தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவலைப் படுவோர் சங்கம்.

4 posters

Go down

கவலைப் படுவோர்  சங்கம். Empty கவலைப் படுவோர் சங்கம்.

Post by அ.இராமநாதன் Sun Sep 04, 2011 6:10 pm

அரண்மனையில் பணிபுரியும் சாதாரண சேவகர் எப்போதும்
மகிழ்ச்சியாக இருப்பார்; கலகல என்று சிரித்தபடி கவலைகள்
இல்லாதவ ராகக் காரியங்கள் செய்வார்.

அவரைப் பார்த்த அரசருக்கு ஒரே ஆச்சர்யம். எப்படி
இந்த ஏழை இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறான்?
இவனுக்கு வருமானமோ குறைவு. வசதிகளும் இல்லை.

மிகச்சிறிய வீட்டில் அதிக நபர்களுடன் வாழும் அவலம்...
அப்படி இருந்தும் இவன் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறான்
என்று சிந்தித்தார் அரசர்.

"பிரமாண்டமான அரண்மனை, ஏகப்பட்ட எடுபிடிகள்.
மிக அதிக வருமானம் இத்தனையும் இருந்தும் நமக்கில்லாத
நிம்மதி... மகிழ்ச்சி... இந்தப் பயலுக்கு எப்படி இருக்க
முடியும்?' என்ற எண்ணம் அவரைக் குடைந்தது.

ஒருநாள் அவனை அருகில் அழைத்து, "உனக்கு வருத்தமே
கிடையாதா? ஏன் இவ் வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய்?'
என்று கேட்டார் அரசர்.

"மேன்மை தங்கிய மன்னரே... நான் ஓர் ஏழைக் காவலன்.
எங்கள் குடும்பத்தின் தேவைகள் மிக மிகக் குறைவு.
மழையையும், வெயிலையும் மறைக்க ஒரு கூரை... வயிறு
நிரம்ப ஏதோ ஓர் உணவு... மானம் காக்க ஒரு துணி...
இதற்கு என் வருமானம் போது மானது.
வேறு எந்த ஆசைகளையும் நான் வளர்த்து கொள்வதே
இல்லை... அதனால், நிம்மதியாக இருக்கிறேன்..' என்று ப
ணிவுடன் கூறினான் சேவகன்; விரக்தியாகச் சிரித்துக்
கொண்டார் மன்னர்.

இந்த ஆச்சர்யமான நிகழ்ச்சியைத் தம் அமைச்சரிடம்
பகிர்ந்து கொண்ட மன்னர், "இவ்வளவு வருமானம் உள்ள
நாம் எப்போதும் கவலையில் இருக்கிறோம். நம்மை விடக்
குறைந்த வருமானம் உள்ள அவன் கவலையில்லாமல்
இருக்கிறானே! எப்படி இது சாத்தியம்?' என்று பெருமூச்சு
விட்டார்.

"வேண்டு மானால் அவனையும் நமது கவலைப் படுவோர்
சங்கத்தில் உறுப்பினராக்கி விடலாம். ரொம்பவும் சுலபம்...'
என்று பணிவுடன் சிரித்தார் அமைச்சர்.

"அதென்ன கவலைப்படுவோர் சங்கம்?' என்று வியப்புடன்
கேட்டார் மன்னர். "அரசே... ஒரு பையை எடுக்க வேண்டும்.
அதில் 99 தங்கக் காசு களைப் போட்டுக் கட்ட வேண்டும்.
அந்த ஏழையின் வீட்டு வாசற்படியில் வைத்துவிட வேண்டும்.
பிறகு பாருங்கள் அவனது நடவடிக்கைகளை..' என்று
சிரித்தார் அமைச்சர். "அப்படியே செய்யுங்கள்...' என்று
உத்தரவிட்டார் அரசர். தன் வீட்டு வாசலில் கிடைத்த 99
பொற்காசுகளை ஒரு தடவைக்குப் பல தடவை எண்ணி,
எண்ணி மாய்ந்தான் சேவகன். "ஒன்று குறைகிறதே...
ஒன்று குறைகிறதே..' என்று புலம்பினான். எங்கே
போயிருக்கும் என்று அங்கும் இங்கும் தேடினான்.

அமைதி போய் விட்டது. தன் வீட்டில் பொற்காசு இருக்கும்
விவரம் யாருக்கும் தெரிந்து விடுமோ என்று தடுமாறினான்.

