பாங்கும்இகாமத்தும் இல்லாமல்ஒரு தடவைஅல்ல; இரு தடவைஅல்ல; பல தடவைநபி (ஸல்)அவர்களுடன் தொழுதுள்ளேன். அறிவிப்பவர்: ஜாபிர்பின் ஸமுரா (ரலி) நூல்: முஸ்லிம்


மிம்பர் இல்லை:
வெள்ளிக்கிழமைஜுமுஆவில் இமாம் மிம்பரில் நின்று உரை நிகழ்த்துவதுபோல் பெருநாள் தொழுகைக்கு மிம்பரில் நின்று உரையாற்றக்கூடாது. தரையில் நின்று தான்உரை நிகழ்த்தவேண்டும். இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள்வழிகாட்டியுள்ளார்கள். மதீனாவின் ஆளுநராகஇருந்த மர்வான்பெருநாள் அன்றுமிம்பரில் ஏறிபயன் செய்தபோது.“மர்வானே! நீர்சுன்னத்திற்கு மாற்றம்செய்து விட்டீர்!பெருநாள் தினத்தில்மிம்பரைக் கொண்டுவந்துள்ளீர். இதற்குமுன்னர் இவ்வாறுகொண்டு வரப்படவில்லை…” என்று இடம்பெற்றுள்ளது. ஆதாரம் : அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்.
நபி (ஸல்)அவர்கள் பெருநாளன்றுஒரேயொரு உரையைநிகழ்த்தினார்கள் என்பதற்கேஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்உள்ளன. இரண்டுகுத்பாக்கள் நிகழ்த்துவதற்கோ, குத்பாக்களுக்கு இடையில்அமர்வதற்கோ எந்தஆதாரமும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்குச் செல்வதற்காக)வெளியேறினார்கள். மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்து ஸலாம்கூறினார்கள். தரையில்நின்று மக்களைநோக்கி (உரைநிகழ்த்தி)னார்கள்.மக்கள் அமர்ந்திருந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத்அல்குத்ரீ (ரலி),நூல்: இப்னுமாஜா.
தொழும் முறை:
பெருநாள் தொழுகைக்கு சில கூடுதலான தக்பீர்கள் உண்டு. நபி (ஸல்)
அவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் 5 தக்பீர்களும் மொத்தம் 12 தக்பீர்கள் பெருநாள் தொழுகைக்கு சொல்வார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல் ஆஸ் (ரலி) நூல்கள்: அஹ்மத், இப்னுமாஜா). இந்த தக்பீர்களின் போது ஒவ்வொரு தக்பீர்களுக்கிடையில் கைகளை உயர்த்தியதாக எந்த ஹதீஸும் இல்லை. முதல் தக்பீரின் போது மட்டும் கைகளை உயர்த்தி நெஞ்சில் கட்டிக் கொள்ளவேண்டும். அதன் பின் கைகளைக் கட்டிய நிலையிலேயே அல்லாஹு அக்பர் என முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறிக் கொள்ளவேண்டும். தக்பீர்களுக்கிடையே
கைகளை உயர்த்தவோ, பிரிக்கவோ, ஏதேனும் திக்ருகள் சொல்லவோ நபி (ஸல்) அவர்கள் காட்டித்தரவில்லை.




தக்பீரும் பிரார்த்தனையும்:
இரு பெருநாள்களிலும்அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும்வண்ணம் அதிகமதிகம்தக்பீர்கள் கூறவேண்டும். மேலும்திடலில் இருக்கும்போது, தமதுதேவைகளை வல்லஇறைவனிடம் முறையிட்டுக்கேட்க வேண்டும்.திடலில் கேட்கும்துஆவிற்கு முக்கியத்துவமும்மகத்துவமும் உள்ளது.
பெருநாளில்நாங்கள் (தொழும்திடலுக்கு) புறப்படவேண்டுமெனவும், கூடாரத்திலுள்ளகன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச்செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம் .பெண்கள், ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள்.ஆண்களின் தக்பீருடன்அவர்களும் தக்பீர்கூறுவார்கள். ஆண்களின்துஆவுடன் அவர்களும்துஆச் செய்வார்கள்.அந்த நாளின்பரக்கத்தையும், புனிதத்தையும்அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அறிவிப்பவர்: உம்முஅத்திய்யா (ரலி),நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.
அல்லாஹு அக்பர்என்று கூறுவதுதான் தக்பீர்ஆகும். பெருநாளைக்குஎன நபி
(ஸல்) அவர்கள் தனியான எந்தத்தக்பீரையும் கற்றுத்தரவில்லை. அதற்குஆதாரப்பூர்வமான எந்தச்செய்தியும் இல்லை.மேலும் பெருநாளில்கடமையான தொழுகைகளுக்குமுன்னால் அல்லதுபின்னால் சிறப்புதக்பீர் சொல்லவேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான செய்திகள்இல்லை. மேலும்பெருநாளில் தக்பீர்களைச்சப்தமிட்டு கூறக்கூடாது.

abuwasmee
abuwasmee
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 53
Points : 146
Join date : 22/07/2011

Back to top Go down

கைவிடப்பட்ட நபிவழியில் பெருநாள் தொழுகை! Empty Re: கைவிடப்பட்ட நபிவழியில் பெருநாள் தொழுகை!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Aug 29, 2011 1:39 pm

கைவிடப்பட்ட நபிவழியில் பெருநாள் தொழுகை! 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum