தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்!

4 posters

Go down

ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்! Empty ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Oct 18, 2011 10:53 am

ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.
தற்போதைய பொருள்:
ஆடி மாதத்தில் வீசும் காற்றில் அம்மிக்கல்லும் பறந்து செல்லும்.
தவறு:
எழுத்துப் பிழையினால் தவறான பொருள் கொள்ளப்பட்ட பல பழமொழிகளுள் இதுவும் ஒன்று. இந்தப் பழமொழிக்குக் கூறப்பட்டுள்ள கருத்து தவறானது என்று நாம் நன்கு அறிவோம். ஏனென்றால் ஆடி மாதத்தில் வீசும் காற்றில் அம்மிக் கல் மட்டுமில்லை எந்தக் கல்லும் பறப்பதில்லை. இல்லை இல்லை ஆடி மாதத்தில் வீசும் காற்றுக்கு மற்ற மாதங்களில் வீசும் காற்றைவிட வலிமை அதிகம். இக் கருத்தினை உணர்த்தவே சற்று உயர்வு நவிற்சியாக இவ்வாறு கூறியுள்ளனர் என்று ஒரு கருத்தும் மக்களிடையே நிலவுகிறது. இவ்வாறு கொண்டாலும் இக் கருத்துப் பிழையானதாகவே தோன்றுகிறது. ஏனென்றால் ஆடி மாதக் காற்றுக்கு வலிமை அதிகம் என்று மக்களுக்கு அறிவுறுத்துவதன் மூலம் என்ன சொல்ல முற்படுகிறது இந்தப் பழமொழி?. ஆடி மாதத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது; மீறி வந்தால் காற்று தூக்கிக் கொண்டு போய்விடும் என்றா?. இப்படி ஒரு கட்டுப்பாட்டினை ஒரு பழமொழி கூறினால் யாரேனும் அதற்கு உடன்படுவார்களா?. ஒருபோதும் உடன்பட மாட்டார்கள். என்றால் இப் பழமொழி உருவாக்கப் பட்டதன் நோக்கம் நிறைவேறாமலேயே போய்விடும். உண்மையைச் சொன்னால் ஆடி மாதத்தில் தான் திருக்கோயில் வழிபாடுகளும் வயல் வேலைகளும் புனித நீராடல்களும் அதிக அளவில் நடைபெறுகின்றன.
ஆடி மாதக் காற்றுக்கு வலிமை சற்று அதிகம் தான் என்றாலும் அது ஒன்றும் சூறாவளிக் காற்று அல்ல. ஆடி மாதத்தில் மேக மூட்டம் அதிகமாக இருக்கும். எனவே மழைக் காற்று சற்று பலமாக இருக்கும். அவ்வளவு தான். ஆடிக் காற்றில் அம்மிக் கல் புரண்டுவிடும் என்று சொன்னாலாவது சற்று சிந்திக்க இடமுண்டு. ஆனால் பறக்கச்செய்வது என்றால் அது மிகையோ மிகை ஆகும். அத்துடன் அம்மிக்கல்லானது பெரும்பாலும் வீட்டின் உள்ளே தான் இருக்கும். வீட்டின் உள்ளே இருக்கும் அம்மிக்கல்லை வெளியில் இருந்து காற்று வந்து பறக்கச் செய்யும் என்றால்?. எவ்வளவு பெரிய பொய்!. எனவே இப் பழமொழி உணர்த்தும் கருத்து உண்மையும் இல்லை உயர்வு நவிற்சியும் இல்லை என்று தெளியலாம். இந்தத் தவறான கருத்துக்குக் காரணம் இப் பழமொழியில் வரும் 'அம்மி' என்ற சொல்லில் உள்ள எழுத்துப் பிழையே ஆகும். அதைப் பற்றிக் கீழே காணலாம்.
திருத்தம்:
'அம்மி' என்ற சொல்லுக்குப் பதிலாக 'அம்மை' என்ற சொல் வருவதே திருத்தம் ஆகும். 'அம்மை' என்ற சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டு என்றாலும் இச்சொல் இப் பழமொழியில் 'அம்மை நோயினைக்' குறிக்கும். இந் நோய்க்கு வைசூரி என்றும் பெயர் உண்டு. 'ஆடி மாதத்தில் வீசும் காற்றில் அம்மை நோயும் பறந்து போகும்' என்பது தான் திருந்திய பொருள் ஆகும்.
நிறுவுதல்:
இக் கருத்தினை நிறுவும் முன்னர் ஆடி மாதம் பற்றியும் அம்மை நோயினைப் பற்றியும் சிறிது அறிந்து கொள்ளுதல் இங்கே நலம் பயக்கும். வேனில் காலங்களான பங்குனி,சித்திரை,வைகாசி மற்றும் ஆனி மாதங்களில் வெயிலின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை நாம் நன்கு அறிவோம். இந்த நான்கு மாதங்களில் சிறிதளவு மழையும் இல்லை என்றால் அங்கே எவ்வளவு கொடிய வெப்பம் நிலவும்?. இத்தகைய கொடிய வெப்பத்தினால் உண்டாவதே அம்மை நோய் ஆகும். கொடிய வெப்பமும் உணவுத் தூய்மையின்மையும் கைகோர்க்கும்போது அங்கே அம்மை நோய் தோன்றுகிறது. உயிர்க் கொல்லி நோய்களுள் ஒன்றாக அம்மை நோயினையும் கருதலாம். ஏனென்றால் இந்த நோய் அவ்வளவு கொடுமையானது என்பதுடன் ஆறாத வடுக்களையும் உண்டாக்கி விட்டு செல்கிறது. இந்த நோய்க்கு நாட்டு மருந்தாக வேப்பிலையும் நவீன ஆங்கில மருந்துகளும் இருந்தபோதும் அம்மை நோயினைப் போக்கவல்ல ஒரு கண்கண்ட இயற்கை மருந்து ஆடி மாதக் காற்று ஆகும்.