எப்பாடு பட்டாவது பணம் சேர்த்து, அதை ஒரு தங்கக்
காசாக மாற்றி நூறு பொற் காசுகள் என்று முழுமைப்
படுத்த வேண்டும் என்கிற வெறி அவனுக்குள் ஏற்பட்டு
விட்டது. அவனது கலகலப்பு, நிம்மதி, சந்தோஷம்
எல்லாமே அந்த ஒரு தங்கக் காசு பற்றிய கவலைக்குள்
கரைந்து போய்விட்டது.

அதிகம் உழைத்தான்; பட்டினி கிடந்தான். தன் குடும்பத்தவரை
"பொறுப்பற்றவர்கள்... ஊதாரிகள்' என்று சப்தம் போட்டான்.
பரபரப்பும், படபடப்பும் அவனது ஒவ்வொரு செயலிலும்,
சொல்லிலும் குடியேறி விட்டது! அது அரசருக்குத் தெரிந்தது.

அமைச்சர் சொன்னார்... "அரசே... அவன் நமது 99 சங்க
உறுப்பினர் ஆகி விட்டான்..' என்று.

அதாவது, அனுபவிக்க ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும்,
கிடைக்கத் தவறிய ஒன்றிற்காகவே ஏங்கும் முட்டாள்களின்
உலகம் இது. இந்த மனோநிலை தான் நமது துயரங்களுக்கான
முக்கிய காரணம்.

சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் கூட சந்தோஷப்பட
முடியாதபடி இந்த மனோபாவம் நம்மைக் கெடுத்து விடுகிறது
.-
=================================================
சுகி சிவம் சொல்லக் கேட்டது
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

கவலைப் படுவோர்  சங்கம். Empty Re: கவலைப் படுவோர் சங்கம்.

Post by Mahiban Sun Sep 04, 2011 8:13 pm

இதுக்குதான் எங்கள மாதிரி இருக்கணும்....... எடுத்தா அத வித்து அல்லது அத வச்சி வேற என்ன பண்ணணும்னு யோசிக்கணும்...அத விட்டுட்டு அத எப்பிடி பாதுகாக்குறது, இன்னும் எப்பிடி சேர்க்கிறதுன்னு யோசிக்க கூடாது........
Mahiban
Mahiban
ரோஜா
ரோஜா

Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி

Back to top Go down

கவலைப் படுவோர்  சங்கம். Empty Re: கவலைப் படுவோர் சங்கம்.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 05, 2011 3:39 pm

Mahiban wrote:இதுக்குதான் எங்கள மாதிரி இருக்கணும்....... எடுத்தா அத வித்து அல்லது அத வச்சி வேற என்ன பண்ணணும்னு யோசிக்கணும்...அத விட்டுட்டு அத எப்பிடி பாதுகாக்குறது, இன்னும் எப்பிடி சேர்க்கிறதுன்னு யோசிக்க கூடாது........
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கவலைப் படுவோர்  சங்கம். Empty Re: கவலைப் படுவோர் சங்கம்.

Post by Mahiban Mon Sep 05, 2011 7:01 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
Mahiban wrote:இதுக்குதான் எங்கள மாதிரி இருக்கணும்....... எடுத்தா அத வித்து அல்லது அத வச்சி வேற என்ன பண்ணணும்னு யோசிக்கணும்...அத விட்டுட்டு அத எப்பிடி பாதுகாக்குறது, இன்னும் எப்பிடி சேர்க்கிறதுன்னு யோசிக்க கூடாது........
[You must be registered and logged in to see this image.]

எதுக்கு இந்த ரியாக்சன்........ ஏற்க்கனவே இப்பிடி பண்ணிருக்கீங்களோ...
-
இப்படிக்கு
எதயும் எடக்கு மடக்காய் யோசிப்போர் சங்கம்..
Mahiban
Mahiban
ரோஜா
ரோஜா

Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி

Back to top Go down

கவலைப் படுவோர்  சங்கம். Empty Re: கவலைப் படுவோர் சங்கம்.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 05, 2011 7:59 pm

ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கவலைப் படுவோர்  சங்கம். Empty Re: கவலைப் படுவோர் சங்கம்.

Post by thaliranna Mon Sep 05, 2011 9:30 pm

:héhé: அருமையான கதை!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

கவலைப் படுவோர்  சங்கம். Empty Re: கவலைப் படுவோர் சங்கம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum