தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு

3 posters

Go down

சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு Empty சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு

Post by உதுமான் மைதீன் Sun Nov 14, 2010 12:55 am

செலவைக் குறைக்கும் காய்கறி!
இன்று பல நாடுகளில் மக்களின் பசியையும் மிருகங்களின் பசியையும் தீர்த்து வரும் மிக முக்கியமான உணவாகப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது சோயாபீன்ஸ்.

இது அவரைக் குடும்பத்தைச் சேர்ந்தது. அதனால் சோயா மொச்சை என்றும் இதனை வழங்குகிறோம்.

சோயா மொச்சையை அரைத்து மாவாகப் பயன்படுத்தலாம். இந்த மாவு கோதுமை மாவைவிடப் பல மடங்கு ஊட்டம் மிகுந்த உணவாகும். உடலின் கட்டுமானப் பணிக்கு கால்சியம் தேவை. கோதுமையில் உள்ளதைவிட 15 மடங்கு கால்சியம் சோயாமாவில் இருக்கிறது.

மூளை வளர்ச்சிக்கு…
இதே போல மூளை வளர்ச்சிக்கும் சுறுசுறுப்புக்கும் பயன்படும் பாஸ்பரஸ் ஏழு மடங்கு உள்ளது. இரத்த விருத்திற்கு பயன்படும் இரும்புச்சத்து பத்து மடங்கு இருக்கிறது.

பசியைத் தூண்டும் தயாமின் பத்து மடங்கு இருக்கிறது. இளமைத் துடிப்புடன் உடல் உறுப்புகள் இருக்கப் பயன்படும் ரிபோபிளவின் ஒன்பது மடங்கும் இருக்கிறது. கோதுமையைவிட இத்தனை மடங்கு சத்துணவு அம்சங்கள் கொண்டதாய் இருப்பதால் இது நோய் தீர்க்கும் உணவு மருந்தாகப் பயன்பட்டு வருகிறது.

புரதத்தின் அளவை அதிகரிக்க ஒர் எளிய வழி!
குழந்தைகளின் வளர்ச்சிக்கு டின்களில் அடைத்து விற்கப்படும் அனைத்துச்சத்து மாவுப் பொருள்களிலும் சோயா உணவு சேர்க்கப்படுகிறது.

சப்பாத்தி செய்யக் கோதுமை மாவைப் பயன்படுத்தும்போது அதனுடன் இரு தேக்கரண்டி சோயா மாவையும் சேர்த்துப் பிசையுங்கள். அதனால் சப்பாத்தியில் புரதத்தின் அளவு அதிகரிக்கும். பன்னிரண்டு முட்டைகளில் உள்ள புரதத்திற்கு இணையானது இரு தேக்கரண்டி சோயா மாவு.

100 கிராம் சோயாவில் 432 கலோரி கிடைக்கிறது. புரதம் மட்டும் 43.2% இருக்கிறது. அதுவும் உயர்தரமாய் இருக்கிறது. இரும்புச்சத்து 11.5 மில்லிகிராம் இருக்கிறது. எனவே, நோயாளிகளும், குழந்தைகளும் இரத்த விருத்தி பெற்று உடல் தேற முடிகிறது. ‘பி’ குரூப் வைட்டமின்களால் உடலும் தேறி விடுகிறது. நோயாளி திடமான உடலுடன் எழுந்து நடப்பார்.

இதோ ஒரு புதிய வகைப்பால்!
குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் சோயா பால் மிகச் சக்தி வாய்ந்தது. எல்லா வயதினர்களும் சோயாபாலையும், சோயா தயிரையும் பயன்படுத்தினால் வாழும்வரை ஆரோக்கியமாய் வாழலாம்.

சோயா பால் தயாரிக்க சோயா மொச்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, தோலை உரித்துவிட்டு, ஆட்டுக்கல் (கிரைண்டர்) மூலம் அரைக்க வேண்டும். எவ்வளவு மாவு உள்ளதோ அதைவிட மூன்று மடங்குத் தண்ணீர் சேர்த்து பாலாகக் கரைக்கவும். பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். ஆறியதும் துணியினால் பாலை வடிகட்டிச் சர்க்கரை சேர்த்து அருந்தவும். குழந்தைகள் உள்பட அனைவருக்கும் எளிதில் ஜீரணமாகும் பால் இது. பசுவின் பால் சிலருக்கு எளிதில் ஜீரணமாகாது.

ஆறிய பாலில் சிறிது தயிரை ஊற்றி உறைய வைத்துத் தயிராகப் பயன்படுத்தலாம். சாதாரணத் தயிர் உடலுக்கு மினுமினுப்பைத் தரும். சோயா தயிர் உடலுக்கு மேனி வண்ணத்தையும் தந்து அறிவையும் வளர்க்கும். குழந்தைகள் அறிவுடன் வளர சோயா தயிர் சேர்ப்பது மிகவும் நல்லது.

இன்றைய ஆய்வுகள் சோயா பீன்ஸில் உள்ள 90 சதவிகித புரதச் சத்துகளை உடல் கிரகித்துக் கொள்கிறது என்கிறது. 100 சதவிகித சோயா பாலும் ஜீரணமாகிவிடுகிறது.

சோயாவின் சிறப்பு!
சோயாவில் லெசித்தின் என்னும் முக்கியமான நார்ப்பொருள் இருக்கிறது. இது பாலாக உடலுக்குள் செல்லும் போது, அடைத்துக்கொண்டு இருக்கும் கொழுப்பில் பொருள்களைக் கரைத்துவிடுகிறது. இதனால் இதய நோய்கள் தடுக்கப்படுகின்றன, குணப்படுத்தப்படுகின்றன.