பன்னிரெண்டு மாதங்களில் ஆடி மாதத்திற்கு பல சிறப்புக்கள் உண்டு. மழைக் காலத்தின் தொடக்கமே ஆடி மாதம் ஆகும். இந்த மாதத்தில் தான் இலையுதிர்ந்த மரங்கள் எல்லாம் புதிய தளிர்களை உருவாக்கத் துவங்கும். 'ஆடிப் பட்டம் தேடி நடு' என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த மாதத்தில் தான் உழவர்கள் வேளாண்மையினைத் துவக்குவார்கள். ஒரு ஆண்டின் துவக்கமழையாகப் பெய்து வருகின்ற ஆடி மாதப் புது வெள்ளத்திலே மக்கள் நீராடி மகிழ்வர். காவிரி ஆற்றங்கரையில் 'ஆடிப்பெருக்கு' என்னும் விழா நடப்பதும் இந்த மாதத்தில் தான். கருநிற மேகங்கள் கூட்டம் கூட்டமாய் அதிக அளவில் உலா வரத்துவங்கும் மாதம் இது. கோடைகாலம் முடிந்தவுடன் வரும் முதல் மழை என்பதால் குளிர்ந்த மழைக் காற்று பலமாக மோதி நம் உடலையும் உள்ளத்தையும் சிலிர்க்கச் செய்யும். தென்றல் காற்றும் வாடைக் காற்றும் செய்யாத ஒரு நன்மையினை கொண்டல் காற்று அதாவது ஆடிக் காற்று மட்டுமே செய்யும்.
kaaviripperukku
ஏனென்றால் ஆடிக் காற்று மட்டும் தான் குளிர்ச்சியுடன் புத்துணர்ச்சியையும் நல்குவது. குளிர்ந்த மழைக் காற்று பலமாக உடலில் மோதும்போது உடலில் உள்ள வெப்பம் சடாரெனக் குறைகிறது. அம்மை நோயினால் உடலில் உண்டான முத்துக்களின் மேல் இக் காற்று பட்டதும் அந்த முத்துக்களின் வழியாக உடல்வெப்பம் சடாரென வெளியேற அந்த முத்துக்களில் ஒரு மாற்றம் உண்டாகி விரைந்து அவை பழுக்கத் துவங்குகின்றன.
ஏனை மாதங்களில் முத்துக்கள் பழுக்க இரண்டு வாரங்கள் ஆகும் என்றால் ஆடி மாதக் காற்று உடலில் படுமாறு நன்கு காட்டினால் அவை நான்கே நாட்களில் பழுத்துவிடும். அதுமட்டுமின்றி அதுவரை வெப்பமான சூழ்நிலையில் கூத்தாடி மகிழ்ந்த அம்மைநோய்க் கிருமிகள் திடீரென்ற பருவகால மாற்றத்தினைத் தாங்க மாட்டாமல் காற்றின் அழுத்தத்தாலும் குளிர்ச்சியாலும் கொல்லப்பட்டு விடுகின்றன. இதனால் அம்மைநோய் பரவுவதும் தடுக்கப்பட்டு விடுகிறது. இது ஆடி மாதக் காற்றுக்கு இயற்கை அளித்த ஒரு வரம் ஆகும். ஆடிக் காற்று வீசும்போது உதிர்ந்த இலைகளும் பூக்களும் தூசியும் பறப்பதை நாம் கண்டிருக்கிறோம். இவைமட்டுமல்ல 'அம்மைநோயும்' பறக்கும் அதாவது வேகமாக நீங்கும் என்னும் பொருளைக் குறிக்கவே 'அம்மையும்' என்று உம்மையுடன் பழமொழி கூறப்பட்டுள்ளது.
சரியான பழமொழி:
ஆடிக் காற்றில் அம்மையும் பறக்கும்

நன்றிகள்
பதிவு: ஆய்வியல் நிறைஞர் பொன்.சரவணன்
thiruththam.blogspot.com/2009/02/blog-post_1218.html
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்! Empty Re: ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 18, 2011 11:01 am

பகிர்வுக்கு நன்றி ரமேஷ் நல்ல ஆய்வியல் கட்டுரை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்! Empty Re: ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்!

Post by ஃபாயிஜாகாதர் Tue Oct 18, 2011 3:10 pm

நல்ல கட்டுரை [You must be registered and logged in to see this image.]
ஃபாயிஜாகாதர்
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 40
Location : chennai

Back to top Go down

ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்! Empty Re: ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்!

Post by kanagavasu Sat Dec 10, 2011 8:43 pm

நல்லதகவல்.புதிய ஒன்றை அறிந்து கொண்ட திருப்தி இருக்கிறது
kanagavasu
kanagavasu
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 392
Points : 432
Join date : 07/12/2011
Age : 36
Location : nagai

Back to top Go down

ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்! Empty Re: ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum