தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
அண்டை மாநிலத்தை கண்டு தமிழக அரசு விழிக்குமா?
3 posters
Page 1 of 1
அண்டை மாநிலத்தை கண்டு தமிழக அரசு விழிக்குமா?
அண்டை மாநிலத்தை கண்டு தமிழக அரசு விழிக்குமா?
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கேரளாவில்வயல்கள் அழிவதை தடுக்க, அம்மாநில அரசு எடுத்த சாதுரிய நடவடிக்கையால்
விளைநிலங்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. இதை பார்த்தாவது தமிழக அரசு அதிவேக
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் விரும்புகின்றனர்.
ரியல்
எஸ்டேட் கோடிக்கணக்கில் பணம் கொழிக்கும் தொழில். ஆனால் இந்த தொழில்
நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை வேரோடு அழித்துக்கொண்டிருக்கிறது. நல்ல
காற்றோட்டம், தண்ணீர், போக்குவரத்து வசதிகள் இப்படிப்பட்ட இடங்களில்தான்
மக்கள் வீடு வைக்க விரும்புவர். இதை பயன்படுத்திதான் ரியல் எஸ்டேட்
உரிமையாளர்கள் வயல்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி அதில் மண் நிரப்பி
பிளாட்டுகளாக பிரித்து கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். பிற நிலங்களை விட
வயல்களை பிளாட் ஆக்குவதால் 25 முதல் 100 மடங்கு வரை லாபம் கிடைக்கிறது.
விவசாயத்தில் பல சிரமங்கள் உள்ளதால் விவசாயிகளும் ஆசை வார்த்தைகளுக்கு
மயங்கி விலைக்கு கொடுத்து விடுகின்றனர்.இதன் காரணமாக கடந்த 25
ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் செய்திருந்த நிலப்பரப்பு, தற்போது மூன்றில்
ஒரு பங்குக்கும் குறைவாகி விட்டது.
தமிழகத்தை பொறுத்த வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்தின் நெல்
தேவையை 75 சதவீதம் பூர்த்தி செய்யும் அளவு வயல்கள் இருந்தன. ஆனால் இன்று
25 சதவீத தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் டெல்டா
மாவட்டங்களையும், வெளிமாநிலங்களையும் எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலைக்கு
பெரும்பாலான மாவட்டங்கள் தள்ளப்பட்டு விட்டன. இப்படி வயல்வெளிகள் வீட்டு
மனைகளாக மாறுவதற்கு அரசியல்வாதிகளும் ஒரு முக்கிய காரணமாக இருந்து
வருகின்றனர்.
பரப்பளவில் சிறிய மாநிலமான கேரளாவிலும் வயல்வெளிகளில் வீடுகள் முளைக்க
தொடங்கின. இதனால் விழித்தெழுந்த அப்போதய அச்சுதானந்தன் அரசு 2008ம் ஆண்டு
"தண்ணீர் தடை பாதுகாப்புச் சட்டம்' என்ற சட்டத்தை இயற்றியது. இந்த சட்டம்
மூலம் தண்ணீர் பாய்ந்து செல்லும் எந்த பூமியிலும், எந்த வயலிலும் வீடு
வைக்க முடியாது. அதற்கு உள்ளாட்சியின் அனுமதி கிடைக்காது. இந்த சட்டத்தில்
சில விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
அதாவது ஒருவருக்கு ஐந்து சென்ட் வயல் மட்டும் இருக்கும். ஆனால் அவருக்கு
வீடு இருக்காது. அப்படிப்பட்டவர் அந்த வயலில் வீடு கட்டலாம். அவ்வாறு கட்ட
வேண்டுமெனில் அந்த வயலுக்கு உட்பட்ட தாலுகாவில் எங்கும் அவருக்கோ,
மனைவிக்கோ, மகன், மகளுக்கோ வீடு இருக்க கூடாது. அவ்வாறு வீடு இல்லாமல்
இருப்பதை அந்த பகுதி ஆர்.டி.ஓ. தலைமையிலான கமிட்டி உறுதி செய்ய வேண்டும்.
இந்த கமிட்டியில் உள்ளாட்சி மற்றும் விவசாய பிரதிநிதிகள் இடம்
பெற்றுள்ளார்கள். ஆனால் இந்த கமிட்டி கூடி எவருக்கும் வயல் வெளியில் வீடு
கட்ட இதுவரை அனுமதி வழங்கியதில்லை.
இந்த கமிட்டி வயல்வெளிகளில் வீடு கட்ட அனுமதி வழங்க கூடாது என்று கூறி
விவசாயிகள் சார்பில் கேரள ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதால்,
வயல்வெளிகளில் வீடு என்பது கேரளாவில் நடக்காத காரியமாக மாறிவிட்டது. வயலை
ஒட்டி உள்ள பகுதிகளில் பல நீண்ட ஆண்டுகளுக்கு முன்னர் தென்னை போன்ற மரங்கள்
நட்டு வைத்திருப்பர். இதை "கரைபூமி' என்று அழைப்பது உண்டு. இங்கு வீடு
கட்ட இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த கரைபூமி கிராம
ரிக்கார்டுகளில் வயல் என்று குறிப்பிட்டிருந்தால் அங்கும் வீடு கட்ட
அனுமதி கிடைக்காது.இந்த சட்டம் காரணமாக கேரளாவில் ரியல் எஸ்டேட் வியாபாரம்
வயல் வெளிகளுக்கு செல்லதாதால் அங்கு விவசாயம் காப்பாற்ப்பட்டுள்ளது.
வீடுகள் மலைப்பிரதேசங்களிலும், காலி மனைககளில் மட்டுமே கட்டப்படுகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளே விவசாய நிலங்களை காலி செய்து
கொண்டிருக்கிறனர். காந்தியின் கனவு கிராமத்தை பற்றியே இருந்தது. தற்போதைய
அரசியல்வாதிகளும் கிராமங்கள் பற்றி பேசுகின்றனர். ஆனால் கிராமங்களின்
முதுகெலும்பான விவசாயத்தை அழித்துக்கொண்டிருக்கின்றனர்.பல முன்னோடி
திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டும் முதல்வர், தமிழ்நாட்டில்
வயல்வெளிகளில் வீடு கட்ட தடை விதிக்கவும், வயல் வெளிகளில் ரியல் எஸ்டேட்
வியாபாரம் செய்ய தடைவிதிக்கவும் சட்டம் கொண்டுவரவேண்டும் என்று
விவசாயிகளும், பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் விரும்புகின்றனர்.
நன்றி தினமலர்
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: அண்டை மாநிலத்தை கண்டு தமிழக அரசு விழிக்குமா?
இப்போதைக்கு தேவையான பதிவு ..
மக்கள் உணரட்டும்
மக்கள் உணரட்டும்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: அண்டை மாநிலத்தை கண்டு தமிழக அரசு விழிக்குமா?
அரசன் wrote:இப்போதைக்கு தேவையான பதிவு ..
மக்கள் உணரட்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அண்டை மாநிலத்தை கண்டு தமிழக அரசு விழிக்குமா?
நன்றி அரசன் மற்றும் யூஜினுக்கு! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» பிரபல ஸ்குவாஷ் வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு பணி: தமிழக அரசு அறிவிப்பு
» உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
» தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கும் மானியங்கள்
» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
» மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
» உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
» தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கும் மானியங்கள்
» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
» மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|