நீரிழிவுக்காரர்கள் நன்றாய் சாப்பிடலாம்!
சோயா மொச்சையில் மாவுப் பொருளே இல்லை எனலாம். இதனால் இதில் உள்ள கார்போஹைடிரேட் உடலக்கு வெப்பத்தையும் சக்தியையும் தந்துவிடுகிறத.அதே நேரத்தில் சிறுநீரில் சர்க்கரை எதுவும் சேருவதில்லை. இதனால் நீரிழிவு நோயாளிகள் சாதாரண மொச்சையுடன் சிறிதளவு சோயா மொச்சையையும் சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது சோயாவிலேயே பலகாரம் செய்து சாப்பிடலாம்.

சோயா மாவு சேர்த்த பலகார வகைகளையும் வியாதிக்காரர்கள் அளவுடன் ஆசைக்காகப் பயம் இன்றிச் சாப்பிடலாம்.

எளிதில் ஜீரணமாக….
இரத்தச்சோகை நோயாளிகளுக்குத் தேவையான இரும்புச்சத்து சோயாமாவில் அபரிதமாய் இருக்கிறது. இவர்களுக்கு ஜீரணமாவது சற்றுக்கடினம். எனவே, இவர்கள் பாலோ உணவில் இரு தேக்கரண்டி மாவோ சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகி இரத்த விருத்தி ஏற்படும்.

குடல் கோளாறுகள், ஜீரணக் கோளாறுகள், இரத்தம் கெட்டு விடுதல் ஆகியவற்றைக் குணமாக்கத் தினமும் சோயா தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பசி தீர்க்கும் சோயா!
நல்ல எண்ணெயைப் போலவே உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்காதது சோயா எண்ணெய்.

5000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தோன்றியது, சோயா மொச்சை, சோஜா, சோயா என்றும் அதனை வழங்குகிறார்கள்.

கிளைசின் மாக்ஸ் மெர் என்பது இதன் தாவர விஞ்ஞானப் பெயராகும். சோயாவில் ஆயிரம் இனங்கள் உள்ளன.

சீனாவில் ஐந்து தானியங்களை இறைவனுக்கு இணையாக புனிதத் தானியங்களாகப் போற்றுகின்றனர். அவற்றுள் இதுவும் ஒன்று. (மற்ற நான்கு : அரிசி, கோதுமை, பார்லி, தினை).

1804ஆம் ஆண்டு சீனாவுக்குச்சென்று திருப்பிய அமெரிக்கக் கப்பல் ஒன்று சோயாபீன்ஸையும் எடுத்துக் கொண்டு வந்தது.

அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தின் போது காபிக்குப் பதிலாகச் சோயாவைப் பயிர் செய்ய ஆரம்பித்தார்கள். இன்று சோயாபீன்ஸின் உலக உற்பத்தியில் 60% அமெரிக்காவைச் சேர்ந்ததாகும்.

ஜப்பானியர்கள் நீண்ட நாள் வாழ்வதற்குரிய காரணங்களுள் சோயாவும் ஒன்றாகும். அவர்கள் தினமும் தக்காளி சாஸ் போல சோயா சாஸும் சேர்த்துக் கொள்கின்றனர். சோயா மாவு சேர்த்தும், சோயா மாவிலேயே பலகாரங்களை செய்தும் சாப்பிடுகின்றனர். இதனால் நரம்புகளும் மூளையைச் சுற்றியுள்ள திசுக்களும் வலுவுடன் தொடர்ந்து இருக்கின்றன. கொலாஸ்டிரலும் சேர்வதில்லை. இதனால் ஆயுள் நீடிக்கிறது.

உடலில் சொறி சிரங்கு உள்ளவர்கள் நிரந்தரமாய்க் குணம் பெறச் சில நாள்கள் தொடர்ந்து சோயா மொச்சையும், சோயா பாலும் சேர்க்க வேண்டும்.

எதிர்காலத்திலும் பல நாட்டு மக்களின் பசியையும், மிருகங்களின் உணவுத் தேவையையும் தீர்ப்பதில் சோயா பீன்ஸிற்கும் முக்கிய இடம் உண்டு.

நலமுடனும் அறிவுத் தெளிவுடனும் வாழ விரும்புகிறவர்கள் தினசரி சோயா பால், சோயா தயிர் சேர்த்துக்கொள்வார்கள். மூன்றாவதாக சோயா மாவு சேர்த்தே இட்லி, குழம்பு, பச்சடி போன்றவற்றையும் தயாரித்துக் குறைந்த செலவில் தரமான புரதச் சத்தை அதிக அளவில் உங்கள் உடலில் சேர்த்துக் கொண்டு நலமுடன் வாழுங்கள்.
உதுமான் மைதீன்
உதுமான் மைதீன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை

Back to top Go down

சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு Empty Re: சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு

Post by RAJABTHEEN Sun Nov 14, 2010 2:53 am

புதுமைத்தகவலைத்தந்தைமைக்கு அன்புபாராட்டுக்கள் அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு Empty Re: சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 15, 2010 12:04 pm

RAJABDEEN wrote:புதுமைத்தகவலைத்தந்தைமைக்கு அன்புபாராட்டுக்கள் அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு Empty Re: சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum